Friday, August 16, 2013
ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?
இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.
எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.
அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.
இதில் பாய் எங்கிருந்து வந்தது ?
ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.
விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.
என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும் ?
பாய் பாய் என்றா ?
இல்லை.
அது தவறாக அழைப்பு.
சரியான அழைப்பு ”சகோ” என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.
பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள் ?
இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.
உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.
பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.
தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.
தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.
அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்.
இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டு விடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா ?
எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.
அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.
இதில் பாய் எங்கிருந்து வந்தது ?
ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.
விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.
என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும் ?
பாய் பாய் என்றா ?
இல்லை.
அது தவறாக அழைப்பு.
சரியான அழைப்பு ”சகோ” என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.
பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள் ?
இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.
உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.
பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.
தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.
தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.
அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்.
இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டு விடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா ?
அன்புடன் புகாரி
Subscribe to:
Post Comments (Atom)
அட இவ்வளவு விசயம் அடங்கியுள்ளதா ?
ReplyDeleteநேர்த்தியான விளக்கத்திற்கு நன்றி !
நன்றி சேக்கனா அவர்களே
Deleteஅனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு.
ReplyDelete''பாய்'' என்ற வார்த்தை தமிழரிடத்திலிருந்து முஸ்லிமை வேற்றுமைபடுத்துவதாகவே தெரிகிறது. சகோதரா, சகோதரர், சகோ, என்று அழைக்கலாம்.
நன்றி சகோ
Deleteஇலங்கையில் நாங்கள் முஸ்லீம்களை காக்கா (சகோதரன்) என்று அழைக்கிறோம் அது எந்த மொழி? எனது முஸ்லீம் நண்பர், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தனது தந்தையை அத்தா என்கிறார். துருக்கியிலும் தந்தையை அத்தா என்கிறார்கள். அப்படிஎன்றால் அவரது முன்னோர்கள், துருக்கியிலிருந்து வந்த துலுக்கர்கள் என்று கருத்தாகுமா? இலங்கை முஸ்லீம்கள் கீழேயுள்ள உறவு முறைகளைப் பயன்படுத்துகின்றனர், இந்தச் சொற்கள் எந்த மொழி?
ReplyDeleteஅம்மா -உம்மா,
அப்பா - வாப்பா,
காக்கா - சகோதரன்,
அண்ணா - நானா,
சித்தப்பா - சாச்சா,
சித்தி - சாச்சி,
பாட்டி -கண்ணா
உம்மா என்பது அம்மா என்ற சொல் மருவியது. திருத்திக் கொள்ளலாம் அல்லது அப்படியே அழைக்கலாம். காகம் என்பதை காக்கா என்பதில்லையா, அப்படி வட்டார வழக்குகள் ஏற்புடையன.
Deleteஅப்பா என்பதே ஆதி தமிழனிடம் இல்லை. சமய இலக்கிய காலத்தில் அப்பா என்ற சொல்லை உருவாக்கினார்கள். அதன் பிதன் தான் தமிழர்கள் அப்பா என்ற அழைக்கத் தொடங்கினார்கள். அதற்குமுன் தந்தையே என்றுதான் அழைப்பார்கள்.
இந்த வாப்பா, காக்கா, நானா, கண்ணா என்பதெல்லாம் இனிதான் நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருநாள் கண்டுபிடிப்பேன்.
மற்றபடி சாச்சா சாச்சி என்பது உருது மொழிதான். தமிழில் சின்னத்தா சின்னம்மா என்பதே சரி.
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
தமிழக முஸ்லிம்கள் வீட்டில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.
அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.
அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅன்பிற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம். பன்னெடும் காலமாக நாங்கள் எங்கள் இஸ்லாமிய சகோதரர்களை பாய் என்றுதான் அழைக்கிறோம்.எங்கள் வீட்டு பெண்கள் இஸ்லாமியர்கள் கடைகளுக்கு சென்றால் எங்கள் பெண்களை வயதிற்கு தகுந்த மாதிரி அம்மா என்றோ,அக்கா என்றோ ,பாப்பா என்றோ அழைக்கிறார்கள்.இந்த வாஞ்சைதான் முக்கியம்.தமிழ்நாட்டில்தான் எல்லாவற்றிற்கும் மொழி,சாதி பிராமணன்,பிராமணன் அல்லாதவன் என்று பேதம் பார்க்கிறார்கள்.
ReplyDeleteஒரு மொழி இயல்பாக வருவது ஒருவகை. திணிக்கப்படுவது ஒருவகை. பாய் என்பது முஸ்லிம்களின் மேல் திணிக்கப்பட்டச் சொல். துருக்கர், துலுக்கன் என்பதெல்லாம் திணிக்கப்பட்ட சொல்.
Deleteஒரு முஸ்லிம் முஸ்லிம்தான்.
இஸ்லாத்தில் அவரவர் மொழி அவரவர்க்கு என்பதில் தெளிவாக இருக்கிறது.
இந்துக்களை தம்பள என்று கொச்சையாக அழைப்பார்கள். இதெல்லாம் துவேசத்தால் வருவது.
அன்று தமிழன் என்பவன் கேவலம் என்று ஆரியன் நினைத்தான். எத்தனையோ கெடுதல்களைச் செய்தான். இன்று தான் அவற்றை முறியடித்து நிமிர்ந்து நிற்கிறோம்.
தமிழன் என்பதுதான் மருவி வருவி தம்பள என்று ஆனது.
அவன் ஒரு தம்பளப்பய என்று இழிவாகக் கூறுவதை நான் என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.
தன் தாய் மொழி இருக்க பிறமொழியிடம் பிச்சை எடுக்கும் அவலம் எவருக்கும் அவசியமில்லை என்ற எண்ணம் கொண்டவன் நான்.
பாய் என்பது தமிழனை அவமானப்படுத்தும் சொல்லாகவே நான் காண்கிறேன்
முஸ்லீம்களை பாய் என்று தமிழ்நாட்டிலும் காக்கா என்று இலங்கையிலும் அழைப்பதற்கும் அல்லது அவர்கள் தமிழ்ப்பெண்களை அக்கா, என்றோ பாப்பா என்றோ அழைப்பதற்கும் அன்பு அல்லது வாஞ்சை தான் காரணம் என்று நான் நம்பவில்லை. சும்மா ஒரு மரியாதைக்காகத் தானே தவிர அன்பு, வாஞ்சைக்கெல்லாம் சம்பந்தம் கிடையாது. முன்பின் தெரியாத முஸ்லீம்களைக் கூட பாய் என்கிறார்கள் தமிழ்நாட்டில் அதெல்லாம் அன்பினாலா? நான் கேட்டது என்னவென்றால் “பாய்” உருதுச் சொல் என்றால், ஏனைய சொற்கள் எந்த மொழியிலிருந்து தமிழில் பேச்சு வழக்கில் வந்தன என்பது தான்.
ReplyDeleteஅக்காலத்தில் மத துவேசத்தால் தங்களை மாற்றி அடையாளப் படுத்திக்கொள்ள எங்கிருந்தெல்லாமோ சொற்களைக் கொண்டுவந்து கேடு விளைவித்திருக்கிறார்கள் அறியாதவர்கள்.
Deleteஆங்கிலம் சைத்தானின் மொழி என்று முல்லாக்கள் ஆங்கிலத்தைப் படிக்கவிடாமல் தமிழ் முஸ்லிம்களை மிகவும் பின் தங்கியவர்களாக ஆக்கினார்கள்.
இவற்றிலிருந்தெல்லாம் அறிவுடைய இக்காலத்தில் ஒரு தமிழ் முஸ்லிம் வெளிவருதல் அவனது உரிமை கடமை
சகோதரன் சமஸ்கிருதச் சொல் என்பதறிவீராக. சகோதரன் = ச(க) + கோத்ரன் (ஒரே கோத்திரத்தில் பிறந்தவன்) என்று பொருள்.
ReplyDeleteதொல்காப்பியத்தின் படி திசைச்சொற்கள் தமிழாக்கப்பட்டு பயன்படுத்தலாம். இன்று தமிழில் உள்ள பெரும்பாலும் ஐந்து எழுத்துக்களில் உள்ள ம் ன் என்று முடியும் சொற்கள் வடமொழிச் சொற்கள்தாம்.
Deleteகுமுதம்
குங்குமம்
மங்களம்
என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கணம் வகுத்து ஏற்றதை நாம் மறுக்கத் தேவையில்லை.
சகோதரன் என்ற சொல்லுக்கு உடன்பிறப்பு என்று தமிழில் சொல்லலாம். ஆனால் உடன் பிறப்பு என்பது சகோதரன் மட்டும அல்ல சகோதரியையும் சேர்த்தது.
இந்த பாய் என்பது அப்படியல்ல. சகோதரா என்று யாரை வேண்டுமானலும் அழைக்கலாம். ஆனால் பாய் என்று முஸ்லிம்களை மட்டுமே அழைப்பார்கள். அதுவும் சற்று கிண்டலாக அழைப்பவர்களே அதிகம்.
//சகோதரன் சமஸ்கிருதச் சொல் என்பதறிவீராக. சகோதரன் = ச(க) + கோத்ரன் (ஒரே கோத்திரத்தில் பிறந்தவன்) என்று பொருள்.//
Deleteசக +உதரன் (வயிறு) அதாவது ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் கருத்துக் கூறுவர். ஆனால் ச என்ற தமிழ் எழுத்தின் ஒலிக்கு (Sounds and Letters ) சேர்ந்து அல்லது சேருவது என்றும் பொருள். தமிழ் மட்டுமல்ல, சமக்கிருதமும் பல தமிழ்ச் சொற்களை இரவல் வாங்கியுள்ளது, அதனால் ‘சக’ என்ற சொல் ச என்ற தமிழ் வேர்களிலிருந்து வந்திருக்கலாம் தானே.
சகோதரன் - சக + உதரன். என்பது வடமொழி. தமிழ் மொழி முதல் ச (S) வராது அதனைச் ச (Cha) என்றே ஒலிக்க வேண்டும். பிற்காலத்தில் வடமொழி தழுவிய பின ச (S) என்பது மொழி முதல் வந்தது. சக என்பது உடன் எனவும், உதர என்பதை வயிறு, தாயின் வயிறு, பிறப்பு என்பதாய் வரும். ஒரே வயிற்றில் பிறந்தவங்கள் என்பதே சரி..!!! பலர் வடமொழிகளை, திசைமொழி சொற்களை தமிழ் என நிறுவ முனைவதன் சூட்சுமம் என்னவோ? பாய் என்று இப்போது யாரும் எம் வயதினர் கூறுவதில்லை. நாங்கள் சக வயது எனில் மச்சான், மச்சி எனவும். வயது மிகுந்தால் அண்ணா, குறைந்தால் டா, தம்பி போட்டே கூப்பிடும். அவர் எம்மதம் ஆனாலும் சரி. அது போல் முன்பு போலில்லாமல் யாரும் மத உடுப்புகள், அடையாளங்களை திணித்து உடுத்து தாம் தனி தனி எனக் காட்டுவதும் இல்லை..! இளைய சமுதாயம் நல்லாத்தான் போய் கொண்டிருக்கின்றது..!
Deleteதமிழில் அரபு மற்றும் உருது மொழிச் சொற்கள் ஊடுருவி இருப்பதிலிருந்து, அரபு வணிகர்களின் மூலமாகவும், மொகலாய ஆட்சியாளர்கள் மூலமாகவும் தமிழகத்தில் இஸ்லாம் பரவியிருப்பதற்கானச் சான்றுகளாகவே அறியலாம்.
ReplyDeleteஅமல்= செயல்படுத்தல்
பாக்கி= மீதி
வக்கீல்= பரிந்துரை செய்யும் உரிமை பெற்றவர்
ஜாபிதா= பட்டியல்
லாயக்= தகுதி
ஃபீங்கான்= தட்டு
இப்படி பல சொற்கள் , குறிப்பாக வணிகம் மற்றும் அரசு சார்ந்த சொற்களும், வீட்டு உபயோகக்ப் பொருட்களின் பெயர்களும் அடங்கும். இங்கு விவாதிக்கப்படும் “பாய்” என்னும் சொல் உருது மொழியிலிருந்து ஊடுருவியது என்றாலும்,,முஸ்லிம்கள்(உருது மொழி பேசும்பொழுது) பாய் என்றழைப்பதைக் கேட்ட சகோதர சமய மக்கள் நாமும் :பாய்” என்றழைக்கலாமே என்று விரும்பிப் பழக்கத்தில் கொண்டு வந்ததில் இப்படி காலங்காலமாக வழக்குச் சொல்லாகி விட்டது; இதனால் ஓர் அன்பான ஈர்ப்பு உண்டென்றால் அ9ஃது ஒன்றும் தவறில்லை தான்; ஆனால்,”பாய் என்றழைத்த காலத்தில் அண்ணன் தம்பிகளாய் பழகி வந்த சமய நல்லிணக்கம் இன்று ஒருவர் மீத் ஒருவர் “பாய்ந்து)”கொள்ளுங்கள் என்று ஏவப்பட்டும் தூண்டப்பட்டும் துண்டாடப்பட்ட நம் சமய நல்லிணக்கம்- சகோதரத்துவம் காணாமற் போனதெப்படி?
தமிழகக் கடற்கரையோரங்களில் இஸ்லாம் பரவிய வரலாறு பற்றி ஒரு குறிப்பு:
எமன் நாட்டில் இருந்த ஓர் ஆட்சியாளர்க்கு பயந்து ஒரு கப்பலில் புறப்பட்ட எமன் முஸ்லிம்கள் (கைலி கட்டும் பழக்கம் அவர்களின் அறிமுகம்) எகிப்து, இலங்கை,கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையோரம் (சென்னை-கோவளம், பரங்கிப்பேட்டை, நாகூர், காயல்பட்டினம். கீழக்கரை, அதிராம்பட்டினம்) வணிகர்களாக அறிமுகமாகி அவர்களின் தூய்மை, நேர்மை கண்டு அன்னாளில் வர்ணாசிர்மக் கொடுமைகளால் தனித்து விடப்பட்ட மக்கள் ஆர்வமுடம் சமத்துவம் நாடி இவ்வணிகர்கள் சார்ந்திருந்த இஸ்லாத்தைத் தழுவினார்கள்; அத்துடன், இவர்களின் பேச்சு, வழக்கம்,நடை, உடை, பாவ்னைகளும், உணவு பழக்கங்களும் அந்தத் தமிழர்களிடமும் ஒட்டிக் கொண்டன. அதிலும் குறிப்பாகக் கேரளக் கரையினின்றும் தமிழக் கடற்கரையோரம் இஸ்லாம் பரவியதால் ;
கேரள மக்கள் சொல்லும், இக்கா= காக்காவாகவும், லாத்தா= ராத்தாவாகவும், வாப்பா, உம்மா என்ற வழக்குச் சொற்களும் பரவின.
நாம் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்றிருந்தால் 75 விழுக்காடு நடைமுறையில் உள்ள வழக்குச் சொற்கள் என்னும் நடைமுறைச் சொற்களைக் களைய வேண்டும்.
இன்னும் பிராமண சமூக மக்கள், ஜலம் போன்ற சொற்கள உரையாடல்களில் வெளிப்படுத்துவது போலவே, தமிழக முஸ்லிம்கள் அறபு மொழி கலந்த பேச்சு மொழியும் குறிப்பாக மேலே சொல்லப்பட்ட ஊர்களில் நடைமுறையில் உள்ளது.
ஃபீங்கானை எடுத்து வா
கமீஸ் போட்டாயா
டவுசர் எங்கே
பாக்கி எவ்வளவு
நல்ல அமல் செய்
இவன் லாயக் இல்லை
இவனுக்கு அக்ல் இல்லை
ஒஜிஃபன் சாப்பிட்ட்டாயா
ரசீது கொண்டுவா
வசூல் செய்தாயா
ஆயினும், அதே தமிழ் முஸ்லிம்கள் தான் தூய்மையான தமிழ்சொற்களை மிகவும் இயல்பு வாழ்க்கையிலும் அன்றாடம் பயன்படுத்தும் வண்ணம் எம் முன்னோர்கள் தமிழுக்கும் நற்பணியாற்றியுள்ளனர்
தொழுகை
நோன்பு
பள்ளிவாசல்
சோறு
ஆனம்
ஏனம்
ராவுத்தர் (குதிரை வியாபாரி)
மரைக்காயர் (மரக்கல ஆயர்)
ஓது
எனவே, காலங்காலமாக நடைமுறையில் உள்ள வழக்குச் சொல்லிலும் ஓர் ஈர்ப்பும் இருப்பதை அதனை உச்சரிக்கும் பொழுதினில் செவியினுட் சென்றதும் உள்ளுணர்வில் உணரப்படும் பொழுது மட்டுமே உணரப்படும் ஓர் அற்புதமான விடயத்தை ஆய்வுக்குரியதாக ஆக்க வேண்டா.
என்னை என் மக்கள், “டாடி” என்றழைப்பதை விட, “வாப்பா” என்றழைப்பதிலும் ஓர் ஈர்ப்பை உணர்கிறேன்; உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க இயலுமா? தேனின் சுவை என்பதை போலவே!
கலாம், இந்த பாய் என்ற சொல் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்றால், ஒரு முஸ்லிம் பெண்ணை ”பாயம்மா” என்று அழைக்கிறார்கள். அந்த அறியாமை நோகச் செய்கிறது.
Deleteமுதலில் தமிழ் எழுத்துக்களால் சரியாக உச்சரிக்க முடியாத சொல்தான் இந்த பாய். பாய் என்றால் படுக்கும் பாய் என்றுதான் பொருளும் உச்சரிப்பும் வரும். Bhai என்பது தான் சகோதரா என்ற பொருளுடையது.
பழக்கம் காரணமாக முதியவர்கள் பாயை விடாதிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும், ஆனால் இளையவர்கள் சரியான திசை செல்வர்.
சொற்கள் மருவி வருவது தமிழில் ஏற்புடையது. ஆனால் தமிங்கிலம் போல தமிழுக்குள் கலப்பு என்பது தீராத வியாதி.
தமிங்கிலத்தை எதிர்பதைப்போலத்தான் தமிழக முஸ்லிம்களிம் நீது ***மட்டும்**** சுமத்தப்பட்ட உருதிங்கிலத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும்.
ஓர் முஸ்லிம் வீட்டில்தான் அழகு தமிழில், தேத்தண்ணி, பசியாரல், ஆனம் என்ற புழக்கமெல்லாம்.
அப்படியான தமிழ் முஸ்லிம்களுக்கு இந்த பாய் சாச்சாவெல்லாம் முற்று முழுதாக ஓர் முரண்பாடு.
பூவையும் கருவாட்டையும் சேர்த்து ஒரே பொட்டலமாகக் கட்டுவது ஏற்புடையதாக இல்லை ;-)
//தமிழக முஸ்லிம்கள் வீட்டில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.
ReplyDeleteஅத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.
அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்///
சகோ. புகாரி,
உங்களின் விளக்கமான பதிலுக்கு நன்றி, அதிலும் தேவாரத்தை Quote பண்ணும் முஸ்லீமை இன்று தான் நான் பார்க்கிறேன்.
நானும் இதே விளக்கத்தை எனது முஸ்லீம் நண்பனுக்கு கொடுத்து, உங்களின் முன்னோர்கள் தமிழர்கள், தமிழர்களே இழந்து விட்ட பழந்தமிழ்ச் சொல்லை இன்றும் வழக்கத்தில் வைத்திருகிறீர்கள் என்றதற்கு, அவன் சொன்ன பதில், அப்படியில்லை, நாங்கள் ராவுத்தர்கள், இது அரபு மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்றான். அதனால் தான் அரபு இல்லை, அத்தா என்பது துருக்கிய மொழியில் தந்தை, அப்படியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
சகோ வியசன்,
Deleteநீங்கள் என்னை சகோ புகாரி என்று அழைப்பது கேட்டு பெரிதும் மகிழ்ந்தேன்.
