tag:blogger.com,1999:blog-42135081015102847402024-03-13T07:46:09.626+05:30சமூக விழிப்புணர்வு பக்கங்கள்[ சமூக நலம் காப்போம் ]
[ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger659125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-9376650344748447152016-01-16T11:51:00.001+05:302016-01-16T11:51:44.192+05:30குழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-d6NSjyAm9LM/U1xNqOb24BI/AAAAAAAADvE/OIsEPwL-tNk/s1600/20140426_151312.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-d6NSjyAm9LM/U1xNqOb24BI/AAAAAAAADvE/OIsEPwL-tNk/s1600/20140426_151312.jpg" width="360" /></a></div>
<span style="color: blue;">சுற்றுலா பகுதி: தஞ்சை பூங்கா</span><br />
அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தஞ்சாவூர். இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.<br />
<br />
தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 'சிவகங்கைப் பூங்கா' அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. நகராட்சியாக இருந்து வந்த தஞ்சையை தமிழக அரசு கடந்த வருடம் மாநகராட்சியாக உயர்த்தியது. சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.<br />
<br />
பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக மாணவ மாணவிகள், சிறுவர்கள் என இங்கு தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 பேர் வரை வருவதாக கூறுகின்றனர். அதுவும் வார இறுதி நாட்களில் ( சனி, ஞாயிறுகளில் ) இந்த எண்ணிக்கை கூடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.<br />
<br />
பூங்காவை வலம்வந்த நாம் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, மான் போன்ற விலங்கினங்களை தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது.<br />
<br />
சிறுவர் சிறுமிகளுக்காக பிரத்தியோகமாக அமைக்கபட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.<br />
<br />
கோடை வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்று பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் குளித்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக பெற்றோர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தது நம்மை நெகிழ்ச்சியுறசெய்யும். மேலும் பெரியவர்கள் நீந்துவதற்காக தனியாக நீச்சல் குளமும் அங்கு காணப்படுகின்றன.<br />
<br />
பூங்காவில் செயற்கை வடிவமைப்புடன் காணப்படும் எருமை சவாரி சுற்றுலா வந்தோர் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். குறிப்பாக எருமையை அடக்க அதன் மீது உட்கார்ந்து பயணிகள் செய்யும் சேட்டைகளும், இறுதியில் எருமையை அடக்க முடியாமல் கீழே சாய்ந்து விழுவதும் காண்போரை சிரிப்பை வரவழைக்கிறது. அதன் அருகே உள்ள ராட்சஸ பலூன்களில் குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடுவது அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றோரை ஆனந்தமடைய செய்கிறது.<br />
<br />
பூங்காவை சுற்றிவர ரயில் சவாரியும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் வலம்வந்ததை காணமுடிந்தது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இளைப்பாற படர்ந்த புல்வெளி, போதுமான குடிநீர் வசதி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( !? ) போன்ற பழமைவாய்ந்த மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.<br />
<br />
பூங்காவிற்கு வருகை தரும் பெரும்பாலான குடும்பங்கள் உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்தும் ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து விலகி இருக்க தங்களின் வீட்டிலிருந்து பிரத்தியோகமாக தயாரித்து எடுத்து வந்த கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சாதம், பிரியாணி ஆகியவற்றை பூங்காவில் உள்ள நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதை அங்கே காண முடிந்தது.<br />
<br />
பூங்காவில் நிறைகள் அதிகமாக காணப்பட்டாலும் குறைகளும் அங்கு இல்லாமலில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுத்து வந்த அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' மற்றும் பூங்காவில் உள்ள குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி ஆகியன செயல்படாமல் முடங்கி காணப்படுவது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்தது. அதே போல் ஆண்கள் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிற்கும் கழிவறை மிகவும் சுகாதாரமற்று காணப்பட்டன. உள்ளே சென்றுவிட்டு திரும்பிய பயணிகளில் பெரும்பாலானோர் வாந்தியுடன் வெளியே வந்ததை காணமுடிந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் - ஒப்பந்ததாரர்கள் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக இருக்கிறது.<br />
<br />
குச்சி ஐஸ் சாப்பிடும் குட்டீஸ் முதல் குடை எடுத்து செல்லும் தாத்தா வரை பாதுகாப்பாக சென்று வரலாம் என்கின்றனர் அடிக்கடி அங்கு சென்று வந்தவர்கள். குறைந்த செலவில் பட்ஜெட் சுற்றுலாவாக செல்ல நினைப்போர் இங்கு படையெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.<br />
<br />
<span style="color: blue;">அபூ இஸ்ரா</span><br />
<div style="text-align: right;">
<span style="font-size: xx-small;">[ இது ஒரு மீள் பதிவு ]</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-MWabXtZmsR0/U1xOLU0EE9I/AAAAAAAADvM/8BF_vP-LCME/s1600/20140426_150619.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-MWabXtZmsR0/U1xOLU0EE9I/AAAAAAAADvM/8BF_vP-LCME/s1600/20140426_150619.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-WXA8Ee5KeKg/U1xOShxn9vI/AAAAAAAADvU/2KdRy5fG7Uo/s1600/20140426_153544.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-WXA8Ee5KeKg/U1xOShxn9vI/AAAAAAAADvU/2KdRy5fG7Uo/s1600/20140426_153544.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-2h0ex7_HvMM/U1xOUIo9w6I/AAAAAAAADvc/j8Q_mJEWTBU/s1600/20140426_154649.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-2h0ex7_HvMM/U1xOUIo9w6I/AAAAAAAADvc/j8Q_mJEWTBU/s1600/20140426_154649.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-mM9RCdygJLs/U1xQp3Zcl4I/AAAAAAAADxE/9BxjuquHWX0/s1600/20140426_153803.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-mM9RCdygJLs/U1xQp3Zcl4I/AAAAAAAADxE/9BxjuquHWX0/s1600/20140426_153803.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-TYjltoguqXA/U1xOmLZvVHI/AAAAAAAADvo/1yMHdjw9Gv4/s1600/20140426_155001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-TYjltoguqXA/U1xOmLZvVHI/AAAAAAAADvo/1yMHdjw9Gv4/s1600/20140426_155001.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-8QbxEM_z-ls/U1xOl9FU-cI/AAAAAAAADvk/dAFuG4PFnOs/s1600/20140426_164545.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-8QbxEM_z-ls/U1xOl9FU-cI/AAAAAAAADvk/dAFuG4PFnOs/s1600/20140426_164545.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Fsa4F1pF_98/U1xOmZFk4XI/AAAAAAAADvs/XQ4W3HmcXCY/s1600/20140426_165942.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-Fsa4F1pF_98/U1xOmZFk4XI/AAAAAAAADvs/XQ4W3HmcXCY/s1600/20140426_165942.jpg" width="360" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-n9OIlEhzVxY/U1xOqqWCJzI/AAAAAAAADv8/FPiwqlsmHpU/s1600/20140426_170816.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-n9OIlEhzVxY/U1xOqqWCJzI/AAAAAAAADv8/FPiwqlsmHpU/s1600/20140426_170816.jpg" width="360" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-RkFta4hqQfQ/U1xPWfYm8II/AAAAAAAADwE/BN44AwrJd5g/s1600/20140426_143751.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-RkFta4hqQfQ/U1xPWfYm8II/AAAAAAAADwE/BN44AwrJd5g/s1600/20140426_143751.jpg" width="360" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-HRVj5Qg1jG8/U1xPd9pom7I/AAAAAAAADwI/gbi-6R_EnD0/s1600/20140426_144000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-HRVj5Qg1jG8/U1xPd9pom7I/AAAAAAAADwI/gbi-6R_EnD0/s1600/20140426_144000.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-BAc2fPEkm6k/U1xPe19slWI/AAAAAAAADwQ/w4I_PjKqxFA/s1600/20140426_145949.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-BAc2fPEkm6k/U1xPe19slWI/AAAAAAAADwQ/w4I_PjKqxFA/s1600/20140426_145949.jpg" width="360" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-5HNXo0dJYEM/U1xPx0GfQ8I/AAAAAAAADwY/SCzHeu4pbcw/s1600/20140426_152419.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-5HNXo0dJYEM/U1xPx0GfQ8I/AAAAAAAADwY/SCzHeu4pbcw/s1600/20140426_152419.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-QyqP1q83g8k/U1xPzMLbf8I/AAAAAAAADwg/674zuzJ9dPY/s1600/20140426_152627.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-QyqP1q83g8k/U1xPzMLbf8I/AAAAAAAADwg/674zuzJ9dPY/s1600/20140426_152627.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-QeOH4_7bnnk/U1xP8p5_ShI/AAAAAAAADww/FxhI8MKbw_I/s1600/20140426_152935.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-QeOH4_7bnnk/U1xP8p5_ShI/AAAAAAAADww/FxhI8MKbw_I/s1600/20140426_152935.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-53D-vRUdlfs/U1xQBya64UI/AAAAAAAADw4/A_7tblAIoZo/s1600/20140426_154904.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-53D-vRUdlfs/U1xQBya64UI/AAAAAAAADw4/A_7tblAIoZo/s1600/20140426_154904.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
</div>
சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45846256044354323872016-01-01T08:52:00.000+05:302016-01-01T08:52:26.696+05:30ஊற்றிடுவோம் நற்பண்பைக் குருதியாய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ru498aRMVJA/VoXw5E5WSeI/AAAAAAAAXLQ/T4xhB3l-xLM/s1600/three-reaces-to-save-humanity.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-ru498aRMVJA/VoXw5E5WSeI/AAAAAAAAXLQ/T4xhB3l-xLM/s200/three-reaces-to-save-humanity.jpg" width="196" /></a></div>
வேற்றுமைகள் வேரூண்ட விதைப்புகள்<br />
வேதனைகள் சூழ்ந்துவிடக் களைப்புகள்<br />
மாற்றங்கள் வரவேண்டி யேக்கங்கள்<br />
மழைபெய்தே மாய்த்துவிட மகிழ்வுகள்<br />
போற்றவேண்டும் சென்றதையும் புத்தியில்<br />
புத்துணர்வில் புத்தாண்டை மனதினில்<br />
ஏற்றங்கள் எய்துவிட வரவேற்பில்<br />
எல்லோரும் ஒன்றுபட்ட திரள்வில்<br />
<br />
ஆற்றிடுவோம் ஆக்கங்கள் உயர்வாய்<br />
அகிலத்தில் பாரதமும் அமைதியாய்<br />
ஊற்றிடுவோம் நற்பண்பைக் குருதியாய்<br />
உலகங்கள் அதிசயக்க வெற்றியாய்<br />
கூற்றுகளில் பாசத்தை நிறைவாய்<br />
குழைத்திடுவோம் இனியெங்கும் அறிவாய்<br />
சீற்றங்கள் தலைதூக்காப் பொறுமையாய்<br />
சிதைத்திடுவோம் முளையிலேயே வொற்றுமையாய்<br />
<br />
மாற்றங்கள் மேச்சிடவே வரவேற்போம்<br />
மாநிலத்தில் திசையெங்கும் கைகோர்ப்போம்<br />
தோற்றங்கள் புனிதமாக திகழ்ந்திடுவோம்<br />
தோல்கொடுக்கும் வழிகாட்டல் மதித்திடுவோம்<br />
காற்றசையும் கவனித்தால் வொன்றாகும்<br />
காழ்ப்புணர்வும் தோன்றாதே வென்றாகும்<br />
ஏற்றமாக யெல்லாமே வொன்றாகும்<br />
இனியென்ன! இவ்வாண்டில் மகிழ்வாகும்.<br />
<br />
<b><span style="color: blue;">நபிதாஸ்</span></b></div>
சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55564483685402948442015-11-10T11:57:00.001+05:302015-11-10T11:57:45.640+05:30அரக்கனை அழிப்போம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-1EZaMgrDANo/VkGNkjqE83I/AAAAAAAAXFo/0MqAJbS48Aw/s1600/manu1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="111" src="http://2.bp.blogspot.com/-1EZaMgrDANo/VkGNkjqE83I/AAAAAAAAXFo/0MqAJbS48Aw/s320/manu1.jpg" width="320" /></a></div>
தூய அன்பு மலரும்<br />
தொடர்வோமே ஒற்றுமையில்<br />
மாய அரக்கன் அறிவோம்<br />
மதியினிலே தெளிவோமே <br />
நேயம் கெடுப்பது அதுவே<br />
நினைவினிலே கொள்வோமே<br />
தீய அரக்கன் கொல்லத்<br />
தித்திக்கும் தீபாவளி<br />
<br />
தீமைகள் தருவதுஎதுவோ<br />
தீர்மானம் கொண்டிடலாம்<br />
ஊமையாய் இருக்க வேண்டாம்<br />
ஒற்றுமையைக் குழைத்திடுமே<br />
ஆமை போலே நுழைந்தே<br />
அழித்திடுமே நேசத்தை<br />
கூர்மை கொண்டே அறிவோம்<br />
கொடுங்கோலன் அதுவேதான்<br />
<br />
சுயநலம் காக்க சூழ்ச்சி<br />
சுரண்டிடுமே தேசத்தை<br />
பயமில் லாதே பலதிலும்<br />
பக்குவமாய் பிரித்திடுமே<br />
நயமாய் பேசும் நரிதான்<br />
நாம்தானே புரிந்திடணும்<br />
தயவு காட்ட வேண்டாம்<br />
தவிர்த்துடுவோம் துவேசத்தைநாம்<br />
<br />
பிரிக்கும் உணர்வைத் தூண்டி<br />
பிரகாசமாய் தான்வாழ<br />
விரிக்கும் இனத்தின் வலையை<br />
விட்டில்பூச் சாய்யழிய<br />
திரிக்கும் துவேசம் மனதில்<br />
தீங்குகளைத் தூண்டிவிட<br />
எரித்திடு அதுவே அரக்கன்<br />
இன்பங்கள் நிலைத்திடுமே<br />
<br />
உன்னில் வளர்ந்தப் பகைதான்<br />
உறுமிடும்உன் ராக்கெட்டாம்<br />
துன்பம் தூண்டும் துவேசம்<br />
தூக்கிபிடிக்கும் மத்தாப்பு<br />
வன்மம் உருவாய் பாட்டாஸ்<br />
வாழ்விலே நிறைந்திருந்தால்<br />
இன்பம் நிறைய இவையை<br />
இனிதேநாம் வெடித்தழிப்போம்<br />
<br />
துன்பம் ஒழித்தத் தினத்தில்<br />
தூயபட்டா டையுடுத்தி<br />
அன்பைப் பேசி அனைத்து<br />
அருந்துவோமே பலகாரம்<br />
வன்ம அரக்கன் இனியும்<br />
வாழ்வில்நு ழையவிடோமே<br />
நான்மை பெருக வாழ்வோம்<br />
நலன்களுமே நிலைத்திடுமே..<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-17436202151317890132015-08-02T17:50:00.002+05:302015-08-02T17:52:14.900+05:30அற்புத மனிதர் - அப்துல் கலாம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மக்கள் திலகமே!<br />
மாமணியே!<br />
அப்துல் கலாமே<br />
நீ கேட்டதை விட<br />
அதிகமே அருளினான்<br />
இறைவன்!<br />
<br />
நிறுத்தாதப் பேச்சு<br />
நீ பிறந்து விழுந்த<br />
நாளிலிருந்தே!<br />
பிராணன் போகும் போதும்<br />
பேசியவரே!<br />
<br />
பேசிய தெல்லாம்<br />
தேசியம் காக்க!<br />
இளஞ்சிட்டுகளை<br />
இராஜாளிப் பறவைகளாக்க!<br />
<br />
கடுகைப் பொறித்த போதும்<br />
"கலாம் " என்றது<br />
கடுகளவு உள்ளப்<br />
பொருளிலெல்லாம்<br />
களங்கண்டவன் நீ!<br />
<br />
கனவு கண்டவன்<br />
களிக்க வல்ல,<br />
காக்க நாட்டை<br />
சாதிக்க!<br />
<br />
அக்னிச் சிறைக்குள்<br />
அடை காக்கப் பட்டவன்<br />
ஆழ்ந்த ஞானம்பூண்ட<br />
தந்தையாம்<br />
மரத்தில் இருந்து<br />
விழுந்த கனி<br />
உலகமே சுவைத்தது!<br />
<br />
உன் தலையில்<br />
வகுடு பிளந்தாலும்<br />
உள்ளத்தில்<br />
ஒரு<br />
கீரலுமில்லை!<br />
<br />
விரிந்த பார்வை<br />
வியப்பான நோக்கு!<br />
நாட்டு மக்கள்<br />
ஒன்றுபட<br />
நாள்தோறும் பிரார்த்தித்தாய்!<br />
மதத்தை இணைக்கும்<br />
கயிறாக்கினாய்!<br />
<br />
வாழ்வதும் வீழ்வதும்<br />
நாட்டுக்கே என்ற<br />
நற்குறிக் கோளை<br />
நெஞ்சங்களில்<br />
மலர்ச்சி தீபமாக்கினாய்!<br />
<br />
நாட்டு மக்களின்<br />
உறுதிக்கு<br />
உறுதுணையாகி<br />
களங்கமிலா கல்வியைப்<br />
போதித்தாய்<br />
வேளாண்மையை<br />
வளர்த்தாய்<br />
<br />
கணிப்பொறியில்<br />
கருத்தைப் பொருத்தி<br />
ககனத்தார் முன்<br />
பாரத நாட்டைப்<br />
பார்த்திட வைத்தாய்<br />
வியப்பாக!<br />
<br />
மதச் சகிப்புத்<br />
தன்மையை<br />
மண்முடியாய் பூண்ட<br />
ஜனாதிபதி நீ!<br />
<br />
நல்வழியில் நடத்திச் செல்ல<br />
எண்ணி எண்ணித்<br />
தொழுதாய்!<br />
<br />
இறைவன் நடத்தினான்<br />
நன்றி காட்டினாய்!<br />
'செயல்களின் பலனே<br />
செய்தவனுக்கு ' என்ற<br />
வேதக்கருத்தில் ஊறினாய் :<br />
உன்மரணத்தில்<br />
<br />
அதை<br />
உலகமும் உணரவைத்தாய்!<br />
வேதம் கற்றவன்<br />
பிறமத<br />
நாதங்கற்றவன்<br />
விந்தையாளனை<br />
விளங்கிக் கொண்டவன் :<br />
<br />
வளர்பொருள்<br />
வல்லரசாதல் -<br />
நாட்டைப் பற்றி<br />
உன் கனவு!<br />
<br />
இரண்டாயிரத்து<br />
இருபதை<br />
இலட்சியப் புள்ளியாக்கினாய்<br />
அதைக்காணு முன்பே<br />
மண்ணறைப்<br />
பள்ளிக்குப் போனாய்!<br />
<br />
கோடிக் கணக்கான<br />
நெஞ்சங்களில்<br />
கூடுகட்டி வாழும்<br />
புல்புல் நீ!<br />
குவலயம் கண்டிராதப்<br />
புகழ்மாலைப் போட்ட<br />
புனிதன் நீ!<br />
<br />
வளர்ந்த இந்தியாவைக்<br />
காண<br />
உன்னுள் எரியும்<br />
அறிவுத் தீயை<br />
அணையாமல் காப்போம்<br />
உறுதி!<br />
<br />
ஆசானின் பிரம்படி<br />
உன்னை<br />
விஞ்ஞானி யாக்கியது!<br />
தந்தையின் உபதேசம்<br />
உன்னை<br />
மெய்ஞ்ஞானி யாக்கியது!<br />
தாயின் வளர்ப்பு<br />
உன்னை<br />
உலகப் பிரஜையாக்கியது!<br />
<br />
மற்றவர் மகிழ -<br />
நீமட்டும் அழுதுப்<br />
பிறந்தாய்!<br />
இன்று<br />
நீமட்டும் மகிழ<br />
உலகெல்லாம் அழ<br />
எங்களைப்<br />
பிரிந்தாய்!<br />
<br />
ஓ! அப்துல் கலாமே<br />
நீர் அற்புதமான மனிதர்!<br />
நீ பிறந்ததும் சிறப்பு<br />
நீ வாழ்ந்ததும் சிறப்பு<br />
உன்னுடைய இறப்பு<br />
சிறப்பே!<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;">'கவிஞர்' அதிரை தாஹா</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="60" src="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" width="60" /></a></div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-83683794645134329312015-08-02T15:30:00.001+05:302015-08-02T15:30:27.366+05:30[ 7 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-VQrffcBwkbY/Vb3qG1ak3qI/AAAAAAAAWvc/DhOloBKBCqA/s1600/apj-abdul-kalam.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-VQrffcBwkbY/Vb3qG1ak3qI/AAAAAAAAWvc/DhOloBKBCqA/s1600/apj-abdul-kalam.jpg" /></a></div>
என் அன்பு நெஞ்சங்களே ! உங்களிடம் மீண்டும் என்னுள் எழும் எண்ணங்களை நான் வாசித்த,பார்த்த, ரசித்தவற்றை பகிர்ந்து கொள்வதில் மனநிறைவடைகிறேன் .<br />
<br />
<span style="color: blue;">ஊடக பார்வை:</span><br />
கடந்த சில நாட்களாக இந்திய ஊடகத்தை முற்றிலும் ஆட்கொண்ட செய்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களை பற்றிய செய்திகள் தான்.<br />
* ஒரு விஞ்ஞானியாக<br />
* ஒரு எழுத்தாளனாக<br />
* ஒரு விரிவுரையாளனாக<br />
* ஒரு மேடை பேச்சாளனாக<br />
<br />
இப்படி பண்முக திறமையை தன்னுள் அடக்கி கொண்ட ஒரு அறிவாளி அவரின் இத்தனை திறமைகள் அனைத்தும் வருங்கால இளைஞர்களிடம் போய் சேர வேண்டும் என்று நினைத்த அவருடைய வேட்கை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய பொன் மொழிகள். எல்லோராலும் ஏற்று கொள்ள தக்கவை .<br />
<br />
<i>"உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்"</i><br />
<i><br /></i>
<i>"கனவு காணுங்கள், உறக்கத்தில் அல்ல உறக்கத்தை விரட்டும் உனது எதிர்கால இலக்கு பற்றியதாக உள்ள கனவு"</i><br />
<br />
இப்படி மாணவ செல்வங்கள் பற்றிய சிந்தனை தான் தாய், தந்தையை போற்ற வேண்டும் என்று எப்பொழுதும் அறிவுறுத்துவார். அவரின் இழப்பு பேரிழப்பு தான்.<br />
<br />
வலைதளங்களில் அவருடைய செய்திகளும், பொன்மொழிகளும் நிறைத்து தனது அஞ்சலியை இளைஞர்கள் செலுத்தி வருகிறார்கள்.<br />
<br />
நான் பத்து வருடத்திற்கு எனதூரில் ஒரு டியூசன் சென்டர் நடத்தி வந்தேன். ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளித்தேன். கல்லூரி படிப்பை முடித்த இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் தருவாயில் ஆங்கிலம் படிக்க வரவில்லை என என்னிடம் வந்தான் நான் கொடுத்த பயிற்சியில் ஓரளவு தெரிந்து கொண்டான். ஒரு நாள் நான் எனதூரில் உள்ள நூலகம் செல்ல நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த அந்த மாணவன் எனக்கு அளித்த மரியாதையை இன்றும் என்னை நெகிழ வைக்கிறது.<br />
<br />
இலட்ச கணக்கான மாணவ சமுதாயத்தை கவர்ந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் மறைவுக்கு இந்திய நாடே மரியாதை செலுத்துவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. எல்லா பணியை விட ஆசிரியர் பணியே சிறந்த பணி என்பதை அறிந்து கொள்வோம்.<br />
<div style="text-align: right;">
<span style="font-size: x-small;">மீண்டும் சந்திக்கிறேன்...</span></div>
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="70" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" width="100" /></a></div>
</div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-7585321856956086222015-08-02T15:20:00.000+05:302015-08-02T15:20:00.697+05:30என் பார்வையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-_WAiJ1sUOA4/Vb3nUQ_iWZI/AAAAAAAAWvQ/h8Uiu0o1reE/s1600/abdul-kalam_13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/-_WAiJ1sUOA4/Vb3nUQ_iWZI/AAAAAAAAWvQ/h8Uiu0o1reE/s400/abdul-kalam_13.jpg" width="400" /></a></div>
வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.<br />
<br />
அதிகாலை தொழுகை, பள்ளியில் ஓதல் அதன்பின் இரயிலடியில் செய்தித்தாள் விற்பனை, பிறகு கல்வி கற்றல். இளம் வயதில் இப்படி வாழ்க்கையில் சுறுசுறுப்பு, வறுமை வதைக்க விடாமல் விடாத துருதுருப்பு.<br />
<br />
மனிதகுலத்தில் அனைவரும் சமம். வர்ணபேதங்கள் பிரிக்கமுயன்றாலும் உள்ளன்பு,அவர் உண்மையாக இருந்ததினாலேஅது பேதங்களை உடைத்து ஒற்றுமை சுகத்தை, மனிதத்தை நுகர்ந்தது.<br />
<br />
அக்கம் பக்கம் அனைவரும் ஒரே வழிநெறியில் இல்லாவிட்டாலும் அவ்வழிகளில் தன்னெறியுடன் பழகும் பக்குவம் இவரின் குணத்தின் உயர்வே.<br />
<br />
வறுமையில் வதந்குவோர் கல்வியை விடாமல் வாலிபத்திலும் கற்பது பொதுவாக எல்லோர்க்கும் ஏற்புடையதல்ல. ஆனாலும் அக்காலத்தில் அத்திப் பூர்த்துப்போல் அங்கும்மிங்கும் இலட்சியவாதிகள் இவர்கள்போல் இருக்கத்தான் செய்தார்கள்.<br />
<br />
கற்பதே நோக்கம் அதை விட்டு நான் பெரியவன் எனது முறை சிறந்தது என வேற்றுமை உணர்வுகள் வாலிப வயதில் தலைதூக்காமல் ஒற்றுமையில் உழன்று மனித அன்பை வெளிப்படுத்தும் சகஜ மனம் எல்லோர்க்கும் ஏற்படுதல் விருப்பமானதே. ஆனாலும் அவ்வாறு வாழ்ந்தவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. அதில் இவர் விதிவிலக்கல்ல.<br />
<br />
ஏழ்மை எப்படிப் பந்தாடினாலும் ஆழ்மனதின் ஆசை உயர்கல்வி. அதனை அடைவது தெளிவான உள்நோக்கு, தொலைநோக்கு. அந்த அப்பியாசத்திலே ஊறி வளர்ந்ததால் இலட்சிய இலக்குகளை கனவு காணவேண்டும் என்ற விடாப்பிடியான வழிகாட்டல். தான் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.<br />
<br />
அக்கம்பக்கம் அன்மித்தவர்கள் இந்துமத வழிப்படி வாழ்பவர்கள். கற்கும் சூழல் கிருத்தவமதப்படி அமைவுகள். இதனில் இஸ்லாமிய வழியில் வளர்ந்து வாழ்ந்து வந்ததால்' நான் இஸ்லாமியன் கிருத்துவ மெழுகுவர்த்திக் கொண்டு இந்து வணக்கங்களுக்குறிய குத்து விளக்கு ஏற்றுகிறேன்' என்று தாமரை இல்லைத் தண்ணீர்போல் பழக்கப்பட்டு வளர்ந்த அவர்களின் மனதின் வார்த்தைகள் மதிக்கப்பட வேண்டியவைகள்.<br />
<br />
இஸ்லாமிய நெறியில் தன் மனதில் பண்பாடு இருந்ததால் சொற்ப காலத்தில் பாரதம் முழுவதும் ஏன் உலகளவிலும் அவர் புகழ் உயர்ந்தது. ஏனென்றால் வழிகாட்டல்கள் வாழ்ந்து காட்டவே அல்லாமல் உச்சரிக்க மட்டும் அன்று என்பதால்தானே !<br />
<br />
ஜாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயமும் பூசிக்கொள்ளாத இஸ்லாமியர் வாழ்வு இவர் வாழ்வுப் பிரகாரம்தானே இக்காலத்தில் இருக்கும்.<br />
<br />
வாழும் நாட்டின்பற்று ஈமானில் ஒரு பங்காக உள்ளது. அதனாலே அவர் 'நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகைக் காண கனவு காண்கின்றேன்.இந்தக் கனவு மெய்ப்பட நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை' என்று தனது கலந்துரையாடலில் கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதே.<br />
<br />
நன்றி மறப்பது நன்றன்று என்பதை தான் மிக உயர்பதவியில் இருக்கும்போது வெளிப்படுத்துவது மிக உயர்ந்த பண்பு. தன் உரைகளில், கருத்துக்களில் தன் கல்வி ஆசான்களை ஞாபகம் செய்ய என்றும்இவர்கள் மறந்ததில்லை.<br />
<br />
தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக கேரளாவுக்குச் சென்று, அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக திருவனந்தபுறத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது அறிமுகமான எளியவர்களான செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதி உரிமையாளர் ஒருவரையும் மட்டுமே அழைத்துக்கொண்டது உயர்ந்த, பரந்த எண்ணமுடையவரின் பண்பல்லாமல் வேறாகாது.<br />
<br />
விழா மேடையில் ஐந்து நாற்காலியில் ஒன்று மட்டும் ஜனாதிபதிக்காக சிறப்பைக்காட்ட வேறுபட்டிருந்தது. அதில் அமர அவர் மறுத்து அனைவருக்கும் சமமான நாற்காலி அமைக்கச்செய்து அதில் ஒன்றிலே அமர்ந்தது சமத்துவம் தன் உணர்விலே எச்சூழலிலும் இல்லாமல் போகாது என்று வாழ்ந்துகாட்டுதல் வழிகாட்டப்பட்ட வழிநெறி பிறளாது இருப்பதின் சான்றன்ரோ !<br />
<br />
அவரவர் வழிகள் அவரவர்க்கு என்பதற்கேற்ப அனைத்து வழிகளையும் மதித்து, அவர்கள் மனதில் சிறு மரு உண்டாகாமல் அவர்கள் வழிபாடுமுறைகளை மதித்து, உண்மைகள் பலகோணத்தில் உள்ளதை உணர்ந்தும் அதனையும் மதித்தும் நடப்பதில் வெகுஜன மக்களை அரவணைத்து செல்வதில் பொதுநிலை மனதுடைய ஒரு ஜனாதிபதிக்கு கடினமானதுதான். இருப்பினும் தன் உள்ளார்ந்த நிலையினில் தெளிவாக இருந்தால் எங்கும் யார்மனமும் புண்படாமல் வாழலாம் என்று செயல்படுவதில், செயல்படுத்தியதில் சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்கவனிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் ?<br />
<br />
போட்டோக்கள் எல்லாம் பிம்பங்கள். அப்போட்டாவில் உள்ளம், எண்ணம், மனநிலை தெரியாதுதானே ? எனவே பல வேறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவதும் தடுக்கயியலாதுதான்.<br />
<br />
என் இறப்பு இந்திய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதால் 'நான் இறந்தால் விடுமுறை அளிக்காதீர்கள்' என்றார்.<br />
<br />
தனது பாதுகாப்பிற்காக முன் செல்லும் ஜீப்பில் நின்றுகொண்டு வந்தவரை உட்காரச் செய்ய எடுத்த முயற்ச்சிகள், தன் பங்களாவில் கால் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலின் காலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அது திரும்ப தன் 370 ஏக்கர் பங்களாவில் சுதந்திரமாக வாழ வழிவகுத்தது எவ்வுயிரையும் தன் உயிர்போல் மதிக்கும் கருணை உணர்வின் சான்றுகள் அல்லவா !<br />
<br />
உயர் அல்ல இந்திய உச்சப் பதவியில் இருந்த இவர் குடும்பம் இன்றும் நடுத்தர நிலையில் இருக்கிறது. அவருக்கு ஐந்து கோட் உடுப்புகள். அவரின் அறையில் மேஜை நாற்காலி, படுக்க கட்டில், அத்துடன் பெற்ற நினைவுப் பரிசுகள், புத்தகங்கள்.<br />
<br />
இந்திய அமைச்சரவை அவரை 'உண்மையான தேசியவாதி' என்று புகழாரம் சூற்றியுள்ளது. இது அதிகம் சிந்திக்க தூண்டுவதல்லாமல் உண்மையின் மணிமகுடம் என்றாலும் மிகையாகாது.<br />
<br />
இவரின் இழப்பு இந்தியாவிற்கு மட்டும்மன்றி உலகுக்கு என்று அமெரிக்க மாளிகையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறப்பது இவரின் அறிவுக்கு, மனிதாபிமானத்திற்கு என்றாலும் மிகையில்லை.<br />
<br />
இந்த பிரம்மச்சாரிக்கு குழந்தைகள்மீது அளவற்ற பாசம். மாணாக்கர்களே ஆக்கப்பூர்வ சக்திகள். அதனால் இந்தியாவை 2020க்குள் வளர்ந்த வல்லரசாக்க இவர்களுக்குள் இவர்கள் இருக்குமிடம் சென்று இறக்கும்வரை அறிவை விதைக்க கடின முயற்சி.<br />
<br />
இன்னும் இவ்வாறு எழுதிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஒவ்வொரு இந்தியனும் இவைகளை அறிந்ததுதான்.<br />
<br />
பல மேடைகளில் இவர் பெயர் உச்சரிக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் எளிமைக்கு, நேர்மைக்கு, சமத்துவத்திற்கு இந்த இஸ்லாமியரிவரை எடுத்துக்காட்டாக இனியும் எல்லா மேடைகளிலும் உச்சரிக்கப்டாமல் போவதில்லை.அவரின் அருமை உணர்வோம் அவர் சொன்ன கனவை காண்போம். அதன் மூலமும் வாழ்வில் வெல்வோம்.<br />
<br />
வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-79579681709778152022015-07-15T10:10:00.000+05:302015-07-15T10:10:08.840+05:30அவன் பேசினால் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-v3LAvSQhzgM/VaXkG3StZSI/AAAAAAAAWrA/ZjUz8MYpemA/s1600/dua1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="http://3.bp.blogspot.com/-v3LAvSQhzgM/VaXkG3StZSI/AAAAAAAAWrA/ZjUz8MYpemA/s200/dua1.jpg" width="200" /></a></div>
உன்னி லுருவாகி யுள்ளதான<br />
.....வுந்தனகங்காரம் மெல்லவே<br />
என்னில் கரைந்திடவே தந்தேனே<br />
.....என்னை வணங்கிடும் தத்துவமே.<br />
நின்னில் வழக்காக நித்தமுமே<br />
.....நிந்தன் நினைவினை பத்தாகத்<br />
தன்னில் வளர்த்தே வருகிறாய்த்<br />
.....தம்மைக் கெடுத்தே வருந்துகிறாய்.<br />
<br />
உடம்பு வணக்கத்தில் தோற்றமாக<br />
.....வுள்ளம் பலவெண்ண மாற்றம்<br />
தடத்தில் விலகி வழக்காகத்<br />
.....தன்னில் நடத்தும் பழக்கம்.<br />
அடக்கும் வழியறிந்து வொன்றாகி<br />
.....யமைதி தரித்து நன்றே<br />
நடத்தும் முறையில் வணங்க<br />
.....நபியின் நிலையி லிணங்கு.<br />
<br />
அசைவு வனைத்துமடங்கி<br />
.....யமைதி நிலவ முடங்கி<br />
திசையி லொடுங்கியே யென்னைத்<br />
.....தெரிந்து யிழந்திடு வுன்னை.<br />
இசைந்தே உரையாடல் நானு<br />
.....மிரசூலுமத்தஹி(யா)தில் பேணும்<br />
விசையை யறிந்தே வணங்கும்<br />
.....விதமே விரும்ப மெனக்கு.<br />
<br />
உந்தன் வணக்கம் பலனும்<br />
.....உனக்கே வுதவும் விளங்கிடு<br />
எந்தன் வழியைநீ பற்றிட<br />
.....யேற்கும் பணிவையே பெற்றாய்முன்.<br />
தந்தேன் வணக்கத்தி லென்னை<br />
.....தகுதி உயர்த்திடு வுன்னைபின்.<br />
பந்தம் தெளிந்திட வுந்துதலில்<br />
.....பட்டிட்டால் பக்குவமே வுந்தனிலே.<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-32138110181370333862015-07-08T13:39:00.003+05:302015-07-08T13:44:43.773+05:30[ 6 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-NSLPTvYiAK8/VZzaxfrlFVI/AAAAAAAAWp4/ienYNl4lpKU/s1600/702231800_63377.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-NSLPTvYiAK8/VZzaxfrlFVI/AAAAAAAAWp4/ienYNl4lpKU/s400/702231800_63377.jpg" width="400" /></a></div>
அன்றாட நிகழ்வுகள் நம் கண் முன்னே கடந்து செல்கின்றன. ஆனால் நம் மனதில் நெருடும் நிகழ்வுகள். நம் நினைவுகளை விட்டு விலகுவதில்லை. கடந்த ஒருவாரமாக வாட்ஸப்பில் வந்த ஒரு விடியோ பதிவு "ஒரு சிறுவனை, அதுவும் மூன்றோ அல்லது நான்கு வயது நிரம்பிய சிறுவனை மது அருந்த வைத்து வேடிக்கை பார்த்த விடியோ காட்சி பெறும் சர்ச்சயை ஏற்படுத்தியது.<br />
<br />
இந்த நிகழ்வு பெரும்பான்மையான மக்களிடம் போய் சேர்ந்ததை அறிந்த இளைஞர்கள் மீண்டும் வேறு சிறுவனை வைத்து மது அருந்த வைத்து அதனை படம்பிடித்து முகநூலில் போட்டுள்ளனர். இதுபோன்ற பதிவுகளை நாம் அங்கீகரிக்க கூடாது. சிலர் இதனை எதிர்ப்பதாக கூறி மீண்டும் பதிவு செய்கின்றனர் அதனை கூட செய்யாதீர்கள்.<br />
<br />
மன நிறைவை தந்த முகநூல் பதிவு: தமிழகத்தில் இந்து-முஸ்லிம் உறவு பண்டை காலம் தொட்டு உறவு முறை கூறி அழைத்து வந்த பழக்க வழக்கத்தை பற்றிய விரிவான பதிவை பதிந்து இருந்தார்கள். இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவாய் என் மனதிற்குபட்டது.<br />
<br />
இன்றைய காலத்தில் மதச்சாயம் பூசி அரசியல் செய்யும் சூழலில் பொதுவான அரசியலில் மக்கள் ஒன்று சேர வேண்டும். மத நம்பிக்கைக்கு யார் ஆள்வது என்பதற்கும் முடுச்சு போடுவதால் பல மோதல்கள் பல்லாயிரக்கணக்கான<br />
உயிர் சேதங்கள் தவிர்க்க, கொள்கை, நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நம் நாட்டில் மோதல்கள் தொடர்வதை நிறுத்த பழைய காலத்தில், உறவுமுறை கூறி வாழும் முறை மீண்டும் வழக்கத்தில் வர வேண்டும்.<br />
<br />
ஒருமுறை கவிஞர் வாலியும், கவிஞர் கண்ணதாசனும் சந்தித்து கொண்டார்களாம் ( சாதரணமாகவே ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படிப்பினை பாராட்ட மாட்டான். தனக்கென ஒரு இடம் அதில் தான் மட்டுமே சக்கரவர்த்தி என்ற எண்ணம் இருக்கும் ) கவிஞர் கண்ணதாசன் அவர்கள், கவிஞர் வாலி அவர்களை பார்த்து எனக்கு நிகராய் நீ கவிதை எழுதுகிறாய். உனது கவி, என் மறைவிற்கு பின் இரங்கற்பாவாக அமைய வேண்டும் என்றாராம். கண்ணதாசன் அவர்கள் கூறியபடியே சில மாதங்கள் கழித்து மறைந்து விட்டார். இரங்கல் கூட்டம் நடந்தது. வாலி மேடை ஏறினார். இரண்டே வரியில் தனது கவியை முடித்துக்கொண்டார்.<br />
<br />
"காலன் படிக்கத்தெரியாதவன். நல்ல கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்" என்று கூறி மேடையை விட்டு இறங்கி விட்டாராம் கவிஞர் வாலி.<br />
<div style="text-align: right;">
<span style="font-size: x-small;">மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...</span></div>
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="70" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" width="100" /></a></div>
</div>
<span style="font-size: xx-small;"><br /></span><span style="font-size: xx-small;">* முகப்பில் உள்ள படம் மணிமேகலை பதிப்பகம், கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகனுடன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சந்தித்த போது எடுத்த படம்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43104690365566662592015-07-03T08:45:00.001+05:302015-07-03T08:46:24.173+05:30அதில் பங்கு வேண்டாம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-d409YtmVWVA/VZX-et1EjHI/AAAAAAAAWpM/0sKgPqBf4LQ/s1600/cover-letter.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-d409YtmVWVA/VZX-et1EjHI/AAAAAAAAWpM/0sKgPqBf4LQ/s200/cover-letter.jpg" width="166" /></a></div>
உண்ணாமல் இருந்தாலும்<br />
உன்னோன்பு ஏற்கலாகாதாம்<br />
தண்மை குணங்களாக<br />
தகுதி வரவேண்டும்<br />
<br />
பொய்யான பேச்சுகளும்<br />
பொய்யானநடவடிக்கைகளும்<br />
மெய்யாக விட்டிட்டே<br />
மேன்மை பெறவேண்டும்<br />
<br />
வணக்கங்கள் எதற்காக ?<br />
வல்லோனே கேட்க்கின்றான்<br />
இணக்கமான குணமில்லை<br />
எப்பொழுது மனிதத்தன்மை ?<br />
<br />
பரந்த மனமில்லை !<br />
பக்குவமும் இன்னுமில்லை !<br />
அரவ குணங்களே<br />
அப்பப்ப அரங்கேற்றம்<br />
<br />
'எல்லாப் புகழும்<br />
இறைவனுக்கே' என்றானே<br />
வல்லோன் மொழிதனிலே<br />
வாசிப்பு மட்டும்தானா !?<br />
<br />
திட்டங்கள் தீட்டி<br />
தேகம் குளிரலாமோ !<br />
பட்டங்கள் சூற்றி<br />
பதவி பெறலாமோ !?<br />
<br />
தானே ! வரவேண்டும்<br />
தருவதும் அவன்தானே<br />
வீணே ? வருத்தங்களும்<br />
விலகிடத்தான் வைத்திடுமே<br />
<br />
அற்ப ஆசைகளும்<br />
அப்பப்ப அரங்கேற்றம்<br />
சொற்ப நேரம்தானே<br />
சுகமும் நிற்கும் !?<br />
<br />
நித்தியன் ஒன்றே<br />
நிறைவான நோக்கம்<br />
சத்தியமாக வாழ்தலே<br />
சன்மார்க்க வழியாகும்<br />
<br />
புத்திகளில் புகுந்திட்ட<br />
புதுமைகளைக் களைந்திடுவோம்<br />
பத்தினித் தன்மைகளை<br />
பயன்பாட்டில் கொண்டிடுவோம்<br />
<br />
அகங்காரம் அவனுடையது<br />
அதில் பங்குவேண்டாம் !<br />
இகத்தினில் வாழ்ந்திடவே<br />
இதனையும் மனம்கொள்வோம்<br />
<br />
'தான்''நான்' அழிந்தே<br />
தகுதி உயரவேண்டும்<br />
ஏன்னென்றால் அந்நிலை<br />
ஏகனின் தனிநிலையாகுமே.<br />
<br />
<span style="color: blue;"><b>நபிதாஸ்</b></span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31145061701718722762015-07-01T21:26:00.002+05:302015-07-01T21:26:15.745+05:30[ 22 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-fa1_qJ1Kgdk/VZQJu5srDZI/AAAAAAAAWok/4Gl8vSTnWEs/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="149" src="http://1.bp.blogspot.com/-fa1_qJ1Kgdk/VZQJu5srDZI/AAAAAAAAWok/4Gl8vSTnWEs/s320/header.png" width="320" /></a></div>
(81)<br />
நாடிடுவீர் உச்சமாக நாயகரின் வாழ்வுதனைத்<br />
தேடிடுவீர் உந்தன் தியானத்தில் - வீடுபேறும்<br />
இல்வாழ்வின் நல்லமைவாய் என்றும் நிலைத்திடுமே<br />
சல்லாபம் விட்டே தரித்து.<br />
<br />
(82)<br />
தரித்திட வேண்டும் தலைவனில் ஆழப்<br />
புரிந்திட நல்லடிமைப் போல - அரிதாகும்<br />
துன்பம், துயரம், துரோகங்கள் வாழ்வினில்,<br />
இன்பம் நிறையும் இணங்கு.<br />
<br />
(83)<br />
இணங்கியே இல்லாதும் ஏகனில்எல் லாம்மாய்<br />
வணக்கத்தில் ஒன்றி வரனும் - சுணங்காதாம்<br />
ஆற்றல்கள் நோக்கத்தை ஆற்றிவிடும் எப்போதும்<br />
போற்றிடுவார்மேன்மைப்புகுத்து<br />
<br />
(84)<br />
புகுந்திடு ஏற்றமிகுப் புண்ணிய வாழ்வில்<br />
மிகுந்திட ஆனந்தம் மின்னும் - வகுத்திடு<br />
வல்லவன் பாதையில் வாழ்வுகள், தன்னைப்போல்<br />
எல்லாமும் என்பதில் என்று.<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><span style="font-size: xx-small;">(தொடரும்)</span><br />
<br />
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (81</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> மனிதகுல முன்மாதரி நாயகப் பெருமானின் வாழ்க்கை முறைகளை தீவிரமாக விரும்பி நாட்டம்கொண்டு மனவோர்மை நிலை தியானத்தில் அவ்வாழ்வு நிலைகளை சிந்தித்து அடைந்துக்கொள். அதன்மூலம் வீடுபேறு என்ற சுவர்க்கநிலை உன்னுடைய இல்லற வாழ்க்கையிலே நல்லமைவாக இனி நிலைத்துவிடும். அதனால் சிற்றின்பம் தூண்டும் பேச்சுக்களை விட்டு அந்நல்வழியில் உன்னைப் புகுத்தி அவ்வாழ்வையே அணிந்துக்கொள்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (82</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span> இறைவனை நன்கு ஆழப் புரிந்திட்ட நல்ல அடிமைப்போல இறைவனின் வழிகாட்டுதலைத் தரித்துக்கொள். அதனால் துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள் உன் வாழ்வில் இல்லாமல் போய் மாறாக இன்பம் வாழ்வில் நிறைந்துவிடும். அதனால் அந்நல்லடிமை வழிகாட்டுதலை உன்னில் இணக்கமாக்கி அமைத்துக்கொள்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (83</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>இறைவணக்கத்தில் அவனன்றி ஏதுமில்லாத அவனில் தன்னையிழந்து ஒன்றிவிடனும். அவ்வாறானவர்களின் நோக்கங்களை ஆற்றல்கள செயலக்கிவிடும். அவைகள் காலத்தாலும் போற்றப்படும். அத்தகைய மேன்மையான வணக்கத்தை உன்னில்கொள் என்பதாகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (84</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>நன்மைகள் செய்யும் புண்ணிய வாழ்க்கையாக உன் வாழ்க்கையை அமைத்திடு. அவ்வாறாக அங்கு ஆனந்தம் பிரகாசிக்கும். இறைவன் வகுத்திட்ட பாதைகளை தன் வாழ்க்கையின் பாதையாக அமைத்திட தன்னைப்போல் எல்லாமும் என்ற பரந்த எண்ணத்தில் அப்புண்ணிய வாழ்வு அமையும்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21503385217752264632015-06-15T16:35:00.000+05:302015-06-15T16:35:03.152+05:30ஜுன் மாதம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வருக! வருக!<br />
வள்ளல் மாதமே!<br />
மருத்துவக்கல்லூரி<br />
மணவிழாப் போல<br />
கூட்டம்! ஒரே கூட்டம்!<br />
<br />
பொறியியல் கல்லூரியில்<br />
பொரி பொரித்துப்<br />
பூரிக்கும் காட்சி<br />
கூட்டம்!<br />
நாட்டிலே படிப்பு<br />
இதுமட்டும் தானா ?<br />
மற்றப்படிப் பெல்லாம்<br />
கருவாற்றுக் கடைபோல<br />
கண்டு கொள்ளாமல்<br />
கிடக்கிறது!<br />
<br />
அதிக மதிப்பெண்<br />
அப்படியே கல்லூரியில் சேர்ந்துவிடுவர்<br />
வசதியுள்ள பெற்றோர்<br />
வாரிவழங்கிப்<br />
பெற்றுவிடுவர் "சீட் "<br />
<br />
அதிக மதிப்பெண் பெற்ற<br />
ஏழைகள்<br />
சொத்துக்களை<br />
விற்றுப் போண்டியாகிப்<br />
படிப்பில் சேர்ப்பர்!<br />
<br />
பொருளைப் புரட்ட<br />
முடியாதவர்கள்<br />
கண்பிதுங்கி,<br />
கிடைக்கின்ற படிப்பில்<br />
கவனம்!<br />
<br />
எந்தந்தத் துறையில்<br />
திறமை இருக்குமோ<br />
அதைப்படிப் பதால்<br />
நாடு முன்னேறும்<br />
பணம் பெருக்கும்<br />
<br />
படிப்பு மட்டும்<br />
தேர்ந்தால்<br />
நாடு தேயவடையும்!<br />
பிறபடிப்பும் படியுங்கள்<br />
பிறகு பாருங்கள்<br />
வாழ்க்கையில்<br />
இன்பத்தை!<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;">'கவிஞர்' அதிரை தாஹா</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="60" src="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" width="60" /></a></div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1587144585599946492015-06-12T11:12:00.000+05:302015-06-12T11:12:20.935+05:30விதை !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விதை புதைந்து<br />
<div>
வெளியுலகில் விரிச்சமாக<br />
வீரியமாய் காட்சி தரும்.<br />
வீராப்பாய் விதை ஒன்றும்<br />
விரிச்சத்திடம் வாதங்கள் செய்வதில்லை<br />
<br />
என்னை மறந்து நீ<br />
தென்றலிடம் உறவாடுகிறாய்<br />
குயிலிடம் இசை பாடுகிறாய்<br />
கூட்டமாய் இருக்குமிடம்<br />
சோலை என்று கூறும்போது<br />
விதைகள் என்றும் வெம்புவதில்லை.<br />
<br />
விதைப்பவன்<br />
ஒருவனென்றாள்<br />
சுவைப்பவன் மற்றவன்<br />
அதுதான் இயற்கை<br />
<br />
வருத்தங்கள்<br />
விதைகளுக்கு புதைக்கும் போது<br />
வருவதுண்டு புதைந்த பின்<br />
வெடித்து அது வீரியமாய்<br />
வெளி வரும் அது அன்று அது அரும்பு<br />
அரும்பு அது அயராமல்<br />
நீர் தேடி வேர் ஊரும்<br />
<br />
ஊடுரும் வேருக்கு<br />
விருச்சத்தின் பார்வைகள்<br />
வேருக்கு கிடைப்பதில்லை<br />
வேர் அதும் விருச்சத்தின் மேல்<br />
கோபம் ஏதும் கொள்வதில்லை<br />
<br />
மனிதருள் பலர் விருச்சம்<br />
சிலர் வேர் அதிலும் சிலர் விதை<br />
நீ எதுவாக இருக்கிறாய்<br />
உணர்ந்து கொள்<br />
உன்னை அறிந்தால் நீ<br />
உலகத்தில் போராடலாம்.<br />
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="70" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" width="100" /></a></div>
</div>
</div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89900666443589524692015-06-11T06:06:00.000+05:302015-07-03T08:17:37.880+05:30[ 21 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-1hJAKkdPse8/VXbebbiQ1dI/AAAAAAAAWjA/bdnEbJ20EKY/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="149" src="http://1.bp.blogspot.com/-1hJAKkdPse8/VXbebbiQ1dI/AAAAAAAAWjA/bdnEbJ20EKY/s320/header.png" width="320" /></a></div>
(77)<br />
உணர்வுகள் உள்ளத்தில் உண்டாகித் தங்கக்<br />
குணமாகும் பண்பே கொடையாம் - மணத்திடத்<br />
தந்தவைத் தானெனத் தன்னைகூறும் சூத்திரமாய்<br />
அந்தமா யோனின் அமைவு.<br />
<br />
(78)<br />
அமைதியில் உள்ளம் அசையாமல் ஓர்மைச்<br />
சமைந்திடின் தூக்கம் தழுவும் - இமைகள்<br />
விரிந்திடும் சாந்தம் விகசிக்கும் வாழ்வில்<br />
சொரிந்திடும் இன்பத்தின் சொத்து<br />
<br />
(79)<br />
சொத்தென்றால் உள்ளமைதிச் சோதி நிலைத்திட<br />
நித்தியனில் சுத்தமாகும் நிம்மதி - முத்தான<br />
இப்பிறப்பில் எல்லாமே எட்டிடுமித் தத்துவமே<br />
தப்பாமல் நிற்கும் தலம்.<br />
<br />
(80)<br />
தலமென்ற உள்ளத்தில் தங்கும் தலைவன்<br />
