அன்பு வலைதள வாசக நெஞ்சங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். 'மகவே கேள் !' என்ற புதிய தொடருக்கான கரு பெயரிலேயே தெரிகிறது என்று அன்பு சகோ நபிதாஸ் அவர்கள் கடந்த பதிவில் குறிப்பிட்டது மிக சரியானதே. பதிவு துறையில் காலம் காலமாய் வெளியாகும் புத்தகங்களில், சுய சரிதை, தளப் புராணம், பயணக் கட்டுரை இவைகளை போன்று அறிவுரை கூறும் பதிவுகள் காலம் காலமாய் வந்துள்ளது.
பழங்காலத்தில் மன்னர் ஆட்சி நிகழ்ந்த தருணத்தில் பிள்ளை பேரு இல்லாத மன்னர்கள் அருந்தவம் இருந்து முதுமை அடைந்த தருவாயில் குழந்தை பேரு பெறுவார். பெற்ற பிள்ளையை சகல கலையும் கற்ற வல்லவனாக திகழ முனைவர். இளம் பருவத்தில் உள்ள மகனிடம் எதிர்காலத்தை பற்றிய அறிவை பல கல்வியாளர்கள் மூலம் அறிவூட்டி வருவர். இளவல் இளைஞனாய் உருவெடுக்கு முன் சில மன்னர்கள் மரண படுக்கைக்கு செல்ல நேரிடும்போது தனது அன்பு மகனை அழைத்து அறிவரை கூறுவர். அது இன்றி அமையாத ஒன்றாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவாய் அமையும்.
கால போக்கில் நாகரீக உலகில் பதிவுத்துறை மேம்பட்டு கல்வியாளர் கையில் வந்ததன் காரணமாக நல்ல பல எதிர்கால முன்னேற்றத்துக்கான நூற்கள் வெளியாயின. வெளியாகி கொண்டு இருக்கின்றன. இணையதள வாயிலாக பல கட்டுரைகள் வந்து நல்ல பல கருத்துக்களை வழங்கி
வருவது அறிவு சார் உலகிற்கு நல்ல விருந்தாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதன் அடிப்படையில் எனது சில கருத்துக்களை பதிய விரும்பி 'மகவே கேள் !' என்ற புதிய தொடர்...
மகன் என்றால் ஆண் பால், மகளே என்றால் பெண் பால். வயிற்றில் கருவாகி ஒரு வாரிசு உருவாகும் தருவாயில் அக்கருவை மகவு என்பார்கள் எனவே மகவே என்றால் எதிர்கால இருபாலருக்கும் உள்ள அறிவுரை என்று வைத்து
கொள்ளலாம்.
இனி தொடருக்குள் செல்லலாமா !?
பழங்காலத்தில் மன்னர் ஆட்சி நிகழ்ந்த தருணத்தில் பிள்ளை பேரு இல்லாத மன்னர்கள் அருந்தவம் இருந்து முதுமை அடைந்த தருவாயில் குழந்தை பேரு பெறுவார். பெற்ற பிள்ளையை சகல கலையும் கற்ற வல்லவனாக திகழ முனைவர். இளம் பருவத்தில் உள்ள மகனிடம் எதிர்காலத்தை பற்றிய அறிவை பல கல்வியாளர்கள் மூலம் அறிவூட்டி வருவர். இளவல் இளைஞனாய் உருவெடுக்கு முன் சில மன்னர்கள் மரண படுக்கைக்கு செல்ல நேரிடும்போது தனது அன்பு மகனை அழைத்து அறிவரை கூறுவர். அது இன்றி அமையாத ஒன்றாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவாய் அமையும்.
கால போக்கில் நாகரீக உலகில் பதிவுத்துறை மேம்பட்டு கல்வியாளர் கையில் வந்ததன் காரணமாக நல்ல பல எதிர்கால முன்னேற்றத்துக்கான நூற்கள் வெளியாயின. வெளியாகி கொண்டு இருக்கின்றன. இணையதள வாயிலாக பல கட்டுரைகள் வந்து நல்ல பல கருத்துக்களை வழங்கி
வருவது அறிவு சார் உலகிற்கு நல்ல விருந்தாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதன் அடிப்படையில் எனது சில கருத்துக்களை பதிய விரும்பி 'மகவே கேள் !' என்ற புதிய தொடர்...
மகன் என்றால் ஆண் பால், மகளே என்றால் பெண் பால். வயிற்றில் கருவாகி ஒரு வாரிசு உருவாகும் தருவாயில் அக்கருவை மகவு என்பார்கள் எனவே மகவே என்றால் எதிர்கால இருபாலருக்கும் உள்ள அறிவுரை என்று வைத்து
கொள்ளலாம்.
இனி தொடருக்குள் செல்லலாமா !?
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்