கம்பராமாயணைத்தை கரைத்துக் குடித்து அதன் இலக்கியச் சுவையை சிரத்தையாய பாராட்டும் விமரிசிக்கும் முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் ஏராளம். மு மு இஸ்மாயில் அதில் மிக முக்கியமானவர்.
ராவுத்தன் என்பது குதிரைக்காரன் என்று பொருள். இதுவும் இந்துக்களின் வர்ணாசிரமக் கொள்கையின்படி இஸ்லாமியனுக்கு வலிந்து சூட்டப்பட்ட பெயர். முதலில் அவர்கள் அழைத்தார்கள் இவன் கேட்டுக்கொண்டான், பின்னர் இவனே அதை விடுகிறான் இல்லை ;-)
துருக்கிக்குத் தமிழிலிருந்து சென்றிருக்கலாம் என்று நினைப்பது சரியோ தவறோ ஆனால் ஒரு தமிழகுக்குப் பெருமை சேர்க்கும் செயல் ;-)
அன்புடன் புகாரி
//நீங்கள் என்னை சகோ புகாரி என்று அழைப்பது கேட்டு பெரிதும் மகிழ்ந்தேன்.//
Deleteஎத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் பேசும், தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்தும் அனைவருமே சகோதர்கள் தானே. அதாவது தமிழ் எங்களை இணைக்கிறது.
//எமன் நாட்டில் இருந்த ஓர் ஆட்சியாளர்க்கு பயந்து ஒரு கப்பலில் புறப்பட்ட எமன் முஸ்லிம்கள் (கைலி கட்டும் பழக்கம் அவர்களின் அறிமுகம்) எகிப்து, இலங்கை,கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையோரம் (சென்னை-கோவளம், பரங்கிப்பேட்டை, நாகூர், காயல்பட்டினம். கீழக்கரை, அதிராம்பட்டினம்) வணிகர்களாக அறிமுகமாகி அவர்களின் தூய்மை, நேர்மை கண்டு அன்னாளில் வர்ணாசிர்மக் கொடுமைகளால் தனித்து விடப்பட்ட மக்கள் ஆர்வமுடம் சமத்துவம் நாடி இவ்வணிகர்கள் சார்ந்திருந்த இஸ்லாத்தைத் தழுவினார்கள்//
ReplyDeleteஅப்படி வந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் எவருமே தமது பெண்களை அழைத்து வரவில்லை. இலங்கையிலும், இந்தியாவிலும் அவர்கள் தமிழ்ப்பெண்களைத் தான் மணந்து கொண்டனர். ஏனைய முஸ்லீம்கள் பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாத்தை தழுவிய தமிழர்கள். ஆனால் இலங்கையில் தமது தாய் வழியாக தமிழர்களைக் கொண்ட முஸ்லீம்களும், தமிழர்களாக இருந்து இஸ்லாத்துக்கு மாறிய அனைவரும், அரபு மோகம் கொண்டு அரபு கலாச்சாரமயமாகுவது மட்டுமன்றி, தமக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பைக் கூட மறுக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களைப் போன்றவர்களின் கருத்து என்ன?( இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு உடையனிய வேண்டும், அரபுக்கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) கூறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. )
நிறைய விசயங்களில் நல்ல புரிதல் கொண்டுள்ளீர்கள், பாராட்டுக்கள்.
Deleteவெள்ளைக்காரர்கள் எப்படி சட்டைக்காரிகளை உருவாக்கினார்களோ அப்படியாய் இந்தியாவில் பல மதங்கள் இனங்கள் வந்து பலவகை மக்களை உருவாக்கி இருக்கிறார்கள். அதுதான் வரலாறு.
ஆரியர்கள் வந்து இந்துக்களை உருவாக்கினார்கள். எகிப்தியர், துருக்கியர், முகலாயர் வந்து முஸ்லிம்களை உருவாக்கினார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை வேண்டி கொத்துக் கொத்தாக மதம் மாறியது அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது.
அறிந்து புரிந்து விரும்பி நேசித்து யாசித்து முஸ்லிமானவகள் இன்று அமெரிக்காவில் அதிகம். அமெரிக்கா போல பல நாடுகளிலும் உண்டு.
ஆதியில் வந்தேறிய ஆண்கள் பெண்களை மணந்து வாழ்ந்ததால் உருவான மதங்களும் இனங்களும் அதிகம்தான்.
அப்படிப்பார்த்தால், தாய் தாய்நாடு என்ற வகையில் தாய்மொழியையே போற்றுதல் வேண்டும்.
அப்படி இல்லாவிட்டாலும்கூட தாய் மொழியையே அவரவர்கள் போற்றுதல் அவசியம். ஏனெனில் இஸ்லாத்தில் மிகத் தெளிவாக ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அரபு மொழி எந்த மொழியையும் விட உயர்ந்ததில்லை. அரபியர்கள் இந்த இனத்தவரையும்விட உயர்ந்தவர்கள் இல்லை.
இதுதான் செய்தி.
அவரவர்க்கு அவரவர் தாய்மொழி. ஆனால் மார்க்கம் என்பது முற்றிலும் வேறு. அது தேர்ந்தெடுத்த சிறப்பு வாழ்வு.
ஒரு மதத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது என்றால் அதில் இணைவதே அறிவுடைமை.
உணர்வுகள் காலப்போக்கில் அறிவின் பார்வைகள் நிறமிழக்கும். பின் சரியானது எது என்பதை எல்லோரும் சரியாகவே தேர்வு செய்வார்கள்.
அன்று விதவைகளைக் கொடுமைப்படுத்தியவர்கள் இன்று மணக்கும் அறிவினைப் பெறவில்லையா?
அப்படித்தான், இனி எல்லாம் அவரவர் விருப்பம்!
கருத்துரையாடல்கள் மிக பயனுள்ளதாக உள்ளன வளர்க உம் பனி
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteநல்ல பதிவு
பாய் என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும் என்று கூறும் நீங்கள்
தமிழக இசுலாமியர்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவீர்களா?
தொழுகை அழைப்பு தமிழில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவீர்களா?
இதுபற்றி தாங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
இந்து குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இல்லை. கிருத்தவ குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இல்லை. முஸ்லிம் பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயர் இல்லை.
Deleteபெயர் வைப்பது அவரவர் விருப்பம்தான். ஆனால், ஈடுபாடு கொண்டவர்கள் அழகு தமிழில் பெயர் வைப்பார்கள்.
என் மனைவியின் பெரியத்தா தன் பிள்ளைகளுக்கு இப்படிப் பெயர் வைத்தார்.
புகழேந்தி
செண்டு
ரோஸ்
முஸ்லிம்களின் பெயர்களையும் தமிழ்ப்பெயராய் நிச்சயம் வைக்கலாம்.
கருணைநேசன் - அப்துல்கரீம்
புகழேந்தி - முகம்மது
சிந்திப்போருக்கு இறைவன் துணை நிற்பான்.
இறைவனிடமிருந்து வரும் சொற்களுக்கு சரியான விளக்கமாக மொழிபெயர்க்கமுடியாது. அது கருத்துச்சொறிவு நிறைந்தது. எல்லையற்று வந்துகொண்டே இருக்கும். எல்லையற்றவன் எப்படியோ அப்படியே அவனிடமிருந்து வருபவைகளுக்கு எல்லைக் கற்பிக்கமுடியாது. ஒத்த கருத்துக்கள் அவரவர் தெளிவிர்கேர்ப்ப வந்துகொண்டுதான் இருக்கும்.
Deleteஎனவே //தொழுகை அழைப்பு தமிழில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவீர்களா?// என்ற கேள்வி இங்கு வேண்டியது இல்லை.
நல் தேவையின் நிமித்தம் இனம் தெரியவேண்டியது அவசியம். அதன் நிமித்தம் அவரவர் மத/மார்க அடையாளங்களை மொழியில் மறைக்க யார்தான் ஒத்துவருவார். அதனால் தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று கேள்வி எழுவதும் பொருத்தமில்லை.
இஸ்லாமிய தொழுகை அழைப்பை அந்தந்த நாட்டு மக்களின் மொழியில் அவர்களுக்குப் புரியும் வகையில் நடத்த இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது அல்லது எவ்வாறு துருக்கி நாட்டின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் Atatürk, துருக்கி மொழியில் 'அதான்' தொழுகை அழைப்பு நடத்தப்பட வேண்டும் என அறிவித்தார், துருக்கியில் 1932 - 1950 வரை துருக்கி மொழியில் தான் தொழுகை அழைப்பு நடத்தினார்கள். இப்பொழுது அரபிலும் நடத்தப்படுகிறது.
Delete//இஸ்லாமிய தொழுகை அழைப்பை அந்தந்த நாட்டு மக்களின் மொழியில் அவர்களுக்குப் புரியும் வகையில் நடத்த இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது//
Deleteஅவ்வாறு இல்லை. மொழிமாற்றியதன் பலனை அந்நாடு அடைந்துவிட்டு,இப்பொழுது சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கான விளக்கும் மேலே எழுதியும் திரு வியாசன் போன்றவர்களுக்கு குதர்ககுணம் வெளிப்படத்தான் செய்கிறது.
இஸ்லாமியர் தொழுகையை புரிந்து தான் தொழவேண்டும், தொழுகிறார்கள். அவ்வாறு தொழுதவர்கள்தான் உயர்நிலைகளை அடைந்தவர்கள்.
மிகவும் கருத்தூன்றி இஸ்லாமியத்தில் கவனம் செலுத்துகிறீர்கள். அக்கவனம் தெளிவை நோக்கிபோனால் புண்ணியமே.
வணக்கம் சகோ நபி தாஸ்,
Delete////இறைவனிடமிருந்து வரும் சொற்களுக்கு சரியான விளக்கமாக மொழிபெயர்க்கமுடியாது. அது கருத்துச்சொறிவு நிறைந்தது. எல்லையற்று வந்துகொண்டே இருக்கும். எல்லையற்றவன் எப்படியோ அப்படியே அவனிடமிருந்து வருபவைகளுக்கு எல்லைக் கற்பிக்கமுடியாது. ஒத்த கருத்துக்கள் அவரவர் தெளிவிர்கேர்ப்ப வந்துகொண்டுதான் இருக்கும்.
எனவே //தொழுகை அழைப்பு தமிழில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவீர்களா?// என்ற கேள்வி இங்கு வேண்டியது இல்லை.
///
குரான் (அரபி ) இறைவனின் சொற்கள் என்பது உங்கள் நம்பிக்கை அதனால் அதில் மாற்றம் தேவையில்லை என்கிறீர்கள். இதுபோலத்தான் பார்ப்பனர்களும் தமிழ்கூடாது சமஸ்கிருதம்தான் இறைவன் மொழி என்கின்றனர். இந்த விடயத்தில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒற்றுமையே உண்டு. நீங்கள் அரபியை பிடித்து தொங்குகிறீர்கள் அவர்கள் சமஸ்கிருதத்தை பிடித்து தொங்குகிறார்கள் . அது அது அவர்களது விருப்பம்.
இங்கே சகோ புகாரி //இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டு விடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா ?//
என்று கேள்வி கேட்டார்
அதை அவர் பின்வருமாறு கூட கூறலாம்
"இனியாவது இந்த அரபி /சமஸ்கிருதம் என்னும் நோயை விட்டு விடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா ?"
எனினும் அது அவரது விருப்பம். அதனால் தான் நான் அவரிடம் //இதுபற்றி தாங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.// என்று கூறினேன்.
உள்ளதை உள்ளபடி ஆய்வுக்குள்ளாக்கிறேன் ஏற்ப்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.
நன்றி
>>>>>>இறைவனிடமிருந்து வரும் சொற்களுக்கு சரியான விளக்கமாக மொழிபெயர்க்கமுடியாது. <<<<<<<
Deleteஇறைவன் அப்படிச் சொல்லி நான் எங்கும் குர்-ஆனில் காணவில்லையே. உங்கள் பக்தியின் உச்சத்தில் நீங்கள் எதையாவது சொல்கிறீர்களா நபிதாஸ்?
புரியும் வகையில் உங்களுக்கு எளிதாக்கித் தந்துள்ளோம் என்பதுபோன்ற வசனங்கள்தானே குர்-ஆனில் உள்ளன.
54:17.
நிச்சயமாக
இக் குர்ஆனை
எளிதாக்கி வைத்திருக்கிறோம் -
நினைவு படுத்திக் கொள்ள.
எனவே
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
*
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே
http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=54&verse=17#(54:17:1)
>>>>>நல் தேவையின் நிமித்தம் இனம் தெரியவேண்டியது அவசியம். <<<<<
எப்படி அது அவசியம் என்று குர்-ஆன் ஆதாரங்களோடு கூறுவீர்களா நபிதாஸ். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்
>>>>>இஸ்லாமியர் தொழுகையை புரிந்து தான் தொழவேண்டும்,
Deleteதொழுகிறார்கள். அவ்வாறு தொழுதவர்கள்தான் உயர்நிலைகளை
அடைந்தவர்கள். <<<<<
முரண்பாடான தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறீர்கள் நபிதாஸ்.
குர்-ஆன் இறைவனின் வரிகள். அதை யாரும் சரியாகப்
புரிந்துகொள்ள முடியாது என்று முன்பு எழுதினீர்கள். இப்போது
புரிந்துகொண்டுதான் தொழுகிறார்கள் என்கிறீர்கள்.
முகம்மது நபி பெருமான் தொழும்போது ஒவ்வொரு முறையும்
வேறு வேறு குர்-ஆன் வரிகளை ஓதித் தொழுதார் என்று ஹதீதுகள்
உண்டு. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இப்படித்தான் தொழவேண்டும். இதைச் சொல்லித்தான்
தொழவேண்டும் இதைச் செதுதான் தொழவேண்டும் என்று
இறைவன் தன் திருமறையில் கூறவே இல்லை என்பதையும்
அறிவீர்களா?
இஸ்லாம் தோன்றி சுமார் 600 வருடங்கள் கழித்து, நான்கு
இமாம்கள் அவரவர் விருப்பம்போல தொழுகையை
வடிவமைத்தார்கள். அவற்றுக்குள் வேறுபாடுகள் உண்டு என்பதை
அறிவீர்களா?
தொழுகைக்குச் சட்டதிட்டங்கள் கிடையாது. இறைவனை வணங்குதல் என்பதைத் தவிர வேறு விதிகளே கிடையாது என்பதை நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம் அல்லவா?
நல்லது அன்பர் புரட்சிமணி அவர்களே !
Delete//உள்ளதை உள்ளபடி ஆய்வுக்குள்ளாக்கிறேன் ஏற்ப்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.//
நீங்கள் ஆய்வுக்குள்ளாக்கிறேன் என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் ஆய்வுபிரகாரம் நீங்கள் உண்மையை பார்க்கவில்லை.
நீங்கள்தான் தமிழை நாங்கள் வெறுப்பதுபோலும் நீங்கள் விரும்புவதுபோலும் எழுதியுள்ளீர்கள். அனைத்து மொழிகளும் இறைவனுடையதே. அவன் எம்மொழி மூலம் அறிவைதந்தானோ அவ்வாறே ஏற்கவேண்டும். இல்லையேல் முழுமை கிடைக்காது என்பதை புரிந்துக் கொள்வது சிறப்பு.
விளக்கங்களுக்காகக் மொழி பெயர்த்தால் தவறில்லை. அது மொழிபெயர்ப்பாளரின் அறிவு விசாலத்தைப்பொருத்து அதுவரை தெளிவுகள் கிடைக்கும். இறைவனோ எல்லையற்ற விசாலமுடையவன். அவனிடமிருந்து வரு வார்த்தைகள் அதனின் விளக்கங்கள் எல்லையற்றவையே என எழுதினால் நீங்கள் ஏற்கவில்லை.
தமிழ் ஞானிகள் எழுதிய செய்யுளுக்கு ஒவ்வொரு அறிஞனும் ஒரே விளக்கத்தை எழுதிமுடிக்கவில்லை. சிலர் சில அடிகள், சிலர் பக்கங்கள். ஏன் ? இந்நிலை. ஒரு குறுகிய எல்லைக்குட்பட்ட மனிதனின் செய்யுளுக்கு எழுதும் விளக்கத்தில் இத்தனை விளக்கங்கள் வரும்பொழுது எல்லையற்றவனின் வார்த்தைகளுக்கு எல்லைவைக்கமுடியாது என்பதை உங்கள் எழுத்துப்படி ஆய்வுக் கண்களுக்கு ஏன் ? விசாலம் தெரியவில்லை.
நீங்கள் எழுதியபடி நான் எப்படி நீங்கள் தமிழை பிடித்து தொங்குகிறீர்கள் என்று எழுதமுடியும். யாரும் எதயையும் பிடித்து தொங்கவில்லை மாறாக பிடிவாதத்தை.....
உங்கள் கருத்து பரிமாற்ற தடம் மாறுகிறது.
சகோ.புரட்சிமணி,
ReplyDeleteநல்ல கேள்வி. முன்பெல்லாம் இலங்கையில் மட்டக்களப்பில் தூய தமிழ்ப்பெயர்கள் தான் கொண்டிருந்தனர். மாப்பிள்ளை மரைக்காயர், அல்லாப்பிச்சை, நாகூரான் போன்ற பெயர்கள். ஆனால் அரபுமயமாக்கலால் பெயர்கள் முழுவதும் அரபு மயமாக்கப்பட்டு விட்டன. கிறித்தவ தமிழர்களிடம் மட்டுமல்ல, இந்து தமிழர்களிடமும் தமிழில் பெயர் வைக்காத குறை உண்டு, இலங்கைத் தமிழர்களிடம் இது மிகவும் மோசம். என்னுடைய பெயர் கூட சமஸ்கிருதம் தான். :)
வணக்கம் சகோ வியாசன், :)
ReplyDeleteபதிவர் இசுலாமியர் என்பதனால்தான் நான் இசுலாமை சுட்டிக்காட்டினேன் மற்றபடி நீங்கள் சொல்வது போல் மதத்தின் பெயரால், ஆங்கில மோகத்தால் தமிழை அழிப்பதில் எல்லா மதத்தினரும் மும்மூரமாக உள்ளனர்
தமிழ் வளர்க்க தமிழில் திரைப்படங்கள் பெயர் வைத்தால் வரிச்சலுகையாம். தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லி சட்டம் போட நம்மவர்களுக்கு மனது இல்லை.
நன்றி
இன்று ஆங்கிலம் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணம், அந்தந்த இடத்து மக்கள் மொழியின் அதிக பழக்கவழக்க சொற்களையும், அது ஏற்று அரவனைத்ததால் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்டது.
ReplyDeleteஅந்த மாதரி தன்மை, பெரும்பான்மை தமிழர்கள், தனது மொழிக்கு ஏற்பட ஒத்துபோவதில்லை. அது பிறந்த மண்ணின் குணமோ எனவோ தெரியவில்லை.
ஒரு சொல் ஒரு கருத்தை தாங்கி வந்தாலும் சொல்பவர்கள் அதில் தன் உணர்வை நிரப்பி உச்சரிக்கும் தன்மையில் அது விருப்பமானதாகவும், வெறுப்பை ஏற்ப்படுத்துபவையாகவும் ஆகிவிடுகிறது.
சிலர் செல்லாமாகவும் சொல்ல, அவர் அடிக்கடி உபயோகப்படுத்தும் திட்டும் சொல்லையே பயன்படுத்துவார். கோபத்திலும் அதே சொல்லை சொல்வார். இவர்கள் மொழியில் அதிக சொற்களை அறிந்திராமையால் குறிப்பிட்ட சொல்லையே அடிக்கடி தன கருத்துக்களுக்கு உபயோகப்படுத்துவார்.
அதுபோல் இந்த 'பாய்' அன்பாக அழைக்கும்பொழுது மனதுக்கு இனியாக இருக்கும். சிலசமயம் அவர்கள் கேலியாக அழைகும்போது வெறுப்பாகத்தான் இருக்கும்.