அலங்கரிப்பான் நல்வாழ்வை ஆங்கே - இலகுவாக<br />
இல்லாமை இல்லாமல் என்றும் வழங்கிடுவான்<br />
நல்லிதனை உன்னிலே நாடு.<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="color: blue;"> </span> </span><span style="font-size: x-small;">(தொடரும்)</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (77</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> உணர்வுகள் உள்ளத்தின்கண் உண்டாகித் தங்கிட அதுவே குணமாகும். அக்குணம் நற்பன்புடையதாய் இருக்குமானால் அதுக் கொடையாகும். அந்தக் குணங்கள் வாசமாக மணத்திட அக்குணம் வெளிப்பட்டோன் அதுத் தன்குணம் என்றுக் கூறிடும் சூத்திரமாக அந்த எல்லாம் வல்ல மகாப்பெரியோன் அமைவு இருக்கின்றது.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (78</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>உள்ளம் எச்சலனமும் இல்லாமல் ஒர்மையாக அதில் அமையயேற்பெற்றால் மெல்லத் தூக்கம் தழுவும். அந்நிலையில் உறங்கமும் இல்லாமல் இருக்கும் அமைதி மலரும் வழியறிந்தோர் வாழ்வில் அமைதியே வடிவாகிப் பிரகாசிப்பார். அந்நிலையில் ஆனந்தம் சொரிந்திடும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (79</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> ஒருவன் பெறவேண்டிய பாக்கியம் என்றச் சொத்து ஒன்றென்றால் மனஅமைதி என்றச் சோதித் தன்னில் நிலைத்திட நித்தியனில் இணை போன்ற அசுத்தங்கள் அழிந்து பரிசுத்தமாகும் அவ்வமைதியாகும். பெறர்க்கரிய முத்தான இப்பிறப்பில் எல்லாமே அடையப்பெறும் அமைதியின் தத்துவமே ஒருவன் அதுத் தப்பிவிடாமல் பற்றி நிற்கும் தலமாகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (80</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> தலமென்ற உள்ளத்தில் இறைவன் தங்க ஆட்க்கொண்டுவிட்டால் நல்வாழ்வை அவ்வுள்ளத்தின்மூலம் வெளிப்படுத்தி அலங்கரிப்பான். இல்லாமையே இல்லையென்ற நிலையில் வேண்டும் தகுந்ததை வழங்கிடுவான். அதனை அடைய நீ நாடவேண்டும்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-83677861422272544562015-05-13T07:38:00.000+05:302015-05-13T07:38:05.733+05:30[ 5 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-vv_U8YuBfmI/VVKx-G3VrKI/AAAAAAAAWfU/ZdZl5Q2CckQ/s1600/702231800_63377.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-vv_U8YuBfmI/VVKx-G3VrKI/AAAAAAAAWfU/ZdZl5Q2CckQ/s400/702231800_63377.jpg" width="400" /></a></div>
நேபாளில் நடந்த நில நடுக்கம், மக்களின் அவலம் பற்றி செய்தி சேகரிக்க வந்த இந்திய பத்திரிகையாளர்கள் தான் செய்தி சேகரிக்க வந்த இடம் மனித இழப்புகள் நிகழ்ந்த இடம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு அங்குள்ள மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நாடகம் எடுப்பது போல வீடியோ கேமராவுடன் அலைந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. ஊடகத்தை பற்றி ஊடகத்திலே குறை !<br />
<br />
பாகிஸ்தான் .மலேசியா, கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளின் பல உதவிகள் நேபாளில் குவிந்தது. இதனை பார்க்கும்போது என் மனதில் தோன்றிய எண்ணம். மத வேறுபாடுகள் காரணமாக மனிதன் மோதி கொண்டு<br />
அதன் காரணமாக மனித அழிவுகள் ஏற்பட்டால் ..அல்லது இரண்டு நாடுகள் சண்டையிட்டு மோதிக்கொண்டு அதன் காரணமாக ஏற்படும் மனித அழிவுகள் ஏற்படும்போது யாரும் ஒன்று கூடி உதவி செய்வதில்லை. ஆனால் இயற்கை சீரழிவு ஏற்பட்டால் மதம் பாராது, இனம் பாராது ஒன்று சேர்வதை பார்க்கும்போது, இயற்கை மனிதர்களை ஒற்றுமையாய் இருக்க சொல்கிறது .<br />
என்றே தோன்றுகிறது.<br />
<br />
<span style="color: blue;">சந்திப்பு !</span><br />
மணிமேகலை பதிப்பகம்,கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. எதோ நெருங்கிய உறவை சந்தித்தது போன்ற உணர்வு.<br />
<br />
நான் நேசிக்கும் துறை சார்ந்த வல்லுனரின் பிள்ளை என்ற ஒரே காரணம் தான். எனது ஆர்வம் கண்டு பிரமித்து போனார். தனக்கும் எழுத்து ஆர்வம் உண்டு என கூறினார். ஆனந்த விகடனில் அவருடைய கதை அரசு என்ற புனை பெயரில் வெளி வந்ததாக கூறினார். ஆத்ம பூர்வமான சந்திப்பு.<br />
<br />
<span style="color: blue;">கேள்வி:</span><br />
நான் தமிழூற்று மாத இதழ் நடத்திய போது, கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேள்வி கேட்டார்.<br />
நான் வசதி குறைவான நிலையில் ஊள்ளேன். எனது மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளான். படிக்க வைக்க ஆசை, சரியான வழி சொல்லுங்கள் என்றார். கல்லூரி வரை படிக்க வாய்பில்லை என குறிப்பிட்டிருந்தார். நான் கூறிய பதிலை பின்னூட்டத்தில் கூறுகிறேன் நீங்கள் உங்கள் பதிலை கூறுங்களேன் .<br />
<br />
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...<br />
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="70" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" width="100" /></a></div>
</div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64030092302827086642015-05-07T17:17:00.003+05:302015-05-07T17:17:17.795+05:30[ 20 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-b0vdluYlZKA/VUtPwt9gPMI/AAAAAAAAWew/kPhFd2JEhvs/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-b0vdluYlZKA/VUtPwt9gPMI/AAAAAAAAWew/kPhFd2JEhvs/s1600/header.png" /></a></div>
(73)<br />
நம்பிக்கை எண்ணம் நடந்திட ஏகனே<br />
நம்மிலே நாடிடும் நாடகம் - நம்புவோர்<br />
நம்புதலில் தம்மை நன்கே நிலைத்திட<br />
நம்பிக்கை வெல்லுமே நம்பு<br />
<br />
(74)<br />
நம்பிக்கை மோசங்கள் நல்லவர்போல் வேசங்கள்<br />
அம்பலமே ஓர்நாளில் ஆகிவிடும் - அம்புகள்<br />
ஒவ்வொன்றாய் பாய்ந்திடுமே, ஓரமாகஒண்டியாக<br />
ஒவ்வொருநாள் செல்லும் உணர்<br />
<br />
(75)<br />
உணர்த்திடும் ஒவ்வொன்றில் உள்நோக்கிச் செல்ல<br />
இணக்கமாய் எல்லாம் இருக்க - உணர்பவர்<br />
ஒன்றிலே தன்னை உணர விளங்குவாரே<br />
ஒன்றிலே நிற்குமெல்லாம் ஒத்து<br />
<br />
(76)<br />
ஒத்துழைப்பு வேண்டுமெனில் ஒத்தமனம் ஆகிடனும்<br />
ஒத்தமனம் அர்ப்பணிப்பில் உண்டாகும் - நித்தியனில்<br />
ஒத்துப்போய் ஒன்றிலாகி ஒன்றிட சத்தமில்லா<br />
ஒத்தனாய் நிற்பாய் உணர்ந்து<br />
<br />
<b><span style="color: blue;">நபிதாஸ்</span></b><span class="Apple-tab-span" style="white-space: pre;"><b><span style="color: blue;"> </span></b> </span><span style="font-size: x-small;">(தொடரும்)</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (73</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>நம்பிக்கைக்கொள்வோர் தன் நம்பிக்கையில் உறுதியாக நின்றிட நம்பிக்கை நடந்தே வெல்லும். ஏனென்றால் நம்பிக்கை எண்ணம் நம்மில் உண்டாக ஏகனே நாடிடும் நாடகம். எனவே நம்பிக்கையில் தளர்ந்திடாதே.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (74</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக்கை மோசங்கள் செய்து வந்தால் ஏதாவது ஒருநாளில் அது அம்பலம் ஆகிவிடும். அப்பொழுது அம்மோசத்தால் பாதிப்புகுள்ளானவர்களின் துன்புறுத்தல் என்ற அம்புகள் ஒவ்வொன்றாய் அவர்மேல் பாய்ந்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர்கூட துணைக்கு வரமாட்டாட்கள். ஒவ்வொருநாளும் வேதனையில் தனிமையிலே நரக வாழ்வாகச் செல்லும் என்பதை உணர்ந்து அந்நிலை ஏற்படாமல் நல்லவனாக வாழ் என்பதேயாகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (75</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> ஒவ்வொன்றிலும் அது எப்படி? ஏன் ? எதனால் ? போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அதனுள் உள்நோக்கிச் செல்ல, எல்லாமே ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய ஒரு இணக்கத்தில் இருக்கின்றதென்பதை அது உணர்த்திடும். அவ்வாறு உணர்பவர் அவ்வொன்றிலே தன்னையுணர ஒன்றிலே அவ்வொன்று பலவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனக்கத்தில் இருக்கின்றது என்பதை விளங்குவார்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="color: blue; font-size: x-small;">வெண்பா (76</span><span style="font-size: x-small;">) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டுமெனில் எல்லோரும் தங்கள் மனநிலையில் எதற்கு ஒத்துழைப்பு வேண்டுமோ அதில் ஒத்தமனமுடைய என்ற ஒத்த விருப்பமுடையவர்களா இருக்க வேண்டும். அத்தகைய ஒத்தமனம் விட்டுக்கொடுத்தல் என்ற அர்ப்பணிப்பில் உண்டாகும். அதுபோல் நித்தியன் என்ற நிலையான எங்கும் நிறைந்த ஏகனில், வேற்றற்ற ஒன்றே என்ற ஒத்தக்கருத்துடையத் தாம் ஒத்துப்போய் ஒன்றிலாகிட, ஒன்றே பலவாக இருக்கின்றநிலையான ஒத்தனாக நிற்பதை உணர்ந்துக்கொள்வாய் என்பதாகும்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-9062770063711098402015-04-29T21:36:00.000+05:302015-04-29T21:36:49.664+05:30[ 19 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-0ZfbDRWnn4Q/VSpvM9SvA_I/AAAAAAAAWYQ/5MS_RJUkVj8/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-0ZfbDRWnn4Q/VSpvM9SvA_I/AAAAAAAAWYQ/5MS_RJUkVj8/s1600/header.png" height="149" width="320" /></a></div>
(69)<br />
தாவிட உள்ளம் தனிமைச் சுயத்தெளிவில்<br />
தாவிடும் உள்ளம் தலைவனுள் - ஆவியும்<br />
தாவிடும் மெல்லத் தளர்ந்திட்டே காலத்தே<br />
ஓவியம் இல்லஅரு ஓம்பு<br />
<br />
(70)<br />
ஓம்பு உறவினர் உற்றார் ஒருகாலும்<br />
வீம்பில் எதிலும் விடமாட்டார் - கூம்பியே<br />
உன்னவன் என்றேநீ உள்ளத்தில் எண்ணங்கள்<br />
நன்னெறி ஊன்றியே நம்பு.<br />
<br />
(71)<br />
நம்புதலில் திண்ணம் நழுவாதே நின்றிட<br />
நம்பிட்ட நாட்டம் நடக்குமாம் - நம்பிடும்<br />
நல்லவைகள் அல்லவைகள் நன்கே நடந்திடுதல்<br />
வல்லவனின் ஆற்றலான வாக்கு.<br />
<br />
(72)<br />
வாக்குகள் நாக்கினால் வந்ததல்ல மாறாக<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
ஆக்கையில் உண்டாகி ஆளுமே - ஊக்கமுடன்<br />
உன்னிலே தேடிட உள்ளத்தை வாசலாக<br />
நன்கொடைத் தந்தவனே, நம்பு<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ் </span><span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><span style="font-size: x-small;">(தொடரும்)</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (69</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span> தான் யார் ? தான் எப்படி வந்தோம் ? அவ்வழியே செல்லத் தன் ஆதி மூலம்தான் எது ? என்று தன் சுயத்தெளிவில் தன் உள்ளம் தனிமையில் சிந்திக்கத் தாவிட, தன் உள்ளம் மேலும் தாவிடும் தன் தலைவனுள். இவ்வாறு சிந்தித்துக்கொண்டே முடிவில்லாமல் சென்றால் தன் ஆவியும் என்ற உயிரும் உடல் தளர்ச்சியினால் தாவிவிடும். எனவே உடன் காலத்தே தன் தலைவன் யார் ? அவன் அருவென்ற உருவமில்லாதவன் என்பதைப் பேணித் தலைவனுள் (இறைவனுள்) சிந்தனைச் செய். (அதன் மூலம் தன்னையும் அறிவாய் தன் தலைவனையும் அறிவாய்)</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (70</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> உற்றார் உறவினர் அவர்களை நேசமுடன் பேணி நடந்துக்கொள். அவர்கள் ஒருகாலும் உன்னை வீம்பாகக்கூட எதிலும் பாதிப்பு ஏற்பட விட்டுவிடமாட்டார்கள். எனவே ஒன்றாக ஒற்றுமையாக அவர்களை அரவணைத்தே அவர்கள் உன்னுடையவர்கள் என்ற இறைவனின் நன்னெறியுடன் நீ உன் ஆழமான உள்ளத்தில் எண்ணங்கள் என்றும் மலர நம்பிக்கைக்கொள். நன்நம்பிக்கை நாட்டப்படி நல்லதாகவே மாற்றிவிடும். எண்ணம் என்பதும் வேண்டுதலே அதனை இறைவன் செயல்படுத்துவான்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (71</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> நம்பிக்கையில் கிஞ்சுற்றும் நழுவாது மிகவும் உறுதியாக </span><br />
<span style="font-size: x-small;">நின்றிட அந்நம்பிக்கை நாட்டாப்படியே நடந்துவிடும். இவ்வாறு நம்பிடும் நல்லதும் அல்லதானக் கெட்டதும் நன்றே நடந்திடுதல் எல்லாம் வல்லவனான அவனின் ஆற்றல்மிகு வாக்குப் போன்றதாகும். ஏனென்றால் அவன் நாட்டம் நடப்பதன்றி வேறாகாததுடன், அவன் நாட்டம் என்பதும் நம்பிக்கையும் அவன் படைத்த இம்மனதுடன் தொடர்புடையது.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (72</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span>வாக்கு என்பது நாக்கினால் உண்டானதல்ல. மாறாக மனித உடம்பிலிருந்து உண்டாகி செயல்படும்; செயல்படுத்தும். மேலும் மிக ஆழமாக ஊக்கமுடன் உன்னிலே அறிந்திட உன் உள்ளத்தை அவன் நன்கொடை வாசலாக தந்த அவனின் ஆற்றலிலிருந்துத்தான் வருகிறது என்பதை நம்பு. வாக்கு பலிக்கிறது என்றுச் சொன்னால் எல்லாம் வல்லவனிடமிருந்துதான் என்பதை அறிந்துக்கொள். மனிதனுக்கு ஆற்றலில்லை எல்லாவற்றையும் படைத்த இறைவனிடத்தில் தான் ஆற்றல்கள் உள்ளது. அவனிடமிருந்துத்தான் ஆற்றல்கள் வருகிறது.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50428532198991692072015-04-26T06:07:00.002+05:302015-04-26T06:07:51.127+05:30ஏன் மறைந்தாய் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
துள்ளித் திரிந்த காலமது...<br />
தூரத்திலோர் சப்தம் கேட்கும்<br />
வண்ண வண்ண ஒளிகொடுத்து<br />
வானில் வண்ண வெடிகளாலே..<br />
<br />
என்னவென்று நானும் பார்ப்பேன் ..<br />
தீபாவளி திருநாள் என்று பலரும் சொல்ல ..<br />
நாளை நமக்கு நல்ல பல பலகாரங்களும் ..<br />
இனிய பல இனிப்புகளும் நம்ம வீடு வந்து சேரும் ..<br />
<br />
இஸ்லாமிய வீட்டிற்கும்<br />
இனிய பொங்கல் ...கரும்புடனே<br />
இன்னும் பல வைபவங்கள் ..<br />
மதம்பாரா மனிதநேயம் ..இனியதாக நடந்தேறும் ...<br />
<br />
பேருந்தில் பயணிக்கையில் ..<br />
பெரியவர் நின்றிருந்தால் .<br />
தன்னிருக்கை கொடுத்து<br />
தயவாக நடந்த காலம் ..<br />
தாடி ..தொப்பி போட்டிருக்கும்<br />
பெரியவரும் ..பட்டை நாமம் போட்ட பெரியவரும்<br />
பொக்கை வாய் பிளந்து சிரித்த காலம் அக்காலம் ..<br />
<br />
ரஹீமிற்கு காய்ச்சலென்று ..<br />
ராமனுக்கு கவலையாகும்<br />
ரத்த பந்த சொந்தமில்லை ...<br />
இருவருக்கும் பாசத்தில்<br />
கொஞ்சமும் பஞ்சமில்லை ..<br />
<br />
பஞ்சம் நிறைந்த காலமது<br />
வஞ்சமில்லா காலமது ...<br />
நந்தி கேஸ்வரனும் ...நவநீத கிருஷ்ணனும்<br />
ஞான சேகரணனும்...நலம் பெறும் நண்பனாக<br />
வாழ்ந்த காலமது<br />
<br />
கடை மடை ..வரை<br />
காவேரி தவழ்ந்து வந்த காலமது<br />
காலமது கடந்ததுவே ..<br />
தந்திரங்கள் புகுந்ததுவே ..<br />
<br />
தண்ணீர் கேட்டால் ...<br />
நீ பேசு மொழி வேறு ..<br />
என்பதுவும் ...கல்வி கற்க இடம் கேட்டால்<br />
நீ வேறு மதம் என்பதுவும் ..தந்திரத்தின்<br />
வெளிப்பாடே ...<br />
<br />
மனித நேயம் ...<br />
நிறைந்த காலமதில்<br />
அரசியலில் மதமில்லை ..<br />
மனித நேயம் நிறைந்த காலமதில்<br />
வணிகத்தில் மதமில்லை ..<br />
<br />
மனித மனதில் ...<br />
மனித நேயமிருந்தது<br />
மனிதனிடம் மதம் புகுந்து<br />
மனித நேயமதை ..<br />
துரத்தினரே ...<br />
<br />
ஏன் மறைந்தாய் ..<br />
மனித நேயமே ..<br />
என கேட்க நம் நாட்டில் நாதியில்லை ..<br />
அனாதையாய் மனித நேயம் ...<br />
<br />
நல்ல மனிதர் கேட்கும் கேள்வி ..<br />
ஏன் மறைந்தாய் மனித நேயமே .!<br />
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" height="70" width="100" /></a></div>
</div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49720526139025842382015-04-22T23:02:00.000+05:302015-04-22T23:02:25.166+05:30உலக பூமி தினம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-7uIGN891ziM/VTfanXC9V_I/AAAAAAAAWcY/wvMo38UVSMU/s1600/22-world-earth-day--600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-7uIGN891ziM/VTfanXC9V_I/AAAAAAAAWcY/wvMo38UVSMU/s1600/22-world-earth-day--600.jpg" height="240" width="320" /></a></div>
நாளும் மெலிகிறது<br />
நாட்டின் பசுமை<br />
கோளும் எரிகிறது<br />
கோடை வெயிலில்!<br />
சுற்றும் பூமியெனும்<br />
சுகந்தரும் மாத்திரையைப்<br />
பற்றிச் சாப்பிடத்தான்<br />
பலமுடன் காத்திருக்கு!<br />
.<br />
தீவுகள் எல்லாம்<br />
திரைகடல் உள்ளே<br />
காவுகள் கொண்டு<br />
கரைந்துதான் போகும்!<br />
உயிராம் காற்றும்<br />
உணவான நீருமின்றி<br />
பயிரும் வாடும்<br />
பரிதாபம் வேருடனே!<br />
காசுகள்தான் இசைத்தாலும்<br />
காகிதம் இசைக்குமா?<br />
வீசுகின்ற அசைவின்றி<br />
வேகிடும் நிலையிது!<br />
பூவுலகின் உடலில்<br />
பூவிதழ் உலர்ந்து<br />
ஆவியினால் திடலாய்<br />
ஆகிடும் கடலும்!<br />
வானத் தாயின்<br />
வல்லமை ஓசானாம்<br />
மானத் தைத்தான்<br />
மண்ணிலே துகிலுரித்தோம்!<br />
புறவூதா தீக்குச்சிப்<br />
புலம்பெயர்ந்து தெரிகிறது<br />
நிறம்மாறும் போக்குத்தான்<br />
நிலமடுப்பு எரிகிறது!<br />
பச்சைத் துணியகற்றி<br />
பால்வெண்மை விதவை:<br />
இச்சைத் தணித்திடுமா<br />
இந்தக்கா கிதமும்!<br />
மரத்தை அறுத்து<br />
மாளிகைச் சாளரம்<br />
வரத்தைத் தருமா<br />
வானிலே மாமழை!<br />
காசின் தணப்பில்<br />
காற்றின் துரோகிகள்<br />
வீசும் அனலில்<br />
வியர்க்கும் வறியவர் !<br />
<div style="text-align: center;">
<span style="color: #073763; font-family: 'Times New Roman'; font-size: x-small;">"கவியன்பன்"</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue;">அபுல் கலாம் </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-7dYQNluXuEg/UKnUqtBjrfI/AAAAAAAAE3U/8uf6J-X-jWg/s1600/KALAM%2525252BOFFICE%2525252BPIX.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-7dYQNluXuEg/UKnUqtBjrfI/AAAAAAAAE3U/8uf6J-X-jWg/s200/KALAM%2525252BOFFICE%2525252BPIX.jpg" height="50" width="50" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com</span></div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46839075953796555882015-04-16T07:32:00.000+05:302015-04-16T07:33:44.819+05:30[ 18 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-UWHbRF6y1B0/VSHswP8yasI/AAAAAAAAWW0/yME2LftIgqY/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center; white-space: pre;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-UWHbRF6y1B0/VSHswP8yasI/AAAAAAAAWW0/yME2LftIgqY/s1600/header.png" height="148" width="320" /></a></div>
(65)<br />
நிலைகள் நிலையற்ற நித்தியத்தின் மாற்றம்<br />
நிலைத்தஅதிலே நிகழும் - அலைகள்<br />
கடலில்பிறந்தே கலைந்திடும், ஒன்றில்<br />
தொடரும் சுழற்சித் துடிப்பு.<br />
<br />
(66)<br />
துடித்திடும் துன்பம் தொடரும்பிரிக்க<br />
வெடித்திடும் வேதனை விடாமல் - படித்திடும்<br />
தத்துவம் நன்றே தடுத்தும் இணைவைக்கும்<br />
பித்தனின் நல்லப் பிழை.<br />
<br />
(67)<br />
பிழைகளெனப் பார்வைப் பிரிக்கத் தெரியாத்<br />
தழைத்திட்ட உள்ளமே தப்பு - விழையும்<br />
விபரத்திலே நேர்மை விதியின் சமாதி<br />
சுபமறியும் கல்வியைத் தொற்று.<br />
<br />
(68)<br />
தொற்றிடும் கொள்கைத் துவைதமே ஆகிடின்<br />
பற்றிடும் எட்டே பரமனைக் - கற்றிடும்<br />
எங்குமே நன்றே இருக்கும்இறையென்றே<br />
தங்கிடும் அத்துவைதம் தாவு<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="color: blue;"> </span> </span><span style="font-size: xx-small;">(தொடரும்)</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (65</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>அலைகள் கடலில் பிறந்தே கலைந்திடுவதுப் போன்று ஒவ்வொருத் தோற்ற நிலைகளும், மாற்றங்களைத் தன்னிலே உண்டாகிக்கொண்டே இருக்கும் நிலையான நித்தியத்தின் நிலைகள். இவ்வாறு ஒன்றிலே தொடரும் சுழற்சிகள்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (66</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>அறிந்தோம் என்ற ஆணவப் பித்தன் பிரிக்கும் நல்லப் பிழையாம் இறைவன் ஒருவன் என்றத் தத்துவம் அறிந்தும் அத்தத்துவம் தெளிவாகப் புரியாமல் இணைவைக்கும் செயலில் இருத்தல். எங்கும் நிறைந்த இறைவனை இவ்வாறே என்றறியாததனால் அமைதியின்மையின் துன்பம் தொடரும். எங்கும் நிறைந்தவனை எங்கோ இருப்பதாக இருக்குமிடம்; இலாத இடமாகப் பிரிக்கும் உணர்வால் அவ்வுலகிலும் வேதனை விடாமல் வெடிக்கும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (67</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> எனது உனது என்பதில் உரிமைகள் உண்டாக்கித் துன்பம் ஏற்படும். அதுபோலப் பார்வையில் தனது உரிமைப்பார்வைத் தனக்கும் துன்பம் தரும். அறிந்துக்கொள்வதற்காக உண்டாகும் உரிமைக்கொள்ளாப் பார்வை பிழையற்றப் பார்வையாகும். அந்த பிழை; பிழையற்றப் பார்வைப் பிரித்தறியாமல் இதுகால்வரை வளர்ந்த உள்ளம் தப்பானதே. விரும்புகின்ற விபரத்திலே தவறில்லாத நேர்மையான என்றும் அமைதியுடன் வாழும் நன்மைகள் தரும் சமாதி என்ற மனம் அமைதியுடன் வாழும் கல்வியை அறிந்துப் பற்றிக்கொள்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (68</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span>இறைவன் அல்லாத வேறு ஆற்றல்கள் உண்டு எனக்கொள்ளும் துவைதக் கொள்கை ஏற்றவர் இறைவனை எங்கோ அல்லது சிலவற்றில் இருப்பதாகக் காண்பார். இவர்கள் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை காலபோக்கில் கேட்டும்; ஏற்றும் கொள்வார்கள். அது அத்துவைதக் கொள்கை. காலப்போக்கில் அது மனதில் தங்கிடும்.ஏற்றுக்கொண்ட அத்துவைத அக்கொள்கைக்குத் தாவிவிடு.எனவே அறிந்தும் அறியாமல் அத்துவைதக் கொள்கையில் இருந்துக்கொண்டுத் துவைதக் கொள்கை செயல்பாட்டில் இருக்காதே என்பதாகும். </span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13404686966838396682015-04-11T20:24:00.000+05:302015-04-11T20:25:06.776+05:30[ 4 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: blue;">ஊடக பார்வை:</span><br />
சென்ற வாரம் தமிழக ஊடகத்தை முற்றிலும் ஆக்கிரமித்த செய்தி தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்ட செய்தி இது தமிழக மக்களை எவ்வளவு பாதித்து உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும்<br />
கையில் எடுத்துள்ளதை வைத்தே தெரிய முடிகிறது.<br />
<br />
செம்மர கட்டைகளின் மதிப்பு உலக சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மரம். அதனை கடத்தி விற்று அதிக சம்பாதிக்கும் கும்பல் ஆந்திர அதிகார வர்க்கத்தில் இருப்பது ஆந்திர காவல் துறைக்கு தெரிந்த ஒன்றே. ஆயினும் அவர்களை ஒன்றும்<br />
செய்ய முடியாத போலீசார் அப்பாவி தமிழர்களை கொன்று தனது ஆதிக்க வெறியை தீர்த்து கொண்டது. நன்றாகவே தெரிகிறது. அது அப்பட்டமான முட்டாள்தனமான செயல்.<br />
<br />
இன்றைய கால கட்டத்தில் ஓடும் மனிதனை செயலிழக்க செய்து பிடிக்க எத்தனையோ யுக்த்திகள் காவல் துறையிடம் உண்டு அப்படி இருக்க கொல்ல துடித்தது ஏன் !?<br />
<br />
ஏதோ இரண்டு தரப்பு கடத்தல்கார்களில் ஒரு தரப்புக்கு ஆந்திர போலீசார் துணை போனது போன்று உள்ளது. அதிகார வர்க்க கடத்தல் கும்பல் போலீசார் துணையோடு இக்காரியத்தை செய்து உள்ளதோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. இது போன்று பயமுறுத்தலால் அப்பக்கம் இனி யாரும்<br />
வரமாட்டார்கள். இனி அதிகார வர்க்கமே செம்மர கடத்தலை அமோகமாக செய்யலாம் என்றே சந்தேகிக்க தோன்றுகிறது.<br />
<br />
அப்பாவி இளைஞர்கள் இப்படி அரக்கர்களால் கொல்லப்படுவதை நிறுத்த அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை பின்னணிப் பற்றி ஒரு ஊடகவியலாளர் செய்தி தொகுப்பில் கூறும்போது அப்பகுதி இளைஞர்களின் ஆடம்பர தேவைகள், மது அருந்த அதிக பணம் தேவைகளுக்காக தனது உயிரை பணயம்<br />
வைத்து இது போன்ற வேலைகளுக்கு செல்கிறார்கள் என குறிப்பிட்டார்.<br />
<br />
அப்பகுதியில் அதிகமாக மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் செல்வதையும், டாஸ்மார்க் கடைகளில் அதிகமாக இளைஞர்கள் காணப்படுவதையும் மேற்கோள் காட்டி இருந்தார். ஆடம்பர வாழ்க்கை வாழ, ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்லும் ஏஜென்ட்டுகளை முதலில் கலை எடுக்க வேண்டும். எங்கோ, எவனோ ஒருவன் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஏழை அப்பாவிகள் கொல்ல படுவது யாராலும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.<br />
<br />
பத்திரிகை துறையில் செய்தி பற்றிய ஆய்வுகளில் முக்கியமாக நினைவில் கொள்வது ஒரு செய்தி எத்தனை நாட்கள் பேசப்படுகிறது அதன் அடிப்படையில் அதன் வீரியம் கணக்கிடப்படும்.<br />
<br />
இதே நாட்களில் இரண்டு பிரபலங்களின் மறவு செய்தி, முதல் நாள் நாகூர் ஹனிபா அவர்களின் மறைவு செய்தி. இரண்டாம் நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மறைவு பற்றிய செய்தி. இரு வேறு துறைகளில் பெரிய தூண்களாய் திகழ்ந்த இவர்களின் மறைவு கூட செய்திகளின் தாக்கம் அவ்வளவாக இல்லை இது ஊடகத்தில் பார்க்கப்படும் ஆய்வுகளில் ஒன்று. ..<br />
<br />
இருபது தமிழர்களின் மறைவு எனது மனதை மிகவும் பாதித்தது. வருத்தமளிக்கும் இந்நிகழ்வால் நான் ரசித்த படைப்பு பற்றி இவ்வாரம் எழுத விரும்பவில்லை.<br />
<br />
இறைவா ! பலியான அப்பாவி தமிழர்களின் குடும்பத்தினருக்கு பொறுமையையும், மனதில் அமைதியையும் கொடுத்து, எந்த செல்வம் தேடி உயிர் விட்டார்களோ, அந்த செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு கொண்டு போய் சேர்ப்பாயாக...<br />
<div style="text-align: right;">
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">பத்திரிகைத்துறை நிபுணர்'</span></div>
</div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">அதிரை சித்திக்</span></b></div>
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s1600/sitthik.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-mpD0cfhI950/UJXYg7W74nI/AAAAAAAAEjQ/rOcCv7T-2DI/s200/sitthik.png" height="70" width="100" /></a></div>
</div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68892207416932513832015-04-10T17:12:00.002+05:302015-04-10T17:12:24.231+05:30நல்லதையே செய் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இது இப்படித்தான்<br />
நிகழ வேண்டும் என்பதே<br />
நிகழ்கிறது அப்படியே!<br />
பேசி பேசியே<br />
<br />
பொழுதைப் போக்கும் நீ<br />
கடிகாரத்தைப்பார்<br />
ஓடுவது முள் அல்ல<br />
அது<br />
"வாழ்க்கை "<br />
முன்னேறக் கூறும்<br />
வாழ்த்து!<br />
<br />
இவ்வுலகம்<br />
ஒரு கனவு போல<br />
கனவு காண்க<br />
நேர்வழிக்கு<br />
<br />
கண்காண<br />
உயிருடன் வாழும்<br />
பெற்றோரை<br />
மதிக்காத போது<br />
<br />
கண்ணுக்குப் புலனாகாத<br />
இறைவனை<br />
வணங்கிப்<br />
பயனில்லை -அதற்கு<br />
"மதிப்"பெண் இல்லை!<br />
<br />
தலை நீட்டாதே<br />
பிறர் காரியங்களில்<br />
குறை கூறி அலையாதே<br />
குட்டுப்பட்டு வேகாதே!<br />
<br />
யாரையும் வெறுப்பது<br />
உண்மையாக இருந்தாலும்<br />
நேசிப்பதில்<br />
போலி மருந்தைத்<br />
தடவாதே!<br />
<br />
தொல்லை தருபவன்<br />
கெட்டவன்தான்<br />
ஆனால்<br />
அவனிட மிருந்து<br />
கிடைப்பதோ "அனுபவம் "<br />
அதுவும்<br />
வழிகாட்டும்!<br />
<br />
விவாதம் - அதுஒரு<br />
"வாதம்! "<br />
போதையைப் போன்றது - அதைக்<br />
கோதி முடிக்காதே!<br />
புண்படுத்தும் ஆணவத்தை<br />
மண்புதை!<br />
<br />
முறையற்ற<br />
கோபம் - ஒரு<br />
கொடிய "வைரஸ் "<br />
பிணிகள் அனைத்தையும்<br />
துளிர்க்கச் செய்யும்<br />
வேர்!<br />
<br />
செயலும் அதற்குரிய<br />
விளைவும்<br />
உண்டு என்றும்<br />
அதனால்<br />
நல்லதையே செய்!<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;">'கவிஞர்' அதிரை தாஹா</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-hnAdGYrg7t4/VE9Cp5jRiII/AAAAAAAAUpM/fVUw4AnwpoU/s1600/adirai%2Bnews-thaahaa.jpg" height="60" width="60" /></a></div>
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77591207728413722842015-04-08T07:30:00.000+05:302015-04-08T07:30:02.524+05:30[ 17 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-TGTJiEJBCUY/VSCh6PV1PLI/AAAAAAAAWV8/h1Wq-gtrnA0/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-TGTJiEJBCUY/VSCh6PV1PLI/AAAAAAAAWV8/h1Wq-gtrnA0/s1600/header.png" height="149" width="320" /></a></div>
(61)<br />
அறிவும் அருவுருவம் அவ்விதம் உன்னில்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
அறியா நிலையே அருவம் - அறியவே<br />
எல்லா நிலையிலுமே இல்லா திருப்புகளும்<br />
நல்லா அறிய நடிப்பு.<br />
<br />
(62)<br />
நடிப்புகள் உள்ளத்தின் நாட்ட நளினம்<br />
துடிப்புகள் நம்பிக்கைத் தோற்றம் - தடிப்புகள்,<br />
இல்லாத உள்ள இருப்பொன்றின் கானலேயாம்<br />
அல்லாமல் வேறேது ஆற்று.<br />
<br />
(63)<br />
ஆற்றல்கள் தன்னை அறிந்திடத் தோற்றமாகி<br />
ஏற்றங்கள் எய்த இயங்குமே - மாற்றங்கள்<br />
நில்லாதே தோன்றியும் நித்தியம் சேர்ந்திடுமே<br />
பொல்லாத வாழ்க்கைப் புரி.<br />
<br />
(64)<br />
புரிந்திட நிம்மதிப் பொய்மை அகற்றத்<br />
தெரிந்திடும் ஆற்றல்கள் தேவை - சரியென்கின்<br />
சத்தியம் அண்மித்தே சாந்தியாகிச் சந்திக்கும்<br />
நித்திய உண்மை நிலை<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="color: blue;"> </span> </span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (61</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>எதாவதொருப் புலனால் மட்டும் அல்லது மனதால் உணருவது அருவுருவமாகும். அவ்வகையில்அறிவு என்பது அருவுருவமாகும். அந்த அறிவானது மனதில் அல்லது சிந்தனையில் தோன்றும்முன் அது தோன்றாமை அல்லது இல்லாமை என்ற அருவமான நிலையிலாகும். அவ்வகையில் ஒரு அறிவானது அறியா அல்லதுத் தோன்றா நிலையினில் அது அருவத்தின் நிலையிலாகும்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">அதன்படி அறிவு அருவுருவம். அது அறியா (தோன்றா) நிலையில் அருவம். இவ்வாறுத் தன்னை அறியவே எல்லா நிலையிலும் அந்த அருவம் என்றத் தோன்றாமை இல்லாமையில் இருப்புகளாக உள்ளது. இதனை நன்குத் தெளிவாக அறிவோமானால் அருவமே அருவுருவமாக; உருவமாக நடிப்பதுப்போல் தெரியலாம்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இல்லாதிருப்புகள் என்பது எதுவுமே நிலையானதல்ல அவைகள் மாற்றத்திற்குட்பட்டது; மாறிக்கொண்டேயிருக்கும். இருப்பதுபோல் இருக்கும் எதுவும் நிலைத்திருப்பதில்லையே. அவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கின்ற அனைத்தும் இல்லாதிருப்புகள் ஆகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (62</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>உள்ளத்தின் நாட்டத்தின் நளினமே நடிப்புகள் என்ற செயலகள். அச்செயல்களில் நம்பிக்கையின் விளைவால் ஒருவித எழுச்சி என்ற துடிப்புகள் உண்டாகும். நம்பிக்கையின் உறுதியில் துடிப்புகளாகி வடிவங்கள் என்றத் தடிப்புகள் உண்டாகும். நாட்டத்திற்குமுன் இல்லாத ஒன்று பின் இருப்பதுபோல் தோன்றுவது கானல்போன்றதாகும். இவ்வாறே சுயவொன்றே இல்லாதிருகின்றதே அல்லாமல் வேறு என்பதில்லையே என்பதாகும். இதனை அறிந்தாற்று.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (63</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> ஆற்றல்கள் அதுத் தன்னை அறிந்திடவே அதுவே தோற்றங்களாகித் தானே தன்னை அறிந்துத் 'தானேதான்' என்றுத் தெளிவுறும். அத்தகையத் தெளிவையடையும் ஏற்றங்கள் அடைய அதுத் தொடர்ந்துச் செயல்படும். இவ்வாறுத் தோன்றி மறையும் மாற்றங்கள் நிலையில்லாதது. நிலைக்காத நிலையின் மாற்றங்கள், மறு மாற்றங்களாகி நித்தியம் என்ற நிலையை அடைந்திடும் என்ற இப்பொல்லாத வாழ்க்கையைப் புரிந்துக்கொள்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (64</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> நிம்மதி என்பதும் அல்லதும் பொய்யே என்பதைத் தெரிந்துக்கொள்வதற்கே ஆற்றல்கள் தேவையாகும். இது சரியென்றால் அல்லது புரிந்துக்கொண்டால் சத்தியம் என்ற உண்மை நெருங்கி மனம் அமைதியாகும் சந்திப்பு ஏற்படும். இதுவே நித்தியம் என்பதின் உண்மை நிலையாகும்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-82106994339538590872015-04-05T08:16:00.000+05:302015-04-05T08:28:33.760+05:30[ 16 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-TGTJiEJBCUY/VSCh6PV1PLI/AAAAAAAAWV8/h1Wq-gtrnA0/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-TGTJiEJBCUY/VSCh6PV1PLI/AAAAAAAAWV8/h1Wq-gtrnA0/s1600/header.png" height="149" width="320" /></a></div>
(57)<br />
முடிவு அமையும் முயற்சி நிலைக்கே<br />
வடிவு மனதில் வகுத்தே - துடிப்புப்<br />
படியப் படியப் பலனும்அருகே<br />
பிடிக்கப் பெறுதலுமே பேறு<br />
<br />
(58)<br />
