.

Pages

Sunday, January 29, 2012

“ V.A.O “ வின் பணிகள் என்ன ?


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

என்னதான் பணிகள் ?
1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.


இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
"கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும்.


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) போன்றோர்கள், பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவர்களின் மேல் துறைச் சார்ந்த நடவடிக்கை எடுக்கக் கீழ்க்கண்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்ளலாம்.

திரு. பாஸ்கரன் IAS
மாவட்ட கலெக்டர் - தஞ்சாவூர்
கச்சேரி ரோடு, தஞ்சாவூர் – 613 001
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி :
collrtnj@nic.in

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ( DRO )
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தொலைப்பேசி எண் : 04362 230150 மின்னஞ்சல் முகவரி : dro.tnj@tn.gov.in மற்றும்
dro.tntnj@nic.in

இறைவன் நாடினால் ! தொடரும்......................

வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?



தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.


இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.


புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இணையதள முகவரி : http://www.tnvelaivaaippu.gov.in/



வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :


1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.


2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.


3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.


4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது ?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்.


5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்


6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?
முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.


7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.


8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.



இறைவன் நாடினால் ! தொடரும்......................

Thursday, January 26, 2012

இந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் !

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “ இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ).


நமதூர் மேலத்தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் “பெரிய மின்னார் “ மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இவ்வமைப்பில் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமதூரைச் சேர்ந்த என்னற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவர்களும் வரலாற்றில் பதியப்பட வேண்டும் ( இன்ஷா அல்லாஹ் ! )


இந்தியா குடியரசுப் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.

மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.


இறைவன் நாடினால் ! தொடரும்...

Saturday, January 21, 2012

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !

“ திரைகடல் ஓடி திரவியம் தேடு “ என்பது பழமொழி !

நமது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம் என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது “ பாஸ்போர்ட்” எடுப்பதற்கே !


பாஸ்போர்ட் எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக்கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.

பணத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள், போலியாக ஆவணங்களைத் தயார் செய்து விசாக்களைப் பெறுகிறார்கள். அதுவும் டூரிஸ்ட் விசா, செங்கன் விசா ( Schengen ) ( இக்கட்டுரையின் கீழே செங்கன் விசாவைப் பற்றி விளக்கியுள்ளேன் )

இவ்விசாவைக் கொண்டு பயணமாகி அங்கே வசிக்கும் தங்களால்
1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ?

2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?

3. ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறிர்களா ?

4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?

5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?

6. ஒரு முறை சென்றுவிட்ட தங்களால் திரும்ப அதே நாட்டிற்கு செல்ல முடியுமா ?

சகோதரர்களே சிந்தியுங்கள் !
வளைகுடா , கிழக்காசிய போன்ற நாடுகளுக்குச் செல்வோரும் போதிய அனுபவம் இன்மையால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் தரகர்கள் சொல்லி அனுப்பிய வேலை ஓன்று ஆனால் அங்கே தரக்கூடிய வேலைகளோ வேறொன்று !

சகோதரர்களே ! இத்தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னதான் தீர்வு ?

1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.

2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.

3. மேலும் நமது அரசு வழங்குகின்ற சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.

4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.

5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

6. இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் தங்களின் ஆங்கில மொழி பேசும் திறமை மற்றும் வேலை அனுபவங்களையும் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

7. விசாக்கள் பெறுவது எப்படி ? என்று அந்தந்த நாட்டின் ஒவ்வொரு வலைத்தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்பற்றலாம். இதனால் செலவுத் தொகைகள் மிச்சமாகும்.

8. மேலும் வெளிநாடுகளில் வாசிக்கக்கூடிய நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு தெளிவு பெறலாம்.

9. நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

10. செலவிற்குத் தேவையான பணம் அமெரிக்க டாலர்களில் ( Traveller Cheque or CASH ) வைத்திருப்பது நல்லது.

11. ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்து, தொடர்பு கொள்ள இலகுவாக ரோமிங் வசதிகளுடன் கூடிய அலைபேசியை வைத்துக்கொள்வது நல்லது.

12. இமிக்ரேஷன் கவுன்டரில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு மன தைரியத்துடன் தெளிவாக, சுருக்கமாக, நாகரிகமான முறையில் பதில் அளியுங்கள். பயப்பட வேண்டாம் அவர்களும் நம்மைப்போல மனிதர்களே !




“ செங்கன் விசா “ ( Schengen ) என்றால் என்ன ?


ஐரோப்பியா யூனியன் நாடுகள் தங்களின் சுற்றுல்லாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டதே “ செங்கன் விசா “ இச்சுற்றுல்லா விசாவில் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளலாம்.

இவ்விசாக்களை எவ்வாறு பெறுவது ?

இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள துணை தூதரகங்களில் அதற்குரிய விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி கீழ்க்கண்ட “ டாக்குமெண்ட்ஸ் ” களை இணைத்து தாக்கல் செய்யலாம்.

தேவையான “ டாக்குமெண்ட்ஸ் ” கள் :-1. “ செங்கன் விசா “ விண்ணப்ப படிவத்தில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் பூர்த்தி செய்துருக்க வேண்டும்

2. நமது பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க தெளிவான நகல்கள் ( செல்லுபடியாகும் கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்குமாரு கண்காணிப்பது அவசியம் )

3. இரண்டு நம்முடைய போடோஸ் ( ஒன்றரை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றொன்றை அதில் இணைத்து ( stapled ) கொடுக்கவும் )

4. உறுதி செய்யப்பட்ட விமான டிக்கட்டுகளின் நகல்.

5. நாம் தங்கக் கூடிய இடத்தின் ( HOTEL ) உறுதி செய்யப்பட்ட ரசீதுகள்.

6. ட்ராவல் / மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்துருக்க வேண்டும்.

7. நிறுவனங்களின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகாலாக நாம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் வங்கி கணக்கின் மூன்று மாத காலம் நாம் செய்து கொண்ட வரவு செலவுகளின் விவரங்கள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

8. நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் மூன்று மாத நாம் பெற்ற சம்பள ரசீதுகள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

குறிப்பு :1. மற்ற நாடுகளுக்கு ( America, Canada, England, Australia, New Zealand ) பயணம் மேற்கொள்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.
2. “ செங்கன் விசா “ வில் பயணம் மேற்கொள்வோர். அந்நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் சிக்கனமான பயணம் இனிதாக அமைய என் வாழ்த்தும் துவாவும் !
இறைவன் நாடினால் ! தொடரும்......................

