பெற்றோருக்கு நீ செய்யும் சேவை இறைவன் உனக்கு நற்கூலி தரும் சேவைதான். அது பற்றி இவ்வாரம் பார்ப்போம். பெற்றோர்கள் என்பதை தாய், தந்தை என தனித்தனியாய் ஆராய்வோம்.
தாய்க்கு செய்யும் சேவை :
பத்து வயது வரை பிள்ளைக்கு சேவை செய்யும் தாய் வளர்த்த பிள்ளையை பார்த்து தாய்க்கு நம்பிக்கை வரும் தருணம் தம் பிள்ளை தனக்கு உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை தாய்க்கு வரும் தருணம், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நீ நடந்து கொள்ள வேண்டும்.
பத்து முதல் பதினெட்டு வயது வரை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ள வயது அதனால் நீ ஈடுபடும் எந்த செயலாக இருந்தாலும் அதிலேயே மூழ்கும் நிலை ஏற்படலாம் அதில் முக்கியமான சில விசயங்கள்...
1. நட்பு ( தோழன் அல்லது தோழி )
2. விளையாட்டு
3. கணினி ( கேம் )
4. டி.வி ( சீரியல் மற்றும் சினிமா )
இன்னும் இதர பல காரணங்களால் தாயை கண்டுகொள்ளாமல் இருத்தல்.., தாய்க்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், தாயவளுக்கு பிள்ளை தன்னிடமிருந்து பிரிந்து செல்லும் உணர்வு ஏற்படும், அதனை தவிர்க்க தாயவள் சிறு உதவி கோருவாள். சிறு பொருள் கடையில் வாங்கி வர சொல்வாள், உனது ஈடுபாடு அதிகமுள்ள ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இருந்தாலும், தாயின் கோரிக்கையை நீ நிராகரித்து விடாதே !
இதோ வருகிறேன் அம்மா என்று நீ தலைசாய்த்து சிறு உதவி செய்தால் அது உன்னிடம் இருக்கும் பாசம், நீ தாய் மீது காட்டும் மரியாதைக்கான சான்று
எனவே இது போன்ற தருணத்தை தவறவிடாதே. வாலிப பருவத்தில் உரிமையாய் தாய் மீது கொள்ளும் கோபத்தை தவிர்த்து கொள், தாய்க்கு நல்ல பிள்ளையாய் இரு அது உன் வாழ்நாள் முழுவதும் திருப்தி தரும் என்பதை அறிந்து கொள் "தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்பதை நீ மனதில் கொள் " தாய்க்கு செய்யும் சேவை, தாய் மீது கொள்ளும் பாசம் அன்பும் தான் !
தந்தைக்கு செய்யும் சேவை :
உறவுகள் பற்றி மற்றொரு வலை தளத்தில் எழுதி வந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை இதில் பதிய விரும்புகிறேன்...
விவசாயம் செய்யும் தொழிலாளி தான் வீடு திரும்பும் போது களைத்து காணப்படுவார். ஒரு மிடறு தண்ணீர் கொடுத்து உதவும் மகன். எதிர்கால நம்பிக்கையாய் தெரிவான். தந்தையின் வழி காட்டலை செவி சாய்க்கும் மகன் தந்தைக்கு சேவை செய்யும் மகனாய் தெரிவான்.
வாணிபம் செய்யும் தந்தைக்கு உதவியாய் இருக்கும் மகன் போற்ற படும் மகன் .கருத்து பேதம் களைந்து அமைதி காக்கும் மகன் தந்தையின் உடல் நலம் காக்கும் மகனாவான். வாலிப பருவத்தில் ஈர்க்கப்படும் சில கொள்கைகள் தந்தை மனம் நோகும் செயலாய் அமையலாம். அதனை தவிர்ப்பதே நீ தந்தைக்கு செய்யும் சேவை சிறு சிறு உதவிகள் மூலம் பெற்றோருக்கு நீ செய்யும் சேவை காலத்தால் அழிக்க முடியா சேவையாய் அமையும்.
குருவிற்கு செய்யும் சேவையை அடுத்த பதிவில் காண்போம்.
தாய்க்கு செய்யும் சேவை :
பத்து வயது வரை பிள்ளைக்கு சேவை செய்யும் தாய் வளர்த்த பிள்ளையை பார்த்து தாய்க்கு நம்பிக்கை வரும் தருணம் தம் பிள்ளை தனக்கு உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை தாய்க்கு வரும் தருணம், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நீ நடந்து கொள்ள வேண்டும்.
பத்து முதல் பதினெட்டு வயது வரை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ள வயது அதனால் நீ ஈடுபடும் எந்த செயலாக இருந்தாலும் அதிலேயே மூழ்கும் நிலை ஏற்படலாம் அதில் முக்கியமான சில விசயங்கள்...
1. நட்பு ( தோழன் அல்லது தோழி )
2. விளையாட்டு
3. கணினி ( கேம் )
4. டி.வி ( சீரியல் மற்றும் சினிமா )
இன்னும் இதர பல காரணங்களால் தாயை கண்டுகொள்ளாமல் இருத்தல்.., தாய்க்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், தாயவளுக்கு பிள்ளை தன்னிடமிருந்து பிரிந்து செல்லும் உணர்வு ஏற்படும், அதனை தவிர்க்க தாயவள் சிறு உதவி கோருவாள். சிறு பொருள் கடையில் வாங்கி வர சொல்வாள், உனது ஈடுபாடு அதிகமுள்ள ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இருந்தாலும், தாயின் கோரிக்கையை நீ நிராகரித்து விடாதே !
இதோ வருகிறேன் அம்மா என்று நீ தலைசாய்த்து சிறு உதவி செய்தால் அது உன்னிடம் இருக்கும் பாசம், நீ தாய் மீது காட்டும் மரியாதைக்கான சான்று
எனவே இது போன்ற தருணத்தை தவறவிடாதே. வாலிப பருவத்தில் உரிமையாய் தாய் மீது கொள்ளும் கோபத்தை தவிர்த்து கொள், தாய்க்கு நல்ல பிள்ளையாய் இரு அது உன் வாழ்நாள் முழுவதும் திருப்தி தரும் என்பதை அறிந்து கொள் "தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்பதை நீ மனதில் கொள் " தாய்க்கு செய்யும் சேவை, தாய் மீது கொள்ளும் பாசம் அன்பும் தான் !
தந்தைக்கு செய்யும் சேவை :
உறவுகள் பற்றி மற்றொரு வலை தளத்தில் எழுதி வந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை இதில் பதிய விரும்புகிறேன்...
விவசாயம் செய்யும் தொழிலாளி தான் வீடு திரும்பும் போது களைத்து காணப்படுவார். ஒரு மிடறு தண்ணீர் கொடுத்து உதவும் மகன். எதிர்கால நம்பிக்கையாய் தெரிவான். தந்தையின் வழி காட்டலை செவி சாய்க்கும் மகன் தந்தைக்கு சேவை செய்யும் மகனாய் தெரிவான்.
வாணிபம் செய்யும் தந்தைக்கு உதவியாய் இருக்கும் மகன் போற்ற படும் மகன் .கருத்து பேதம் களைந்து அமைதி காக்கும் மகன் தந்தையின் உடல் நலம் காக்கும் மகனாவான். வாலிப பருவத்தில் ஈர்க்கப்படும் சில கொள்கைகள் தந்தை மனம் நோகும் செயலாய் அமையலாம். அதனை தவிர்ப்பதே நீ தந்தைக்கு செய்யும் சேவை சிறு சிறு உதவிகள் மூலம் பெற்றோருக்கு நீ செய்யும் சேவை காலத்தால் அழிக்க முடியா சேவையாய் அமையும்.
குருவிற்கு செய்யும் சேவையை அடுத்த பதிவில் காண்போம்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்