தேடித்தான் தந்தாரே தேவநேசர் "நல்லடிமை" 5
ஆடித்தான் பாரேன் அதுபோன்றே - ஈடில்லா
ஆனந்தம் உண்டாம் அதனிலே மாறாக
ஈனமாமே வாழ இழிவு.
இழிவல்ல நல்லடிமை இல்வாழ்வில் என்றும் 6
அழித்திட்டே உன்னாசை ஆங்கே - விழிக்கச்
செழிப்பான வாழ்வுகள் சேர்ந்திடுமே வல்லோன்
வழியாக நிற்பதே வாழ்வு.
வாழ்வுகள் எல்லாம் வழிப்படும் வாழ்ந்திடத் 7
தாழ்மையே பூரணத் தன்னகமாய் - வாழ்ந்த
வழிதனை நீபற்ற வள்ளல் பெருமான்
வழியன்றி வேறில்லை வாழு
வாழவேண்டும் நாமற்ற வண்ணம் தலைவனை 8
ஆழமாகக் கொண்டே அகத்திலே - தாழக்
கிடப்பினும் சிங்கத்தின் கீர்த்திபோல் மங்கா
இடத்திலே நின்னை இடு.
ஆடித்தான் பாரேன் அதுபோன்றே - ஈடில்லா
ஆனந்தம் உண்டாம் அதனிலே மாறாக
ஈனமாமே வாழ இழிவு.
இழிவல்ல நல்லடிமை இல்வாழ்வில் என்றும் 6
அழித்திட்டே உன்னாசை ஆங்கே - விழிக்கச்
செழிப்பான வாழ்வுகள் சேர்ந்திடுமே வல்லோன்
வழியாக நிற்பதே வாழ்வு.
வாழ்வுகள் எல்லாம் வழிப்படும் வாழ்ந்திடத் 7
தாழ்மையே பூரணத் தன்னகமாய் - வாழ்ந்த
வழிதனை நீபற்ற வள்ளல் பெருமான்
வழியன்றி வேறில்லை வாழு
வாழவேண்டும் நாமற்ற வண்ணம் தலைவனை 8
ஆழமாகக் கொண்டே அகத்திலே - தாழக்
கிடப்பினும் சிங்கத்தின் கீர்த்திபோல் மங்கா
இடத்திலே நின்னை இடு.
தொடரும்...
நபிதாஸ்