ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன் வொன்றே
நன்றேயிது அறிவீரே !
எவ்வாறு ?
அரூப நிலை உள்ளது/இருப்பது. அல்லது அரூப நிலை மட்டுமே உள்ளது/இருப்பது. அல்லது அரூபநிலை எங்கும் உள்ளது/இருப்பது அதனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் உண்டாகின. அவ்வரூபத்திற்கு தனது நிலையில் கூடுதல், குறைவு என்பதில்லாது(தங்கமும் மோதிரமும் போல்) உருவ இருப்புகள் அதில் உண்டாகுகின்றது என்று கவனத்தில் கொண்டோம்.
வெளி, நெருப்பு, வளி, நீர், மண்- இவைகள் ஐம்பூதங்கள் என்றழைக்கப் படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.
வெளி என்ற வெட்டவெளியான ஆகாயம். இது எல்லையற்றது. நாம் வசிக்கும் பூமி, அதையடக்கிய சூரிய குடும்பம், விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள், இவைகளை உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் (Milky Way Galaxy), இது போன்ற அல்லது அல்லாமல் எண்ணிக்கையற்ற அறிவு வீச்சுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ மன்டலங்கள், இவ்வாறு விரிந்துகொண்டே செல்லும் அற்புதங்கள், சொற்பதங்களால் எழுதமுடியாத; சிந்தனைக்கு அப்பாற்பட்ட விரிவானதாக வெளி உள்ளது எனலாம்.
ஒப்பிட முடியாது. இருப்பினும் மகா பெரியது என்பதை நாம் புரிந்துகொள்ள இவைகளை எழுதவேண்டியுள்ளது. அதாவது, பகலில் ஒரு சிறு துளி ஓட்டையின் வெளிச்சத்தில் நம் பார்வையில் தெரியும் காற்றில் பறக்கும் தூசி போன்று நாம் வசிக்கும் பூமியானது இவ்வெளியில் இருக்கலாம்.
இன்னும் ஒரு கோணத்தில் சொல்வதென்றால் இன்னொன்றையும் பார்ப்போம். ஒளியானது ஒரு இடத்தை விட்டு கிளம்பி ஒரு வருட பயணம் சென்று அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு என்கின்றனர். நம் பால் வீதி மண்டலத்தில், எத்தனையோ ஒளி ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய நட்சத்திர ஒளி, நம் பார்வையில் தெரியும் அந்த ஒளிக்குரிய நட்சத்திரம் பார்க்கும் போது தற்சமயம் அழிந்து இல்லாமல் கூட இருக்கலாம், அத்தகைய தூரங்கள். இரண்டு நட்ச்சதிரத்திர்க்கு இடையிலேயே இவ்வாறென்றால் இதுபோல் எண்ணிறைந்த நட்சத்திரங்கள் நம் மண்டலத்திலும், எண்ணிறைந்த மண்டலங்கள் வெளியிலும் இருக்கின்றது.
மேலும் மனிதனால் பூமியிலிருந்து தற்போதைய அறிவு வளர்ச்சியைக் கொண்டு இப்பால் வீதி மண்டலத்தில், அடுத்த நட்சத்திரம் என்ற சூரிய குடும்பத்துக்குள் நுழையமுடியாது. அதற்குள் இவன் ஆயுள் முடிந்துவிடும். இது ஒரு மண்டலம்(Galaxy) சம்பந்தப்பட்டது. இது போன்ற எண்ணிறைந்த மண்டலங்கள்(Galaxies) இருக்கும் வெளியை நம் அனுமனத்துக்குகூட அறிந்து விளங்க நமக்கு ஆயுள்கள் போதாது. மகாப் பெரியது. இது உருவம் உண்டாகாத அரூப நிலையில் இருந்து தோற்றம் பெற்ற வெளி. அரூபம் இல்லாமல் வெளி இல்லை. அருவிலிருந்து உருவான வெளி. (தங்கமும் மோதிரமும் போல்).
நெருப்பு என்ற ஒளிரும் எரி சக்தியான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) சுய இச்சையால், அதனுள், அதனில் (இச்சை)அசைவால், அதுவே சூடு(உஷ்ணம்) ஏற்பட்டு நெருப்பாக, பிரிவாக தோற்றம் தெரிகிறது. (அன்பின் அபரிமித உச்சத்தில் உஷ்ணம் உண்டாகும்.)