சகோ புரட்சிமணி,
ReplyDeleteஉங்கள் பெயரும் தமிழ்ப்பெயர் இல்லை. புரட்சி என்ற சொல்லை வேண்டுமானல் தமிழ்ச்சொல் என்று கொள்ளலாம். அது பாரதி கண்டுபிடித்தச் சொல் என்று அறிகிறேன்.
பெரியாரை ஒரு குழந்தைக்குப் பெயர் இடச் சொன்னபோது அவர் காமராஜர் என்று பெயர் வைத்தார். அது தமிழ்ப்பெயர் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.
பெயர் என்பது அடையாளப் படுத்துவதற்காக வந்தது. அதில் மத அடையாளம் தோன்றி மூவாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. அது மெல்ல மெல்லத்தான் மாறும்.
இன்றெல்லாம் ஓசை நயம்தான் பெயருக்கு முக்கியமாகிவிட்டது. ஓசை நயத்தோடு பொருளே இல்லாத பெயர்களே இன்று அதிகம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ..
ReplyDeleteநந்திகேஸ்வரன் ,ஞான சேகரன் ,வீரப்பன் ,என்று
எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தேன் .ஐம்பது வயதை
அடைந்த நான் இப்போது அவர்களை சந்தித்தால் ..டேய்..சித்தீக்
என்று உரிமையாய்அழைப்பார்களா ..என்ன பாய் என்பார்களா ..?
அவர்கள் இருக்கும் நிலை பொறுத்தே ...?அமையும்
சில நண்பர்கள் கேட்கும் கேள்வி ..தொழுகையை தமிழில்
நடத்துங்கள் ..தொழுகை அழைப்பை தமிழில் அழையுங்கள்
என்பது எங்களது நம்பிக்கை மீது நீங்கள் வீசும் கடும் கணை ..
அன்பை கேட்டார் .அன்புடன் புகாரி ...ஆதரிக்கிறேன்
Interesting to read all comments
ReplyDelete//பெரியாரை ஒரு குழந்தைக்குப் பெயர் இடச் சொன்னபோது அவர் காமராஜர் என்று பெயர் வைத்தார். அது தமிழ்ப்பெயர் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.
ReplyDelete//
பெரியாரே ஒரு தமிழன் அல்ல. அவர் எதற்காக தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும். :)))
கருத்துப்பரிமாற்ற தடத்தைவிட்டு தடம் மாறவேண்டாம்.
Deleteவியாசன்,
Deleteதமிழர் என்பதற்கு நீங்கள் தரும் வரையறை என்ன?
பெரியாரை ஏன் தமிழர் இல்லை என்கிறீர்கள்?
//தமிழர் என்பதற்கு நீங்கள் தரும் வரையறை என்ன?//
Deleteஉலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் பேசித் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியவர்களை தமது முன்னோர்களாகக் கொண்டவர்களும், வீட்டிலும் வெளியிலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழன் என்ற அடையாளத்தை மட்டுமே தமது முதன்மையான இன அடையாளமாக கொண்டவர்களும் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் தமிழர்களே. ஆனால் வெளியில் தமிழும் வீட்டில் வேறு மொழியைப் பேசுகிறவர்கள் தமிழ்நாட்டில் எத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் தமிழர்களல்ல, அவர்களுக்கு தமிழர் என்பதை விட இன்னொரு மொழிவாரி இன அடையாளம் இருப்பதால் அவர்கள் தமிழர்கள் அல்ல. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் குழந்தைகள் தமிழைப் பேசாது விட்டாலும் கூட அவர்கள் தமிழர்களே ஏனென்றால் அவர்களின் இன அடையாளம் தமிழர் என்பது மட்டுமே.
பெரியாரை ஏன் தமிழர் இல்லை என்கிறீர்கள்?
பெரியாரின் முன்னோர்கள் கன்னடர்கள் அதனால் அவர் தமிழரல்ல. தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.
அன்பர் வியாசர் மொழியை மத/மார்க்கமாக பார்கிறார் போலும்.
Delete>>>>வீட்டிலும் வெளியிலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழன் என்ற அடையாளத்தை மட்டுமே தமது முதன்மையான இன அடையாளமாக கொண்டவர்களும் <<<<
Delete>>>>ஆனால் வெளியில் தமிழும் வீட்டில் வேறு மொழியைப் பேசுகிறவர்கள் தமிழ்நாட்டில் எத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் தமிழர்களல்ல, <<<<
>>>>>ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் குழந்தைகள் தமிழைப் பேசாது விட்டாலும் கூட அவர்கள் தமிழர்களே<<<<<<
>>>>பெரியாரின் முன்னோர்கள் கன்னடர்கள் அதனால் அவர் தமிழரல்ல.<<<<
அடடா வியசன்,
உங்களிடம்தான் எத்தனை எத்தனை முரண்பாடு. நீங்கள் எழுதியவற்றை நீங்களே ஒரு முறை வாசியுங்கள்.
தமிழன் என்பதையே தன் அடையாளமாகக் கொண்டவர் பெரியார். உங்களுக்குப் பெரியார் மீது என்ன துவேசமோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அவர் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் செய்த தொண்டு கோடி ஆண்டுகள் ஆனாலும் மறக்கப்பட முடியாதது மறுக்கப்பட முடியாதது.
வீட்டில் வேறு மொழி பேசுவோர் தமிழரல்ல என்கிறீர்கள். இன்று கனடாவில் வீட்டில் ஆங்கிலம்தான் பேசுகிறார்கள் பெரும்--பாழான ஈழத் தமிழர்களும் மலேயத் தமிழர்களும் சிங்கைத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும். அவர்கள் எல்லாம் தமிழர்கள்தாம் என்கிறீர்கள்.
நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் குழப்பினாலும் என் போன்றோர் குழம்ப வழியில்லை.
எல்லோருமே ஒரு காலத்தில் வந்தேறிகள்தாம். பண்டைக்காலம் என்று எடுத்தால் அந்த ஆதி நாட்களைக் கண்டால் அதிலும் கலப்படங்கள் உண்டு.
----------------------------
ஒரு தமிழச்சி ஈன்றாள் என்பதாலேயே எவனும் தமிழன் அல்லன்.
தமிழனாய் வாழ்வோன் எவனோ..... அவனே தமிழன்.
----------------------------
இவ்வரிகளை நான் கவியரங்க மேடைகளில் உச்சக் குரலில் ஒலித்து பல கைத்தட்டல்கள் வாங்கி இருக்கிறேன்.
பெரியார் தமிழனாய் வாழ்ந்த சமுதாயச் சீர்திருத்தச் செம்மல்.
தொழுகை மற்றும் தொழுகை அழைப்பு அறபு மொழியில் இருப்பதன் காரணம்:
ReplyDeleteபார் முழுவதும் பரவி வரும் இஸ்லாம் ஒரே மொழியில் தொழுகை அழைப்பு மற்றும் தொழுகையை அமைப்பதும், ஒரே திசையை நோக்கித் தொழுதலும் ஓர் ஒன்றுபட்ட ஒருமைப்பாட்டின் சின்னமாகும்.
1) அமெரிக்கர் இந்தியா வந்தாலும், இந்தியர் அமெரிக்கா சென்றாலும் தொழுகை அழைப்பு ஒரே மொழியில் வேதம் இறங்கிய மொழியில் ; மார்க்கம் கற்பிக்கப்பட்ட மொழியில் இருக்கும் பொழுது எளிதாகப் புரிந்து கொள்வர்; அஃது ஒரு தொழுகை அழைப்புதான் என்று(எப்படி ஜனகன என்னும் பாடல் வங்காளி மொழியானாலும் அது நம் தேசீய கீதம் தான் என்று எல்லாம் மொழியியிலும் உள்ளடக்கிய இந்தியரால் உணரமுடியுமோ அவ்வாறு)
2) அதுவே போல், இறைமறையின் வசனங்கள் அதன் இறக்கி வைக்கப்பட்ட மூல மொழியில் உச்சரித்து வழிபாடு என்னும் தொழுகையை நிறைவு செய்வதிலும், பார் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் ஓர் ஒன்றுபட்ட நிலையில் உச்சரிப்புடன் ஓதி அக்கடமையை நிறைவு செய்ய எளிதாகும் (அதே வேளையில் தொழுகையின் முறைகள் முடிந்த பின்னர், துஆ என்னுன் கையேந்தி இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனைகள் அவரவர் தாய்மொழியில் கேட்கலாம்)
3) ஒரு பள்ளியில் தொழும் நிலையில் எல்லாரும் ஒரு திசை நோக்கி நிற்பதும் ஓர் அழகிய அணிவகுப்பாகும். ஆளுக்கொரு திசையில் நோக்கினால் கவனச்சிதறல் உண்டாகும்; ஓர்மையும் ஒற்றுமையும் உண்டாக்கும் ஓர் அற்புத ஏற்பாடு ஆகும் *(அதனால் இறைவன் ஒரு திசையில் இருக்கின்றான் என்று நினைத்தால் அதுவும் தவறென்று உணர்க)
எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாம், அதன் சட்டதிட்டங்கள் என்னும் ஷரிஅ எதுவும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல; முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் தானாக உருவாக்கியதும் இல்லை; உருவாக்கும் திறனுக்குரிய கல்வியாளாரகவும் அவர்களை இறைவன் வைத்திருக்காமல் தனது நேரடி கண்காணிப்பில் அவர்கட்கு வஹீ என்னும் இறைச் செய்திகளாய்க் கோத்து வந்தவைகள் தான் இச்சட்ட திட்டங்கள்; இதில் குறை காண எந்த மனித சக்திக்கும் இயலாத ஒன்று.
This comment has been removed by the author.
Delete>>>>இஸ்லாம், அதன் சட்டதிட்டங்கள் என்னும் ஷரிஅ எதுவும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல; <<<<<
Deleteஅன்புக் கலாம்,
சரிஅ என்று எதனைக் கூறுகிறீர்கள்?
குர்-ஆனின் வசனங்களைக் கூறினால் ஏற்பேன். ஆனால் அது முழுமையான சட்டதிட்டங்களைத் தரவில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.
இஸ்லாம் என்ற மார்க்கம் அரசியல் ஆனபோது, ஆட்சி செய்யும் மன்னர்களைக் கொண்டபோது, சரிஅ என்று பல சட்டங்களை வகுத்துக்கொண்டார்கள்.
கேட்டால் ஹதீதுகள் வரலாறுகள் என்று பல பொய்க்காரணங்களைக் கூறினார்கள்.
குர்-ஆனில் உள்ளவை மார்க்கக் கட்டளைகள் அவை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்று நடக்க வேண்டியவை. அவை தவிர்த்த எவற்றையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஒரு முஸ்லிமிற்கு இல்லை.
ஹதீது என்ற பெயரில் பலப்பல லட்சம் கட்டுகதைகள் மண்டிக் கொண்டே இருந்தன. அவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டி இஸ்லாம் தொடங்கி 300 ஆண்டுகளுக்குப் பின் சல்லடையால் சலித்துப் பார்த்தார்கள். சலித்தவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் பல உண்டு. ஒருவழியாய் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு 90 சதவிகித ஹதீதுகளை வெட்டி எறிந்தார்கள்.
தேர்வு செய்தவையும் அன்றைய மனித மூளைக்கு ஏற்ப நடந்த செயலே தவிர இறைவனின் தேர்வு அல்ல.
முகம்மது நபி பெருமானாரோ, அவர் மறைவுக்குபின் வந்த நான்கு கலீபாக்களோ ஹதீதுகளை ஆதரிக்கவில்லை. அது வரலாறு.
திருக்குர்ஆன் அதிலிருந்துதான் அனைத்து சட்டதிட்டங்களை அண்ணலார்(ஸல்)வகுத்துத்தந்தார்கள்.
Deleteஎது வரலாறு ???
தவறான புத்தகங்களை படித்துவிட்டு அதன் வழிகாட்டுதலை வெளிபடுத்துவது சிறப்பன்று.
உடனே எது சரியான புத்தகம் என உங்கள் பணியில் கேள்விகள் எழும். கேள்விகளுக்கு எல்லையில்லை இதுபோன்ற புத்தகங்களை படித்தால். வாழ்வை தேர்ந்தெடுக்க தெரிந்தவர்களுக்கு அடுத்தவர் வழிகாட்டுதல் ஒரு பாரமாக உணர்வார்கள். அவரவர் வகுத்துக்கொண்ட நிலைக்கு அவனின் விதி.
///எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாம், அதன் சட்டதிட்டங்கள் என்னும் ஷரிஅ எதுவும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல; முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் தானாக உருவாக்கியதும் இல்லை; உருவாக்கும் திறனுக்குரிய கல்வியாளாரகவும் அவர்களை இறைவன் வைத்திருக்காமல் தனது நேரடி கண்காணிப்பில் அவர்கட்கு வஹீ என்னும் இறைச் செய்திகளாய்க் கோத்து வந்தவைகள் தான் இச்சட்ட திட்டங்கள்; இதில் குறை காண எந்த மனித சக்திக்கும் இயலாத ஒன்று.//
ReplyDelete@ABULKALAM BIN SHAICK ABDUL KADER,
Mehdi Hasan என்ற பிரிட்டிஷ் முஸ்லீம் Journalistஐப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களோ எனக்குத் தெரியாது. அண்மையில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் நடந்த Islam Is A Peaceful Religion - Oxford Union விவாதத்தில் “Sharia laws does NOT exist” அதாவது ஷரிஅ சட்டங்கள் என்று ஒன்று கிடையாது என்று உலகம் முழுவதற்கும் அறிவித்தார்.
ஆனால் நீங்கள் என்னடாவென்றால் ஷரிஅ கடவுளிடமிருந்து வந்தது அதில் யாரும் மாற்றம் செய்யவோ, குறைகாணவோ முடியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. அப்படியானால் இந்த விடயத்தில் Mehdi Hasan பொய் சொல்கிறாரா?
Why, then, are so many of them apparently obsessed with sharia, or "Islamic" law? "There is no single code that can be identified as 'the' sharia".
“There is no Muslim equivalent of the Ten Commandments codifying Islamic law. Nor does the Quran pretend to be an all-encompassing legal or penal code. Sharia, therefore, is CONSTANTLY EVOLVING, with different Islamic scholars - Sunni/Shia, conservative/liberal, Arab/ non-Arab - offering differing interpretations.”
Mehdi Hasan ஐப் பற்றி இங்கு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Mehdi_Hasan
குர் ஆனின் சட்டம் என்பதை உங்கட்குப் புரிந்த மற்றும் பரவலாய் விளங்கி வைத்திருக்கும் “ஷர் அ” என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். குரானின் சட்டம் என்பதே சரியானதாகும். குர் ஆனின் மொழிபெயர்ப்புகளில் வேறுபாடுகள் இருப்பதையே மெஹிதி ஹஸன் சொல்லுகிறார். ஆனால் மூல மொழியான அறபு மொழியில் இருக்கும் குர் ஆன் அப்படியே உள்ளது;ஓர் எழுத்தும் மாறாமல். மொழி மாற்றம் செய்ய்ம்பொழுது ஏற்படும் அவரவர் புரிந்துணர்வின் அடிப்படையில் உண்டாகும் கருத்து வேறுபாடுகளைத் தான் அவர் சொல்லுகிறார். குர் ஆனை நேரடியாக விளங்க முற்பொடும் பொழுது உண்டாகும் ஐயங்கட்கு ஹதீஸ் என்னும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை - வாக்குரைகள் வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டிலிருந்தும் நாம் பெறும் சட்டம் மற்றும் வாழ்க்கை நெறியே ஷரிஅ எனப்படும்.
ReplyDelete//குர் ஆனின் சட்டம் என்பதை உங்கட்குப் புரிந்த மற்றும் பரவலாய் விளங்கி வைத்திருக்கும் “ஷர் அ” என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். குரானின் சட்டம் என்பதே சரியானதாகும்.//
Deleteநானும் குர்ஆனை வாசித்திருக்கிறேன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன், இங்கு என்னுடைய மேசையில் Millat Book Centre, Sant Nagar, New Delhi ஆல் வெளியிடப்பட்ட The Quran - Translation இருக்கிறது.
அதில் எங்கேயுமே, கையையும், காலையும் வெட்டும் ஷாரியா சட்டங்களையோ அல்லது முஸ்லீம்கள் அரபுக்களின் உடைகளை அணிய வேண்டுமென்றோ இல்லை. இருந்தால் எத்தனையாவது Verse என்று சொல்லுங்கள் பார்க்கிறேன்.
//குர் ஆனை நேரடியாக விளங்க முற்பொடும் பொழுது உண்டாகும் ஐயங்கட்கு ஹதீஸ் என்னும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை - வாக்குரைகள் வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டிலிருந்தும் நாம் பெறும் சட்டம் மற்றும் வாழ்க்கை நெறியே ஷரிஅ எனப்படும்.//
ஆனால் அப்படியொரு ஷாரியாவே கிடையாது என்கிறார் Mehdi Hasan, ஆனால் நீங்கள் கூறுவது போல் ...... இரண்டிலிருந்தும் நாம் பெறும் சட்டம் மற்றும் வாழ்க்கை நெறியே ஷரிஅ எனப்படும்... என்றால் அது...Sharia, therefore, is CONSTANTLY EVOLVING, with different Islamic scholars - Sunni/Shia, conservative/liberal, Arab/ non-Arab - offering differing interpretations.” என்கின்றனர் சிலர்.
ஆனால் இதற்கு முன்னைய பதிலில் - இவையெல்லாம் கடவுளிடமிருந்து நேரடியாக வந்தவை, “இதில் குறை காண எந்த மனித சக்திக்கும் இயலாத ஒன்று” என்றல்லவா நீங்கள் கூறினீர்கள். அதேவேளையில் ஒவ்வொருவரினதும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஷாரியாவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள் , அதனால் ஒவ்வொரு சமூகத்தினரும், நாட்டவரும், தமது புரிந்துணர்வுக்கேற்றவாறு ஷரிஅ வுக்குப் பொருள் கற்பித்துக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளலாமா?
//ஆனால் இதற்கு முன்னைய பதிலில் - இவையெல்லாம் கடவுளிடமிருந்து நேரடியாக வந்தவை, “இதில் குறை காண எந்த மனித சக்திக்கும் இயலாத ஒன்று” என்றல்லவா நீங்கள் கூறினீர்கள்.//
Deleteஅவர் சரியாகத்தான் எழுதியுள்ளார்.யாரும் குறைகானமுடியாது. யாரால் என்றால் அதில் ஆழச்சிந்திப்பவர்கள் மட்டும். குறைகாணும் நோக்கில் கான்பவருக்கன்று.
//அதேவேளையில் ஒவ்வொருவரினதும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஷாரியாவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள் ,//
அவரவர் தெளிவு விசலத்தைப்பொறுத்து. இறைநெருக்கத்தை பெற்றுவார் விசாலம் அவரின் நெருங்குதல் அளவைப்பொறுத்து அதிக தெளிவுகள் கிடைக்கும். அதனால்தான் அன்றே நபிகள்(ஸல்) அவர்கள் விளக்கங்களாக வாழ்ந்தும் சொல்லிச்சென்றுள்ளார்கள்.
//அதனால் ஒவ்வொரு சமூகத்தினரும், நாட்டவரும், தமது புரிந்துணர்வுக்கேற்றவாறு ஷரிஅ வுக்குப் பொருள் கற்பித்துக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளலாமா?//
கூடாது. உண்மையின் மையத்தைவிட்டு நழுவிவிடக்கூடாது.
சகோ அன்புடன் புகாரி,
Deleteநீங்கள் நபி தாஸ்,கலாம் அவர்களிடம் கேட்ட கேள்விகள் நீங்கள் நற்சிந்தனையாளர் என்று காட்டுகிறது. நீங்களும் இசுலாமை ஷரியா,ஹதீது அளவில் சீர்த்திருத்துவீர்கள் என நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது..இறைவன் உங்களுக்கு துணை நிற்ப்பானாக.
சகோ நபி தாஸ்,
தன் மதத்தை பிறர் குறை கூறுவதை முதலில் ஏற்ப்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும். நீங்கள் சற்று அமைதியாக சிந்தித்து பார்த்தால் உண்மை புரியும். தவறு இருந்தால் நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம்.
//இறைவனோ எல்லையற்ற விசாலமுடையவன். அவனிடமிருந்து வரு வார்த்தைகள் அதனின் விளக்கங்கள் எல்லையற்றவையே என எழுதினால் நீங்கள் ஏற்கவில்லை.//
எந்த ஒரு நூலையும் இறைவனின் வார்த்தைகளாக நான் ஏற்ப்பதில்லை. அதே நேரத்தில் அது அது அவர் அவர்களது விருப்பம்...நம்பிக்கை. சில இடங்களில் நம்பிக்கை திணிக்கப்படும் பொழுது அது கேள்விக்குள்ளாக்கப்படும்.
//தமிழ் ஞானிகள் எழுதிய செய்யுளுக்கு ஒவ்வொரு அறிஞனும் ஒரே விளக்கத்தை எழுதிமுடிக்கவில்லை. சிலர் சில அடிகள், சிலர் பக்கங்கள். ஏன் ? //
அன்று அவர்கள் எந்த சொல்லுக்கு எந்த அர்த்தத்தில் எழுதினார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. மேலும் அன்றைய சிலபல சொற்கள் அதே அர்த்தத்தில் புழக்கத்திலும் இல்லை.
குரான் இறைவசனங்கள் அதை அரபியில் தான் படிக்க வேண்டும் என்பதை நான் தினிப்பாகவே கருதுகிறேன்.
அதேநேரத்தில் உங்களை குறை கூறுவதும் என் நோக்கமல்ல. இந்த விடயங்களை பற்றி நான் பேசுவதை விட பிற இசுலாமியர்கள் பேசுவதே நலம்.
//நீங்கள்தான் தமிழை நாங்கள் வெறுப்பதுபோலும் நீங்கள் விரும்புவதுபோலும் எழுதியுள்ளீர்கள்//
இது என்னுடைய நோக்கமல்ல..
//அவன் எம்மொழி மூலம் அறிவைதந்தானோ அவ்வாறே ஏற்கவேண்டும். இல்லையேல் முழுமை கிடைக்காது என்பதை புரிந்துக் கொள்வது சிறப்பு. //
பிற மொழி குரான்களை என்ன செய்யலாம்?. நீங்கள் அதீத பக்தியில் உள்ளதாக தெரிகிறது
//நீங்கள் எழுதியபடி நான் எப்படி நீங்கள் தமிழை பிடித்து தொங்குகிறீர்கள் என்று எழுதமுடியும். யாரும் எதயையும் பிடித்து தொங்கவில்லை மாறாக பிடிவாதத்தை.....//
"மாறாக பிடிவாதத்தை" நல்ல புரிதல்...இது பற்றினாலும் பக்தியினாலும் கூட வரலாம்.
என்னிடம் பிடிவாதம் இருந்தால் தாரளமாக கூறுங்கள் நான் அதை திருத்திக்கொள்கிறேன்.
சிலபல விடயங்களை பிடிவாதத்தைவிட அறியாமையால்தான் செய்கிறோம் என நினைக்கின்றேன்.
//உங்கள் கருத்து பரிமாற்ற தடம் மாறுகிறது.//
இது நிச்சயமாக என் நோக்கமல்ல.
சில உண்மைகளை கூறும்பொழுது அது பிறர் மனதை புண்படுத்தவே செய்கிறது.
எனது கருத்துக்கள் உங்கள் (பிற சகோக்களுக்கும் தான்) மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
இறைவன் உங்கள் பார்வையை விசாலமாக்கட்டும்....உண்மையை விளங்கச் செய்யட்டும்
நன்றி
பிறப்பால் தான் ஒருவன் தமிழனாக வேண்டும் ஆனால் இன்று இங்குள்ள 90 % பேரும் அயலவரே. ஒருக்காலத்தில் ஒவ்வொரு மொழியைத்தான் வாழும் இடத்திற்கு ஏற்றார் போல பேசினோம். ஈழத்தில் கூட 10-ம் நூற்றாண்டுக்கு முன் பலரும் ஈழ பிராகிருதமே பேசினர், ஒரு சில தமிழ் வாணிகர்களை தவிர ஏனையோர் பேசியது ஈழ பிராகிருதம். பின்னர் அதுவே அரசியல் குடியேற்றம் மற்றும் பிற காரணிகளால் சிங்களம் - ஈழ தமிழ் என உருவெடுத்தது. கோரமண்டலத்து மீனவர் ஈழம் சென்று சிங்கள கராவாராக மாறிவிட்டனர், 50 லட்சம் பேர் சிங்களவரின் பூர்விகம் அப்பட்டமான தமிழ் நாடு. மட்டகளப்பின் முஸ்லிம், தமிழர்களோ மலபார் கரையில் இருந்து போனோர். அவர் தம் பேசியது ஆதி மலையாளம் அல்லது மலையாளத் தமிழ் என்னும் வட்டார வழக்கு. யாழ் வடமராட்சியில் பலருக்கு தொண்டை நாடு, தென் ஆந்திர பூர்விகம் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆக தாம் தமிழன் சுத்த தமிழன் என எவனும் கூறுவதற்கில்லை. ஏன் சோழர்களே முழுத் தமிழர் இல்லை. தெலுங்கு, கன்னட, கலிங்க கலப்புடையோர். ராஜ ராஜ சோழனின் தந்தை வழி பேசியது கன்னடம். ஆக பெரியார் தமிழன் இல்லை என ஈழத்தமிழ் மற்றும் தமிழ் தேசிய சாதிக் கட்சியினர் மடமையை என்ன சொல்ல. எந்த மொழியில் முதன்மையாக சிந்தித்து பேசி எழுதி தம்மை அடையாளப்படுத்துகின்றாரோ அவர் அம் மொழியினரே. தென்னிந்தியாவுக்கு ஒரு தனி வாழ்வியல் குணம் கலாச்சாரம் உண்டு ஆகையால் மொழி, மதம், நாடு கடந்து நாம் தென்னிந்தியரே அவ்வளவே.
ReplyDeleteஇலங்கை இந்தியாவின் ஒரு பகுதிதான். இலங்கையர் எல்லோரும் பண்டைய இந்தியர்களே. இது பெருமைக்குரிய விசயமே அன்றி சிறுமைப்படத் தேவை இல்லை.
Deleteதமிழ்நாட்டின் தென் முனைப் பகுதிகள் கேரளப் பகுதிகள் இலங்கையின் நதி மூலம் ரிஷி மூலம் எனக் கொள்ளலாம்.
கூடவே ஒரிசா மாநிலத்தவரும் வந்து குவிந்ததாய் வரலாறு கேட்டேன்.
அன்புடன் புகாரி, இஸ்லாம் குறித்து எடுத்து வைக்கும் கருத்துக்கள் நியாயமானவை, பரந்துபட்டது. பரந்த எண்ணத்தில் சிந்தித்து வரலாற்றை திரிக்காது, புரிதலுடன் அவர் தம் மதக் கருத்தையும் முன் வைக்கும் அறிவும் அழகும் வியப்பளிக்கின்றன. :)
ReplyDeleteநன்றி நிரஞ்சன் தம்பி.
ReplyDeleteதம்பியின் பாராட்டு இந்த அன்புடையோனுக்கு ஊக்கம் தருகிறது ;-)
அன்புடன் புகாரி
ReplyDeleteஇங்கிலாந்தின் அரசகுடும்பத்தினர், ஜேர்மன் (House of Saxe-Coburg and Gotha) அரசகுடும்பத்துடன் திருமண உறவு கொண்டிருந்தனர், அதற்காக அவர்கள் ஆங்கிலேயர் அல்ல என்று கருத்தல்ல. அது போல் ராஜ ராஜ சோழனின் ராஜனின் ராஜ குடும்பத்துக்கு வேறு அரச குடும்பத்தோடு திருமணத்தால் தொடர்பிருந்தாலும், அவர்கள் தமிழரசர்களாகத் தான் தமிழ்நாட்டை ஆண்டார்கள். சோழ அரச குடும்பம் தமிழ் மண்ணில் தமிழர்களிடமிருந்து உருவாகியது.. அதனால் அவர்களைத் தமிழர்களாகத் தான் அடையாள்ப் படுத்த வேண்டும். ஒரு ஸ்பானிஸ் அரச குடும்பத்தின் அரசன் ஆங்கிலத் தாய்க்குப் பிறந்தாலும், அவனது இன அடையாளம் ஸ்பானியர் தான்
//எந்த மொழியில் முதன்மையாக சிந்தித்து பேசி எழுதி தம்மை அடையாளப்படுத்துகின்றாரோ அவர் அம் மொழியினரே//
அவருக்கு தமிழன் என்றதை விட தெலுங்கன் அல்லது மலையாளி அல்லது கன்னடன், அல்லது வேறு ஏதாவது, இன்னொரு அடையாளம் வீட்டில் இருந்தால் அவர் நிச்சயமாக தமிழன் அல்ல. அவர் வெறும் தமிழ் பேசுபவன் மட்டும் தான்.
பலரும் கூறுவது போல தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டோரில் இருந்து மதம் மாறியோர் இல்லை. புவியியல் ரீதியாக பல்வேறு அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக மதம் மாறியோர். அதே போல தமிழக முஸ்லிம்களின் தாய் மொழி உருது, அரபி என சிலர் கருதுவதும் சரியல்ல. 12-ம் நூற்றாண்டளவில் அரபு வாணிகர் மூலம் பல வியாபாரிகள், செட்டிகள், மரைக்காயர்கள் இஸ்லாமில் இணைந்தனர். இவர்கள் இன்றளவும் கடற்கரைச் சார்ந்த பகுதிகளான நாகூர், நாகை, காயல்பட்டினம் முதல் வட கேரளம் வரை உள்ளனர். அதே காலக்கட்டத்தில் முக்குவர்கள் பலரும் முஸ்லிம்கள் ஆகினர். இவர்கள் பின்னர் இலங்கைக்கும் இடம் பெயர்ந்தனர். முக்குவப் பெண்களை தொடர்ந்து மணந்து வந்தோரை மாப்பிள்ளை எனவும், தாய்வழி சமூக முறையையும் பின்பற்றினர். பின்னர் விஜய நகர காலத்தில், பிற்கால பாண்டியர் காலத்தில் வடக்கில் இருந்து வந்த படையணி, வியாபாரிகள் என சிலர் இங்கு குடியேறி தமிழ் முஸ்லிம் ஆனர். பலர் மதுரை, திண்டுக்கலில் காணலாம். பல சாணார், தலித்கள் போன்றோர் சாதிக் கொடுமையால் மதம் மாறினர் அவர்கள் தென் கேரளம், தென் தமிழகத்தில், இலங்கையிலும் காணலாம். பின்னர் வேளாளர், முக்குலத்தோர், போன்ற உழவு சார்ந்தவர்கள் சிலரும் இஸ்லாமில் இணைந்தனர். இவர்கள் கடற்கரைக்கு தொலைவாய் மருதம் நிலம் சார் கிராமங்களில் அய்யம்பேட்டை, ராம்னாடு, காரைக்குடி, நெல்லை, தஞ்சை, திருவனந்தபுரம், பத்தணம்திட்டை, போன்ற பகுதிகளில் உள்ளனர். நவாப், ஐதர் அலி என உருது பேசும் தக்காணி முஸ்லிம்கள் ஆற்காடு, ஆரணி, வாணியம்பாடி, என பல பகுதிகளில் குடியேறினர். ஆக இஸ்லாமியர்கள் பல சமூக குழுமலே. தென்னாடு முழுதும் தொடர்புடையோர். குற்றம் இருப்பின் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்க, பொறுக்க.
ReplyDeleteபலப்பல பிராமணர்கள் முஸ்லிம்களாய் ஆகியுள்ளனர் என்று ஒரு ஆய்வாளர் ஆதரங்களோடு அறிக்கை விட்டிருக்கிறார். அவர் ஹைதராபாத் கல்லூரி ஒன்றின் பேராசிரியர்.
Deleteஇஸ்லாத்தில் பிராமணர்களும் சேர்ந்தார்கள், தாழ்த்தப்பட்டோரும் சேர்ந்தார்கள், இடைப்பட்டோரும் சேர்ந்தார்கள். சேர்ந்தபின் எல்லோரும் தோளோடு தோள் சேர்ந்து சகோதரர்களாய் ஆனார்கள்.
அது இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான அம்சம்களுள் ஒன்று
அந்தத் தீண்டாமை ஒழிப்பை எந்த மார்க்கம் செய்கிறதோ, வேற்றுமை எண்ணங்களை எந்த மார்க்கம் விடுகிறதோ, அன்பு கருணை என்று எந்த மார்க்கம் மனிதர்களை அரவணைக்கிறதோ அது உயர்ந்த மார்க்கம் என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை
அன்பின் நிரஞ்சன் தம்பி அவர்களின் ஆய்வுக்குரிய விடயங்கள் அனைத்தும் உண்மையே; இக்கருத்துகளை முழுமனதுடன் ஏற்கிறேன். ஆம். எம் மொழி தாய்த் தமிழ்தான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை;இந்தியா எங்கள் தாய்நாடு; இஸ்லாம் எங்கள் வழிபாடு; இன்பத்தமிழ் எங்கள் சொல்லாடல்!
Delete>>>>>>ஆம். எம் மொழி தாய்த் தமிழ்தான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை;இந்தியா எங்கள் தாய்நாடு; இஸ்லாம் எங்கள் வழிபாடு<<<<<
Deleteவாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிஞர் கலாம்
ஒரு மரத்துக்கு மட்டும் ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு மனிதனுக்கும் ஆயிரம் வேர்கள்
வாய்மொழி, வட்டாரமொழி, தாய்மொழி, மரபணு, மரபு, இனம், குடும்பம், மார்க்கம், தெரு, பிறந்த ஊர், வளர்ந்த ஊர், படித்த ஊர், வாழ்ந்த ஊர், தாய்நாடு, புலம்பெயர் நாடு, உலகம்.... இன்னும் இன்னுமாய்
அத்தனையும் நெஞ்சு விம்மிப் பெருமைப்படத் தகுந்தன
ஏதும் குறைவும் இல்லை ஏதும் உயர்வும் இல்லை
அனைத்து வேர்களாலும் செழித்து வாழ்பவனே மனிதன்
//நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் குழப்பினாலும் என் போன்றோர் குழம்ப வழியில்லை.//
ReplyDeleteசகோ.புகாரி,
எனக்கு குழப்பமில்லை, குழப்பம் உங்களுக்குத் தான், மீண்டும படித்துப் பாருங்கள். :)
ஈழத் தமிழர்களும் மலேயத் தமிழர்களும் சிங்கைத் தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் வீட்டில் தமிழ் பேசாது விட்டாலும், அவர்களின் இன அடையாளம் தமிழர் மட்டும் தான் என அவர்கள் தம்மை அடையாளப்படுத்தினால் எவர்கள் தமிழர்கள் தான். உதாரணமாக, இலங்கை முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் அவர்கள் தமிழர்கள் அல்ல ஏனென்றால் அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. இப்பொழுதாவது உங்களுக்கு புரிந்திருக்குமென நம்புகிறேன்.
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்கள்தாம். இலங்கையின் அரசியல் அவர்களை அப்படிச் சொல்ல வைத்திருக்கிறது. அதோடு தமிழன் என்பதை ஒரு மதம் போன்றும் சாதி போன்றும் ஈழத்தமிழர்கள் பார்க்கிறீர்கள். அது ஒரு மொழிசார்ந்த இனம் என்பதை மறந்துவிட்டீர்கள்.
Deleteஈழத்தமிழன் தமிழன் மலேசியத் தமிழன் சிங்கைத் தமிழன் கனடாத் தமிழன் என்பதெல்லாம் இடம் சார்ந்த பாகுபாடுமட்டுமே
மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று கூறுவீர்களா?
கயானா தமிழர்களின் நிலை என்ன?
Delete//இலங்கை முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்கள்தாம்//
Deleteஇப்படி உங்களுக்குத் தெரிந்த இலங்கை முஸ்லீமிடம் கூறிப்பாருங்கள். தயவு செய்து துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். :))
இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் தமிழ் பேசும் முஸ்லீம்களளே தவிர தமிழ் முஸ்லீம்கள் அல்ல.
கயானா தமிழர்கள் வேண்டுமென்று தமது தமிழடையாளத்தைக் கைவிடவில்லை, அவர்கள் வாழ்ந்த நிலை அப்படி. அவர்கள் இப்பொழுது தமிழே பேசாது விட்டாலும் கூட, தமது முன்னோர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தினால் அவர்கள் தமிழர்கள் தான். அப்படி தமிழ் முன்னோர்களைக் கொண்ட ஒரு Trinidadian Friend ஐ தமிழ்நாட்டைச் சுற்றிப்பார்க்க அழைத்துக் கொண்டு வந்து, அவர் தமிழ்நாட்டில் பல இடங்களில், உதாரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலில், உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியதை , நேரில் பார்த்தவன் நான். அதனால் கயானா தமிழர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தினால் அவர்கள் தமிழர்கள் தான்.
//மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று கூறுவீர்களா?//
Deleteஅவர்களும் தமிழர்கள் தான் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமுமுமில்லை. :)
//தமிழன் என்பதையே தன் அடையாளமாகக் கொண்டவர் பெரியார். உங்களுக்குப் பெரியார் மீது என்ன துவேசமோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அவர் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் செய்த தொண்டு கோடி ஆண்டுகள் ஆனாலும் மறக்கப்பட முடியாதது மறுக்கப்பட முடியாதது.//
ReplyDeleteஎனக்கு பெரியாரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்கள் நிறைய நல்ல தொண்டுகளைத் தமிழர்களுக்குச் செய்திருக்கிறார். அதற்காக அவரை Honorary Tamilian ஆக்கலாம். ஆனால் அவர் பிறப்பாலோ அல்லது இனத்தாலோ தமிழன் அல்ல அது மட்டும் தான் என்னுடைய கருத்தே தவிர அவரிடம் எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
தமிழகம் உட்பட தென்னாட்டினர் இடம்பெயர்ந்து கொண்டே இருந்த மக்கள் குழுவாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்பது அக்காலத்தில் அரசர் ஆட்சியின் கீழ் உள்ள இடத்தை பொறுத்து மாறும். உதாரணமாக மைசூர், பெங்களூர், சேலம், கோவை பகுதிகள் ஒரு சமயம் சோழர் வசமும் மறு சமயம் ஓய்சாலர், சாளுக்கியர் வசமும் மாறி மாறி இருந்தது. ஆக அங்கு தமிழும் - கன்னடமு கலந்தே இருந்தது. விஜயநகர எழுச்சியோடு கன்னடம், தமிழ் பேசிய பலரும் தெலுங்கு பேசலானர். ஒரே குடும்பத்தில் ஒரு தலைமுறையில் தமிழும், மறு தலைமுறையில் கன்னடமு பேசுவது வழமை. ஏன் இன்று கூட சேல மண்டலத்தில் உள்ளோருக்கு கன்னட உறவுகள் உண்டு. ஒரே வீட்டில் இரு மொழியும் பேசுவர். ஒரே நபர் மொழி மாறியும் பேசுவர். ஒருவரின் மொழி இன்று அவர் வாழும் மாநிலத்திற்கு அமைய மாறியும் விடும். சித்தூர், புத்தூர், திருப்பத்தூர், திருப்பதி, சென்னை வரையும் தமிழ் - தெலுங்கை இணைவு உண்டு. சிலர் இரு மொழியும் சில காலம் பேசினர். ரத்த உறவுகள் உண்டு. இன்று மாநிலம் பிரிந்த பின் ஆந்திரத்து தமிழர் தெலுங்குக்கும், தமிழகத்து தெலுங்கர் தமிழுக்கும் மாறிவிட்டனர்த். இன்றைய மாநில மொழி எல்லைகள் 1951 மக்கள் தொகை கணக்கின் படி எடுத்தவை அவ்வளவு. சோழர்களின் பூர்விகம் கன்னடத்தில் தோன்றியது. பல்லவர் வடக்கில் இருந்து வந்த தமிழ் மண் ஆண்டு தமிழர் ஆனோர். அக்காலத்தில் மொழியால் அல்ல தேசம் சார்ந்தே அடையாளப்படுதிக் கொண்டனர் சேர், சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியம் என. ஈழத்தில் உள்ளோர் தமிழ் ஆர்வத்தால் மொழி வெறித்தனத்தை தென்னிந்தியாவில் புகுத்துவது ஆபத்தை தரும். ஏற்கனவே காங்கிரசு கட்சியின் சதியால் இயற்கை வளம் சார்ந்த சிக்கலை உருவாக்கி தென்னிந்தியரை பிரித்து வைத்துள்ளது. எங்கே ஒன்றானால் திராவிட நாடு கேட்பார்களோ என்ற அச்சத்தில். வியாசன் நினைப்பது போல தமிழ்நாடு தமிழர்க்கே என்ற வாதமும், பிற்ப்பால் தமிழ் சாதிகள் தவிர ஏனையோர் வெளியேற வேண்டும் அயலார் என்ற வாதம் ஆபத்தை தரும். தமிழகத்தில் இன்று எங்கிருந்து வந்தேறிய போதும் அவர் பூர்விகம் கன்னடம், தெலுங்கு, மராத்தி, சவுராத்திரி, மலையாளம் எது எனிலும் பெரும்பான்மையோனர் தலைமுறை கடந்து தமிழர்களாக, தமிழ் மொழி கற்று வாழ்கின்றனர். பலர் உள்ளூர் வாசிகளோடு கலப்பு மணமும் புரிந்து வாழ்கின்றனர். ஆக யதார்த்தம் மீறிய வெறித்தனம் தமிழ்நாட்டுக்கு உதவாது.
ReplyDeleteநல்ல செய்திகள் சொல்லியுள்ளீர்கள் நிரஞ்சன் தம்பி.
Deleteஇந்த மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்தவையே.
மிகச் சமீபத்தில் பிறந்த மொழி மலையாளம்.
தமிழன்னை பெற்ற பிள்ளைகள் அதிகம்.
This comment has been removed by the author.
ReplyDelete//ஒரு தமிழச்சி ஈன்றாள் என்பதாலேயே எவனும் தமிழன் அல்லன்.
Deleteதமிழனாய் வாழ்வோன் எவனோ..... அவனே தமிழன்//
தமிழனாய் வாழ்வோன் என்ற உங்களின் கவிதை வரிக்கு விளக்கம் தாருங்கள். :))
தமிழனாய் வாழ்வோன் தன்னை தமிழனாக வீட்டிலும், வெளியிலும் அடையாளப்படுத்த வேண்டுமென்பது என்னுடைய கருத்து, உதாரணமாக வீட்டில் வேறொரு இன மொழி அடையாளத்தை வைத்துக் கொண்டு , வெளியில் மட்டும் தமிழ் பேசுகிறவன் தமிழனாய் வாழ்வோனே இருக்க முடியாது.. அவன் வெறும் தமிழ் பேசுகிறவன் மட்டும் தான்.
>>>>தமிழனாய் வாழ்வோன் தன்னை தமிழனாக வீட்டிலும், வெளியிலும் அடையாளப்படுத்த வேண்டுமென்பது என்னுடைய கருத்து<<<<
Deleteசரியான கருத்து.
அப்படியல்லாத தமிழர்களை என்ன செய்யலாம்? தமிழர்கள் அல்ல என்று கூறலாமா?
இன்று பெரும்பாலான வீடுகளில் ஆங்கிலமே பேசப்படுகிறது கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களிடம்
ஈழத்தவரில் குற்றம் கண்டு பிடித்தே புலவராகி விடலாம் என்றும் சிலர் கனவு காண்கின்றனர் என்பதை நினைக்க சிரிப்பு தான் வருகிறது. :)))
ReplyDeleteசகோ. புகாரி,
Deleteநான் உங்களைக் குறிப்பிடவில்லை. புலவர் என்றதும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். :)
ஈழத்தவர்கள் குறைகளே இல்லாத தெய்வப் பிறவிகளா வியசன்?
Delete// சோழர்களின் பூர்விகம் கன்னடத்தில் தோன்றியது. //
ReplyDeleteபராந்தக சோழனின் தாய் மட்டும் தான் ஒரிசா அல்லது கன்னட இளவரசி, தந்தை வழி தமிழர்கள் தான். சோழர்கள் வெளியேயிருந்து வந்தவர்களல்ல. சோழ அரச குடும்பம் தமிழ்நாட்டில் உருவாகியது, தமிழர்களுடையது. :)
இனத்தால் தமிழன் என்ற வரையறையோ, ஆதார நிறுவலோ யதார்த்தத்தில் கிடையாது. தமிழ் ஜீன், தமிழ் மரபணு என எதுவும் கிடையாது. மலேசியாவில், சிங்கையில் தெலுங்கு, மலையாள வம்சாவளியினரும் தம்மை தமிழர் என்றே கூறுகின்றனர். தமிழே பேசுவர். தென்னாப்பிரிக்காவில் தெலுங்கு வம்சாவளியினர் தமிழ் தெரியாத போதும், தமிழர் என்றே அடையாளப்படுத்துகின்றனர். தமிழகத்தில் 1951-யில் 9% பேர் தெலிங்கு பேசினர் இன்று அது 2% சதவீதமே மிச்சமுள்ளோர் தமிழ் பயின்று தமிழர் ஆகி விட்டனர். அவை ஏன் தெலுங்கு சாதிகள் ஆன நாயக்கர், நாயுடு, ரெட்டி, துளு-கன்னட சாதிகள் பலவும் கூட தம்மை தமிழர் எனவே கூறுவர். சென்னை, கோவையில் பல மலையாளிகள் முற்றாக தமிழரை மணந்து தமிழர் ஆகிவிட்டனர். ஒற்றுமையாக் இருக்கும் எம்மிடம் நீ ஒரிஜினல் தமிழன் நீ டுப்ளீகேட் தமிழன் என பிரிப்பதை தயவுடன் நிறுத்துங்கள். அதை ஈழத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். தமிழக புவியியல் இனவியல் வரலாறை வாழ்ந்து உணராமல் இதை விளங்கி கொள்வது கடினம். பெரியார், வைகோ முதல் பலரையும் யாம் தமிழராகவே பார்க்கின்றோம். இங்கு மொழி துவேசங்கள் வேண்டாம்.
ReplyDeleteஅருமை அருமை, அருமை நிரஞ்சன்
Deleteஆங்கிலம் பேசுகிறவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்களல்ல, ஜேர்மன், பிரஞ்சு மொழி பேசும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளும் கூட ஜெர்மனியர்களோ அல்லது பிரஞ்சுக்காரர்களோ அல்ல. அதே போல் தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. ஆனால் அந்த உண்மையை எதிர்த்து இணையத்தளங்களில் விதண்டாவாதம் பண்ணுகிறவர்களின் பூர்வீகத்தை தோண்டிப்பார்த்தால் தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாள வாடையடிப்பதை காணலாம். :))))
ReplyDeleteஆங்கிலம் பேசுபவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர் அல்ல என்பது அப்பட்டமான உண்மை.
Deleteஅதேபோல, எம்மொழி எவ்வழியராய் இருப்பின் தன் தாய் மொழியாக தமிழை ஏற்று தன் சொந்தத் தாய் மொழியையே தாரை வார்த்தவர்களை தமிழர்களாய் ஏற்காவிட்டால் நாம் தமிழர்களா?
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழன் என்பது பிறப்பால் மட்டும் அல்ல, பற்றாலும் என்பதை மறவாதீர்கள்.
சிலரை திருத்தவே முடியாது, காழ்ப்புணர்ச்சிகள், சுயம் சார்ந்த வெறித்தனங்கள் மாற்ற இயலாதவை. பிரான்சில் தலைமுறை கடந்த பல யூத, இஸ்லாமியர்களையும் பிரஞ்சினனாகவே அடையாளப்படுத்துவர். இதே நிலை தான் இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளிலும். சிந்தித்தால் மானிடத்தின் மகத்துவம் புரியும், கண்ணடைத்து துவேசம் வளர்ப்போம் எனில் என்ன செய்ய, நல்வாழ்த்துக்கள். நாம் ஏன் ஈழத்தில் முரண்பட்டு வன்முறை களமாக்கினோம் என ஆழ சிந்தித்தால், அதனுள் மொழி, சாதிய, வட்டார, மத வாதங்களும், பிரிவினைகளும் தான் காரணம். ஈழ தமிழர், சிங்களவரின் பொதுப் புத்தி குறுகிய வட்டதினுள் உள்ளதாக உங்களை வைத்து எடை போடலாமா?! :) யாருக்குத் தெரியும் உங்கள் பூர்விகமும் தமிழோ இல்லையோ? பல புது அடையாளம் கண்டோரே அவ்வடையாளங்களை இறுகிப் பற்றிக் கொள்வர். எனது பூர்விகம் ஈழம் என்ற போதும் தலைமுறை கடந்து யாம் தமிழ்நாட்டவனாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம், அவ்வளவே. :)
ReplyDeleteஎன் முகநூல் பக்கம் வாருங்கல் நண்பர்களே. இந்த கருத்தாடல் களத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.
Deleteகடையக் கடையத்தான் வெண்ணெய், நெய், வாசம், வாழ்க்கை ;-)
https://www.facebook.com/anbudanbuhari
ம்ம்ம்ம். இப்படியே போனால் எல்லோரும் தமது பூர்வீகம் ஈழம் தான் என்று கூறத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது. நான் போகிறேன், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. :)))
Deleteதிரு R. புரட்சிமணி அன்பர் அவர்களுக்கு !
ReplyDelete***
//எந்த ஒரு நூலையும் இறைவனின் வார்த்தைகளாக நான் ஏற்ப்பதில்லை. அதே நேரத்தில் அது அது அவர் அவர்களது விருப்பம்...நம்பிக்கை. சில இடங்களில் நம்பிக்கை திணிக்கப்படும் பொழுது அது கேள்விக்குள்ளாக்கப்படும்.//
***
அவ்வாறாயின் நீங்கள் இறைவன் உண்டென்பதில் மாற்றுக்கருத்துள்ளவரா ?
நம்பிக்கை என்பதே சாதாரண மனித அறிவால், பகுத்தறிவால் ஒரு எல்லைக்குமேல் நுழைய முடியாததும், அது சொல்பவர்களின் வாழ்வு நடைமுறைகளை வைத்து அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதும் ஆகும்.
ஆனாலும் அதில் உண்மைகள் இல்லாமல் இருக்காது. சொல்பவரின் அறிவு நிலைக்கு தான் உயர்ந்து அது உண்மயென அறிய இயலும். உண்மைக்கு மாற்றமானது மேல் நம்பிக்கை கொள்வதில்லை. உண்மைகள் எல்லாம் இவ்வாறுதான் நம்பப்படுகிறது.
சில நேரங்களில் உண்மைகள் திணிக்கப்படவேண்டிதான் ஏற்படும். மருந்து கசக்கும் என்பதால் நோய்தீர சாப்பிட்டுதான் ஆகவேண்டும். குணம் கண்டபின் ஏற்றுக்கொள்வார்கள். ஆபத்தை நோக்கிபோகாதே என்றால், கேட்காவிட்டால் சிலசமயம் அடித்துதான் வழிகாட்டுவார்கள், காட்டினார்கள்.
அடைபடையையிலே வேறுபாடு இருந்தால் ஆத்திக கருத்துகலந்துரையாடலில் புகுவது சிறப்பன்று.
நன்றி !
திரு R. புரட்சிமணி அன்பர் அவர்களுக்கு !
ReplyDelete***
//தமிழ் ஞானிகள் எழுதிய செய்யுளுக்கு ஒவ்வொரு அறிஞனும் ஒரே விளக்கத்தை எழுதிமுடிக்கவில்லை. சிலர் சில அடிகள், சிலர் பக்கங்கள். ஏன் ? //
அன்று அவர்கள் எந்த சொல்லுக்கு எந்த அர்த்தத்தில் எழுதினார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. மேலும் அன்றைய சிலபல சொற்கள் அதே அர்த்தத்தில் புழக்கத்திலும் இல்லை.
குரான் இறைவசனங்கள் அதை அரபியில் தான் படிக்க வேண்டும் என்பதை நான் தினிப்பாகவே கருதுகிறேன்.
அதேநேரத்தில் உங்களை குறை கூறுவதும் என் நோக்கமல்ல. இந்த விடயங்களை பற்றி நான் பேசுவதை விட பிற இசுலாமியர்கள் பேசுவதே நலம்.
***
• தெரிந்த சொற்கள், அறிந்த சொற்கள், சில சமயம் அந்த சொற்கள் நமக்கு புரியாமலும் இருக்கலாம், அதைக்கொண்டு ஒரு அணு விஞ்ஞானி ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பைப பற்றி விளக்கம் தருவார் விஞ்ஞானிகள் மத்தியில்.
நமக்கு புரியாது. ஆனால் புரியும் நாம் அந்த விஞ்ஞான அறிவு நிலைக்கு உயர்ந்தால்.
அதனால் எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள், எழுதினார்கள் என்று வினவினால் குறை நம்மிடமே.
சில சொற்கள் ஒரே கருத்தை மட்டும் தாங்கி நிற்கவில்லை.
வாக்கிய அமைப்புகள் உணர்வின் ஆழநீளத்திற்கு தகுந்தார்ப்போல் பலகருத்தைத் தரும்.
அவைகள் யாவும் அதனைப் படிப்பவர்கள் அறிவு தெளிவைப்பொருத்து ஆகும்.
ஆனாலும் அதை எழுதியவரின் அறிவு படித்தரத்தைப்பொருத்து அவரின் அவ்வறிவு நிலையில் அதில் உண்மை இருப்பதை அந்நிலைக்கு உயர்ந்தோர் ஏற்பார் என்பதில் மாற்றுக்கருத்துமுண்டோ ?
ஆனாலும் அது குழப்பாது. புரிகின்றவர் புரிவார். புரியாதோர் அதில் தவறு காணமுயல்வது எவ்வாறு அறிவுடமையாகும் ?
• திருக்குர்ஆன் அரபியில் இறக்கப்பட்டது. அது வேறு மொழியில் இறக்கப்பட்டால் அம்மொழிமுலம் கற்பதுதான் சிறப்பு.
அது உரைநடையாக இருந்தால்கூட அதன் தெளிவை பூரணமாக புரிவது கடினம். இதன் விளக்கம் மேலே எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அது உரைநடை என்றுமல்லாதும் கவிதை என்றுமல்லதும் அமைப்பில் உள்ளது.
அவ்வாறானால் அது எவ்வாறு வழிகாட்டும் என்ற கேள்வி எழலாம்.
வேதமே 'இது பயபக்தி உள்ளவர்களுக்கு நேர்வழி காட்டும்' என்று சொல்கிறது.
பயபக்தி என்றால், அது இறைவனை அறிந்தவர்களுக்குத்தான், அவன்மீது பயபக்தி ஏற்ப்படும்.
அவ்வாறு அவனை அறிந்தவர்களுக்கு வேதம் வழிகாட்டும். அவனை அறிந்தவர்கள் வழிகாட்டலை மற்றவர்கள் ஏற்கலாம்.
மற்றவர்கள் சும்மா படிக்கலாம். தெளிவைத்தராது.
நானும் மொழிபெயர்ப்பை வைத்துள்ளேன் எனக்கும் திருக்குர்ஆன் விபரம் புரியும் என்றால் அது என்வென்று சொல்வது........
என்னிடமும் M.Phil தரத்தில் இரசாயன புத்தகம், கணிதம், பௌதீகம் புத்தகங்கள் உள்ளது அதைப்பற்றி எனக்கு தெரியும் என்றால்... என்ன சொல்வது.
ஒரு வேலையை சொல்கின்ற நபர் உதாரணமாக முதல் அமைச்சர் சொன்னால் அதிகாரி எப்படிச் செய்வார். நாம் சொன்னால் எப்படிச் செய்வார்.
ஆக, இறைவனை தெளிவாக அறிவது மார்க்கத்தின் முதல் கடமை என நபிகள்(ஸல்) அவர்களே சொல்லியிருக்கின்றார்கள்.
நன்றி !
திரு R. புரட்சிமணி அன்பர் அவர்களுக்கு !
ReplyDelete***
//அவன் எம்மொழி மூலம் அறிவைதந்தானோ அவ்வாறே ஏற்கவேண்டும். இல்லையேல் முழுமை கிடைக்காது என்பதை புரிந்துக் கொள்வது சிறப்பு. //
பிற மொழி குரான்களை என்ன செய்யலாம்?. நீங்கள் அதீத பக்தியில் உள்ளதாக தெரிகிறது
///
• பிற மொழி குரான் என்றால் எது ?
• எதிலும் பாதிகிணறு தாண்டுவது ஆபத்து. அல்லது ஒதிங்கிவிடுவதே நல்லது.
அதீத பக்தி இருக்கவேண்டும்.
ஆனால் வெறியில்லை. அதனால்தான் எழுதுகிறேன்.
நன்றி !
திரு R. புரட்சிமணி அன்பர் அவர்களுக்கு !
ReplyDelete***
//நீங்கள் எழுதியபடி நான் எப்படி நீங்கள் தமிழை பிடித்து தொங்குகிறீர்கள் என்று எழுதமுடியும். யாரும் எதயையும் பிடித்து தொங்கவில்லை மாறாக பிடிவாதத்தை.....//
"மாறாக பிடிவாதத்தை" நல்ல புரிதல்...இது பற்றினாலும் பக்தியினாலும் கூட வரலாம்.
என்னிடம் பிடிவாதம் இருந்தால் தாரளமாக கூறுங்கள் நான் அதை திருத்திக்கொள்கிறேன்.
சிலபல விடயங்களை பிடிவாதத்தைவிட அறியாமையால்தான் செய்கிறோம் என நினைக்கின்றேன்.
***
என்னிடம் பிடிவாதம் இருந்தால் தெரிவியுங்களேன் ?
நன்றி !
திரு R. புரட்சிமணி அன்பர் அவர்களுக்கு !
ReplyDelete***
//உங்கள் கருத்து பரிமாற்ற தடம் மாறுகிறது.//
இது நிச்சயமாக என் நோக்கமல்ல.
சில உண்மைகளை கூறும்பொழுது அது பிறர் மனதை புண்படுத்தவே செய்கிறது.
எனது கருத்துக்கள் உங்கள் (பிற சகோக்களுக்கும் தான்) மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
இறைவன் உங்கள் பார்வையை விசாலமாக்கட்டும்....உண்மையை விளங்கச் செய்யட்டும் ///
***
"பாய்" என்ற விவாதம் தடம் மாறி வேதம், மொழி.... இவ்வாறு தடம் மாறிபோவதைத்தான் எழுதினேன். மற்றபடி உங்களை குறைகூறவில்லை.
கருத்துப்பரிமாற்றம் இருக்கவேண்டியதுதான் சில வரமுரைக்குட்பட்டு.
நன்றி !
சகோ.புகாரி,
ReplyDeleteகனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எல்லோரும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை. அப்படி பேசினாலும், அவர்களின் ஒரே இன அடையாளம் தமிழன் மட்டும் தான், நாங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுகிறோம் என்று தம்மை ஆங்கிலேயர் என்று அவர்கள் சனத்தொகைக் கணக்கெடுப்பிலோ அல்லது எந்த விண்ணப்பத்திலும் கூறுவதில்லை. அவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தை விட வேறு ஒன்றும் கிடையாது. அதனால் தமிழைப் பேசினாலும், தமிழன் என்பதை விட தெலுங்கர், கன்னடர், மலையாளி, உருது போன்ற வேறு அடையாளமுள்ளவ்ர்கள், எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அல்ல. உதாரணமாக நடிகர் ரஜனிகாந்துக்காக எத்தனை இளிச்சவாய்த் தமிழர்கள் தீக்குளிக்க தயாராக இருந்தாலும் கூட. ரஜனிகாந்த் ஒரு போதும் தமிழனாக முடியாது. அது தமிழ்நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக ஓடிவந்து, தமிழ்நாட்டை ஆளத் துடிக்கும் எல்லோருக்கும் பொருந்தும். அதே வேளையில் சிம்பு அல்லது சூரியா, நான் தமிழன் இல்லை என்று வாதாடினாலும் கூட அவர்கள் தமிழர்கள் தான். :)))
உதாரணமாக இலங்கை முஸ்லீம்கள் தமிழ் பேசுகிறார்கள், தமிழ்ப்பற்றுள்ளவர்கள், பலர் தமிழ்ப்புலமை உள்ளவர்களும் கூட ஆனால் அவர்களை நீங்கள் தமிழர்கள் என அழைத்தால், உங்களை செருப்பால் அடிப்பார்கள். அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அதானால் அவர்கள் தமிழர்களல்ல. இப்பொழுதாவது யார் தமிழன் என்பதற்கு எனது விளக்கம் புரிந்திருக்குமென நம்புகிறேன்.
///தீண்டாமை ஒழிப்பை எந்த மார்க்கம் செய்கிறதோ//
ReplyDeleteமுஸ்லீம்கள் மத்தியிலும் சாதிப்பிரிவுகள் உண்டென்பதை அண்ணல் அம்பேத்காரே தனது கட்டுரை ஒன்றில் விளக்கமாகக் கூறியுள்ளார்.
>>>>கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எல்லோரும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை. அப்படி பேசினாலும், அவர்களின் ஒரே இன அடையாளம் தமிழன் மட்டும் தான், நாங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுகிறோம் என்று தம்மை ஆங்கிலேயர் என்று அவர்கள் சனத்தொகைக் கணக்கெடுப்பிலோ அல்லது எந்த விண்ணப்பத்திலும் கூறுவதில்லை. அவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தை விட வேறு ஒன்றும் கிடையாது.<<<<<<
ReplyDeleteஇவர்களைத்தான் போலிகள் என்று சொல்வது. தாய்மொழியை இழந்துவிட்டு தமிழன் என்று சொல்வது தன் தலையை இழந்துவிட்டு மனிதன் என்று சொல்லும் முண்டம் அல்லவா?
இப்படியான பொலிகள் அதிகரித்துத்தான் தமிழின் தமிழனின் பண்பாடும் பாரம்பரியமும் சீர்குலைந்து நாசமாகிறது.
>>>>உதாரணமாக நடிகர் ரஜனிகாந்துக்காக எத்தனை இளிச்சவாய்த் தமிழர்கள் தீக்குளிக்க தயாராக இருந்தாலும் கூட. ரஜனிகாந்த் ஒரு போதும் தமிழனாக முடியாது. <<<<<
தன்னை முழுத் தமிழனாக அவர் அடையாளப்படுத்தி, தன் பிள்ளைகளைத் தமிழ்ச்சூழலியே வளர்த்து தமிழர்களுக்கே மணமுடித்துகொடுத்து நல்ல தமிழராக வாழ்கிறார். உங்கள் காழ்ப்புணர்ச்சி உங்கள் கண்களை மறைக்கிறது.
>>>>அதே வேளையில் சிம்பு அல்லது சூரியா, நான் தமிழன் இல்லை என்று வாதாடினாலும் கூட அவர்கள் தமிழர்கள் தான். :)))<<<<
அவர்கள் வாதாடினால், தமிழை விட்டு விலகினால், தமிழ் பண்பாடு விட்டு ஓடினால், அது அவர்கள் இஷ்டம் அவர்கள் பின்னொருநாள் தமிழன் இல்லை என்றே ஆவார்கள்.
>>>>உதாரணமாக இலங்கை முஸ்லீம்கள் தமிழ் பேசுகிறார்கள், தமிழ்ப்பற்றுள்ளவர்கள், பலர் தமிழ்ப்புலமை உள்ளவர்களும் கூட ஆனால் அவர்களை நீங்கள் தமிழர்கள் என அழைத்தால், உங்களை செருப்பால் அடிப்பார்கள்.<<<<<<<
அவர்கள் செறுப்பால் அடிக்க மாட்டார்கள். ரொம்ப கொதிப்படைந்து உங்கள் தலை வெடிக்கப் போகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அறிவார்த்தமாக உரையாடுங்கள். அதுவே நல்ல கருத்தாடலைத் தரும்.
நான் முன்பே சொன்னேன், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக நாங்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் இல்லை என்கிறார்கள். தங்களைப் பிரித்து வேறு அரசியல் சார்பைக் காட்ட விழைகிறார்கள். மற்றபடி அவர்களின் தமிழ்ப்பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டு தமிழ் முஸ்லிம்களின் பழக்க வழங்கங்களோடு ஒத்துப் போவதாகவே இருக்கிறது.
அவர்கள் பேசும் வட்டார மொழியை தமிழ்நாட்டில் அதிராம்பட்டிணம், மல்லிப்பட்டிணம் போன்ற கடலோர முஸ்லிம் ஊர்களிலும் அப்படியே பேசுவார்கள்.
>>>>இப்பொழுதாவது யார் தமிழன் என்பதற்கு எனது விளக்கம் புரிந்திருக்குமென நம்புகிறேன்.<<<<
நீங்கள் தமிழன் என்று சொல்வது ஒரு ஜாதியாக ஒரு மதமாக. அது அடிப்படையில் தவறு நண்பரே. மாறுங்கள்.
நானும் நீங்களும் அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் இத்துடன் முடிக்கிறேன், ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலிருந்தே தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதிலை. என்ன சுயலாப , அரசியல் நோக்கங்களுக்காக அவர்கள் அப்படிச் செய்தாலும், அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை என்பது தான் உண்மை, நீங்கள் இங்கு அவர்கள் தமிழர்கள் தான் என்று வாதாடுவதால் அவர்கள் தமிழர்களாகி விட முடியாது, இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல. தமிழ்பேசுபவர்கள் மட்டும் தான்.
Deleteஇந்தக் கருத்துப் பரிமாற்றலுக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
மலையகத் தமிழர்களை நீங்கள் தமிழர்கள் என்று ஏற்பதில்லை. ஏன்?
ReplyDelete///தீண்டாமை ஒழிப்பை எந்த மார்க்கம் செய்கிறதோ//
ReplyDeleteமுஸ்லீம்கள் மத்தியிலும் சாதிப்பிரிவுகள் உண்டென்பதை அண்ணல் அம்பேத்காரே தனது கட்டுரை ஒன்றில் விளக்கமாகக் கூறியுள்ளார். <<<<<<<<<<<
அது இந்து வர்ணாசிரமக் காரர்களால் திணிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு சாதி கிடையாது.
இந்து வர்ணாசிரமக் காரர்களால் தான் தமிழர்கள் மத்தியிலும் சாதி அறிமுகப்படுத்தப்பட்டது,அதைக் கூறி நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது, இந்தியாவில் (மட்டுமல்ல பாகிஸ்தானிலும் கூட)முஸ்லீம்கள் மத்தியிலும் சாதிப்பிரிவினைகள் உண்டு என்பதை அண்ணல் அம்பேத்கார் தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
Delete//மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று கூறுவீர்களா?//
ReplyDeleteஅவர்களும் தமிழர்கள் தான் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமுமுமில்லை. :)<<<<<<<<<<<
பிறகு ஏன் அவர்களை தீண்டத் தகாதவர்களாகவே பாவித்து வந்தீர்கள். இன்றும் தள்ளி நின்று பார்க்கிறீர்கள்????
இப்பொழுது நீங்கள் இங்கு பேசப்படும் கருத்திலிருந்து தடம் மாறிப் போகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே திசை திருப்பப் பார்க்கிறீர்கள்,நாங்கள் இங்கு சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசவில்லை.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//எனது பூர்விகம் ஈழம் என்ற போதும் தலைமுறை கடந்து யாம் தமிழ்நாட்டவனாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம், அவ்வளவே. :)//
ReplyDeleteநிரஞ்சன் தம்பி,
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பார்கள். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட எந்தவொரு உண்மையான ஈழத்தமிழனும் அவன் எத்தனை தலைமுறை எந்த நாட்டில் இருந்தாலும் தான் ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். அதை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இன்றும் காணலாம். அவர்கள் தமது ஈழத்தமிழ்ப் பூர்வீகத்தை பெருமையாக கட்டிக்காப்பார்கள் அது தான் உண்மை. அதை விட எந்த ஈழத்தமிழனும் எத்தனை தலை முறை தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், நாங்கள் தென்னிந்தியர்கள், என்று மலையாளிகளையும், தெலுங்கர்களையும் கன்னடர்களையும் துணைக்கிழுத்துக் கொண்டு, தமிழர்களை, தமிழ் மன்னர்களை தமிழரல்லாத கலப்பினமாக்க மாட்டார்கள். அல்லது “ஈழத்தில் உள்ளவருக்கு ஆதியும் அந்தமும் தெரியாமல் உளறுவதே வேலையாப் போச்சு” அல்லது “ தமிழ்நாட்டுக்காரனும் ஆஸ்திரேலியாவுக்குக் கள்ளத் தோணியில போக வேண்டி தான் வரும்” என்றெல்லாம் ஈழத்தமிழர்களை நக்கலடிக்கும் எந்த திராவிடக் ‘கூமுட்டைகளும்’ ஈழத்தை தமது பூர்வீகமாகக் கனவில் கூடக் கொண்டிருக்க முடியாது. :))
ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அளவுகடந்த பற்று உண்டு, அது திருவேங்கடத்தின் குன்றுகளைத் தாண்டியவுடன் காணாமல் போய்விடும், அதனால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடகுடியேறிகளின் எச்சங்கள் தமது பூர்வீகம் ஈழம் என்று உளறுவதைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்க மட்டும் தான் முடியுமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது. :)))))
ஈழத் தமிழர்களில் புத்தி விருத்தியாகமைக்கு காரணம் இது தான், மாற்றுக் கருத்தாளர்களை துரோகி எனவும், தமிழன் இல்லை எனவும் முத்திரைக் குத்திவிடுவது. என் பாட்டனார் பூர்விகம் யாழ் பருத்திதுறைக்கு அருகே உள்ள அல்வாய் கிராமம், முப்பாட்டான் காலத்தில் கேரளத்து அல்வாய் (ஆலுவா) இருந்து குடியேறியோர் தான். பின்னர் தந்தையார் சென்னைக்கு குடியேறி விட்டனர், அரை நூற்றாண்டுக்கு மேல் சென்னையிலே பணி செய்து தங்கிவிட்டோம். என் பூர்விகம் ஈழம் என்றே கூறுவேன், காரணம் அங்கு இன்னம் எம் சொந்தங்கள் உண்டு. ஆனால் என்னை நான் ஓர் இந்தியனாகவே பார்க்கின்றேன். போதுமா? உங்களால் உங்களின் ஆதிமூலம் அடிமூலம் வெளிப்படையாக சொல்ல இயலுமா?! ம்ம்ம். அதற்கு தனி தைரியம் வேண்டும்.
DeleteThis comment has been removed by the author.
Delete//முப்பாட்டான் காலத்தில் கேரளத்து அல்வாய் (ஆலுவா) இருந்து குடியேறியோர் தான். பின்னர் தந்தையார் சென்னைக்கு குடியேறி விட்டனர்,//
Deleteநல்ல கதை. நான் முதலில் உமது உளறலை முழுதாக வாசிக்கவில்லை. அப்படியானால் நஉம்முடைய பூர்வீகம் ஈழம் அல்ல. உமது பூர்வீகம் கேரளம், அதாவது நீர் ஒரு மலையாளி. அது தானே பார்த்தேன்.:))|
இலங்கையிலிருந்து திருப்பியனுப்பபட்ட மலையாளிகள் எல்லாம் பூர்வீக ஈழத்தமிழர்கள் அல்ல. உங்களைப் போல, எங்களின் குடும்பம்ஒன்றும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இலங்கைக்குப் போன மலையாளிகள் அல்ல. எங்களின் பரம்பரைக்கும் இந்தியாவுக்கும் ஏதாவது தொடர்பு ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்ததோ என்னமோ எனக்குத் தெரியாது, என்னுடைய முப்பாட்டன் கேரளாவிலிருந்து வரவேயில்லை. Thank God... :)))
இலங்கைத் தமிழர்கள் கள்ளத்தோணியில் அவுஸ்திரேலியா போகும் கதையைப் பேசுவதற்கே உமக்கு அருகதை கிடையாதையா? :))))
//என் பாட்டனார் பூர்விகம் யாழ் பருத்திதுறைக்கு அருகே உள்ள அல்வாய் கிராமம், முப்பாட்டான் காலத்தில் கேரளத்து அல்வாய் (ஆலுவா) இருந்து குடியேறியோர் தான்//
Deleteநிரஞ்சன் தம்பி,
சும்மா கற்பனையில் கதை விட வேண்டாம். கேரளத்திலுள்ள ஆலுவாவுக்கும் யாழ்ப்பாணத்தின் அல்வாய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது, அல்வாய் என்ற பெயர் யாழ்பாணத்தில் அதன் நில அமைப்பைப் பொறுத்து இயற்கையாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய தமிழ்ப் பெயர். கேரளத்திலிருந்து “கள்ளத்தோணியில்” வந்த மலையாளிகள் இட்ட பெயரல்ல. :)))
Alvaay
அல்வாய்
Alvāy
Alai+vaay
The land facing waves
The coastal place
The beach line
Alvaay Changed form of Alai-vaay: The land facing waves, the front of land where the waves break, the line where land and sea meet, the line to enter the sea. (Alai: waves, sea; Vaay: mouth, entrance; Changkam as well as Modern Tamil); Alavaa-kara: (Alai-vaay-karai): The beach, the beach where the waves break, a geographical technical term used by the Tamil coastal folk, (Dictionary of the Technical Terms of the Coastal Folk, Muruganantham, 1990); Alavaay-kadatkarai: Beach in Batticaloa Tamil coastal dialect (Balasundaram 2002), Kadatkarai or Karai alone stands for a beach; Aluvaa-kara: The meaning is same as Alai-vaay and Alavaa-kara (Mannaar Tamil dialect, S.A. Uthayan in Loamiyaa, a Tamil novel based on life in Peasaalai. Mannaar, 2008); Alaivaay: The place name for today's Thiruchchenthoor in Tamil Nadu, which is situated on a beach that faces breaking waves (Changkam Literature, Akanaanooru 266 and Thirumurukaattuppadai 125).
FACT.1: யாழ்ப்பாணத்து அல்வாய்க்கும் மலையாளிகளுக்கும், கேரள ஆலுவாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
DeleteFACT. 2: முப்பாட்டன் காலத்தில் யாராவது இலங்கைக்கு பிழைப்புத்தேடி வந்திருந்தால், அவர்கள் இலங்கையின் பூர்வீக ஈழத்தமிழர்கள் அல்ல. அவர்களின் பூர்வீகம் ஈழம் அல்ல. :)))
ALVAAY is a coastal village in Vadamaraadchi of the Jaffna Peninsula, which has a significant coastline.
In fact, the northern most point of the island of Sri Lanka, Panai Munai or Point Palmyra, is in Alvaay.
Alvaay today is the name for a large area, but its northern part, known as Alvaay North, is a sea front facing the meeting place of the Palk Strait and the Bay of Bengal.
Alvaay is the changed form of Alaivaay, which is a phrase of two words, Alai (waves) and Vaay (mouth, entrance or front).
Alavaa-kara is a Tamil colloquial term commonly used by the coastal folk and fishermen, denoting the coastline where land and sea meet.
It means any beach but especially the beach of Tho'ndi, a coastal town in the Sivagangai district of Tamil Nadu, according to S. Muruganantham's Dictionary of Technical Terms of the Coastal Folk (Kadatkaraip Parathavar Kalaichchol Akaraathi, 1990 p.37).
The use of the term, Alavaai-kadatkarai, to mean beach in Batticaloa Tamil dialect, is attested by E. Balasundaram (Eelathu Idap Peyar Aayvu, 2002, p 266).
Aluvaa-kara is another form of the phrase found used in Mannaar for a stretch of sea front, or the part of beach washed by waves (Loamiyaa, a Tamil novel written in Mannaar coastal dialect by S.A. Uthayan, 2008).
The written form or literary form Alaivaay is found used as a place name in the Changkam Tamil literature of Akanaanoo'ru and Thirumurukaattuppadai. The place name stood for today's Thiruchchenthoor in Tamil Nadu, where the famous abode of Murukan, mentioned in the Changkam literature, faces the breaking waves of the Gulf of Mannaar.
"Alaivaaych cherumiku chea-ey" (Akanaanoo'ru, 266:20-21): The red, war-god (Murukan) at Alaivaay.
"Alaivaaych che'ralum nilaiiya pa'npea" (Paththuppaaddu, Thirumurukaattuppadai: 125): It is his (Murukan's) habit to reside at Alaivaay.
ALVAAY IN JAFFNA MUST HAVE ATTRIBUTED WITH THIS TOPONYM BECAUSE OF ITS LANDSCAPE PROJECTING INTO THE SEA OF BREAKING WAVES.
ALVAAY IS A PLACE OF THREE GS AREAS IN THE VADAMARAADCHI SOUTHWEST (KARAVEDDI) DIVISION OF JAFFNA DISTRICT.
:))
நீங்கள் எல்லோருமே தடம் மாறித்தான் போகிறீர்கள்.
ReplyDeleteதடத்திற்கு வாருங்கள். தகவளைத்தாருங்கள்.
அன்புடன் புகாரி தங்களுக்கு,
ReplyDelete***
>>>>>>இறைவனிடமிருந்து வரும் சொற்களுக்கு சரியான விளக்கமாக மொழிபெயர்க்கமுடியாது. <<<<<<<
இறைவன் அப்படிச் சொல்லி நான் எங்கும் குர்-ஆனில் காணவில்லையே. உங்கள் பக்தியின் உச்சத்தில் நீங்கள் எதையாவது சொல்கிறீர்களா நபிதாஸ்?
***
இல்லை அன்புடன் புகாரி. இதற்கான பதில்திரு R. புரட்சிமணிக்கு எழுதிய விளக்கத்தில் காணலாம்.
***
//புரியும் வகையில் உங்களுக்கு எளிதாக்கித் தந்துள்ளோம் என்பதுபோன்ற வசனங்கள்தானே குர்-ஆனில் உள்ளன.
54:17.
நிச்சயமாக
இக் குர்ஆனை
எளிதாக்கி வைத்திருக்கிறோம் -
நினைவு படுத்திக் கொள்ள.
எனவே
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?//
***
யாருக்கு எளிதாகப் புரியும் என்பதை அல்லாஹ் வேதத்தின் ஆரம்பத்திலே சொல்லிவிட்டான். அதற்கும் பதில் திரு R. புரட்சிமணிக்கு எழுதிய விளக்கத்தில் காணலாம்.
நன்றி !
அன்புடன் புகாரி தங்களுக்கு,
ReplyDelete***
//>>>>>நல் தேவையின் நிமித்தம் இனம் தெரியவேண்டியது அவசியம். <<<<<
எப்படி அது அவசியம் என்று குர்-ஆன் ஆதாரங்களோடு கூறுவீர்களா நபிதாஸ். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் //
***
நீங்கள் 'பாய்' பற்றிய உங்கள் கருத்து அதற்கு குர்-ஆன் ஆதாரங்களோடு கூறுவீர்களா ?
நன்றி !
அன்புடன் புகாரி தங்களுக்கு,
ReplyDelete***
இஸ்லாம் தோன்றி சுமார் 600 வருடங்கள் கழித்து, நான்கு
இமாம்கள் அவரவர் விருப்பம்போல தொழுகையை
வடிவமைத்தார்கள். அவற்றுக்குள் வேறுபாடுகள் உண்டு என்பதை
அறிவீர்களா?
***
உங்கள் மார்க்க தெளிவுகண்டு மிகவும் ஆச்சிரியப்படுகிறேன் !
மேலும்...
//இமாம்கள் அவரவர் விருப்பம்போல தொழுகையை
வடிவமைத்தார்கள் //..... இதுதான் உங்கள் தெளிவென்றால் வாய் மூடுவது நலம் என்ற நிலையைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
நன்றி !
அன்புடன் புகாரி தங்களுக்கு,
ReplyDelete****
தொழுகைக்குச் சட்டதிட்டங்கள் கிடையாது. இறைவனை வணங்குதல் என்பதைத் தவிர வேறு விதிகளே கிடையாது என்பதை நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம் அல்லவா?
****
தொழுகைக்கு சட்டதிட்டம் இல்லை என்று கூறும் நீங்கள் ஒவ்வொரு தொழுகை வக்துக்கும் ஒவ்வொரு மாதரி எப்படி தொழுகிறீர்கள் ? விளக்கம் தரலாமா.
நன்றி !
அன்புடன் புகாரி தங்களுக்கு,
ReplyDeleteஅன்புக் கலாம், அவர்களுக்கு எழுதியதில் என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது.
***
முகம்மது நபி பெருமானாரோ, அவர் மறைவுக்குபின் வந்த நான்கு கலீபாக்களோ ஹதீதுகளை ஆதரிக்கவில்லை. அது வரலாறு.
***
நீங்கள் வரலாறு எல்லாம் எங்கிருந்து எடுக்கிரீகள் ? எல்லாம் புதுமையாக உள்ளதே !
அப்படியா !
நீங்கள் ஒரு புது வழியைக் காட்டுகிறீர்கள் !
நன்றி !
ஈழ முஸ்லிம்கள் தம்மை தமிழர் இல்லை எனக் கூற காரணங்கள். ஈழ ஆதிக்க தமிழரின் அடக்குமுறை, பெரும்பாலான கிழக்கு தமிழர், முஸ்லிம்களின் பூர்விகம் கேரளத்தில் இருந்தமை, ஆங்கிலேயேரின் பிரித்தாளும் தந்திரம் மற்றும் மெமோன், போக்ரா, குஜராத்தி, மலாய் முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக, முஸ்லிம் அடையாளத்தை முன்னிறுத்தியமை..!
ReplyDelete//ஈழ முஸ்லிம்கள் தம்மை தமிழர் இல்லை எனக் கூற காரணங்கள். ஈழ ஆதிக்க தமிழரின் அடக்குமுறை,//
ReplyDeleteஇது நம்பும்படியான செய்தியாக உள்ளது.
யாழில் பலருக்கும் தமிழகத்தில் தொடர்புகள் உண்டு (http://www.sangam.org/articles/view2/?uid=1013). ஆனால் அவற்றை மறைத்து இரண்டாயிரம், மூவாயிரம் என கதை விடுவர். அதாவது 1790 யாழில் டச்சு கணக்கெடுப்பில் 2000 (5%) மலையாளிகள் இருந்தனர், பின்னர் 100 ஆண்டுகளில் அவர் எல்லோரும் தமிழ் வேளாளராகி கொண்டு தமிழர் என்றனர். வியாசன் போன்றோரால் ஒரு ஐந்து தலைமுறைக்கு முன் சென்று அவர் பூர்விகம் எது என துலாவினால் எதோ ஒரு தென்னிந்திய கிராமமா இருக்கலாம். தமிழ் தலைவராக விளங்கிய பொன். ராமனாதனின் பூர்விகம் 17-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தது. இவ்வாறு பலருக்கும் தமிழக தொடர்புகள் உண்டு. யாழ் வைபவ மாலையில் தமிழ்நாட்டில் எந்தந்த பகுதிகளில் இருந்து வந்து யாழில் குடியேறினர் என்ற குறிப்புகள் உண்டு. அது மட்டுமில்லாமல் என் தாய் வழி பாட்டனர் தான் ஆல்வாய், தந்தை வழி பாட்டனர் நல்லூர், கள்ளியங்காடு. அவர்களில் ஒரு மூதாதையர் 16 ம் நூற்றாண்டளவில் சிதம்பரத்தில் இருந்து வந்தோர் என்ற குறிப்புகள் உண்டு. குடும்ப வரலாறுகளை ஆய்வு செய்யும் போது நமது ஒற்றை அடையாளங்கள் கழன்று விடும். என்னுல் ஈழம், தமிழகம், கேரளம், மற்றும் போர்த்துகேய கலப்புகள் நிறைந்துள்ளன. அதில் நான் பெருமையே அடைகின்றேன். தாம் இன்னார் என அறியாது ரெண்டாயிரம், மூவாயிரம் பிம்பிளிப்பி பிச்கோத் என்போருக்கு, அச்சோ பாவம் என்றே சொல்ல வேண்டும்.
ReplyDeleteSee: http://www.jaffnaroyalfamily.org/index.php
http://tissanayagam.com/topics_details.php?visible=62#str
http://www.mail-archive.com/varalaaru@yahoogroups.com/msg00028.html
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தமிழகத்தில் தொடர்பு உண்டு, அதற்காக இரண்டு தலைமுறைக்கு முன்னால் யாழ்ப்பானத்துக்கு பொழைப்பு தேடி வந்தவர்கள் எல்லாம் பூர்வீக ஈழத்தமிழர்களாக முடியாது. அதுவும் இன்றைய கேரளத்திலிருந்து வந்திருந்தால் அவர்கள் தமிழர்களேயல்ல. :)))
Deleteநான் ஈழத்தமிழன் எங்களின் வரலாற்றைப் பற்றி, உம்மிடம் அதிலும், இலங்கைத் தமிழ் இணையத்தளங்களை நீர் ஆதாரம் காட்டி அறிய வேண்டிய நிலையில் நான் இல்லை. சும்மா ஆப்பிழுத்த என்னமோ மாதிரி, ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு, அதை மறைக்க எதையோ எல்லாம் கூறிக் கொண்டு , அதுவும் அந்த nutcase இன் Jfffnaroyalfamily இணையத்தளத்தையும் இணைக்கும் உம்மைப் பார்க்க சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. :))
"ஓக்கேவா ! போய் வேலை வெட்டி இருந்தாப் பாருங்கள்."
இத்துடன் என் வாதம் இவ்விடம் முற்றும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம், இயன்றால் வரலாற்று தகவல்களை எழுத முனைகின்றேன். :) நன்றிகள் !
ReplyDelete//என் தாய்வழிப் பாட்டனார் பூர்விகம் யாழ் பருத்திதுறைக்கு அருகே உள்ள அல்வாய் கிராமம்,//
Delete//தந்தை வழி பாட்டனர் நல்லூர், கள்ளியங்காடு.//
எங்கேயோ உதைக்குதே? அப்படி என்றால் பூர்வீக ஈழத்தமிழர்களாகிய உங்களை எதற்காக இலங்கை அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. இலங்கைத் தமிழராகிய உங்களை எப்படி இந்திய அரசு ஏற்றுக் கொண்டது, எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறதே. :)))
//நல்லூர், கள்ளியங்காடு. அவர்களில் ஒரு மூதாதையர் 16 ம் நூற்றாண்டளவில் சிதம்பரத்தில் இருந்து வந்தோர் என்ற குறிப்புகள் உண்டு//
Deleteபதினாறாம் நூற்றாண்டில் நல்லூரிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் தான், போத்துக்கேயரும், அவர்களுக்குப் பின்னர் டச்சுக்காரரூம் சைவத்தைக் கடைப்பிடிக்க தடை விதித்ததாலும், வரியாக, அவர்களின் ராணுவத்துக்கு மாட்டை இறைச்சிக்கு வெட்ட கொடுக்குமாறு வற்புறுத்தியதாலும் பல யாழ்ப்பாணத்தமிழர்கள் தமது கோயில் விக்கிரகங்களை கிணற்றுக்குள் மறைத்து விட்டு, சிதம்பரத்துக்கும், வன்னிக்காட்டுக்கும் ஓடினார்களே தவிர அக்கால கட்டத்தில் சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குறிப்பிடுமளவுக்கு Migration நடக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் நடந்திருக்கலாம். ஆங்கிலேயர் காலத்தில் மலையாளிகள் தமிழர்களிடமிருந்து வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டு விட்டார்கள். அதனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அவர்களைத் தமிழர்களாக ஏற்று அரவணைத்திருப்பார்கள் என்பது சந்தேகமே. அதனால் உங்களின் மலையாள மூதாதையர் யாழ்ப்பாணத்தில் வாழவேயில்லை என்பது தான் உண்மை. :)))
Have a Nice day.. :))
நிரஞ்சன் தம்பி, உங்க அடர்வனம் தளத்திற்கு என்ன நடந்திச்சு?
Deleteஅன்பினிய நிரஞ்சன் தம்பி,
ReplyDeleteஅமர்க்களமாக எழுதுகிறீர்கள். தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள்.
வியாசன் உணர்வுகளோடு நிற்கிறாரே தவிர உண்மைகளோடு நிற்கவில்லை.
அவர் ஆதாரங்களைக் கொண்டு எதையும் உரையாடவில்லை. அவரின் ஆதங்கத்தைக் கொண்டே உரையாடுகிறார்.
மெல்ல மெல்ல இனியாவது உண்மையை வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ள முனைவார் என்று நம்புவோம்.
ஏனெனில் அதற்கான பொறியை நீங்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.
போர்க்காலம் காரணமாக ஈழத்தமிழர்களின் நெஞ்சில் ஒரு பெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. எனவே அவர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். சில காலத்தில் அது மாறும் என்று நம்புவோமாக.
அன்புடன் புகாரி
புஹாரி,
ReplyDeleteஉங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டக்கூடியதே ஆனால் , நீங்கள் முன் வைத்துள்ள விளக்கங்கள் தவறானவை.
பின்னூட்டங்கள் மட்டும் நூத்துக்கணக்கில் ஓடி இருக்கே ஒழிய ஒருவரும், தெளிவாவேயில்லை, "பாய்" என்பதை உருதுனு சொன்னாலும்,அது இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்ப்படுத்துறாங்கனு சொன்னாலும் கண்ண மூடிக்கிட்டு நம்புறாங்க! கூடவே தவறான கருத்தை முன் வைத்து தாறுமாறாக , கருத்து மழை பொழிஞ்சிட்டு இருக்காங்க :-))
//இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.
உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.
பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.//
பாய் என்பது உருது அல்ல வடமொழிச்சொல், உருது மொழிலாம் பிறப்பதற்கு முன்னரே புழங்கியச்சொல்.
உருது என்றால் கூடாரம் (அ) முகாம்(camp) என்று பொருள், முகலாய ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்கி இருக்கும் போது பேசிய மொழி.
இந்தியா ,பாகிஸ்தான் தவிர்த்து உருது அதிகம் எங்கும் புழங்கவில்லை, அரபு தேசத்தில் உருதெல்லாம் தெரியாது.
ராணுவத்தில் இந்தி,பஞ்சாபி, அரபு,பாரசீகம் என பல மொழி பேசுபவர்கள் இருந்ததால் எல்லாம் கலந்து பேசியதில் உருவான ஒரு பேச்சு மொழி, ஆங்கிலத்தில் "language of army" என்பார்கள்,11-12 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் உருது மொழியே உருவாச்சு.
நீங்க இஸ்லாமியர்கள் இந்தியாவுக்கு வந்ததற்கு யேமன் கதை எல்லாம் சொன்னாலும் , உண்மையான காரணம் படை எடுப்பே, வட இந்தியா வழியா தெற்கே வந்ததால், பாய் தொத்திக்கிட்டு இங்கே வந்திடுச்சு.
"பாய்" என்றால் மூத்தவர், பெரியவர் எனப்பொதுவான பொருளில் வட இந்தியா முழக்க பயன்ப்படுத்துகிறார்கள். "அண்ணா" என்றும் கொள்ளலாம்.
வல்லபாய் படேல், திருபாய் அம்பானி, கேஷிபாய் படேல், ஹி...ஹி முன்னா பாய் எம்பிபிஎஸ், மேலும் பெண்களுக்கும் மரியாதைக்காக பாய்(bai)என சேர்ப்பதுண்டு ,ஜான்சிராணி "லக்ஷ்மி "பாய்" ,ஜக்குபாய் , எனவே வட இந்தியா முழுக்க "இந்துக்களும் "பாய்,பாய்" போட்டுப்பாங்க, முக்கியமா குஜராத்திகள் அதிகம் பயன்ப்படுத்துவார்கள்.
முதலாளியை அல்லது மரியாதையாக யாரையாவது அழைக்க "பாய் சாப்" என்பதுண்டு.
பாஞ்சாபிகள் "பாஜி என சொல்வது "பாய்(bhai) +ஜி(ji) = bhaaji என உருவானது.
எனவே இஸ்லாமிய சகோதரத்துவம் ,உருது மூலம் என நீங்க சொல்வதெல்லாம் "உங்க சொந்த கதை"
சாச்சா ,சாச்சி எல்லாம் வட மொழியே உருதல்ல, "சாச்சா" நேரு என்றெல்லாம் கேள்விப்பட்டதேயில்லையா?
# //அப்பா என்பதே ஆதி தமிழனிடம் இல்லை. சமய இலக்கிய காலத்தில் அப்பா என்ற சொல்லை உருவாக்கினார்கள். அதன் பிதன் தான் தமிழர்கள் அப்பா என்ற அழைக்கத் தொடங்கினார்கள். அதற்குமுன் தந்தையே என்றுதான் அழைப்பார்கள்.//
அப்பா என்பதே ஆதித்தமிழனிடம் இல்லை,சமய இலக்கிய காலத்துல உருவாச்சுனு என சொல்லிவிட்டு நீங்க கொடுத்துள்ள உதாரணமான ,கம்பராமாயணம்,தேவாரம் எல்லாம் என்ன? அவையும் சமய இலக்கியங்களே :-))
அதுவும் காலத்தால் பின் தங்கியவை.
//"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்//
மேலும் நீங்கள் சொன்ன உதாரணத்தில் எல்லாம் "அத்தா" என்ற சொல் ஐயனே என்ற பொருளில் ,அதாவது ஒரு மரியாதை நிமித்தமாக சொல்வதாக தான் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தா இது கேள் ஆரியன் கூறுவான் என ராமன் ,லக்ஷமணன் உடனே உரையாடுகிறான்,
"'அத்தா! இது கேள்' என,
ஆரியன் கூறுவான், 'இப்
பித்து ஆய விலங்கின்
ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும்,
பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது
உத்தமன் ஆதல் உண்டோ?"
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=196
அத்தா என்றால் தந்தை என்பதாக கொண்டால், லக்ஷ்மணன் தான் இராமனுக்கு தந்தையா?
நான் சொல்லுறத கேளுய்யா என்பது போல இராமன் ,அத்தா என பயன்ப்படுத்தி பேசுவதாக கம்பர் எழுதியுள்ளார்.
ஐயன் என்றால் தலைவன் , எனவே குடும்பத்தலைவர் என சொல்லப்பயன்ப்படுத்தலாம்,ஆனால் அதன் நேரடிப்பொருள் "தந்தை" அல்ல.
மனைவி கணவனை "அத்தான்" என அழைப்பது தன்னுடைய கணவனை தலைவனாக கருதி தானே அன்றி அப்பாவாக நினைத்தல்ல.
அத்தா -> அத்தான்
தலைவா -> தலைவன்
தொடர்ச்சி...
ReplyDelete# //சக +உதரன் (வயிறு) அதாவது ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் கருத்துக் கூறுவர். ஆனால் ச என்ற தமிழ் எழுத்தின் ஒலிக்கு (Sounds and Letters ) சேர்ந்து அல்லது சேருவது என்றும் பொருள். தமிழ் மட்டுமல்ல, சமக்கிருதமும் பல தமிழ்ச் சொற்களை இரவல் வாங்கியுள்ளது, அதனால் ‘சக’ என்ற சொல் ச என்ற தமிழ் வேர்களிலிருந்து வந்திருக்கலாம் தானே. //
இதுல இன்னொருத்தர் ரொம்ப விளக்கமா ,சகோதரன் தமிழ் தானு சொல்லி , பிரிச்சு விளக்குறார் ஆனால் அவர் பிரிச்சு விளக்கிய ரெண்டுமே வடமொழி.
சஹோதர் என்பது வட மொழிச்சொல், அதனை தமிழில் சகோதரன் ஆக்கிட்டாங்க அவ்வளவே.
சஹ - உடன் இருப்பவர்.
உதர் - வயிறு
இரண்டுமே வடமொழி சொற்கள்,தமிழல்ல. அப்புறம் எப்படி சஹோதர் = சகோதரன் மட்டும் தமிழாகும்.
தமிழில் சொல்ல வேண்டுமானால்,
தமையன், தமக்கை என சொல்லலாம்.
எளிமையா அண்ணா ,அக்கா சொல்லிட்டு போயிடலாம்.
மும்பையில் டான்களை "பாய்" என அடைமொழியுடன் அழைக்கும் கலாச்சாரமுண்டு.
உ.ம்: வரதாபாய்
ஹி..ஹி தலைவா படத்தில் கூட "பாய்" என்பதை தமிழில் சொல்லனும்னு "அண்ணா"னு பயன்ப்படுத்தி கடைசியில சர்ச்சையில் சிக்கிட்டாங்க :-))
வவ்வால் ;-) உங்கள் உண்மைப் பெயரில் எழுதுங்கள். உங்கள் ஐயங்களுக்கெல்லாம் பதில் தருகிறேன். முகமூடிகளுக்கு பதில் சொல்வதில்லை என்பது என் பாலிசி ;-)
ReplyDeleteபுஹாரி,
ReplyDelete//முகமூடிகளுக்கு பதில் சொல்வதில்லை என்பது என் பாலிசி ;-)//
கட்டுக்கதை விடுறவங்க எல்லாம் இப்படித்தான் "பாலிசி" வச்சுப்பாங்க ,இல்லைனா சமாளிக்க முடியாதுல :-))
இப்பதிவு அறைவேக்காடு தனமானது என தெரிஞ்சும் நான் , நிதானமாகவே பதில் சொன்னேன், ஆனால் நீங்க ரொம்பவே பிகு பண்றத பார்த்தா .. பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்குமோனு தோனுது :-))
ஆனால் இதே போல கதை விட்டுக்கிட்டு இருந்தா , அடியேன் அழையா விருந்தாளியா வந்து நாலு மொத்து மொத்திட்டே செல்வேன், யாருக்கு வேணும் உங்க அறைவேக்காட்டு பதில் :-))
//வியாசன் உணர்வுகளோடு நிற்கிறாரே தவிர உண்மைகளோடு நிற்கவில்லை.அவர் ஆதாரங்களைக் கொண்டு எதையும் உரையாடவில்லை. அவரின் ஆதங்கத்தைக் கொண்டே உரையாடுகிறார்.//
ReplyDeleteசகோ.புகாரி,
நீங்கள் என்ன தான் வார்த்தை ஜாலம் காட்டினாலும் இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசினாலும் அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அதை அவர்களே ஆணித்தரமாக உலகமெல்லாம் கூறுகிறார்கள்.
நீங்கள் கேட்க விரும்புவதை நிரஞ்சன் தம்பி கூறுகிறார் அவ்வளவு தான். நீங்கள் எதோ நடுநிலையாளர் போல தீர்ப்புக் கூறுகிறீர்கள். இங்கு நான் ஒன்றும் விவாதம் செய்யவில்லை, நிரஞ்சன் தம்பி தமிழரல்ல, அவரது பூர்வீகமும் ஈழம் அல்ல அவர் ஒரு மலையாளி என்பது தான் என்னுடைய கருத்து. அதில் எனக்கொரு சந்தேகமுமில்லை. அதனால் தான் நான் அவருக்கு இங்கு பதிலளித்தேன்.
//சக +உதரன் (வயிறு) அதாவது ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் கருத்துக் கூறுவர். ஆனால் ச என்ற தமிழ் எழுத்தின் ஒலிக்கு (Sounds and Letters ) சேர்ந்து அல்லது சேருவது என்றும் பொருள். தமிழ் மட்டுமல்ல, சமக்கிருதமும் பல தமிழ்ச் சொற்களை இரவல் வாங்கியுள்ளது, அதனால் ‘சக’ என்ற சொல் ச என்ற தமிழ் வேர்களிலிருந்து வந்திருக்கலாம் தானே. //
ReplyDeleteஏலே பஞ்சாயத்து,
'வந்திருக்கலாம்' என்பதற்கும் 'வந்தது' என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியாதா. :))
நான் Etymologist இல்லை. அதாவது 'சக' என்ற சொல் தமிழிலிருந்து 'வந்திருக்கலாம் தானே ', என்றால் தீர்க்கமாக தெரியாது என்பது தான் கருத்து . உங்களுக்குத் தெரிந்தால் 'சக' என்ற சொல்லின் Root Word ஐக் கூறுங்கள் பார்க்கலாம். சமக்கிருதமும் தமிழிலிருந்து நிறைய சொற்களை இரவல் வாங்கியிருக்கிறது.
////ஐயன் என்றால் தலைவன் , எனவே குடும்பத்தலைவர் என சொல்லப்பயன்ப்படுத்தலாம்,ஆனால் அதன் நேரடிப்பொருள் "தந்தை" அல்ல.////
பஞ்சாயத்து,
எனக்கென்னமோ அத்தா என்ற சொல் அப்பா, தந்தை என்பதைத் தான் குறிக்கும் என்பது தான் சரியாகப் படுகிறது. லட்சுமணன் ராமனுக்கு இளையவன் என்பதால், அவன் தனது தம்பியை பேச்சு வழக்கில் அப்பா என்று விளித்திருக்கலாம். அது இன்னும் இலங்கையில் பரவலாக உள்ளது, சின்னத் தம்பியை அன்பாக, அப்பா, அப்பு, ராசா என்று அவர்களிடம் பேசும் போது கூறுவார்கள். அப்படித்தான் “'அத்தா! இது கேள்' என ராமன் லட்சுமணன் பேசுகிறான் என்கிறார் கம்பர் என்றும் கொள்ளலாம் அல்லவா? :)
ஆனால் அதே கம்பர் யுத்தகாண்டத்தில் அத்தா என்ற சொல்லை தந்தைக்கு பயன்படுத்துகிறார்.
1.
'அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே;
பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙனே?
ஈசன் ஆய உன்னை நீ உணராய்!
நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?' 9
(கம்பராமாயணம், யுத்தகாண்டம்)
பொருள்:
அத்தன் - தந்தை. அல்லவை - பிற உறவுகள்
'பின்' என்றது பின் நிகழும்காரியத்தையும் 'முன்'
என்றது காரியத்துக்கு முன் உள்ள காரணத்தையும்
உணர்த்தும் என்பதும் ஒரு பொருள்; அதுவும்
பொருந்தும்."அத்தனாகி அன்னையாகி ஆளும்
எம்பிரானுமாய். ஒத்தொல்லாத பல் பிறப் பொழித்து
நம்மை ஆட் கொள்வான்' என்ற திருச்சந்த விருத்தம்
ஒப்பு நோக்கத் தக்கது 'பேறும் நீ இழவும் நீயே'
என்பது 'நல்குரவும் செல்வும்' நரகும் சுவர்க்கமுமாய் வெல் பகையும் நட்பும்விடமும் அமுதமுமாய், பல்வகையும் பரந்த பெருமான்' என்ற திருவாய் மொழியுடன் ஒப்பிட்டு உணரத்தக்கது 'உன்னை நீதானும் உணராதாய் உன் வடிவம் தன்னை நீகாட்டத் தளைந்திடுவன் நான்' என்ற வில்லி பாரதம் (வில்லி.கிருட்டினன் தூது ஒப்புநோக்கத்தக்கது. தன்னை உணராத தகைமை பெருமானுக்கு உண்டு எனக் கம்பர் பின்னும் குறித்துளார்.
2. திருவெம்பாவையில் மாணிக்கவாசகரும் அத்தன் என்ற சொல்லை தந்தை என்பதற்கு தான் பயன்படுத்துகிறார். அதனால் அத்தன் என்பது நிச்சயமாக தந்தை தான்.
“முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
‘அத்தன்’ ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்:
என் அத்தன் ஆநந்தன் அமுதன் என்றள்ளூறி= ஈசனை என் அப்பன், என் தந்தை இன்பமே வடிவானவன், அமுதமானது அதை உண்டவரை எவ்வாறு வாழ்விக்கிறதோ அவ்வாறே ஈசனின் நாமத்தை நினைப்பவரையும், சொல்பவரையும் வாழ்விப்பவன் என்று உன் வாயில் எச்சில் ஊறும் வண்ணம் தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடைதிறவாய்= இனிமையான மொழிகளைப் பேசுவாயே, இப்போது வந்து உன் வீட்டு வாசல் கதவைக் கூடத் திறக்காமல் இருக்கிறாயே?? வந்து கதவைத் திற. என்று இவ்விதம் தோழிப் பெண்கள் கூற வீட்டினுள் இருப்பவள் உள்ளே இருந்த வண்ணமே கூறுகிறாள்.பத்துடையீர்= இந்தப் பத்துடையீருக்கு இருவிதமான பொருள் சொல்லப் படுகிறது. ஒரு பொருளானது ஈசன் மேல் தீராத பற்றுடைய பக்தர்கள் என்றும், மற்றொரு பொருள், சிவனடியார்களுக்குப் பத்து குணங்கள் உண்டு எனவும் அதைச் சுட்டுவதாயும் கூறுகின்றனர். எது சரியான பொருள் எனக் கற்றறிந்த அறிஞர்களே தெளிவாக்கவேண்டும். அடியார்களுக்கான பத்து குணங்களாய்ச் சொல்லப்படுபவை
முட்டு முட்டு முட்டு ! வவ்வால்ஜி நீங்க ஏன் வந்தீங்க இங்கே, இது நம்மள மாதிரி ஆளுங்க தளமில்லை. கருத்துக்களை வாசித்த போது சிரிப்பு சிரிப்பாத் தான் வருது. நிரஞ்சன் சொல்றது குழப்புது, ஆனால் சிந்திக்கவும் தூண்டுது. பழநி முகாமில் ஒரு ஈழத் தமிழரை சந்தித்தேன் சில ஆண்டுகளுக்கு முன், அவர் பூர்விகம் கேரளவாம், மூன்று தலைமுறைக்கு முன் மன்னார், வவுனியா இங்கே எல்லாம் செட்டில் ஆகி, மலையாள தொடர்பே இல்லை. 1990-களில் இந்தியாவுக்கு வந்தவர் ஈழ அகதி முகாமில் தான் உள்ளார். அவரை ஈழத் தமிழர் என்று தான் பதிவாகி இருக்கு. வட கிழக்கில் குடியேறிய பல தென்னிந்தியர் காலப்போக்கில் ஈழத்தமிழராக மாறி கலந்து இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன்.
ReplyDeleteதற்புகழ்ச்சியும், தலைக்கனமும் தாழ்வுமனப்பானமைக்கு அடையாளம். :)))
Deleteஓய் வியாசர்வாள்,
ReplyDelete//வந்திருக்கலாம்' என்பதற்கும் 'வந்தது' என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியாதா. :))
நான் Etymologist இல்லை. அதாவது 'சக' என்ற சொல் தமிழிலிருந்து 'வந்திருக்கலாம் தானே ', என்றால் தீர்க்கமாக தெரியாது என்பது தான் கருத்து . உங்களுக்குத் தெரிந்தால் 'சக' என்ற சொல்லின் Root Word ஐக் கூறுங்கள் பார்க்கலாம். சமக்கிருதமும் தமிழிலிருந்து நிறைய சொற்களை இரவல் வாங்கியிருக்கிறது.//
சஹா மட்டுமா சொன்னீர், உதரம் என்றால் வயிறுனு தமிழாக்கியது ஏனோ, ரெண்டுமே வட மொழினு சொன்னேன், சஹாவுக்கு மட்டும் ரூட் கேட்கிறீர்.
இங்கேப்பாரும்,
http://vedabase.net/s/sakha
கிளை,நண்பன், உடன் இருப்பவர் என வடமொழி ஆதாரங்கள் கொடுக்கிறார்கள், சிரிமத் பாகவதத்தில் எல்லாம் சஹா என வருகிறது.
இதில் எல்லா சமஸ்கிருத சொல்லுக்கும் பொருள் பார்க்கலாம், உதர், உதர, சஹோதர என போட்டு பாரும் எல்லாம் தெரிய வரும்.
http://spokensanskrit.de/index.php?tinput=udara&script=&direction=SE&link=yes
# //எனக்கென்னமோ அத்தா என்ற சொல் அப்பா, தந்தை என்பதைத் தான் குறிக்கும் என்பது தான் சரியாகப் படுகிறது. //
அப்பா என்ற சொல்லை "அத்தா" குறிக்கவில்லை என சொல்லவில்லை, அத்தா ,அப்பாவுக்கு மட்டுமான சொல் இல்லை என்றே சொல்லி இருக்கிறேன், எனவே தான் தேவாராம், கம்ம்பராமாயணத்திற்கு உரை எழுதியவர்கள், அய்யன், தலைவன் என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.
அப்பா என்ற சொல்லே ஆதித்தமிழனிடம் இல்லை, சமய இலக்கியம் வந்த பின்னரே புழக்கத்திற்கு வந்தது என புஹாரி சொல்லிவிட்டு, அத்தா, அத்தன் என்பதற்கு சான்றாக , கம்பராமாயணம், தேவாரம் என சமய இலக்கியங்களையே உதாரணம் காட்டும் உங்களிருவரின் "அறிவை" என்னானு சொல்றது :-))
அப்பா என்ற சொல் ஆதியில் இருந்தே தமிழில் உண்டு, இல்லை எனில் வெகுவாக ,அழகப்பன், கண்ணப்பன், வெள்ளையப்பன் என்று பெயரிலேயே அப்பன் என சேர்த்து வைக்கும் பழக்கம் எல்லாம் புழக்கத்தில் வந்திருக்காது.
இன்னும் சொல்ல போனால் உலகில் உள்ள எல்லா மொழியிலும் ,அம்மா என்ற சொல் "மா" என்ற ஒலியிலும்,அப்பா என்ற சொல் "பா" ஒலியிலுமே இருக்கும்.
அம்மையப்பன் என்பதெல்லாம் பழங்காலம் தொட்டே புழக்கத்தில் உள்ள ஒன்று.
இஸ்லாமியர்கள் 'அத்தா" என்பதால் அது மட்டுமே உண்மையான தமிழ் என்பதெல்லாம் , நகைப்பிற்குரியது.
அத்தா என்றால் அப்பா என்று மட்டும் என சொன்னால்,
சின்ன +அத்தா = சின்னாத்தா என்பது சித்தப்பா ஆகிடுமா?
அத்தன்,அத்தா என்பதற்கெல்லாம் "ஸ்ட்ரிக்ட்" ஆ ,அப்பா என்ற பொருள் இல்லை என்பதால் தான் வெகுவாக வழக்கத்தில் இல்லை.
அத்தையின் கணவருக்கு அத்தன் என்ற பெயரும் உண்டு, இருவரின் ஆண் மகனுக்கு ,அத்தான் என்று பெயர், எனவே தான் கட்டிக்கொள்ளும் முறைப்பெண் அத்தான் என்கிறாள்,
"அத்தை மகனே அத்தானே
உன் அழகை கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லை கொத்தானேன்
என ஒரு பழைய திரைப்பாடல் கூட உண்டு ,படம் பெற்றால் தான் பிள்ளையா.
தென்மாவட்டங்களில் ,அப்பாவை "ஐயா" என்று அழைப்பது வழக்கம், கொங்கு நாட்டில் ஐயன் என்பார்கள், அதே சமயம் மரியாதைக்கும் ஐயா, ஐயன் என்று அழைப்பதுண்டு. இன்னும் சொல்லப்போனால் "ஐ" என்ற ஒற்றை எழுத்தே தலைவனை குறிக்கும், எனவே இதல்லாம்ம் வச்சுக்கிட்டு ,ஐ,அய்யா, அய்யன் என்பது மட்டும் தான் அப்பாவை குறிக்கும், அப்பா என்றே சொல்லே தமிழனுக்கு சொந்தமில்லை என சொன்னால் என்னாவது?
# இம்புட்டு வியாக்கியானம் பேசும் வியாசர்வாள், ஏன் "பாய்" என்பது இஸ்லாமிய கலாச்சாரம், உருது மூலம் என்ற தவறான தகவலை மறுக்கவேயில்லை, இப்பதிவில் உள்ளது போல வட இந்தியாவில் போய் சொன்னா மூக்கால சிரிப்பாங்க :-))
பதிவே அடிப்படையற்றது,அதில மாஞ்சு மாஞ்சு பேசிட்டு இருக்கீர் :-))
--------------------
//இம்புட்டு வியாக்கியானம் பேசும் வியாசர்வாள், ஏன் "பாய்" என்பது இஸ்லாமிய கலாச்சாரம், உருது மூலம் என்ற தவறான தகவலை மறுக்கவேயில்லை, இப்பதிவில் உள்ளது போல வட இந்தியாவில் போய் சொன்னா மூக்கால சிரிப்பாங்க :-))//
Deleteஇலங்கையில் பாய் என்றெல்லாம் அழைப்பது குறைவு. காக்கா மட்டும் தான், அதனால் பாய் ஐப் பற்றி நான் அல்லட்டிக் கொள்ளவில்லை, என்ன இருந்தாலும், எல்லோராலும் உங்களைப் போல சகல கலா வல்லவனாக முடியுமா? :))
//சின்ன +அத்தா = சின்னாத்தா என்பது சித்தப்பா ஆகிடுமா?
Delete//
பஞ்சாயத்து,
கண்ணாடியைக் கழற்றி விட்டு ரைப் பண்ணுகிறீர்கள் போலிருக்கிறது, மாட்டிக் கொள்ளுங்கள். :))
சின்ன + ஆத்தா (அம்மா) = சின்னாத்தா
அத்தா இல்லை.
இக்பால்,
ReplyDeleteவாங்க, எல்லாம் உங்களை பற்றித்தான் பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,நீங்க என்னடானா சத்தம் காட்டாம இங்கே வந்துட்டிங்க, கொஞ்ச காலம் விடுப்பு எடுத்திருக்கிங்கனு நினைக்கிறேன், மீண்டும் வாங்க.
தளம் பற்றி வாசித்தாலே புரியுது, ஆனால் நாம அப்படிலாம் பாகுபாடு பார்ப்பதில்லை, சரினா, சரி ,தப்புனா தப்புனு "கருத்து" சொல்லிடுவோம்ல ஹி...ஹி எதாவது கருத்து சொல்லலைனா நம்மளை காணாமல் போனவங்க லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க பயப்புள்ளைங்க அவ்வ்!
//வட கிழக்கில் குடியேறிய பல தென்னிந்தியர் காலப்போக்கில் ஈழத்தமிழராக மாறி கலந்து இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன்.//
நீங்க சொல்வது சரிதான்,
வெள்ளையர்கள் காலத்தில் ,ஆந்திரா,கர்நாடகா, கேரளா எல்லாம் இல்லை, மெட்ராஸ் பிரசிடென்சி ,ஹைதராபாத் நிஜாம்,திருவாங்கூர் சமஸ்தானம் தான், இன்றைய ஆந்திரா(சீமாந்திரா),கர்நாடக,கேரளப்பகுதியில் இருந்து போனவர்களும் "மதராசிகளே" அதாவது தமிழர்கள் தான். அவங்க தான் குடியேறிய இலங்கை தமிழர்களாக மாறியது,எனவே அவர்களை மலையாளி,தெலுங்கன் ,கனடன் என இப்போதைய நிலவரப்படி சொலவ்தே தவறு.
மேலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளம், தெலுகு,கனடம் என்ற தனி மொழிலாம் இல்லை,அப்படி இருக்கும் போது மொழி அடிப்படையில் அப்போதைய வசிப்பிடங்களை சார்ந்தவர்களை பிரிப்பதே தவறு.
ஆனால் வியாசர்வாள் தான் மட்டுமே தமிழினத்தின் ஒரே பிரதிநிதி போல யாரெல்லாம் தமிழன் என கிளாசிபிகேஷன் செய்துக்கிட்டு இருக்கார் :-))
இக்பால் என உங்க பெயரில் இருப்பதால் ,அரேபியர் என சான்று கொடுத்தாலும் கொடுப்பாரு :-))
//இக்பால் என உங்க பெயரில் இருப்பதால் ,அரேபியர் என சான்று கொடுத்தாலும் கொடுப்பாரு :-))//
Deleteஇந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்துக்காக தனது பெயரையே மாற்றிக் கொண்ட அவரைப் போன்றவர்களை போற்றிப்புகழ வேண்டும், அதனால் அரேபியர் என்றெல்லாம் நிச்சயமாக சான்றிதழ கொடுக்க மாட்டேன். :)))
//மேலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளம், தெலுகு,கனடம் என்ற தனி மொழிலாம் இல்லை,அப்படி இருக்கும் போது மொழி அடிப்படையில் அப்போதைய வசிப்பிடங்களை சார்ந்தவர்களை பிரிப்பதே தவறு.
ReplyDelete//
1500 ஆண்டுகளுக்கு முன்னாள் இலங்கையில் குடியேறியிருந்தால் அவர்கள் இலங்கையில் பூர்வீக தமிழர்கள் தான், அதை யாரும மறுக்கவில்லை. ஆனால் மூன்று தலைமுறைக்கு முன்னால் இலங்கைக்கு வந்து விட்டு, திரும்பி கேரளாவுக்குப் போனவர்கள் எல்லாம் இலங்கையின் பூர்வீக,ஈழத்தமிழர்களாக முடியாது, அவர்கள் மலையாளிகள் தானே தவிர தமிழர்கள் இல்லை.
வணக்கம் சகோ நபி தாஸ்,
ReplyDeleteஇணையப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தங்களுக்கு விரைவில் பதிலும் அளிக்க இயலவில்லை
//அவ்வாறாயின் நீங்கள் இறைவன் உண்டென்பதில் மாற்றுக்கருத்துள்ளவரா ?//
இன்றைய நிலையில் என்னையும் மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதை ஏற்க்கிறேன். ஆனால் அது தூது அனுப்பும்,புத்தகம் கொடுக்கும், சண்டையிட்டால் சொர்க்கம் அளிக்கும் என்றெல்லாம் நம்புவதில்லை.
//• பிற மொழி குரான் என்றால் எது ?//
அரபி அல்லாத பிற மொழிகள்...தமிழ்,ஆங்கிலம்.....
//• எதிலும் பாதிகிணறு தாண்டுவது ஆபத்து. அல்லது ஒதிங்கிவிடுவதே நல்லது. //
ஒதுங்குவது எல்லாம் கிடையாது. உண்மையை புரியவைக்க முயல்வேன் அல்லது புரிந்து கொள்ள முயல்வேன்.
//"பாய்" என்ற விவாதம் தடம் மாறி வேதம், மொழி.... இவ்வாறு தடம் மாறிபோவதைத்தான் எழுதினேன். மற்றபடி உங்களை குறைகூறவில்லை.//
பாய் என்பதே மொழிப்பற்றித்தானே சகோ. அதனால்தான் மொழி பற்றிய பிற கேள்விகளை கேட்க வேண்டியதாகிவிட்டது.
நீங்கள் கூறும் குரானை புரிந்து கொள்ளும் அறிவு என்பதை ஏற்கிறேன் ஆனால் அது அரபியால் மட்டுமே சாத்தியம் என்பதையே எதிர்க்கிறேன். இருப்பினும் அது அது அவரவர் விருப்பம்...பிறர் மீது திணிக்கப்படாதவரை.
நன்றி