Tuesday, January 17, 2012

இளம் வயதிலே நிறைய பணம் சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ! தீமையா !


கல்லூரி : ஆலிம் முகமது சாலிக் என்ஜினீயரிங் கல்லூரி
இடம் : ஆவடி, சென்னை
நாணயத்திற்கு இருபக்கம் போல் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களுக்கும் இரு பக்கங்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தால் ஒரு பக்கம் நன்மை விளைகிறது மறுபக்கம் தீமை விளைகிறது. அது இளைஞர்களுக்கே புரிந்து விட்டது.


அதனால் இளம் வயதிலே பணம் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ? தீமையா ? என்று என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளிடேயே நடந்த விவாதத்தில் ( பட்டி மன்றம் ) அக்கல்லூரியின் செயலாளர் ஜனாப். எஸ். சேக் ஜமாலுதீன் அவர்கள் நடுவராக இருந்து தனது இறுதி உரையில்......


பணம் இன்றைய மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. பணம் எல்லோருக்கும் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிப்பது தப்பில்லை. அது அவர்களது திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்த விஷயம்.

பணம் நிறைய நல்லது செய்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு கொடுத்து நல்லது செய்யமுடியும். பணத்தால் விளையும் நன்மைகளை பட்டியல் போடத் தொடங்கினால் அது வெகு நீளமாகும். அதுபோல் பணத்தால் உருவாக்கும் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு “ அதிகம் விளைவது.... “ என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறோம். அதனால் அதிகம் எது விளைகிறது ? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

முன்பு ஒருவர் சம்பாதித்து ஒரு குடும்பமே நடந்தது. ஒரு வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம்தான் இருந்தது. ஒரே ஒரு டி.வி. தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக சாப்பிட்டர்கள். நன்றாக இருந்தார்கள்.

இன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர் சம்பாதிக்கிறார்கள், வீட்டிற்கு இரண்டு, மூன்று பாத்ரூம்கள். இரண்டு, மூன்று டி.வி.க்கள். சவுகரியங்கள் என்று நினைத்து மனிதர்கள் தனித்தனியாக பிரிந்தார்கள். பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக அதிக பணம் சேர்ந்ததே அந்த பிரிவுக்கு காரணம்.

இளம் வயதிலே நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள், அந்த பணத்தால் எதை எல்லாம் அனுபவிக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நேற்றை பற்றிக் கவலை இல்லை. நாளையை பற்றிய நினைப்பும் இல்லை. இன்றுதான் என் கையில் இருக்கிறது அதை முடிந்த அளவு சுவையாக அனுபவித்துவிட வேண்டும் என்று அலைபாய்கிறார்கள்.

உணவில், வீடு உணவின் ஆரோக்கியத்தை மறந்து தினமும் சுவைக்கு பாஸ்ட் புட் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் உடலை குண்டாக்கி, பாஸ்ட்டாக அவர்கள் வாழ்கையை முடிக்கப் பார்க்கிறது தேவையற்ற பொழுதுபோக்குகள் அவர்கள் உடலை கெடுக்கிறது. முறையற்ற வாழ்க்கை அவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கிறது. அதனால் பலர் நாற்பது வயதுக்கு முன்பே நடை பிணம்போல் ஆகிவிடுகிறார்கள்.

அதிகமாக சம்பாதிக்கும் இளைஞர்கள் “ நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை என் தந்தை ஒரு வருடம் சம்பாதிக்கிறார் “ என்று கர்வத்துடன் பேசுகிறார்கள். அதனால் குடும்பத்தில் சுயமரியாதை இழப்பும், தவிப்பும், பிரிவும் உருவாகிறது. இது குடும்பத்தில் ஏற்படும் தீமை.

சமூகத்தை கணக்கிட்டு பார்த்தல், அதிக பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள் என்ற இடைவெளி தற்போது அதிகமாகிறது. பணம் படைத்தவர்கள் மென்மேலும் பணம் சேர்த்து கொண்டாடுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் மென்மேலும் ஏழையாகி திண்டாடுகிறார்கள். பணம் படைத்தவர்களின் கொண்டாட்டங்களையும், சவுகரியங்களையும் பார்த்து பணமற்றவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கங்கள் சமூக பிரச்சனைகளை உருவாக்கிறது.

பணம் ஒரு தரப்பினரிடம் குவியும்போது அங்கே மனித தரம் குறைகிறது பணத்தால் விளையும் தீமைக்கு பல முகங்கள் இருக்கின்றன. அதனை நாம் தினமும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். அந்த அடிப்படையில், “ இளம் வயதில் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது தீமையே ! “ என்று கூறுகிறேன். மேலும் இத்தீமையை குறைக்க இளைய தலைமுறைகளால் முடியும். அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு, நன்மைகள் அதிகரிக்க பாடுபட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இவ்விவாதத்தை ( பட்டி மன்றம் ) முடித்துவைக்கிறேன்.

SOURCE : காலை நாளிதழ்

“ நிருபர் “ என்றால் யார் ?


ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம் :


• செய்தி மோப்பத் திறன் (Nose for News)செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக் கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்கவேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்து இருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்து இருப்பவராகவும் விளங்க வேண்டும்.

• நல்ல கல்வி அறிவுசெய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தால்தான் அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாகவும் அளிக்க முடியும்.

• சரியாகத் தருதல்செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy) தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் ஊகம் செய்து எழுதக்கூடாது.அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்.'எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப்பெறவேண்டும்' என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.


• விரைந்து செயல்படல்செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed)செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம்தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்தசெய்திகளை அனுப்புவார். செய்தியைச் சரியாகப்பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

• நடுநிலை நோக்குதனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக்கூடாது.

• செய்தி திரட்டும் திறன்
செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியைஇனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம்அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத்திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.

• பொறுமையும் முயற்சியும்
செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும்.அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம்சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத்தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து,அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்றவரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம்மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்றதெளிவோடு செயல்படுகிற செய்தியாளர்களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.

