செய்தியும் அதன் பின்னணியும்...
ஒரு செய்தியாளன் தான் அறிந்த செய்தியை உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை அறிய நிகழ்வின் பின்னணி அவசியம.
1970 களில் செய்தியாளர்கள் தனது செய்திகளை
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க மிகவும் சிரமப்படுவர் கடிதம் மூலம் அனுப்பி வைத்தால் மூன்று நாள் கழித்தே செய்தியாக வரும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போன் மூலம் செய்தியை தெரிவிப்பர்.
புகைப்படம் பதியபட வேண்டும் என்றால் உள்ளூர் புகைப்பட கலைஞர்ர்களை அணுகி புகைப்படம் எடுக்க வேண்டும். ஸ்டூடியோ வைத்து இருப்பவர்கள் ஆதலால் இலகுவாக இசைய மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு புகைப்பட கருவிகள் எடுத்து வருவது மிககடினம். எனவே படத்துடன் செய்தி வந்தால், புகைப்பட உதவி 'ஸ்டூடியோ' பெயரையும் போட்டு அவர்களை மகிவிப்பர் .
புகைப்பட கலைஞர்கள் எடுத்த படம் விபத்து, கொலை போன்றதாக இருந்தால் போலிசுக்கு ஒரு காப்பி கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குண்டான தொகையை கொடுக்காமல் அழைகளிபார்கள். எனவே புகைப்படத்துடன் கூடிய செய்தி வருவது அன்றைய காலத்தில் அபூர்வம். அதே போன்று செய்தியாளர் எடிட்டருடன் நல்ல தொடர்பு வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு முக்கிய செய்தியாக இருந்தாலும் ஒரு பத்தி செய்தியாக போட்டு விடுவர். தினபத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு எட்டு பத்திகள் ( அதாவது காலம் )
குறைந்தது மூன்று பத்திகள் அளவில் உள்ள செய்தியே வாசகரை கவரும் செய்தியாக கொள்ளலாம். செய்தியின் பின்னணி நன்றாக அறிந்து வெளியிடும் செய்தியாளரின் செய்தியை கூட பத்திரிகை செய்தியின் தலைப்பால் தடம் புரளுவதுண்டு. உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை
அறிய நிகழ்வின் பின்னணி அவசியம்.
உதரணத்திற்கு ஒரு நிகழ்வை பார்ப்போம்...
ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற வாலிபர் கீழே விழுந்து பலி !
இதன் பின்னணி தலைப்பை பார்த்தே பலியானவரின் தவறு தெரிய வரும்...
பஸ்ஸில ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி ! ஓட்டுனரின் அவசரத்தால் நிகழ்ந்த பரிதாபம் !!
இந்த தலைப்பை பார்த்தால், ஓட்டுனர் மீது கோபம் வரும். செய்தியாளர் மனசாட்சியுடன் செய்தி பின்னணியை தெரியப்படுத்த வேண்டும்.
சென்ற வாரம் எஸ் பி பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவம் விசாரணைக்கு சென்றவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூட தினமலரில் ஒரு தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது கோபம் வரும். அதே தினத்தில் மற்றொரு நாளிதழ் தினத்தந்தியில் வந்துள்ள தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது பரிதாபம் வரும். எனவே செய்தியாளர் பணி மிக மகத்தானது அதேபோன்று பேட்டி எடுப்பது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம்.
ஒரு செய்தியாளன் தான் அறிந்த செய்தியை உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை அறிய நிகழ்வின் பின்னணி அவசியம.
1970 களில் செய்தியாளர்கள் தனது செய்திகளை
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க மிகவும் சிரமப்படுவர் கடிதம் மூலம் அனுப்பி வைத்தால் மூன்று நாள் கழித்தே செய்தியாக வரும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போன் மூலம் செய்தியை தெரிவிப்பர்.
புகைப்படம் பதியபட வேண்டும் என்றால் உள்ளூர் புகைப்பட கலைஞர்ர்களை அணுகி புகைப்படம் எடுக்க வேண்டும். ஸ்டூடியோ வைத்து இருப்பவர்கள் ஆதலால் இலகுவாக இசைய மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு புகைப்பட கருவிகள் எடுத்து வருவது மிககடினம். எனவே படத்துடன் செய்தி வந்தால், புகைப்பட உதவி 'ஸ்டூடியோ' பெயரையும் போட்டு அவர்களை மகிவிப்பர் .
புகைப்பட கலைஞர்கள் எடுத்த படம் விபத்து, கொலை போன்றதாக இருந்தால் போலிசுக்கு ஒரு காப்பி கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குண்டான தொகையை கொடுக்காமல் அழைகளிபார்கள். எனவே புகைப்படத்துடன் கூடிய செய்தி வருவது அன்றைய காலத்தில் அபூர்வம். அதே போன்று செய்தியாளர் எடிட்டருடன் நல்ல தொடர்பு வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு முக்கிய செய்தியாக இருந்தாலும் ஒரு பத்தி செய்தியாக போட்டு விடுவர். தினபத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு எட்டு பத்திகள் ( அதாவது காலம் )
குறைந்தது மூன்று பத்திகள் அளவில் உள்ள செய்தியே வாசகரை கவரும் செய்தியாக கொள்ளலாம். செய்தியின் பின்னணி நன்றாக அறிந்து வெளியிடும் செய்தியாளரின் செய்தியை கூட பத்திரிகை செய்தியின் தலைப்பால் தடம் புரளுவதுண்டு. உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை
அறிய நிகழ்வின் பின்னணி அவசியம்.
உதரணத்திற்கு ஒரு நிகழ்வை பார்ப்போம்...
ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற வாலிபர் கீழே விழுந்து பலி !
இதன் பின்னணி தலைப்பை பார்த்தே பலியானவரின் தவறு தெரிய வரும்...
பஸ்ஸில ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி ! ஓட்டுனரின் அவசரத்தால் நிகழ்ந்த பரிதாபம் !!
இந்த தலைப்பை பார்த்தால், ஓட்டுனர் மீது கோபம் வரும். செய்தியாளர் மனசாட்சியுடன் செய்தி பின்னணியை தெரியப்படுத்த வேண்டும்.
சென்ற வாரம் எஸ் பி பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவம் விசாரணைக்கு சென்றவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூட தினமலரில் ஒரு தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது கோபம் வரும். அதே தினத்தில் மற்றொரு நாளிதழ் தினத்தந்தியில் வந்துள்ள தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது பரிதாபம் வரும். எனவே செய்தியாளர் பணி மிக மகத்தானது அதேபோன்று பேட்டி எடுப்பது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம்.
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்