Wednesday, October 24, 2012
நீரில் மூழ்கிய பிலால் நகர் ! மக்கள் புரட்சி !!! [ காணொளி ]
தற்சமயம் பெய்து வரும் கன மழையால் அதிரை மற்றும் ஏரிப்புறகரைப் பகுதிகளிலுள்ள ஏரி, குளம், குட்டைகளில் வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களில் எற்பட்ட அடைப்பால் தாழ்வானப் பகுதியாகக் கருதப்படுகிற பிலால் நகர், M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகளில் புகுந்துவிட்டன.
இப்பகுதிகளில் உள்ள குடிசைகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளானதோடு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரால் ஏற்படும் தொற்று கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து வெள்ளப்பகுதியை பார்வையிட வந்த இப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோரின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மத்தியில் எற்பட்ட கொந்தளிப்பையடுத்து அனைவரும் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்துகள் சிறிது நேரம் தடை ஏற்பட்டு பெரும் பரபரப்பாகக் காணப்பட்டன. இதையடுத்து ஆட்சி அதிகாரவர்க்கத்தினரால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
வருடந்தோறும் பெய்கின்ற கன மழையால் இப்பகுதி நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் “தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு” என்ற எனது பதிவை கோரிக்கையாக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149, எரிபுறக்கரை கிராமத்திற்கு உட்பட்ட பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும், இப்பகுதி மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால். இதனால் ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையினால் அருகில் உள்ள ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள செடியன் குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக தூர் வாரப்படாததல் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆங்காங்கே நீர் தேங்கி குண்டும் குழியுமாக குளம் போல் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும்.
மேலும் கீழ்கண்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.
1. மழைக் காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பு.
2. பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளாவது.
3. இப்பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என சாலைகளில் நடந்துசெல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
4. இரவு நேரங்களில் மஸ்ஜித்க்கு சென்று தொழக்குடியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது போன்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தபட்டப் பகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை கிராம உள்ளாட்சியில் வருவதால் இப்பகுதி மக்களின் சார்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் தொடர்பாக கோரிக்கை மனு ஓன்று ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கடந்த 11-08-2011 அன்று கொடுக்கப்பட்டது. அதைப் பெற்ற அவர்களும் கிராம சபையைக்கூட்டி தீர்மானம் ஓன்று நிறைவேற்றி அத்தீர்மானத்துடன் கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழுடன் இணைத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரின் முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ வெள்ளப்பகுதியை பார்வையிட்டு சென்றதோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.
இதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், எரிபுறக்கரை கிராம தலைவர், தாலுக்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், தலையாறி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் குளம் மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஆக்கிரமணம் செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாறுவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியுடன் எங்களிடம் சொல்லிவிட்டு சென்றவர்கள் வருடம் ஒன்றாகியும் இதுவரையில் அதற்குரிய பணிகளை மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !
இக்குளத்தின் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது [ ஏற்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கியுள்ளது ] இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாவதை தடுக்கும் நோக்கில் இக்குளத்தை ஆய்வுக்குட்படுத்தி முறையான தடுப்புச்சுவரை ஏற்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை அகற்றி குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரை அதன் வழியாக சீராகச் செல்லுவதற்கு இலகுவாக தூர் வாரப்பட வேண்டும் என்று தமிழக அரசை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சேக்கனா M. நிஜாம்
இப்பகுதிகளில் உள்ள குடிசைகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளானதோடு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரால் ஏற்படும் தொற்று கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து வெள்ளப்பகுதியை பார்வையிட வந்த இப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோரின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மத்தியில் எற்பட்ட கொந்தளிப்பையடுத்து அனைவரும் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்துகள் சிறிது நேரம் தடை ஏற்பட்டு பெரும் பரபரப்பாகக் காணப்பட்டன. இதையடுத்து ஆட்சி அதிகாரவர்க்கத்தினரால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
வருடந்தோறும் பெய்கின்ற கன மழையால் இப்பகுதி நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் “தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு” என்ற எனது பதிவை கோரிக்கையாக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !!!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149, எரிபுறக்கரை கிராமத்திற்கு உட்பட்ட பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும், இப்பகுதி மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால். இதனால் ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையினால் அருகில் உள்ள ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள செடியன் குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக தூர் வாரப்படாததல் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆங்காங்கே நீர் தேங்கி குண்டும் குழியுமாக குளம் போல் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும்.
மேலும் கீழ்கண்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.
1. மழைக் காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பு.
2. பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளாவது.
3. இப்பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என சாலைகளில் நடந்துசெல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
4. இரவு நேரங்களில் மஸ்ஜித்க்கு சென்று தொழக்குடியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது போன்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தபட்டப் பகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை கிராம உள்ளாட்சியில் வருவதால் இப்பகுதி மக்களின் சார்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் தொடர்பாக கோரிக்கை மனு ஓன்று ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கடந்த 11-08-2011 அன்று கொடுக்கப்பட்டது. அதைப் பெற்ற அவர்களும் கிராம சபையைக்கூட்டி தீர்மானம் ஓன்று நிறைவேற்றி அத்தீர்மானத்துடன் கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழுடன் இணைத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரின் முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ வெள்ளப்பகுதியை பார்வையிட்டு சென்றதோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.
இதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், எரிபுறக்கரை கிராம தலைவர், தாலுக்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், தலையாறி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் குளம் மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஆக்கிரமணம் செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாறுவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியுடன் எங்களிடம் சொல்லிவிட்டு சென்றவர்கள் வருடம் ஒன்றாகியும் இதுவரையில் அதற்குரிய பணிகளை மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !
இக்குளத்தின் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது [ ஏற்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கியுள்ளது ] இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாவதை தடுக்கும் நோக்கில் இக்குளத்தை ஆய்வுக்குட்படுத்தி முறையான தடுப்புச்சுவரை ஏற்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை அகற்றி குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரை அதன் வழியாக சீராகச் செல்லுவதற்கு இலகுவாக தூர் வாரப்பட வேண்டும் என்று தமிழக அரசை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சேக்கனா M. நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான அப்டேட் நிஜாம்
ReplyDeleteபோராட்டம் ஒன்றே வெற்றியை பெற்றுதரும் என்றால் அதையும் செய்திருக்காங்க.. கோரிக்கை நிறைவேற்றினால் இது ஒரு மகத்தான வெற்றியே...
பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஇதுக்கெல்லாம் வேறு வழியி்ல் போராடினால்தான் சூடு பலமாகவிழும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டுமுதல் பாருங்கள். இந்தப் பிரச்சனையை 100 சதவிகிதம் அடியோடு ஒழித்து விடலாம்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அருமையான அப்டேட் நிஜாம்
ReplyDeleteபோராட்டம் ஒன்றே வெற்றியை பெற்றுதரும் என்றால் அதையும் செய்திருக்காங்க.. கோரிக்கை நிறைவேற்றினால் இது ஒரு மகத்தான வெற்றியே
அருமையான அப்டேட் நிஜாம்
ReplyDeleteபோராட்டம் ஒன்றே வெற்றியை பெற்றுதரும் என்றால் அதையும் செய்திருக்காங்க.. கோரிக்கை நிறைவேற்றினால் இது ஒரு மகத்தான வெற்றியே...