அமைதி தன்னில் சுய அன்பின் நிமித்தம், நெருப்பாக ஆகின்றது. அதுவின் அதிகம் நெருப்புக் கோளங்களாக ஆகின்றது. எண்ணற்ற ஆற்றல்கள் எவ்வாறெல்லாமோ அவ்வாறெல்லாம் அதில் ஆகிக்கொண்டே இருக்கின்றது. அமைதியில் அமைதி ஆற்றலாகிறது. வெளியின் குணமும் அனைத்திலும் அவ்வாறே இருக்கும், அதில் குறை;நிறை என்பதில்லை. இவ்வாறு வெளியின் வெளிப்பாடான விருப்பம் நெருப்பான ஆற்றலாகின்றது. வெளியே நெருப்பாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்). .
வளி என்ற காற்றான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) அசைவு. வெளி தன்னில் வெளியான நெருப்பின் நேசம் வேளியிலே தனிய வெளியே காற்றாகிறது.
வெப்பம் உண்டாகும் போது குளிர்சியும் உண்டாகும். வெளியில் ஒரு இடத்தில் உண்டான வெப்பத்தை வெளியில் விட,(உண்டான வெப்பம் சமநிலையடைய குளிர்ச்சியை நோக்கி செல்ல) வெப்பம் விரிவாகி, அதன்மூலம் வெளியில் வேற்று நிலை உண்டாகி வெளியே காற்றாகிறது.
தேநீர் கடையில் நீரை வெப்பமாக்கும் கொதிகலனின் மேல்வாயின் மேப்பரப்பில் வெளி அசைவதை பார்க்கலாம். வெளியின் சுபாவ சமநிலையிருப்புக்காக, உண்டாகிய வெப்பம் அவ்வெளியில் கரைந்து அதனால் வெளியே காற்றாகிறது. அசைந்தால் காற்று அசையாவிட்டால் ஆகாயம் என்பார். வெளியே நெருப்பாகி, வளியும் ஆகிறது. வெளியே வளியாகின்றது(தங்கமும் மோதிரமும் போல்).
நீர் என்ற திரவமான வெளி. வெளியில் நெருப்பு சக்தி உண்டாகும் போது குளிர் தன்மையும் உண்டாகும். அசையும் காற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்களும் உண்டு. ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இணைந்து குளிர்சியை பெற்று நீராக(திரவமாக) மாறுகின்றது. இதுபோல் காற்றில் உண்டாகி இருக்கும் மற்ற வாயுக்களும் திரவமாக(நீர் போன்று) ஆகும். வெளியே திரவமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).
மண் என்ற கடினமான வெளி. வெளியின் ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் இணைந்து குளிர்ந்து நீராகிறது என்று பார்த்தோம். அது இன்னும் குளிர்ந்து பனிக்காட்டி யாகின்றது. புளுட்டோ என்ற கிரகத்தில் பனிக்கட்டி இரும்பை உடைக்கும் வலிமை உள்ளது என்கின்றனர். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போல் மற்ற மற்ற வாயுக்களும் ஒவ்வொரு வேறுபட்ட குளிர்ச்சி விகித நிலையில் இணைந்து குளிர்ந்து நீர் போல் திரவமாகி, இன்னும் குளிர்ந்து திடமான மண் ஆகி நிலமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).
தங்கத்தை வெப்பப்படுத்த திரவ தங்கமாகிவிடும். இன்னும் பன்மடங்கு வெப்பப் படுத்த திரவ தங்கம் காணாமல் போய்விடும். மாறாக குளிர்ந்தால் கடின தங்கமாகிவிடும்.
பூமியின் மையப்பகுதி நீர் போன்று திரவமாகத்தான் இருக்கின்றது. வெப்பகுளிர் சமநிலை உண்டாக சுழற்சி ஏற்படுகிறது. அதன்படி பூமியின்; பூமியில் சுழற்சியாலும், மேற்பரப்பு அழுத்தத்தாலும் பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நீர் போன்ற திரவம் மேற்பரப்புக்கு வந்து (எரிமலை) குளிர்ந்து மண்ணாகி மலையாகியுள்ளது. வெளியே மண்ணாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்).
இவ்வாறு ஒன்றிலே உண்டாகி, அந்த ஒன்றே பலவாகி நிற்கின்றது. அவ்வாறு பலவாகி நிற்பவைகள் உண்டாகும் முன் ஒன்றாகவே இருந்தது என்பதை நன்கு உணரவேண்டும்.
பிரபஞ்சம் ஒன்றில்தான் அனைத்தும் உண்டாகியுள்ளது. அதாவது அப்பிரபஞ்சமே அவ்வாறு பலவாக மாறியிருக்கிறது. ஒன்றின் தத்துவத்தை இதன் மூலம் அறிய வேண்டும்.
ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?
ஒன்றின் உருவம் என்றால் என்ன ?
நபிதாஸ்