.

Pages

Saturday, December 31, 2011

அதிரையில் லஞ்சமா ?


அதிரை : 12/12/2011 ,



இன்றைய உலகில் ஒவ்வொரு ஊரிலும் முக்கிய ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சனைகளில் முதலிடத்தில் வருவது லஞ்சம் ! இதில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகள் ( PROFESSIONAL TAX, SALES TAX, CENTRAL SALES TAX, CUSTOM DUTY, INCOME TAX, Dividend Distribution TAX, EXCISE DUTY , MUNICIPAL & FIRE TAX, STAFF PROFESSIONAL TAX, CASH HANDLING TAX, FOOD & ENTERTAINMENT TAX, GIFT TAX, WEALTH TAX, STAMP DUTY & REGISTRATION FEE, INTEREST & PENALTY, ROAD TAX, TOLL TAX , VAT & etc… ) மூலமாகவே ஒவ்வொரு அரசு ஊழியர்களும் அவர்களுடைய சம்பளமாகப் பெறுகிறார்கள்.


இதில் அவர்களுடைய கடமையை செய்ய எதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும் ? முன்பெல்லாம் அதிகாரத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுத்தார்கள் ஆனால் இன்று முறைப்படி நடக்க வேண்டிய வேலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.


நமதூரில் பட்டா பெயர் மாற்றம் செய்தல், சான்றிதழ் பெற, மின் இணைப்பு பெற, மீட்டர் பொருத்துதல், டாக்குமென்ட் ரெஜிஸ்டர் செய்ய, பாஸ்போர்ட் விசாரணைக்கு, நிலத்தை அளந்து கொடுக்க, புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, பியூஸ் போகும்போதெல்லாம் லைன் மேனுக்கு என இன்னும் பல வேலைகளை முடித்துக்கொள்ள பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார்கள் “ என்று பொதுமக்கள்களிடேய ஒரு கருத்து நிலவுகிறது.

என்னதான் தீர்வு ?


1. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும்.
2. பணத்தை லஞ்சமாக கொடுப்பது சட்டப்படி தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
3. அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்யும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஊழல் ( லஞ்ச ) ஒழிப்பு தினமான டிசம்பர் 9 ம் தேதி அன்று நமது ஊரைச்சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ , மாணவிகள் ஒருங்கிணைந்து அமைதி பேரணி நடத்தலாம். இதனால் நமதூரைச்சேர்ந்த மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள், வர்த்தக சங்கம் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவர்களும் ஒன்று இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் அரசு அலுவலங்கள் முன்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கலாம். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம்.

மேலும் நமது புகார்களை கீழ்க்கண்ட “ VIGILANCE AND ANTI-CORRUPTION “ அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சென்னை அலுவலகம் :-
THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028. Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 Fax : 91-44-24616070
E-mail:
mailto:dvac@tn.nic.in / http://www.dvac.tn.gov.in/

தஞ்சாவூர் அலுவலகம் :-
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Tamil University Post, Thanjavur – 613010.
04362-227100 (Off)
04322-247555 (Res)
cell: 94450-48884

குறிப்பு :-
சகோதரர்களே ! லஞ்சத்தைப் பற்றி தங்களுக்கு எற்பட்ட அனுபவங்களை கீழ் கண்ட “ கருத்துக்கள் “ ( COMMENTS PAGE ) பகுதியில் பதியும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.

1 comments:

  1. லஞ்சம் அது எல்லா துறைகளிலும் தலை தூக்கி இருக்கின்றது.இது இல்லாமல் எதுவும் நடக்காது.அது தான் லஞ்சம்.இப்போது லஞ்சகள் பணமாக போவது கிடையாது பொருள்ளாக மாறி வீடுகளுக்கு செல்கின்றன

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers