உலக நாயகன் கமல் அவர்களுக்கு உங்கள் தீவிர ரசிகன் [ தீவிரவாதியுள்ள ] எழுதும் மடல்...
தங்களுடைய அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து ருசித்து இருக்கும் உங்கள் ரசிகன் கான்.
தங்களுடைய அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து ருசித்து இருக்கும் உங்கள் ரசிகன் கான்.
சமீப காலமாக தாங்கள் எடுக்கும் படங்களில் இஸ்லாத்தை சாடுவதாக சில அமைப்புகள் மூலமாக தான் நான் அறிந்தேன் இருந்தும் தங்களின் படத்தை உதாசினப்படுத்தியதில்லை வெற்றியடைய பாடுபட்டு இருக்கிறேன்.
இன்று தாங்கள் எடுத்து இருக்கும் விஸ்வரூபம் [ படம் ] என்னையும் பாதித்திருக்கின்றது ! என்ன காரணங்கள் என்பதை ஒவ்வொன்றாக நான் வரிசைப்படுத்துகிறேன்.
1. இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகளை தமிழர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?
2. சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் பகத்சிங்கையும் இந்தியர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?
3. இலண்டன்காரனுக்கு [ வெள்ளையனுக்கு ] சுபாசும், பகத்தும் தீவிரவாதி அமெரிக்கனுக்கு ஆப்கானிஸ்தானும், பலஸ்தீனியனும், சதாம் ஹுசேனும் தீவிரவாதி. நீங்கள் அமெரிக்கனா வெள்ளைக்காரனா ? நீங்கள் அமெரிக்கா கண்ணோட்டத்தோடு ஆப்கானை ஏன் பார்த்தீர்கள் ?
4. அமெரிக்கனுக்கு வக்காலத்து வாங்குவது போல் அமெரிக்கன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்பதாய் வசனம் வைத்தீர்களே ஏன் ?
5. ஈராக்கிலும் , ஆப்கானிலும், பலஸ்தீனிலும் [ இஸ்ரேல் ] குழந்தைகளை கொன்றக் காட்சிகளை செய்திகளில் தாங்கள் பார்க்க வில்லையா ?
தங்களின் இந்த செயல் ஆஸ்கருக்காக ஆசைப்பட்டு அமெரிக்கா கண்ணோடத்தோடு ஆப்கானை பார்த்து [ ஆப்கானியர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே ] படம் எடுத்தது என்பதாய் நான் உனர்கிறேன்.
நிறைய பிரச்சனைகளை இதன் மூலம் சந்தித்துவிட்டீர். இனையதளத்தில் வெளியிட தியேட்டர்காரர்கள் எதிர்த்த பொழுது, இந்த படத்தின் உரிமையாளன் நான். இது எப்படி வெளியிட வேண்டும் என்பதை நான் தான் முடிவெடுப்பேன் என்று வீராப்போடு பேசியதை நானும் ரசித்தேன்.
இஸ்லாமியர்கள் தங்கள் படத்தை எதிர்க்கும் பொழுது ,சிறு கூட்டம் என்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 300 ஆதாரங்கள் இருக்கின்றது என்று மேலும் எங்கள் மனதை புண்படுத்தினீர்கள் !
இன்றோ இந்த மாநிலத்தை அல்லது இந்த நாட்டை விட்டே வெளியேறப்போகிறேன் என்கிறீர்கள் ! உங்களுடைய கர்வம் என்னானது ? தாங்கள் பிறந்த மன்னை விட்டு போக நாங்கள் விடமாட்டோம்.