பேறுகள் பெற்றோர் பெருமைகள் கொள்ளாதே<br />
வீறுடன் செல்லார் விரிந்தவர் - ஏறுவோர்<br />
ஏகனில் உச்சம் இருந்தே விசாலமாய்<br />
ஆகுதல் ஆனந்தம் ஆகும்.<br />
<br />
(59)<br />
ஆகிடத்தான் ஆசை அவனடிமைப் பூரணமாய்<br />
தாகிக்கத் தந்திடுவான் தக்கதை - ஊகிக்க<br />
ஒன்றும் நிகராக உன்னைப் படைத்தவன்<br />
என்றும் தனித்தவனே எண்ணு.<br />
<br />
(60)<br />
எண்ணம் வருமுன்னில் எந்தவழிப் பாதையறித்<br />
திண்ணம் தனித்தவன் திக்கேதான் - உண்மைத்<br />
திரையிட்டே தன்னின் திறமைகள் என்பார்<br />
அரைகுறையின் அர்த்த அறிவு.<br />
<br />
<span style="color: blue;">நபிதாஸ்</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (57</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> தான் விரும்பிய ஒன்றதான் அமைவு; அதன் முடிவு; அவைகளை மனதால் காணுதலோடுக்கூடிய முயற்சியின் நிலைக்கேற்பவும் முடிவுகள் அமையும். அம்முயற்சியின் அடிக்கடியாழ்ந்த ஈடுபாடு அதன் நிலைக்கேற்ப அதனை அடைதல் குறுகியக் காலத்தில் நிகழும்; இயலும். இவ்வாறான நம்பிக்கை, இதனையறிந்து அவ்வாறுச் செயல்படுதலுமே இறைப் பேறுப்பெற்றதாகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (58</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> விசால விரிந்த மனதுடைய இறைப்பேற்றினைப் பெற்றவர்கள் பெருமைக் கொள்ளாது அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கமாட்டார்கள். அவ்வாறன இறையன்பை; இறைநெருக்கம் என்றப் பேற்றினைப் பெற விரும்புபவர் எங்கும் நிறைந்த வல்லவனில் அவன் குணங்களில் ஒன்றான விசாலமாகத் தன் மனத்தைக் கொள்ளுதல் ஆனந்தம் ஆகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (59</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> மனமே ! எந்த ஊகங்கள் எதற்கும் நிகராகதவன்; உன்னைப் படைத்த வல்லவன் ஒருவனே; தனித்தவனே என்பதை என்றும் உன்னில் நிலைநிறுத்து. வேண்டுமென்பதைத் தாகிக்கத் தகுந்தைத் தருபவனான ஏகன் அவனே. அத்தகைய ஏகனின் பரிபூரண அடிமையாக ஆகிடத்தான் ஆசைக் கொண்டவனாக அலைகிறேன்; வேண்டுகிறேன் அவனிடத்தே.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (60</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென அதன் பாதையை அறிந்து செல்வீரானால், நிச்சயம் அவனன்றி ஏதுமில்லா எங்கும் நிறைந்த எல்லாம் வல்லவனிலிருந்துதான் என்ற அதன் திக்ககை அறிந்திடுவாய். உண்மையாகச்; சத்தியமாக நான்தான் அவ்வாறுச் சிந்தித்துச் செய்தேன் என்பவரிவர்கள் அரைகுறையாக அர்த்தங்கள் புரியும் அறிவுடையவர்களே.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43769756426687267122015-04-04T09:52:00.001+05:302015-04-04T09:52:13.357+05:30அரபகத்தின் பாலையில் மணற்புயல் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-cdCeNf_UFFo/VR9mkKSPz9I/AAAAAAAAWVg/czDNSE-akh4/s1600/IMG-20150402-WA0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-cdCeNf_UFFo/VR9mkKSPz9I/AAAAAAAAWVg/czDNSE-akh4/s1600/IMG-20150402-WA0007.jpg" height="298" width="400" /></a></div>
புழுதிக் காற்றே என்று<br />
புலம்பிடவில்லை நாங்கள்<br />
அழுதுச் சாற்றவுமில்லை<br />
அவனே அறிவான்<br />
<br />
ஆற்றல்மிக்க எங்களின்<br />
அயராத உழைப்புக்கு<br />
காற்றே நீ தானே<br />
தோற்றுப்போனாய்!<br />
<br />
கரைகாணா எங்களின்<br />
கடின உழைப்பைக் கண்டு<br />
அரைநாளுக் குள்ளாக<br />
அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!<br />
<br />
நெருப்பின் ஆற்றலை<br />
நேசரின் நம்பிக்கை வென்றது<br />
விருப்பமுடன் குளிர்ந்தே<br />
வியப்பினைச் சொன்னது<br />
<br />
கத்திக்கு ஆற்றலில்லை<br />
கலீலுல்லாஹ்வின்<br />
பக்திக்கு முன்னால்<br />
பணிந்து விட்டது!<br />
<br />
கடலுக்கு ஆற்றலில்லை<br />
கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்<br />
திடலாக மாறியதும்<br />
திகைப்புக்கு ஆளானோர்<br />
<br />
அத்தனை ஆற்றலும்<br />
அல்லாஹ் ஒருவனுக்கே!<br />
இத்தரையில் நிகழும்<br />
இவைகளே சான்றுகள்<br />
<br />
இறைதூதர்களின் நம்பிக்கைக்கு<br />
இத்தனை ஆற்றலும்<br />
குறையேதும் செய்யாது போலவே<br />
கூவி வந்த புயற்காற்றே<br />
<br />
எதிர்நீச்சல் போட்டோம்<br />
எதிர்வந்த வேகத்தை<br />
எதிர்த்தே போராடினோம்<br />
என்னவாயிற்று உனக்கு?<br />
<br />
மண்ணுக்குள் சென்றதும்<br />
மண்ணே எங்களை உண்பாய்<br />
மண்ணையும் உண்டோமின்று<br />
மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!<br />
<br />
உன்னாற்றலுக்கு முன்னெங்கள்<br />
உழைப்பாற்றல் வென்றதை<br />
உன்னையும் எங்களையும்<br />
உருவாக்கியவனிடம் சொன்னாயோ?<br />
<div style="text-align: center;">
<span style="color: #073763; font-family: 'Times New Roman'; font-size: x-small;">"கவியன்பன்"</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue;">அபுல் கலாம் </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-7dYQNluXuEg/UKnUqtBjrfI/AAAAAAAAE3U/8uf6J-X-jWg/s1600/KALAM%2525252BOFFICE%2525252BPIX.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-7dYQNluXuEg/UKnUqtBjrfI/AAAAAAAAE3U/8uf6J-X-jWg/s200/KALAM%2525252BOFFICE%2525252BPIX.jpg" height="50" width="50" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)</span></div>
<div style="text-align: center;">
<span style="color: #444444; font-size: xx-small;">மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com</span></div>
<br />
<span style="color: #660000; font-size: x-small;">மூர்க்கமாய் வீசினாலும்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">மூச்சடைக்க வைத்தாலும்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">போர்க்குண வீரியமாய்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">புறப்பட்டுப் பணிசெய்து</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">மூக்குக்கு மூடியும்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">கண்ணுக்குக் கண்ணாடியும்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">செவிகட்கு அடைப்பானும்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">தற்காப்புக் கேடயங்களை</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">தரித்துக் கொண்டே</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">அயராது உழைத்த</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">அரபகத் தொழிலாளிகள்</span><br />
<span style="color: #660000; font-size: x-small;">அனைவர்க்கும் சமர்ப்பணம்!</span><br />
<span style="color: #660000; font-size: x-small;"><br /></span>
<span style="color: #660000; font-size: x-small;">உங்களனைவரின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28525242366327385092015-03-27T16:52:00.000+05:302015-03-27T16:52:08.548+05:30[ 15 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-eYAI0YXpKs8/VRBFW53B2AI/AAAAAAAAWUI/7XOnSjabFIs/s1600/header.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-eYAI0YXpKs8/VRBFW53B2AI/AAAAAAAAWUI/7XOnSjabFIs/s1600/header.png" height="149" width="320" /></a></div>
(53)<br />
இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி யென்றே<br />
வருகின்ற உண்மையில் வாசி - அருமை<br />
அறிந்திடுவாய் 'எங்கேயோ அல்லவொன்றே எங்கும்', <br />
தெறிந்திடுமே உன்னிலே தீர்ப்பு.<br />
<br />
(54)<br />
தீர்ப்பு விரும்புவார் திண்ணமாய் எல்லோரும்<br />
ஈர்ப்பு மலர இதயத்தில் - ஒர்ம<br />
ஒருமை நிலையில் உதித்திடும் தீர்வே<br />
அருமை அமைந்தவ் அறம் <br />
<br />
(55)<br />
அறமென்றால் தன்னை அறிவதே அன்றி<br />
சிறக்காதே இல்வாழ்க்கைச் சீராய் - இறந்திடும்<br />
முன்னே இறத்தல் முதலறமாம் வாழ்விலே<br />
பின்னே வராதேப் பிழை.<br />
<br />
(56)<br />
பிழையெனக் கண்டே பிழைத்தல்தொடரும்<br />
பழைமையில் ஊறிப் படர்ந்தே - அழைத்தே<br />
வளைத்திட உள்ளம் வராதே தெளிவு<br />
முளைக்கவே துன்பம் முடிவு<br />
<div style="text-align: right;">
<span style="font-size: x-small;">(தொடரும்)</span></div>
<div style="text-align: left;">
<span style="color: blue;">நபிதாஸ்</span><span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="color: blue;"> </span> </span></div>
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (53</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>இவ்வுலகில் இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி உண்டாகியது என்றக் கேள்விகளைத் தன்னுள்ளே கேட்டுக் கொண்டே சென்றால் உன்னில் வரும் பதில்களை நன்கு ஆராய்ந்தறிந்து சிந்திக்க அதன் அருமை அறிந்திடுவாய். மகா வல்லமை எங்கேயோ இருக்கின்றது என்பதல்ல அந்த ஒன்றே எங்கும் எல்லாமாக இருக்கின்றது என்ற உண்மை உன்னிலே தீர்வாக அறிந்திடுவாய்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (54</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> திண்ணமாக எல்லோர் மனதிலும் ஒரு தீர்ப்புமேல் ஈர்ப்பு மலர அத்தீர்ப்பு எல்லோராலும் விரும்பப்பட வேண்டும்ம். பாரபட்ச்சம் பார்க்காது ஒன்றே பலவென்றதான அனைவரும் சமமென்ற மனநிலையில்; மனஉறுதியில் உதிக்கும் தீர்ப்பானது அந்த அனைவராலும் விரும்பப்படுகின்ற அருமைகள் நிறைந்த அறமெனப்படும் எல்லோராலும் விரும்பப்படும் தீர்ப்பாகும்.</span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (55</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்:</span> தன்னைப்பற்றிப் பூரணத் தெளிவாக அறிதலே அறமென்பதாகும். அவ்வாறல்லாவிட்டால் பல்வேறு காலங்களிலும் அல்லது நிலைகளிலும் வாழ்க்கைச் சீராகச் சிறப்புடையதாகாது. அவ்வாறுத் தன்னை அறிதலின் மூலம் இவ்வுலக மாயவலையில் சிக்கி இதுதான் வாழ்வென்ற இந்த நிலையில்லாததான இவ்வுலகவாழ்வில் இவ்வுடல் அழியும் முன்னே நிலையற்ற இவ்வாழ்வை அறிந்துணர்ந்து இழந்து நிலையான அவ்வுலக வாழ்வை அறிந்து வாழ்தலே முதல் அறமாகும். அவ்வாரானப் பின்னே வாழ்வில் பிழைகளே உண்டாகாது. </span><br />
<span style="color: blue; font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="color: blue;">வெண்பா (56</span>) </span><br />
<span style="font-size: x-small;"><span style="color: #660000;">பொருள்: </span>தொடர்ந்துப் பழகிப்போனப் பழக்கவழக்கத்தால், பிழைப்புக்காகப் பிழையெனத் தெரிந்தும் தவறுகளை விடாதுத் தொடர்ந்துச் செய்வார்.அழைத்துச் சுட்டிக்காட்டினாலும் அவருள்ளம் வளைந்திடாது. அவரில் நற்தெளிவு மலர்ந்திட துன்பம் உண்டாகித் திருத்தும்.</span><br />
<div class="gmail_signature">
<div dir="ltr">
<div style="margin: 0in 0in 10pt;">
</div>
</div>
</div>
</div>
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.com6