பாலைவனத்தில் கலைதாகம் !?
பொதுவாக வறண்ட பூமியில் பாலைவனத்தில் தாகம் ஏற்படும். நம்மவர் மனதில் கலை தாகம் கலைதாகம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட விளைவை
இவ்வார ஆக்கத்தில் பதிய விரும்புகிறேன்....
வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சந்தோசப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் தான் உண்டு வேலையுண்டு என்ற நிலை மாறி பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்திட மன்றங்கள் உருவாகின. பெரும் பதவியில் உள்ள தமிழர்கள் தமிழ் மன்றங்கள்
நிறுவி மாதம் ஒருமுறையாவது இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வர். வருடங்களில் இருமுறையாவது தமிழக கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவர். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பின்னணி பாடகர்கள்
பங்கு கொள்ளும் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அது போன்ற நிகழ்வுகளில் வளைகுடாவாழ் தமிழர்களில் கலைதிறமை உடையவர்களை பங்குபெற செய்வர். இது போன்ற நிகழ்வுகள் நம்மவர்களை மகிழ்வடைய செய்யும் என்றாலும் நிகழ்வுகளில் பங்கு பெற்று கலை நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு தினமும் காதில் கரஒலி கேட்டு கொண்டே இருக்கும் எப்பொழுது அடுத்த நிகழ்வு நடை பெரும் என்று மனம் ஏங்கிகொண்டே இருக்கும் வேலை முடிந்ததும் மன்றங்களுக்கு சென்று
பல மணி நேரங்களை கழித்து வருவர். இதில் பல பேர் பல கெட்ட பழக்க வழக்கங்களை பழகியயவர்களும்உண்டு.
கலை தாகத்தால் தனது வேலையை இழந்து நாடு திரும்பி கஷ்ட்டப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிமிக்கிரி செய்வதில் கலை தேர்ந்தவன். நன்கு பாடவும் தெரியும். எல்லா கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வான் இவன் படைப்பு கரஒலிக்கு தப்பாது, பார்க்கவும் நல்ல பார்வையாக இருப்பான்.
ஒரு முறை தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டது. அந்த இளைஞனுக்கு ஏகபட்ட சந்தோசம் அரங்க அமைப்பு முதல் குளிர்பானம் விநியோகம் வரை எல்லா ஏற்பாட்டையும் சுறு சுறுப்பாக செய்து முடித்தான். நிகழ்வு நடை பெற இரண்டு நாட்களுக்கு முன் தமிழக சினிமா கலைஞர்களும் வந்து சேர்ந்தனர். அந்த இளைஞன் இரண்டு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து சினிமா கலைஞர்களுக்கு உதவியாக இருந்தான்.
நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அந்த இளைஞனின்
திறமையை கண்ட ஒரு நடிகர், தம்பி நீ தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புண்டு சென்னை வந்தால் என்னை வந்து பார் என்று குடிபோதையில் உளறி விட்டு சென்றார்.
கலை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அந்த இளைஞனின் பங்கு சிறப்பாக அமைந்ததை அரங்கின் கர ஒலி பறை சாட்டியது. அந்த இளைஞனின் கலைதாகம் மேலும் கூடியது. ஊருக்கு செல்ல முடிவெடுத்து கம்பெனியில் அனுமதி கேட்டான். கம்பெனி மறுக்கவே வேலையை உதறி தள்ளி நான் ஊர் செல்கிறேன் என்று கூறி வீடு திரும்பினான். உடன் தங்கி இருந்த நண்பர்கள் எவ்வளவோ அறிவுரை கூறினர். அவன் செவியில் விழவேயில்லை.
ஊர் சென்றான் வீட்டில் உள்ளவர்கள் வினவினர்...
தம்பி நீ வளைகுடா நாடு சென்று ஒருவருடம் கூட ஆகவில்லையே அதற்குள் விடுமுறையா ! என வினவினர்...
அதற்கு அவன் பதிலேதும் கூறவில்லை... ஒரு வாரம் கழித்து சினிமா நடிகர் முகவரியை எடுத்து கொண்டு சென்னை சென்றான். முகவரி உள்ள இடத்தை அடைந்தான். பெரிய வீடு, வாசலில் வாட்ச்மேன் நிற்க அவரிடம் தான் வந்த நோக்கத்தை கூறினான். அந்த இளைஞனை பாவமாக பார்த்தான். தம்பி உன்னை போல எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள் ஒன்றுக்கும் உதவாத விஷயம் இப்போ அவர் ஊரில் இல்லை என்றார் ஆனால் அவரின் கார் உள்ளே இருந்தது.
வாசலிலேயே காத்திருந்தான்... அவன் எதிர்பார்த்தது போல கார் வெளியே வர
நடிகர் அதி இருந்தார். ஓடி சென்று மூன்றாம் பிறை சார் சார் என்று ஓடினார். அந்த இளைஞன்.
கார் நின்றது...
என்ன வேண்டும் தம்பி ?
என்ன தெரியல சார்...
யாருப்பா நீ ? என்றார் நடிகர்
அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவு கூறினான்...
தம்பி இப்போ வாய்ப்பு இல்லை ஏதாவது வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறினார் பதில் எதிர்பாராமல் கார் கிளம்பி சென்றது. கலங்கி போனான் தலைக்கேறிய பித்தம் ஒரு நொடியில் தெளிந்தவனாக காரையே வெறித்து பார்த்து விட்டு ஊர் திரும்பினான். ஆறு மாதம் கஷ்டம்.... இருந்த காசெல்லாம்
கரைந்து போனது. யாரும் உதவ முன் வரவில்லை. மீண்டும் வளைகுடா நண்பர்களுக்கு போன் செய்தான். போப்பா உன்னை நம்பி விசா எடுத்தால்
கச்சேரி கலை நிகழ்ச்சி என்று அலைவாய் விசா எடுத்து எனக்கு கெட்ட பெயர் வரும் என்றார்.
மறு முனையில் அழுதே விட்டான் அவ்விளைஞன் இனி அந்த தவறே செய் மாட்டேன் உதவி வேண்டினான். நண்பர்கள் உதவிடவே மீண்டும் வளைகுடா வந்தான். தம்பி நாளைக்கு கச்சேரி வருகிறாயா என அழைத்ததும் காததூரம் ஓடினான் அந்த இளைஞன்.
நிழல் வேறு நிஜம் வேறு அறிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே !
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
பொதுவாக வறண்ட பூமியில் பாலைவனத்தில் தாகம் ஏற்படும். நம்மவர் மனதில் கலை தாகம் கலைதாகம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட விளைவை
இவ்வார ஆக்கத்தில் பதிய விரும்புகிறேன்....
வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சந்தோசப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் தான் உண்டு வேலையுண்டு என்ற நிலை மாறி பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்திட மன்றங்கள் உருவாகின. பெரும் பதவியில் உள்ள தமிழர்கள் தமிழ் மன்றங்கள்
நிறுவி மாதம் ஒருமுறையாவது இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வர். வருடங்களில் இருமுறையாவது தமிழக கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவர். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பின்னணி பாடகர்கள்
பங்கு கொள்ளும் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அது போன்ற நிகழ்வுகளில் வளைகுடாவாழ் தமிழர்களில் கலைதிறமை உடையவர்களை பங்குபெற செய்வர். இது போன்ற நிகழ்வுகள் நம்மவர்களை மகிழ்வடைய செய்யும் என்றாலும் நிகழ்வுகளில் பங்கு பெற்று கலை நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு தினமும் காதில் கரஒலி கேட்டு கொண்டே இருக்கும் எப்பொழுது அடுத்த நிகழ்வு நடை பெரும் என்று மனம் ஏங்கிகொண்டே இருக்கும் வேலை முடிந்ததும் மன்றங்களுக்கு சென்று
பல மணி நேரங்களை கழித்து வருவர். இதில் பல பேர் பல கெட்ட பழக்க வழக்கங்களை பழகியயவர்களும்உண்டு.
கலை தாகத்தால் தனது வேலையை இழந்து நாடு திரும்பி கஷ்ட்டப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிமிக்கிரி செய்வதில் கலை தேர்ந்தவன். நன்கு பாடவும் தெரியும். எல்லா கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வான் இவன் படைப்பு கரஒலிக்கு தப்பாது, பார்க்கவும் நல்ல பார்வையாக இருப்பான்.
ஒரு முறை தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டது. அந்த இளைஞனுக்கு ஏகபட்ட சந்தோசம் அரங்க அமைப்பு முதல் குளிர்பானம் விநியோகம் வரை எல்லா ஏற்பாட்டையும் சுறு சுறுப்பாக செய்து முடித்தான். நிகழ்வு நடை பெற இரண்டு நாட்களுக்கு முன் தமிழக சினிமா கலைஞர்களும் வந்து சேர்ந்தனர். அந்த இளைஞன் இரண்டு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து சினிமா கலைஞர்களுக்கு உதவியாக இருந்தான்.
நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அந்த இளைஞனின்
திறமையை கண்ட ஒரு நடிகர், தம்பி நீ தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புண்டு சென்னை வந்தால் என்னை வந்து பார் என்று குடிபோதையில் உளறி விட்டு சென்றார்.
கலை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அந்த இளைஞனின் பங்கு சிறப்பாக அமைந்ததை அரங்கின் கர ஒலி பறை சாட்டியது. அந்த இளைஞனின் கலைதாகம் மேலும் கூடியது. ஊருக்கு செல்ல முடிவெடுத்து கம்பெனியில் அனுமதி கேட்டான். கம்பெனி மறுக்கவே வேலையை உதறி தள்ளி நான் ஊர் செல்கிறேன் என்று கூறி வீடு திரும்பினான். உடன் தங்கி இருந்த நண்பர்கள் எவ்வளவோ அறிவுரை கூறினர். அவன் செவியில் விழவேயில்லை.
ஊர் சென்றான் வீட்டில் உள்ளவர்கள் வினவினர்...
தம்பி நீ வளைகுடா நாடு சென்று ஒருவருடம் கூட ஆகவில்லையே அதற்குள் விடுமுறையா ! என வினவினர்...
அதற்கு அவன் பதிலேதும் கூறவில்லை... ஒரு வாரம் கழித்து சினிமா நடிகர் முகவரியை எடுத்து கொண்டு சென்னை சென்றான். முகவரி உள்ள இடத்தை அடைந்தான். பெரிய வீடு, வாசலில் வாட்ச்மேன் நிற்க அவரிடம் தான் வந்த நோக்கத்தை கூறினான். அந்த இளைஞனை பாவமாக பார்த்தான். தம்பி உன்னை போல எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள் ஒன்றுக்கும் உதவாத விஷயம் இப்போ அவர் ஊரில் இல்லை என்றார் ஆனால் அவரின் கார் உள்ளே இருந்தது.
வாசலிலேயே காத்திருந்தான்... அவன் எதிர்பார்த்தது போல கார் வெளியே வர
நடிகர் அதி இருந்தார். ஓடி சென்று மூன்றாம் பிறை சார் சார் என்று ஓடினார். அந்த இளைஞன்.
கார் நின்றது...
என்ன வேண்டும் தம்பி ?
என்ன தெரியல சார்...
யாருப்பா நீ ? என்றார் நடிகர்
அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவு கூறினான்...
தம்பி இப்போ வாய்ப்பு இல்லை ஏதாவது வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறினார் பதில் எதிர்பாராமல் கார் கிளம்பி சென்றது. கலங்கி போனான் தலைக்கேறிய பித்தம் ஒரு நொடியில் தெளிந்தவனாக காரையே வெறித்து பார்த்து விட்டு ஊர் திரும்பினான். ஆறு மாதம் கஷ்டம்.... இருந்த காசெல்லாம்
கரைந்து போனது. யாரும் உதவ முன் வரவில்லை. மீண்டும் வளைகுடா நண்பர்களுக்கு போன் செய்தான். போப்பா உன்னை நம்பி விசா எடுத்தால்
கச்சேரி கலை நிகழ்ச்சி என்று அலைவாய் விசா எடுத்து எனக்கு கெட்ட பெயர் வரும் என்றார்.
மறு முனையில் அழுதே விட்டான் அவ்விளைஞன் இனி அந்த தவறே செய் மாட்டேன் உதவி வேண்டினான். நண்பர்கள் உதவிடவே மீண்டும் வளைகுடா வந்தான். தம்பி நாளைக்கு கச்சேரி வருகிறாயா என அழைத்ததும் காததூரம் ஓடினான் அந்த இளைஞன்.
நிழல் வேறு நிஜம் வேறு அறிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே !
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்