பதுமையாய் காட்சி தந்தாள்
தங்க நகை பல அணிந்து
வீதியிலே பவனி வந்தாள்
பார்பவர்கள் நகைத்திருக்க
பக்கத்திலே கள்வனவன்
தற்றுனம் பார்த்து நகைதன்னை
பறித்து சென்றான்
அனைவருமே பதை பதைத்திருக்க
கவிஞானியோ சிரித்து நின்றார்
ஏன் சிரித்தீர் என்று கேட்க
ஞானி அவர் பதில் பகர்ந்தார்
பாவி மகள் அணிந்த நகை
பாவத்தின் சின்னமைய்யா
தான் பெற்ற மகனுக்கு
மணமுடித்த பெண்ணிடம்
வரதட்சனையாய் வாங்கியதுவே
தட்சனை என்ற சொல்
தரம் கெட்டு போனதுவே
முன்பு ஒரு காலத்தில்
குருவுக்கு கொடுப்பதுதான்
குரு தச்சனை என்றழைத்தார்கள்
குருவுக்கு கொடுக்கும் பணி விடை
குருவுக்கு கொடுக்கும் மரியாதை
குருவுக்கு கொடுக்கும் வெகுமதி
தட்சணை என்றழைத்தனர்
வரனுக்கு
மனகையின் அங்கமும்
அதற்கு தங்கமும் கொடுப்பது
தட்சனை என்றழைப்பது
தட்சணை என்ற சொல்லும்
தரம் கெட்டு போனதுவே
வயதுக்கு தகுந்தார் போல்
ஆசையையும் குறைக்க வேண்டும்
பிள்ளைக்கு மணமுடித்து
கண்குளிர பார்பதோடு
நம் கடமை முடிந்த தென்று
பெற்றோர்கள் நினைக்க வேண்டும்
வீட்டீற்குள் புகுந்த மங்கை
அணிந்து வந்த தங்கமதை
அதை நாமும் அணிந்திடனும்
என்று யாரும் நினைத்திட்டால்
இது போன்ற நிகழ்வுகள்
நடப்பதுதான் சகஜமையா
அதை நினைத்தே நான் சிரித்தேன்