• சொந்தமுறை அல்லது தனித்தன்மைசெய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்றுஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.

• நல்ல தொடர்புகள்செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறுதொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும்.மக்கள்தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

• நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும்பொதுமக்களும் வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக்கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்திகொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்திதருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.

• நேர்மை (Honesty)செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச்செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியை வேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல் அறமாகாது.

கையூட்டுப் (லஞ்சம்) பெறாமைசெய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ, வேறுநன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளைமாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும்செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள்.அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர்விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்.செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல்சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.

• செயல் திறன்செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும்செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.

• ஏற்கும் ஆற்றல்புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதியமனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படவேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்கவேண்டும்.

• தன்னம்பிக்கைசெய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும்.

• இனிய ஆளுமை (Personality)செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவான தோற்றமும், இனிமையாய்ப் பழகும் பண்பும் கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும்.அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.

• தெளிவாகக் கூறும் ஆற்றல்செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும்தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச்சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

• மரபுகளைப் பற்றிய அறிவுசமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்கவேண்டும். மரபுகளுக்குமுரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால்கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.


• சட்டத் தெளிவுஎப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படிகுற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்கவேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும்செய்தி ஆக்கினால் அவருக்கும், செய்தித்தாளுக்கும்தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாகஇருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.


இறைவன் நாடினால் ! தொடரும்......................


SOURCE : TAMIL VIRTUAL ACADEMY

Sunday, January 15, 2012

[ 1 ] பயண அனுபவங்கள் – சீனா


இந்தியாவில் கல்வி பயில வேண்டும் !
அமெரிக்காவில் பொருளாதாரம் ஈட்ட வேண்டும் !!
சீன உணவுகளை சாப்பிட வேண்டும் !!!
இங்கிலாந்தில் வசிக்க வேண்டும் !!!

என்பது பழமொழி !

பல்வேறுபட்ட இனங்களைக் கொண்ட சீனா தேசம். தெற்குப் பகுதி , வடக்கு பகுதி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு முறையே “ கேன்டனிஷ் ” மற்றும் “ மேன்ட்ரின் ” என இரு வகை மொழிகள் பேசப்படுகிறது. பல்வேறு மகாணங்களைக் கொண்ட சீன தேசத்தில், என் பயணம் தென் சீனாவில் அமைந்துள்ள தொழிற் நகரம், வரலாற்று நகரம் சுற்றுலா தலம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற “ குவாங்சோ “ ( Guangzhou ) என்ற மகாணத்திற்க்கு..........




பல முறைகள் சீனா சென்றுள்ள நான், எனது முதல் பயணத்தின் சில அனுபவங்கள் இதோ.....................

நேரம் : மாலைப்பொழுது
இடம் : துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
நான் காரிலிருந்து இறங்கியவுடன், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட தயாராகிறார் என்னுடன் பணி புரியும் என் லிபிய நண்பர்......


நேராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போர்டிங் கவுண்டருக்கு சென்று என்னுடைய பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டையும், எனது பாஸ்போர்ட்டையும் கொடுத்து, “ ஹலால் உணவு “ மற்றும் “ ஜன்னல் ஓர சீட் “ போன்ற வேண்டுகோளுடன் இரண்டு போர்டிங் பாஸ்களையும் ( ஓன்று துபாய் – சிங்கப்பூர், மற்றொன்று சிங்கப்பூர் - குவாங்சோ ) பெற்றுக்கொண்டேன்.


அடுத்ததாக இமிக்கிரேஷன், நடைமுறை பணிகளை அக்கவுண்டரில் முடித்துக்கொண்டு விமானம் புறப்படகூடிய அருகில் உள்ள ஓய்வு அறையில் சிறிது நேரத்தை போக்கினேன்.


அப்பொழுது எனது நினைவுகள் பின்னோக்கி சென்றது...................டேய் மாப்ளே அங்கே சாப்பாடு ஹலாலாக் கிடைக்காது, சைனிஸ்காரன் இங்கிலீஷ் பேச மாட்டான், லொகேஷன் ப்ராப்ளமா இருக்கும் பாரேன்....என்று என்னை பயமுறுத்திய எனது நண்பர்களின் சொற்க்கள் என் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.



மேலும் பதினைந்து மணி நேரப் பயணமாக இருப்பதால் , எனக்கு பெரிய சலிப்பாகவே இருந்தது.


விமானம் புறப்பட தயாராவதை ஒலி பெருக்கியில் அறிவித்தவுடன், நேராக எனக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில் போய் அமர்ந்தேன்.
விமானம் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சுமார் எழு மணிநேரம் முப்பது நிமிடப் பயணம்....................


நேரம் : அதிகாலைப்பொழுது
இடம் : செங்கி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், சிங்கப்பூர்

விமானத்திலிருந்து இறங்கியவுடன் நேராக அருகில் உள்ள அறிவிப்பு பலகையில் “ குவாங்சோ “ செல்லக்கூடிய விமானம் நிறுத்தி வைத்திருக்கிற வாசலின் ( GATE NO. ) எண்னை தெரிந்து வைத்துக்கொண்டேன். காரணம் சில மணி நேரங்களில் அடுத்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலால்..............


தமிழ் அங்கே ஆட்சி மொழியாக இருப்பதால், அங்காங்கே தமிழில் எழுதிய அறிவிப்புகளை கண்டு வியந்தேன். அதேபோல் சுத்தம் ! ( அதான் நம்மூரூ பேரூராட்சி தலைவரு சுத்தத்திற்கு எடுத்துக்காட்ட சிங்கப்பூரைச் சொன்னாரோ ? என்னவோ ! ) ஏர்போர்ட் முழுவதும் சுத்தமாகவும், பாரம்பரிய கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுத்தமான நாடு என்று சொல்லக்கூடிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

விமானம் சிறிது நேரத்தில் குவாங்சோ நோக்கி புறப்பட்டது. சுமார் நான்கு மணிநேரம் சில மணி துளிகள் பயணம்....................


விமானத்தில் இரண்டு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டது. ஓன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளுக்காக. கிடைக்ககூடிய நேரங்களில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் கேட்ட இடங்களில் பூர்த்தி செய்துகொண்டேன்.


அடுத்த சில மணி நேரங்களில் விமானம் தரை இறங்கியது ஒரே பணிமூட்டம் போல் காட்சியளித்தது. சராசரியான வெப்பநிலைகளுடன் கூடிய அந்நகரில் இதுவரையில் ஒரு முறைக்கூட சூரியனை நான் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் சூரியனை எப்பொழுதும் ஒரு வகை வெள்ளை நிறத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்துகொண்டு மறைத்துவிடுவதுதான்.



நேரம் : பகல்
இடம் : பையூன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், குவாங்சோ, சீனா

விமானத்தில் இருந்து இறங்கி நேராக இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளை முடிப்பதற்க்காக கவுண்டரை நோக்கி பயணமானேன். இடையில் சைனீஸ் போலீசார்கள் ஆங்காங்கே செக்கிங் செய்து கொண்டுருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் ஒரே அமைப்பிலும், முகத்தில் சிரிப்பு என்பதையே காணமுடியவில்லை. நம்ம ஊர் "சிரிப்பு" போலீஸ்கள் போல் “ மாமூலாக ” இல்லை அவர்கள். ஆனால் அவர்களின் கண்காணிப்பு “ கழுகு “ பார்வையாக இருந்தது குறிப்பிடதக்கது.


நமது உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்கனவே பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்ப படிவத்தினை அருகில் உள்ள கவுண்டரில் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அங்கே இமிக்கிரேஷன் கவுண்டர்களை இரண்டு வகைகளில் பிரித்து வைத்துள்ளார்கள். ஓன்று உள்நாட்டு பயணிகளுக்காக சில கவுண்டர்களும், மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்காக சில கவுண்டர்களும் என்று.


நடைமுறை பணிகளை முடித்துக்கொண்டு எனது லக்கேஜ்களை தேடி எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தேன்.


எனக்காக ஏர்போர்ட் வெளியில் கையில் பெயர் பலகையுடன் எனது பெயரை “ நஜ்மி “ என்று அதில் எழுதி வைத்துக்கொண்டு ( சீனர்கள் எனது பெயரை “ நஜ்மி “ என்றே அழைப்பார்கள் ) காத்துருந்தான் என் சைனீஸ் நண்பன் “ ஜேம்ஸ் “ அவனது சீனப் பெயர் “ வு ஜியாவ் பாவ் “ !



என்ன சகோதரர்களே, வாயில் நுழைய மாட்டேன்ங்குதா..........! இங்கே அலுவலங்களில் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு சீனர்களும் தங்களுக்கு இரண்டு பெயர்களை வைத்துள்ளனர். ஓன்று சீனப் பெயர், இப்பெயர்களுடன் அவர்களின் குடும்ப இனத்தை அதாவது “ யோ, ஹுய், யீ, ஹேச்சே, துங், மஞ்சு, தை, மியாவ், பூயீ, காவ்ஷான், எலுன்ஸுன், டாங், பாவ், வூ, ஜோவ் இப்படி பல பெயர்களையும் “ அதில் இணைத்துருப்பார்கள். மற்றொன்று இங்கிலீஷ் பெயர், இவை தங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அழைப்பதற்கு இலகுவாக தங்களின் தொழிற்பெயராக கூடுதலாக இணைத்துக்கொள்வார்கள்.

Canton Fair – அனுபவம், சீன உணவு முறைகள், தொழிற்சாலைகள் – பயணம், குவாங்சோ மஸ்ஜித் - ஜும்மா தொழுகை போன்ற எனது அனுபங்களைப்பற்றி வருகின்ற வாரங்களில் பார்ப்போம் ( இன்ஷாஅல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்.....................

Friday, January 13, 2012

சிட்டுக் குருவியை காணவில்லை !

செல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்பதுபோல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது.

செல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.

இக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.

தீர்வுதான் என்ன ?1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்

2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.

3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.


இறைவன் நாடினால் ! தொடரும்.....................

Thursday, January 12, 2012

மேலத்தெருவும் அதன் சிறப்புகளும் !

அதிரையில் உள்ள குறிப்பிடத்தக்க பெரிய தெருக்களில் மேலத்தெருவும் ஓன்று ஏறக்குறைய பத்தாயிரம் நபர்கள் வாழக்கூடிய தெருக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.......இதன் பரப்பளவில் பெரிய விரிவாக்கத்துடன் கூடிய சானா வயல், சவுக்கு கொல்லை, மொந்தன் கொல்லை, கொசுவான்ங் கொல்லை, ரசூல் நகர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு மக்கள்கள் குடிபெயர்ந்து வருகிறார்கள்.


இத்தெருவில் பெரிய குடும்பங்களாக அதாவது “ M.M.S , அண்ணாவியார், K.S.M, N.M.S ( சூனா ), P.M.K, சேக்கனா, V.T , கண்டசால, வாத்தி, சர்க்கரை, பெரிய மின்னார், சிறிய மின்னார், மூனா மூனா, சேனா மூனா, ஆனா மூனா, காவண்ணா, ஆனா கான, எம். எச், கர்ணா (கருணை ), சானா பானா, காவன்னா நெனா, A.K.S, N.K.S, M.A.C, A.S.M , M.R.P , ஊமினா “ போன்ற செல்லமான பெயர்களில் அழைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.( விடுபட்ட குடும்பங்களின் பெயர்களை கருத்து பகுதியில் தெரிவித்தால், இக்கட்டுரையில் இணைக்கப்படும் )


இப்பகுதிகளில் பிரபல தொழில் அதிபர்கள் வசிக்கக்கூடியவர்களாவும், அவர்களின் தொழிலாக விவசாயம் ( தென்னை, நெல் ) , தேங்காய் வணிகம், வியாபாரங்கள், சிறு விவசாய தொழிற் கூடங்கள், REAL ESTATE, SUPER MARKET கள், போக்குவரத்து வாகனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், பேன்சி கடைகள் என்றும் ஏழை எளியோர்களால் நடத்தக்கூடிய சிறிய தொழில்களான டீ கடை, பெட்டிக்கடை, சலூன்கள், சர்பத்-மோர் கடை, இட்லி-தோசை-இடியாப்பம் கடைகள் போன்றவைகளும் தொழிலாக உள்ளன.

குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்கள் தொழில் செய்யக்கூடியவர்களாகவும், பணிபுரியக்கூடியவர்களாவும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மேலும் இப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பெண்கள் தங்களது வீட்டு பொறுப்புகளையும், தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.


இப்பகுதியை சார்ந்தவர்கள் ஆலிம்கள், ஆலிமாக்கள், சுதந்திர போராட்ட தியாகி, சமூக ஆர்வலர்கள், பிரபல அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளின் நிர்வாகிகளாகவும், டாக்டர், அட்வகேட், அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள், பட்டதாரிகள் எனவும் மருத்துவம், பொறியியல், கணினி, வணிகம், தொழிற்பயிற்சிகள் போன்ற படிப்புகளை பயிலும் மாணவ மாணவிகள் எனவும், மார்க்க கல்வியை பயிலும் சிறுவர், சிறுமிகள் எனவும் உள்ளனர்.


மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது.
இத்தெருவின் சார்பாக இரண்டு பேரூராட்சி உறுப்பினர்களும், ஒரு ரேஷன் கடையும் உள்ளது.


இத்தெருவின் முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிற கீழ்க்கண்ட சிலவற்றை பார்ப்போம்............


பெரிய ஜும்மா பள்ளி

ஏறக்குறைய முப்பது ஆயிரம் சகோதரர்கள் வந்து அமர்ந்து தொழுவதற்கு இட வசதிகளுடன் கூடிய பெரிய ஜும்மா பள்ளியாக ஊருக்கே பெருமை சேர்க்கிறது. நமதூரில் உள்ள அனைத்து சகோதரர்களால் ஒருமுறையாவது வந்து ஜும்மா தொழுகையை தொழுத இப்பள்ளியில் பெரிய கஃபர்ஸ்தானுடன் இணைந்து உள்ளது குறிப்பிடதக்கது. இப்பள்ளியின் நிர்வாகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக காட்சி அளிக்கிறது.



செடியன் குளம்



சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது. நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி சென்றுருப்பார்கள்.

M.M.S. வாடி



நமதூரின் சார்பாக ஒரே ஒரு M. L. A ( மாயாவரம் ) , நகராட்சி தலைவர் ( மாயாவரம் ), பேரூராட்சி தலைவர்கள், அரசியல் கட்சியின் தலைவர், கோட்டை அமீர், வார்டுகளின் பிரதிநிதிகள் என்று உருவாக்கிய இடம். மேலும் பல்வேறு மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து முஹல்லவைச் சேர்ந்த பெரியோர்கள் என்று வந்து சென்ற இடம்.


அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் - மஸ்ஜித்
இம்மஸ்ஜித் தெருவின் மேற்குப்பகுதியில் அமைந்து இதனை சுற்றி வசிக்கக் கூடியவர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கின்றது.


தாஜூல் இஸ்லாம் சங்கம்


இச்சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் சிறந்து விளங்குகிறது. இதன் நிர்வாகிகளால் தெருவில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பத்துடன், சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் போன்றவைகளையும் தீர்த்து, நல்ல பல ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் இளைஞர்களால் நடத்தப்படுகிற தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) மும், இத்தாய் சங்கத்துடன் இணைந்து இருப்பதால் கூடுதல் வலிமையுடன் என்னற்ற சேவைப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தப்படுகிறது.


மேலும் இச்சங்கத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டிடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான “ அல் குரான் “ ஓதுதல் பயிற்சியும் வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.


ஹஜ்ரத் சேக் நசுருதீன் – தர்ஹா


ஆன்மிகவாதிகளின் புகழிடமாக விளங்குகிறது. மேலத்தெரு , கீழத்தெரு முஹல்லாக்கள் சார்பாக ஆண்டு தோறும் “ கந்தூரி விழா ” சிறப்பாக எடுக்கப்படுகிறது. மேலும் ” மீலாத் நபி விழா “ ஆண்டு தோறும் இவ்வரங்கில் நடைபெறுகிறது.



பெண்கள் மார்க்கெட்


பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இம்மார்க்கெட்டில் காய்கறிகள், இறால், மீன்கள், ஆடு, கோழி, காடை இறைச்சிகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பெண்களும் பொருள்களை வாங்கிச் சென்று பயனடைகிறார்கள்.


சுலைமாக்கா “ பெட்டிக்கடை




நமதூருக்கு குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஓர் சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் என்னற்ற நண்பர்களை பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை........! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும் சிறந்து விளங்குவது என்பது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.


சூனா வீட்டு பள்ளிக்கூடம்

சூனா வீட்டு பள்ளிக்கூடம்” என்ற பெயருடன் அழைக்கப்படும் அரசு “ தொடக்கப்பள்ளி “ யில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ளது. ஏராளமான வல்லுனர்களை உருவாக்கிய இப்பள்ளிக்கூடத்தால் இத்தெருவிற்க்கு பெருமையே.


விளையாட்டு மைதானம்


வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் “ சார்பாக பல வகை விளையாட்டு போட்டிகள் இம்மைதானத்தில் நடத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் மின் ஒளிடன் நடத்தப்படுகிற வாலிபால் போட்டி மிகவும் பிரபலம். நமதூர் மற்றும் வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்கிறார்கள்.


மேலும் இம்மைதானம், நிக்காஹ் நிகழ்ச்சிகளுக்கு விருந்து உபசரிக்கும் இடமாகவும் பயன்தறுவது கூடுதல் சிறப்பாகும்.


சிறுவர் பூங்கா


தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக அதன் நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்கா மூலம் இத்தெருவைச் சேர்ந்த ஏராளமான சிறுவர் சிறுமிகள், பெண்கள் என பலரும் பயனடைகிறார்கள்.


ரஹ்மது நூலகம்


M. M. S. அபுல் ஹசன் அவர்கள் நினைவாக இளைஞர்களால் நடத்தப்படுகிற ரஹ்மத் நூலகத்தால் அனைத்து தரப்பினரும் தங்களின் சமூக அரசியல், மார்க்கம், கல்வி, ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வுகளுடன் கூடிய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படித்து பயன்பெறுகிறார்கள்.


உடற் பயிற்சிக் கூடம்


ஒரு நேரத்தில் பெரும்பாலான வாலிபர்கள் இங்கே வந்து தங்களின் உடல் வலிமையை ஏற்றிச் செல்வார்கள். தற்பொழுது மிகவும் அடக்கமாக செயல்படுகிறது.

ஹாதியாக்கா டீ கடை



இன்றைய வயோதியர்களுக்கு ஒரு பயனுள்ள கடையாக அமைந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணியளவில் திறக்கக் கூடிய இக்கடையில் டீயும், பண்ணும் வந்து சாப்பிட்டுவிட்டு அதிகாலை பசியை ஆற்றி செல்கிறார்கள். இதற்கென்று ஒரு பெரிய வயோதியர் நண்பர்கள் கூட்டமே உள்ளது.


தண்ணீர் தேக்க தொட்டி ( WATER TANK )


தமிழக முன்னாள் முதல்வர் M.G.R அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இத் தண்ணீர் தேக்க தொட்டி இத்தெருவில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


முடக்குண்டு குளம்


இக் குளம் பெண்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.


புதுக்குளம்


இதன் பெயர் புதுக்குளம் ஆனால் குப்பைக் கழிவுகளால் பழைய குளம் போல் காட்சியளிக்கிறது.

இறைவன் நாடினால் ! தொடரும்.....................
குறிப்பு : நமதூரில் உள்ள மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

Tuesday, January 10, 2012

கொத்தனார் கூலியும்....! வெள்ளிக்கிழமையும்....! !


சகோதரர்களே ! நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனமான உண்மை. அதில் குறிப்பாக வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ நாம் அனைவருக்கும் இருக்கும்.


நமதூரில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 நபர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம்.

நமதூரில் கட்டுமான பணியாளர்கள் கீழ்கண்ட கூலிகளை ஊதியமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.............

மேஸ்திரிக்கு……………............... ரூ.600
கொத்தனாருக்கு.........................ரூ 550
மம்பட்டி – ஆள்...........................ரூ 400
சித்தாள்........................................ரூ 200
இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதன் மூலம் செலவாகிறது.

இதைப்பற்றி நமதூரைச்சேர்ந்த சில பொதுமக்களிடம் விசாரித்த வகையில்...

“முன்பெல்லாம் காலையில் 8 மணிக்கு பணி தொடங்கி மாலை 6 மணி வரையில் வேலை செய்வார்கள். மதியம் சாப்பாடு அவர்களே எடுத்து வருவார்கள். வீடு கட்டுபவர்கள் சார்பில் இரு வேலை தேனீர் ( டீ ) மட்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் காலை 9 to 9.30 மணிக்கு மேல் வேலைக்கு வந்து மதியம் சிறிய தூக்கத்துடன் மாலை 4 to 4.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றனர். மதியம் சாப்பாடு வாங்கி தரவேண்டும் என வேண்டுக்கோளும் விடுக்கின்றனர்.

இதற்கிடையில் அவர்கள் வேலை செய்யும் பொழுது பேசுகின்ற பேச்சு இருக்கிறதே...............அப்பப்பா ! நீங்கள் ப்ளாக்கில் எழுதுவதற்கு இடம் போதாது ! இதனால் வேலை செய்யக்கூடிய நேரங்கள் வீண் விரயமாகிறது. மேலும் செங்கல், ஜல்லி, மணல், டைல்ஸ்-மார்பில்ஸ், போன்றவைகளை வீடு கட்டுபவர்களுக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் “ ஊக்கத்தொகையும் “ விற்பனையாளர்களிடமிருந்து பெற்று விடுகிறார்கள். மேலும் கம்பி கட்டுபவர் மற்றும் செண்ட்ரிங் பலகை அடிப்பவர்களை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆசாரிகளை அறிமுகப்படுத்துதல், டைல்ஸ் ஓட்டும் நபர் என்று இவர்களால் அறிமுகப்படுத்தும் பல நபர்களிடம் இருந்தும் “ ஊக்கத்தொகையும் “ பெற்று விடுகிறார்கள். “
என்று பொதுமக்களின் கருத்துக்களாக உள்ளது.

இதில் நாமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறோம். கட்டுமான வேலைகள் குறிப்பிட்ட நாளில் முடிய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்குதலைக் கொடுத்து கூடுதலாக பணத்தை கொடுத்து அவர்கள் சம்பளத்தை உயர்த்த ஒரு வழி வகுத்து கொடுக்கிறோம். குறிப்பாக அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சிறிய கட்டுமான வேலைகளைப் பெற இத்தவறுகள் அதிகமாக நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் :நமதூரில் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு சகோதரருக்கும் ஜும்மா பெருநாளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தடுக்கும் விதத்தில் “வெள்ளிக்கிழமையை” விடுமுறை தினமாக அனைத்து சகோதரர்களும் பின்பற்றி அன்றைய தினத்தில் யாரும் பணியாட்களை நியமிக்க வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.

இவ்விடுமுறை தினம் கட்டுமான தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களாகிய கொத்தன்னார்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள், ஏலெக்ட்ரிசியன்கள், ப்ளம்பர்கள், டைல்ஸ் ஓட்டுபவர் என வீட்டில் இருந்து பணிபுரியக்கூடிய அனைத்து தொழிலாளிகளும் கடை பிடிக்க வலியுறுத்த வேண்டும்.

மேலும் வெள்ளிக்கிழமைகளில் பழைய வீடுகளை இடிப்பது, அதைப் அப்புறப்படுத்துவது போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

தீர்வுதான் என்ன ?
1. கட்டுமான பணியாளர்களின் சம்பளம் நிர்ணயம் செய்தல் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் போன்றவைகள் சம்பந்தமாக “கட்டுமான பணியாளர்கள் சங்கத்தை” தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து ஓர் இறுதி முடிவை எடுக்கலாம்.


2. நமதூரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கட்டுமான பணியாளர்களுக்காக வழங்கி வருகிற கூலியை கேட்டறிந்து அதன் பிரகாரம் நிர்ணயம் செய்து அவர்களுக்கு வழங்கலாம்.


3. நமதூரில் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அடைக்க கேட்டுக்கொள்ளலாம்.


4. இவ்விசயத்தில் நமதூரைச் சேர்ந்த அனைத்து முஹல்லாவில் உள்ள சகோதரர்களும் ஒன்றுனைந்து ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு முறையை பின்பற்றலாம்.


5. மேலும் நமதூரைச்சேர்ந்த கட்டுமான ஒப்பந்த தொழிலில் ஈடுபடும் சகோதரர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஒரு ஒழுங்கு முறையை பின்பற்ற வலியுறுத்தலாம்.

இதில் அனைத்து தரப்பினரிடம் இருந்து நல்ல ஒரு ஒத்துழைப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால் நிச்சயம் ஓர் சிறிய மாற்றத்தை நமதூரில் கொண்டு வரலாம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்.....................

Friday, January 6, 2012

அதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் !


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !


அதிரை பைத்துல்மால் ( ABM ) ! ( இஸ்லாமிய ஏழைகளின் நிதியகம் ) ‘HELP’ HELP US TO HELP THE POOR என்ற நல்ல ஒரு அடைமொழியுடன் அதிரை வாழ் ஏழை எளியோருக்காக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு “ இயக்கங்கள் சாராத ” மார்க்க வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல திறம்பட “அடக்கமாக “ செயல்பட்டுக் கொண்டுருக்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பு.

ஏறக்குறைய நாற்பதாயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற நமதூரில், நமது சமுதாயம் சார்ந்த மருத்துவ சேவைக்காக இரண்டே இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே உள்ளது. ஓன்று த.மு.மு.க – அதிரை கிளையின் பெரிய வாகனம் மற்றொன்று அதிரை பைதுல்மாலின் ஓர் சிறிய வாகனம் ( OMNI VAN ) . ஆனால் இவைகள் போதுமானவைகள் அல்ல.

மேலும் நமதூரில் இறப்புகள் ( மவுத் ) ஏற்பட்டால், இவ்வாகனங்களைக் கொண்டே தொலைதூரங்களில் வசிக்கக்கூடிய நமது சமுதாய மக்கள்களின் வீட்டில் இருந்து தங்களின் ஜனாஸாக்களை மஸ்ஜித்களுக்கு எடுத்த செல்லப் “ சந்தூக்காக “ வும் பயன்படுத்துகிறார்கள்.


ஆகவே பைத்துல்மால் சம்பந்தப்பட்ட அதன் நிர்வாகிகளே,
நமது சமுதாயம் சார்ந்த சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தங்களால் செயல்படுத்தப்படுகிற மற்ற பொது நலனுக்காக ஒதுக்கக்கூடிய சிறிய நிதியிலிருந்து போதுமான வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய வாகனமாக வாங்குவதற்க்கு முயற்சி செய்யுங்கள். இது மிக்க பயனுள்ளதாக நமது சமுதாயத்தினர்க்கு அமையும்.
1. இப்பெரிய வாகனத்தைக் கொண்டு நமது சமுதாயம் சார்ந்த ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் அவசர மருத்துவ உதவியாக இருக்குமே !


2. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மற்றும் முதல் உதவி செய்யும் நர்சுடன், கூடுதலாக ஓரிரு உறவினருடன் எடுத்துச்செல்ல முடியுமே !!

3. மேலும் நமதூரைச் சேர்ந்த, தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கக்கூடிய நமது சகோதரர்களின் வீட்டில் ஏற்படக்கூடிய இறப்புக்களை ( மவுத் ) நமதூருக்கு கொண்டுவர இலகுவாக இருக்குமே !!!

4. உள்ளூர் ஜனாஸாக்களை எந்த சிரமமும் இன்றி மிக கண்ணியமாக மஸ்ஜித்களுக்கு எடுத்து செல்ல உதவுமே !!!!

5. நமது சமுதாயம் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ உதவி திட்டத்தை இவ்வாகனத்தைக் கொண்டு செயல்படுத்தலாமே !!!!!

இவ்வேண்டுகோளை வைக்க காரணம், நமதூரில் இன்று காலை ஜனாஸா ஒன்றை அதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான ஆம்னி வேன் என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய வாகனத்தில் ரொம்ப சிரமங்களுக்கிடையே ஏற்றிக்கொண்டு மஸ்ஜித் நோக்கி புறப்பட தயாராவதை தற்செயலாக மனது வேதனையுடன் பார்க்க நேரிட்டதே............!

ஜனாஸாக்களை கண்ணியமாக எடுத்து செல்வது என்பது நமது ஒவ்வொரு சகோதரர்களுக்கும் உள்ள கடமை.

அன்புடன்,
M. நிஜாமுதீன்
( 9442038961 )

இறைவன் நாடினால் ! தொடரும்............!!

Wednesday, January 4, 2012

சகோதரிகள் கவனத்திற்கு !

கர்ப்பினிகளுக்கு அரசு ரூ 12,000 / உதவி !
தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான “ டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் “ கீழ் கர்ப்பமுற்ற சகோதரிகளுக்கு ரூ 12,000 / அரசின் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

அரசின் உதவி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி :-

அரசு மருத்துவமனை – அதிராம்பட்டினம்
அரசு ஆரம்ப சுகாதார மையம் – ராஜாமடம்



பிறந்த குழந்தைகளுக்கு இலவச நோய் தடுப்பு ஊசி !!



மேலும் பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் கீழ் கண்ட நோய் தடுப்பு ஊசிகளும் மேற்கண்ட மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.




குழந்தை பிறந்தவுடன் : BCG / Oral Polio / HEPB
6 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
10 வது வாரத்தில் : DPT / Oral Polio / HIB
14 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
9 வது மாதத்தில் : Measles
15 வது மாதத்தில் : MMR
18 வது மாதத்தில் : DPT / OPV / HIB Booster
2 வது வருடம் தொடக்கத்தில் : TYPHOID

“ பெண்டா வேலண்ட் “ தடுப்பூசி :குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்காக தமிழக அரசால் ஒரே தடுப்பு மருந்தாக “ பெண்டா வேலண்ட் “ என்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்களால் போடப்படுகின்றன.

சகோதரிகளே !


அரசு மருத்துவமனைகளில் செலுத்தும் நோய் தடுப்பு ஊசிகள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டு, வீண் விரயமாகும் நம்முடைய பணமும் சேமிக்கப்படுகிறது. ஆகையால் தங்களின் குழந்தைகளுக்கு மேற்க் கண்ட நோய் தடுப்பு ஊசிகளை செலுத்த நமது ஊர் அரசு மருத்துவமனை மற்றும் நமது ஊர் அருகில் உள்ள ராஜமடத்தில் இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி பயனடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



ஒவ்வொரு வாரம் ‘செவ்வாய் கிழமை’ தோறும் கருவுற்ற சகோதரிகளுக்கும், ‘புதன் கிழமை’ தோறும் குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.

இறைவன் நாடினால் ! தொடரும்......................


குறிப்பு : அதிரையைச் சார்ந்த நமது சகோதர வலைதளங்களில் ஒன்றில் இப்பதிவை பதிந்ததால் “ அதிரை சகோதரிகளுக்கு மட்டும் ! “ என்று தலைப்பிட்டுள்ளேன். இவைகளை அனைத்து ஊர்களிலும் உள்ள நமது சமுதாயம் சார்ந்த சகோதரிகள் அனைவரும் பின்பற்றக்கூடியதே

Monday, January 2, 2012

கலப்படம் – ஓர் எச்சரிக்கை !

விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.
இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!! இதோ........



உணவுப்பொருள்.........கலப்பட பொருள்



பால்.......................................... தண்ணீர், ஸ்டார்ச்அரிசி........................................ கல்பருப்பு...................................... கேசரி பருப்புமஞ்சள் பொடி...................... lead chromateதானியா பொடி....................சானி பொடி, ஸ்டார்ச்நல்ல மிளகு....................... காய்ந்த பப்பாளி விதைகள்வத்தல் பொடி.................... செங்கல் பொடி, மரப்பொடிதேயிலை............................. மரப்பொடி, பொடிசெய்யப்பட்டஉளுந்து தோல், ....................................................ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலைபெருங்காயம்..................... மண், பிசின்கடுகு..................................... ஆர்ஜிமோன் விதைகள்சமையல் எண்ணை....... மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
வெண்ணை........................ பிற கொழுப்புகள்பச்சை பட்டானி................பச்சை சாயம்நெய்...................................... வனஸ்பதிஆட்டிறைச்சி.................... மாட்டிறைச்சிமிளகு................................... பப்பாளி விதைபுதியதாக தயாரித்த

புரோட்டவுடன்................. பழைய புராட்டாவைசர்பத் – ஜூஸ்களில்..... சாக்கிரீன்
ஹோட்டல்களில் சோறு

விறைப்பாக வர............. சுண்ணாம்பு

இப்படி பல…………… நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள்.


அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.

உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :


Food Safety Commissioner : Sh. Girija Vaidyanathan ( IAS )
Contact Details : Chennai - 600 003
TEL : 044 24320802, 24335075, FAX : 044 24323942
E-mail : dphpm@rediffmail.com
Status of Laboratories: Food Analysis Laboratory, Medical College Road,
Near Membalam, Thanjavur - 673001

Food Safety Officer for Thanjavur District : Mr. S. Raj Kumar , Mr. N. Chandra Mohan


இறைவன் நாடினால் ! தொடரும்......................

பேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ? – பகுதி ( கஃபர்ஸ்தான் பராமரிப்பு )


தெரு விளக்குகள் பராமரிப்பு :

1. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டும் சோடியம் ஆவிவிளக்குகள் அமைக்க அனுமதிக்கலாம்.

2. தெருவிளக்குகள் மாற்றம் செய்யும் பொது அரசால் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

3. மின்சிக்கணம் கடைபிடிக்க தானியங்கி சுவிட்சுகள் அமைக்கப்பட்டு செலவினம் கட்டுபடுத்தலாம்.

4. மின்கட்டணத்தை கட்டுப்படுத்த மின்சக்தி தணிக்கை ( Energy Audit ) மேற்கொள்ள வேண்டும்.

5. மின்கம்பங்களின் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

6. மின்சாதனங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தபுள்ளிகளின் அடிப்படையில் இறுதி செய்ய வேண்டும்.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் :

1. நகர / ஊரக அமைப்புத்துறையினால் ( DTCP ) முழு மானியமாக ரூ 2.50 லட்சம் வழங்கப்படுகிறது.

2. பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைத்து பயனடையலாம்.

தனிநபர் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் :

1. பயனாளிகள் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள்.

2. குடும்பக்கார்டுகள் வைத்திருக்க வேண்டும்.

3. சொந்த வீடு இருக்க வேண்டும்.

4. மானியமாக ரூ 1000 / வீதம் குடும்பத்திற்கு கழிப்பறை கட்ட வழங்கப்படுகிறது.

கஃபர்ஸ்தான் பராமரிப்பு :

1. கஃபர்ஸ்தானை நன்கு பராமரிப்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

2. கஃபர்ஸ்தான் பகுதியை சுற்றி சுற்றுச்சுவர் அமைதல் அவசியம்.

3. முட்செடிகள் / புதர் நிறைந்த பகுதியாக வைத்துருக்காமல் அழகு மிளிரும் வளாகமாக அப்பகுதி மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

4. தேவையான அளவில் தண்ணிர் வசதி ஏற்படுத்தி வைக்கப்பட வேண்டும்.

5. தேவையான அளவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி வைக்கப்பட வேண்டும்.

6. அணுகுசாலைகள் அமைத்து அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும்.

7. ஜனாஸாக்களை சுமந்து செல்லும் வண்டிகளை ( AMBULANCE ) , பொதுமக்களுக்கு மிகக்குறைந்த வாடகையில் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

இறைவன் நாடினால் ! தொடரும்...............
குறிப்பு : சுடுகாடு : கஃபர்ஸ்தான் என்றும், உடல்கள் : ஜனாஸா என்றும் குறிப்பிட்டுள்ளேன்.Source : Web Site of Tamil Nadu Government

Sunday, January 1, 2012

" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " ( R T I ) !


1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?
எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email :
mailto:sic@tn.nic.in Website : http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra
Chief Information CommissionerRoom No.306, II FloorAugust Kranti BhavanBhikaji Cama PlaceNew Delhi - 110 066.Phone:- 011 - 26717355 E-mail :- s.mishra@nic.in
http://cic.gov.in/

குறிப்பு :மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
இறைவன் நாடினால் ! தொடரும்......................
Pro Blogger Tricks

Followers