.

Pages

Tuesday, February 12, 2013

தண்ணீர் சேமிப்பீர் !

தண்ணீர் ஆம் அது ஒரு இயற்கையின் வரம் என்றே சொல்ல வேண்டும் தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை அந்த அளவுக்கு உலக மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததே.

பண்டைய காலங்களில் வாழ்ந்து வந்தவர்கள் ஆங்காங்கே குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் வெட்டி மழைநீரை சேமித்து தடையில்லா தண்ணீரைப் பெற்று வந்ததோடு குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் எந்த விதத்திலும் மாசுபடாதவாறு காத்துவந்தார்கள்

ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரை எப்படி சேமிப்பது  தண்ணீரை எப்படி மிச்சப்படுத்துவது  தண்ணீரை தடையில்லாமல் பெற என்ன செய்வது இன்னும் பல கோணங்களில் சிந்தித்து ஆய்வுகளை நடத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்த உலகம் இருந்தாலும் தண்ணீரினால் ஏற்பட்ட தின்டாட்டங்களும் போராட்டங்களும் குறைந்தபாடில்லை தீர்வும் கிடைத்தபாடில்லை.

மூன்றாவது உலக யுத்தம் வந்தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான் என்று பல வருடங்களாக அறிஞர்களும் விஞ்ஞானிகளும்; எச்சரித்து வருகிறார்கள்.

மனித வரலாற்றில் பல வகையான நாகரீக சமூகங்களும்  பல வகையான உயிரினங்களும் பல வகையான தாவரங்களும் அடியோடு அழிந்து போனதற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.

ஏற்கனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள்  மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையைவிட பெரியவை. எனவே ஆறு குளம்  ஏரி கிணறு இவைகளை மாசுபடுத்தாமல் காப்பது  மணற் கொள்ளையை நிறுத்துவது மழை நீர் சேகரிப்பு கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தை கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.

இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஒரு ஆய்வு நடத்தனால் ஏகப்பட்ட குளங்களும் ஏறிகளும் ஆறுகளும் கிணறுகளும் காணாமல் போய்விட்டது இருக்கின்ற ஒரு சில குளங்கள் ஏறிகள் ஆறுகள் கிணறுகள் இவைகளை சுத்தமாக தூர்வாரி அதன் எல்லாப் பக்கங்களிலும் வலுவான உயரமான மண் அடைப்டபுகளை இட்டால்கூட ஓரளவுக்கு தண்ணீர் பற்றாக் குறையிலிருந்து தமிழகம் மீளமுடியும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் வசதியுள்ள இடங்களில் தடுப்பணைகளைகட்டி ஆங்காங்கே மழைநீரை சேமித்தால் நமக்கு முல்லை பெரியாரும் தேவையில்லை காவிரியும் தேவையில்லை போராட்டங்களும் தேவையில்லை எந்தப் பிரச்சனையும் தேவையில்லை.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் தடையில்லா மின்சாரமும் வற்றாத நீரும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அங்கு மழைநீரை சரியான முறையில் சேமித்து வருகின்றனர். இதையே நாமும் தமிழகத்திலும் பின்பற்றி வந்தால் நமக்கு திண்டாட்டமும் போராட்டமும் இல்லாமல் அமைதியானமுறையில் தண்ணீர் கிடைக்கும் என்பதில் கொஞ்சங்கூட சந்தேகமே இல்லை.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று தஞ்சை மாவட்டம் அன்று அழைக்கப்பட்டு வந்தது அதே மாவட்டம் இன்று தமிழகத்தின் வீடுமனைகளுக்கு பிரசித்திபெற்ற மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தடையில்லா மழையைப் பெறுவதற்கு மரங்களை பாதுகாப்போம் புதிய மரக்கன்றுகளை நடுவோம் மழைநீரை சேமிப்பதற்கு குளம் ஆறு ஏறி கிணறு இவைகளை பராமரிப்போம். 

சிந்திப்போம்...
செயல்படுவோம்...
சந்தோஷமாக இருப்போம்...
எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.

வாழ்க வளமுடன்

அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

19 comments:

  1. மனித உரிமைக்காவலரின் சிந்திக்க வைக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம் !

    // சிந்திப்போம்...
    செயல்படுவோம்...
    சந்தோஷமாக இருப்போம்...
    எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம் //

    கட்டுரையில் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நான் வழி மொழிகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் வழி மொழிதலுக்கும் நன்றி.

      Delete
  2. “மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”

    இத்தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும். இன்று நாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பங்களிப்பாக அவற்றை சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம்.

    ReplyDelete
  3. வருங்கால சமுதாயம் உணர வேண்டும்... முதலில் நாம்... பிறகு உணர வைக்க வேண்டும்...

    நல்லதொரு கட்டுரைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      {{[[வருங்கால சமுதாயம் உணர வேண்டும்... முதலில் நாம்... பிறகு உணர வைக்க வேண்டும்...]]}}

      சரியாக சொன்னீர்கள், பாராட்டுக்கள்.

      Delete
  4. இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.?

    தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

    CLICK >>>>>
    காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….


    ReplyDelete
  5. தண்ணீரை அளவாக செலவிட வேண்டும் ...
    மரணத்திற்கு பின் தீர்ப்பு நாளில் தண்ணீரை
    அளவுக்கு அதிகமாக செலவிட்டால் அதற்கும்
    கேள்வி கணக்கு உண்டு என்பது இஸ்லாமிய நம்பிக்கை

    ReplyDelete
  6. தண்ணீரை பற்றிய கட்டுரை மிக அருமை.

    வாழ்த்துக்கள்.

    மனிதன் உயிர் வாழ மிக முக்கிய தேவை தண்ணீரே...!

    நம் தண்ணீர் தேவையின் மூன்றில் ஒரு பங்கு விரையம் செய்யப்படுகிறது தான் மிக வேதனைக்குரிய விஷயம்.

    தண்ணீரை எல்லாவகையிலும் சேகரிப்போமாக..!

    ReplyDelete
  7. காலத்திற்கேற்ற கட்டுரை எப்போது விழிப்படைவோமோ தெரியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      விழிப்புணர்வு நமக்காக காத்துக் கொண்டிருக்கு, பொதுமக்களாகிய நாம்தாம் அதனிடம் நெருங்காமல் விலகிக் கொண்டேபோகின்றோம்.

      அதனிடம் எப்போது நெருங்குவது?

      Delete
  8. சிந்திப்போம்...
    செயல்படுவோம்...
    சந்தோஷமாக இருப்போம்...
    எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உண்மையிலும் உண்மை அதுவே.

      Delete
  9. தண்ணீர் ஆம் அது ஒரு இயற்கையின் வரம் என்றே சொல்ல வேண்டும் அல்லாஹுதாலா நமக்கு கொடுத்த ஒரு அற்புதம் அந்த தண்ணீரை நாம் வீண் விரயம் செயக்கூடாது அருமையான விழிப்புணர்வு ஆக்கம். வாழ்த்துக்கள் ஜமால் காக்கா அவர்கள்.

    ReplyDelete
  10. காலத்திற்கேற்ற் மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை மனித உயிர் வாழ தண்ணீர் மிக முக்கியம் என்றால் அது மிகையாகாது ஒன்று ஜமால் காக்கா நீங்கள் எழுதியது போன்று தமிழகத்தில் வசதியுள்ள இடங்களில் தடுப்பணைகளைகட்டி ஆங்காங்கே மழைநீரை சேமித்தால் நமக்கு முல்லை பெரியாரும் தேவையில்லை காவிரியும் தேவையில்லை போராட்டங்களும் தேவையில்லை. சரியான வார்த்தை நம் இளைய தலைமுறைகளலாவது, இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மரங்களை வளப்போம் மழைநீரை சேமிப்போம் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம். வாழத்துக்கள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers