.

Pages

Friday, January 31, 2014

அறியாமை அகன்றால் !?

அறியாமை ஆளுமையை
..........அகம்மாக ஆக்குகின்றாய்
அறிவான உண்மைகளை
..........அறியாமல் நீக்குகின்றாய்

தெளிவானப் போதனையில்
........... தெளியாமல் ஓடுகின்றாய்
அளித்தார்கள் ஈர்ப்பறிவை
..........அலசாமல் நாடுகின்றாய்

இனிதான ஈனமதோ
..........இதமாக ஈர்த்திடுதோ ?
கனிவான வாழ்வுகளோ
...........கசப்பாக மாறியதோ ?

பலதானப் பாதகமோ
..........பண்பாகிப் போனதுவோ !
நலவான நேர்வழியோ
..........நரகாக மாறிடுதோ !

நடிப்பானத் தீமைகளோ
..........நலமாகித் தோன்றிடுதோ !
துடிப்பானப் பாதைகளோத்
..........துணிவாகி ஈர்கிறதோ !

பெரியோரைப் போற்றுகின்ற
..........பெருவாழ்வு மீறுகின்றாய்
புரியாதப் போதனையைப்
..........புறம்பேசி ஏசுகின்றாய்

மனிதாஉன் மாண்புகளோ
..........மடிந்தாகிப் போகிறதே !
இனிதான வாழ்வுகளோ
...........இடிந்தோடிப் போகிறதே !

தெளிவான நாதரிடம்
..........திறன்யாவும் கேட்டிடுவீர்
ஒளிவான வாழ்வையுமே
.........உயர்ந்தோங்க வாழ்ந்திடுவீர்

தெரியாதச் சேதிகளோ
..........தெளிவாகிப் போயிடுமே !
புரியாத வார்த்தைகளோ
..........புகழ்தேடிப் போற்றிடுமே !

இளம்வாழ்வில் ஏகனையே
..........இதயத்தில் ஏற்றிடுவாய்
வளம்வாழ்வு மான்புகளை
..........வதனத்தில் பூத்திடுவாய்

பணிவானப் போக்குகளைப்
.........பலமாக ஏற்றிடுவாய்
தணிவாகிக் கோபமதைத்
..........தகர்த்தாட்டி நீக்கிடுவாய்

தனக்காக வேண்டுபவைத்
..........தமதோர்க்கும் வேண்டுமென்பாய்
புனர்வாழ்வு காட்டிடுவாய்
..........புவியோரும் போற்றிடுவார்

உலகோரும் போற்றிடவே
.......... உனக்கான வாழ்வுகளை
நலமாக நானிலமே
..........நயம்காண வாழ்ந்திடுவாய் !

குணம்யாவும் கோர்வையிலே
..........குலம்போற்ற ஓங்கிடுவாய்
உணவான யாவையுமே
..........உலகோர்க்கே ஈந்திடுவாய்

உனைஈன்றத் தாய்குலத்தோர்
..........உளம்போற்றி வாழ்த்திடுவார்
உனைவாழ்த்தக் காண்பதிலே
..........உவப்பாகிப் பேர்பெறுவார்

அளித்தோங்கி ஆர்ப்பதிலே
..........அகம்யாவும் வாழ்த்திடுதே
தெளிவாகி வாழ்வதிலே
..........திசையாவும் போற்றிடுதே.

நபிதாஸ்

Tuesday, January 28, 2014

நீங்க நல்லா இருக்கணும் !

நீங்க நல்லா இருக்கணும், என்ன எம்.ஜி.ஆர். பாடல் ஞாபகம் வருதா ? நான் பாட்டு பாட வரவில்லை.

'நீங்க நல்லா இருக்கணும்' என்ற சொல்லுக்கு ஈடு இணை ஏதும் உண்டோ என்று கேட்டால் யாரும் இல்லையென்றே சொல்வார்கள். அப்படியாகப்பட்ட அந்த சொல்லை நம்மைப் பார்த்து ஒருவர் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அவர் அப்படி சொல்ல வேண்டுமானால் நாம் அவருக்கு என்ன செய்ய வேண்டும்?

கட்டுகட்டாக பணம் இருந்து என்ன பலன்? அடுக்கு அடுக்காக உடுப்புகள் இருந்து என்ன பலன்? பல தொழில்களுக்கு அதிபராக இருந்து என்ன பலன்? காலா காலமாக சம்பாதித்து என்ன பலன்? கூட்டம் கூட்டமாக நண்பர்கள் இருந்து என்ன பலன்? ஜால்ரா அடிக்க நான்கு பக்கம் நாற்பது பேர் இருந்து என்ன பலன்? அடுக்கடுக்கா மாடிகள் வைத்து வீடுகள் கட்டி என்ன பலன்? நன்றாக பேசக்கூடிய நாக்கு இருந்து என்ன பலன்? கட்டுமஸ்தான் மாதிரி உடல் இருந்து என்ன பலன்? இன்னும் கணக்கில் அடங்கா ஆடம்பரத்தனம் இருந்து என்ன பலன்?

தர்மம் இல்லையேல் ஒரு பலனும் இல்லை. தர்மம் செய்ய நல்ல பெருந்தன்மை கொண்ட மனம் வேண்டும்.

தர்மத்தை அவரவர் வசதிக்கேற்ப செய்வார்கள்¸ அது பணமாகவோ, பொருளாகவோ, நேரமாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். பணம் இல்லாவிட்டால் இருக்கின்ற பொருளை கொடுக்கலாம், பணமும் பொருளும் தர்மம் செய்கின்ற அளவுக்கு போதவில்ல என்றால், தன் நேரத்தையும் வார்த்தைகளையும் சிலவு செய்யலாம்.

சிலர் பணத்தை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் பொருளை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் நேரத்தை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் வார்த்தைகளை தர்மமாக சிலவு செய்வார்கள்,  வார்த்தைகளை தானே சிலவு செய்கின்றோம் என்று சிலர் வானத்தை வில்லாக வளைத்து தருவேன், அப்படி இப்படியென்று பெரிய பருப்பு மாதிரி எல்லாம் வார்த்தைகளை அள்ளிவீசுவார்கள், நீங்க கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும், ப்பூ இவ்வளவுதானா அதை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் அளந்து விடுவார்கள், முடிவில் ஒன்றும் இருக்காது, சூடப்பாகி காணாமல் போய்விடும்.

“தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்” இப்படி அன்று சும்மாவா சொன்னான்?

இன்று எப்படி இருக்கு? தர்மத்துக்கே வேட்டு வைக்கும் காலமாக இருக்குது, வாரி வாரி வழங்கின காலம் போய் பிடுங்கி தின்கிற காலமாக இருக்குது.

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பதும் ஒரு வகையில் தர்மம்தான், எந்த பெற்றோரும் பிள்ளைகள் நாசமாக போக நினைக்க மாட்டார்கள், பெரியவர்கள் சிறியவர்களை கண்டிப்பது நன்மைக்கே தவிர தீமைக்கல்ல. இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள், இன்றைய சிறியவர்கள் நாளைய பெரியவர்கள், மறந்து விடவேண்டாம். புதன் கிழமை போய்விட்டது திரும்ப வராது என்று எண்ணிவிட வேண்டாம், இன்று பணக்காரன் நாளை ஏழை, இன்று ஏழை நாளை பணக்காரன், மாறி மாறி வருவதே வாழ்க்கையும், நிலைமையும், பணம் அது ஒன்றும் இல்லை, அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

ஆக நல்லது செய்யாவிட்டாலும் தீமைகள் செய்யாமல் இருக்கவேண்டு. நாம் எல்லோரும் நல்லா இருக்கத்தான் ஆசைப்படுகின்றோமே தவிர நாசமாக போக நினைக்க மாட்டோம்.

நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதையே தூண்டுவோம், நாம் எல்லோரும் நல்லா இருப்போம்.

நீங்க நல்லா இருக்கணும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, January 27, 2014

பெண் ஜென்மம்

“பூப் போன்ற கனவேந்தி,
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து  கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!
சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
வாழவிட்டால் அதுபோதும் !
 சசிகலா

Saturday, January 25, 2014

நட்பு !?

நல்லது செய்வது நட்பு, நல்லோர்க்கு கிட்டும் நட்பு, நளினமாய் நடக்கும் நட்பு நபிகளாருக்கு கிட்டியது அபூபக்கரின் [ ரலி ] நட்பு எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஹீராக் குகையில் மறைகையில் நடந்த களைப்பில் நபிகளாரின் சோர்வு அபூபக்கரின் [ ரலி ] மடியில் தலைசாய தூக்க மிகுதியால் பொழுது சாய பாம்புகளும் விஷ ஜந்துகளும் குடிகொள்ளும் இடமாதலால் தன்னிடம் உள்ள உடைகாளில் உள்ள அத்துணை துணிகளையும் சிறுது சிறிதாக்கி எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட கடைசியா எஞ்சிய ஒரு ஓட்டைக்கு தன் கால் கட்டைவிரலை பயன்படுத்தி அடைத்த தியாகத்தொழர் அவர் கால் கட்டை விரலை பாம்பு தீண்ட வழியால் துடி துடித்து  மல்கி அவர்கள் வடித்த கண்ணீரில் ஓர் துளி பெருமானாரின் முகத்தில் விழ பதறி எழுந்தவர்கள் என்ன அபூபக்கரே கண்கள் கலங்கி இருக்கிறீர் உடல் வேர்த்து இருக்கிறீர் என்று கேட்டு நடப்புகள் புரிந்து அல்லாஹ்வின் உதவியால் நலவுகள் நடந்தேறிய சம்பவங்கள் நாம் அறிந்ததுதான் இருந்தும் நட்புக்கு இதைவிட வேறு உதாரணம் வேறு சொல்வதற்கு உண்டோ என்பதுபோல் இந்த சம்பவம் சொல்லலாம்.
   
ஒரு பாலினம் கொள்ளும் நட்பு என்பது போற்றுதலுக்குரியது ஆனால் . இருவேறு பாலினம் கொள்ளும் நட்பானது கூடா நட்பாகும் பெண் ஆணிடம் கொள்ளும் நட்பு Boy friend ஆண் பெண்ணிடம் கொள்ளும் நட்பு Girl friend இது மேலை நாட்டு கலாச்சாரம் ஆகுமே தவிர இது இந்திய கலாச்சாரமோ இந்து கலாச்சாரமோ ஆகாது காரணம் முந்தைய இதிகாசங்கள், புராணங்கள், பண்டைய நாகரிகங்களில் எல்லாம் ஆணும் பெண்ணும்  காதலித்ததாகவும், கலவிகொண்டதாகவுமே படித்து இருக்கிறோம் ஆண் பெண் நட்பு கொண்டதாய் எங்குமே கண்டதில்லை ஆண் பெண் நட்பை இந்திய கலாச்சாரம் அங்கீகரித்ததில்லை அவ்வையார் பாட்டியும் அதியமானும் அரசனுக்கும் புலவருக்கும் உண்டான நட்பு ஆண் பெண் நட்பல்ல.
 
மேலும் விரிவாக சொல்லப்போனால் ஆண் தெய்வமும் பெண் தெய்வமும் காதல் வயப்படும் கலவிகொண்டு பிள்ளை பேருகொள்ளும் இந்து மதத்தில். ஆனால் ஆண் பெண் நட்பு அங்கீகாரமில்லை ஆதாரமுமில்லை அதுவெல்லாம் மேலை நாட்டு கலாச்சாரம் என்றே சொல்லும்.
 
இஸ்லாம் சட்டம் அங்கீகாரம் கொண்ட நாட்டில் ஆண் பெண் நட்பும் பாவம் காதலும் பாவம் இரண்டிற்குமே ஒரே தண்டனை அதன் தண்டனை இறைவனால் விதிக்கப்பட்ட தண்டனையாகும் அந்நிய ஆணும் பெண்ணும் நண்பர்கள் ஆகலாம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம் ! காதலர்கள் ஆகலாம் என்பது இந்திய கலாச்சாரம் ! கணவன் மனைவியாக மட்டுமே ஆகமுடியும் என்பது இஸ்லாமிய கலாச்சாரம்.

மு.செ.மு.சபீர் அஹமது

Friday, January 24, 2014

நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ]

'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் கவிதைக்கு முதன் முதலாக குரல் கொடுத்துள்ளார் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் 'புதுசுரபி' ரஃபீக் சுலைமான் அவர்கள்


சத்திய போதனை நித்தமும்  கூறவே
புத்தியைத் தீட்டினர் உத்தமர்த் தோழரே
சுத்தமாய் மாறினர் மொத்தமும் மார்க்கமாய்
எத்தனை சோதனை அத்தனை தாங்கினர்!

அண்ணலின் வாழ்வினை எண்ணிலாத் தோழரும்
கண்ணென  போற்றினர் மண்ணக வாழ்விலே
விண்ணகச் சோபனம் எண்ணியே வாழ்ந்தனர்
புண்ணியம் சேர்த்தனர் கண்ணியம் காத்தனர்!

இன்னலும் நோக்கிடாத் தன்னலம் பார்த்திடாச்
சொன்னதைச் செய்தவர் சொன்னதைச் செய்தனர்
நன்னபிக் கூறிய நன்னெறி மீதினில்
கன்னலாய் ஈர்த்திடத் தன்னுயிர் ஈந்தனர்!

வெம்மையாம் தீயினில் நம்மையும் வீழ்த்திடாச்
செம்மையாம் மார்க்கமும் செம்மலாம் தூதரும்
நம்மிடம் சேர்த்தனர் இம்மையின் வாழ்விலும்
நிம்மதி கூடிட எம்மிடம் தந்தனர்!

இற்றைய வாழ்வினில் வெற்றியை ஈட்டிடக்
குற்றமே  செய்திடா நற்றவப் பாதையில்
பெற்றிடு நேர்வழி; கற்றிடு மார்க்கமும்
உற்றவர் தோழரைப் பற்றியே சென்றிடு

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

'புதுசுரபி' 
ரஃபீக் சுலைமான்

Thursday, January 23, 2014

போலிகள் !?

அறிவுத்தேன் II
உண்மை என்பது சத்தியம். அது நிலைக்கும். அதில் நன்மைகள் மட்டும் இருக்கும். ஒருவருக்கு மட்டும் அல்லமல் எல்லோருக்கும் நன்மைகள் இருக்கும். இலகுவாக அதனை அறிதல் கடினம். ஆனாலும் முயற்சிகள் பலன் தராமல் போவதில்லை. அவ்வாறு அறிவதனால் அவனில் அது நிலைத்து நிற்கும். அது எதற்கும் அஞ்சாது. உண்மையை அறிந்த உள்ளம் அமைதில் ஓர்மையில் நிலைக்கும். கடல் அலைபோல் செயல்படும்.

போலி என்பது அசத்தியம். அழியக்கூடியது. அதிலும் நன்மைகள் இருக்கும். அந்நன்மை எல்லோருக்கும் இருக்க இயலாது. அதிலும் பொது நலம் அன்றி, சுயநலம் மிகுந்து மலியும். அதனால் அந்நன்மை நன்மை போன்ற தோற்றமே அன்றி எனச் சொன்னாலும் மிகையில்லை. காரணம் இந்த நன்மை போன்ற நிலையற்ற இத்தன்மை. சொற்பக் காலம் சுகம் தரும் பின்னால் இவனையே நாசம் செய்யும். அதிலிருந்து இவன் தப்பிக்க முடியாமல் அழிவான். காரணம் அழிதல் அதன் குணம். அதனால் அதனைப் பற்றியோரையும் அழிக்கும். இரும்பும் தணலும் போல் செயல்படும்.

எங்கு பார்கினும் எதிலும் எல்லாவற்றிலும் போலிகள் இன்று அதிகமாகிவிட்டது. மேலும் போலிகளே, தன்னைத்தானே உண்மை என்றும் உண்மைகள் போலிகள் என்றும் அடிக்கடி பிரகடனம் படுத்தப்படுகின்றன.  அது அதன் சுபாவம். இல்லையேல் அது அழிந்துவிடும். உணமை அவ்வாறு செய்யாது. ஏற்கனவே காலத்தாலும், அதன் பயன் பாடினாலும் அது உன்னத நிலையில் இருப்பதால் என்றும் அமைதியுடனே இருக்கும். பிரகனப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் அதற்கு இருக்காது என்பதுப் போலவே தான் அது இருக்கும். இது இதன் சுபாவம்

இதனாலேயே இச்சூழலால் பாமரர்களும் அவர்கள் விரும்பும் உண்மை எதுவென்று விளங்காது போலியே உண்மை என்று நம்பும் நிலை இவ்வுலகில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது.

போலிகள் அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவைகள் கருத்தில், செயலில், பொருளில்  போலிகள்.

கருத்தில் போலிகள்: 
ஒருவர் ஓர் உண்மையைச் சொல்வார். சொல்பவரிடம் அந்த உண்மையின் விளக்கம் தெளிவாக இருக்கும். அவர் சொன்னக் கருத்தை சிலர் அறிந்தோ அறியாமலோ தவறுதலாக விளக்கங்கள் சொல்வார்கள். சிலர் சுய இலாபத்திற்காக திரித்தும் பிறரிடம் சொல்வார்கள். சில உண்மைகள் எடுத்துச் சொல்பவரின் சுபாவத்திற்கேற்பவும் இருக்கும்.

ஒருவர் ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்ற வந்து அதனைப்பற்றி மற்றவரிடம் சொல்ல, அம்மற்றவர் அதனை மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ அச்சுற்றுலா விபரங்களை பிறரிடம் சொல்வார்.

ஒரு துயரச் சம்பவமோ அல்லது ஒரு நிகழ்வோ அது அவரவர் தன் சுபாவங்களுக்கு ஏற்ப அதன் கருத்து திரிந்து சுவைகள் பல கூட்டி காட்டுத் தீ போல பரவும், அதனை வதந்தி என்பார்கள்.

பத்திரிகை செய்திகள் கூட எழுதும் ஆசிரியரைப் பொறுத்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு விதமாக ஒரே சம்பவம் எழுதப்படும். அதனையும் பார்த்து இருப்போம்.

ஒரு சமைக்கப்படும் உணவு அதற்கு தேவையான பொருள்கள் எதுவோ அதனைக்கொண்டு ஒவ்வொருவரும் தன் கை வண்ணத்தால் ஒவ்வொரு விதமாகச் சமைப்பார்கள்.

மனிதனைப் பொறுத்து சொல்லும் உண்மைகள் பல மாதரியாகப் புரிந்துக் கொள்ளப்படும். பாடப் புத்தகத்தில் உள்ள ஒரே பாடம் ஒவ்வொரு ஆசிரியரைப் பொறுத்து ஒவ்வொரு விதமாக பாடம் நடத்தப்படும். உள்ளதை உள்ளபடி சொன்னால் புரிதல் சிலருக்கு இலகுவாக இருக்காது. அதனால் அது இலகுவாகப் புரிய அதனையொத்த கருத்துக்கள் கலந்து சொல்லப்படும். அந்த துணைக் கருத்தைப் பொறுத்து கேட்பவரையும் பொறுத்து புரிபவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்தும்கொள்கிறார்கள்.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். சொல்பவரின் அறிவு, விளக்கம் அவரின் தகுதி தரத்தைப் பொருத்து தவறோ அல்லது பொய்யோ அதுகூட உண்மையாகப் பேசப்படும்.

இவைகளை நடைமுறையில் நாம் கண்டுதான் வருகிறோம். இது போல எழுதிக்கொண்டேப் போகலாம். அவ்வாறானால் எப்படி ஓர் உண்மைக் கருத்தை விளங்கிக் கொள்வது ?
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, January 21, 2014

எது நல்வாழ்வு !?

அன்பெனும் வன்வலையில் ஆட்கொண்ட மாந்தரும்
தன்னுடைச் சித்தம் தவிர்கின்றார் - நன்மைகள்
உண்டெனத் தன்னை உகந்ததாய் மாற்றியுமே
கொண்டதில் சிந்தனைக் கொள்.

கொள்கை அதனிலே கோணல்கள் கண்டாலும்
உள்ளம் அசையாதே உட்படுதல் - பள்ளமெனப்
பாய்ந்தே உலகமெனப் பார்க்கும் கிணற்றினுள்ளே
வீழ்ந்தத் தவளை விதி.

விதிமுறைகள் எல்லாமே வித்தகர் ஆக்கம்
மதித்திடனும் நல்மனதில் மாந்தர் - சதிகாரர்
சூழ்ச்சிகளில் வீழ்ந்திடாதே சுத்தசுயச் சிந்தனைகள்
சூழ்ந்திட்டே வாழச் சுகம்

சுகக்கேடு உண்டாகும் சுத்தம் தவிர்க்க
அகக்கேடு உண்டாகும் ஆங்கே - இகவாழ்வை
சுகமாக வாழ்ந்திடச் சூழ்ச்சிகள் கொண்டே
சகமனிதன் சாகச் சரண்.

சரணமாகி சர்வனிடம் சம்பூர்ணம் கொள்ள
மரணம்தான் ஆகிவிடும் மாயை - கரணமது
போட்டாலும் மாயோன் புகலிடமே நல்இலக்காய்
ஆட்கொள்ள வாழ்தல்தான் அன்பு.

நபிதாஸ்

Monday, January 20, 2014

மிரட்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவது யாரு !?

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையில் மிரட்டல்கள், கணவன் மனைவிக்கு இடையில் மிரட்டல்கள், முதலாளி தொழிலாளிக்கு இடையில் மிரட்டல்கள், ஆசிரியர் மாணவிகளுக்கு இடையில் மிரட்டல்கள். அதாவது மிரட்டல் என்று வந்துவிட்டாலே பல தேசங்களுக்குள், அரசியல் கட்சிக்களுக்குள், இயக்கங்களுக்குள், இனங்களுக்குள், குடும்பங்களுக்குள், பல இடங்களில் பலர் விதவிதமாக மிரட்டுவதை பார்க்கலாம். அப்படிப்பட்ட அந்த எல்லா  மிரட்டல்களையும் ஒரு பட்டியல் போட்டு பேசினால் இந்த வலைதளமே போதாது.

ஏன் மிரட்டுகிறார்கள்? எதனால் மிரட்டுகிறார்கள் ? எதற்காக மிரட்டுகிறார்கள் ? மிரட்டல் என்ற ஆயுதத்தை ஏன் மனதிலும் கையிலும் எடுத்துக் கொண்டு அலைகிறார்கள் ? தான் நினைத்தை சாதித்துக் கொள்வதற்கோ அல்லது அடைவதற்கோ அல்லது வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கோ யாராவது தடையாக இருக்குமேயானால் அவர்களை மிரட்டி காரியத்தை சாதித்துக் கொள்வது.

இன்று சாதாரணமாக நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒரு சில மிரட்டல்களை மட்டும் உங்களுடன் ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தொலைக்காட்சிகள் வராத நாட்களில் அன்று வாழ்ந்த மக்கள் சினிமாவை கண்டு களித்து மகிழ்ந்து வந்தனர், அன்று சினிமாவில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் சரி... காட்டப்பட்ட காட்சிகளும் சரி... நம் வாழ்க்கையோடு ஒத்துபோயின, இருப்பினும் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களோ அல்லது காட்சிகளோ அப்படியும் இப்படியும் இருந்தது. இன்று சினிமாக்களில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, சின்னத்திரைகளில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, குடும்பங்களையும் சமுதாயத்தையும் சீர்குலைப்பதற்கென்றே வந்து கொண்டு இருக்கின்றன.

ஒட்டுமொத்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல முடியாது, நமக்கு தேவையான எத்தனையோ நல்ல விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும் வந்தாலும், தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன, இதில் எதை அதிகம் பார்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பார்த்தலில் தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைத்தான் மக்கள் பார்கின்றனர்.

இன்று பல சீரியல்களில் பத்து சதவிகிதம் தகுந்த வார்த்தைகளையும், தொண்ணூறு சதவிகிதம் தகாத வார்த்தைகளைக் கொண்டு பின்னப்பட்டு, அது ஒரு தொடர்கதைகளாக தொலைக்காட்சிகளில் இருபத்திநான்கு மணிநேரமும் இடைவிடாமல் ஒளி ஒலிபரப்பாகி வருகின்றது. இப்படியாக பல கதைகள் தொடர்கதைகளாக உருவெடுத்து பல சேனல்களில் பல மாதங்களுக்கு சின்னத் திரையில் காண்பிக்கப்பட்டு பல குடும்பங்களையும், குடும்பத்திற்கு வெளியிலும் சமுதாயங்களை குழப்பிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் வருகின்றது.

கதைகளில் காட்டப்படும் தகாத சம்பவங்களில் ஒன்றுதான் மிரட்டல் என்கிற சம்பவமும், இந்தமாதிரி நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் என்றில்லை, சிறியவர்கள் பெரியவர்கள் என்று கணக்கில்லை, ஏக போக அனைவரும் அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் என்பது மட்டும் உண்மை. தொலைக் காட்ச்சிகளில் வரும் கதைகளையும் காட்ச்சிகளையும் பார்த்தும் கேட்டும் இன்றைய சமுதாயம் வெகுவாக சீரழிந்து கொண்டு வருகின்றது என்றால் அதுதான் உண்மையாக இருக்கின்றனது.

பிள்ளைகள் சீரியல்களில் வருகின்ற கதைகளை பார்த்துவிட்டு தங்களுடைய பெற்றோர்களை மிரட்டுகின்றனர் பெற்றோர்களும் பிள்ளைகளின் மிரட்டல்களுக்கு அடிபணிகின்றனர் விளைவு பிள்ளைகள் தன் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர், தகாத நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக்கொண்டு இஷ்டம்போல் ஊர் சுத்துகின்றனர், ஊர் வம்பை வளர்த்துவிடுகின்றனர். கடைசியில் பெற்றோர்கள் தலைகுனிகின்ற நிலைக்கு தள்ளபடுகின்றனர். பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்காமல் வேறு யாரு கண்டிப்பது? நாய் குரங்கா வந்து கண்டிப்பது! எந்த பெற்றோர்களும் தன் பிள்ளை நல்ல நிலையில் இருக்கத்தான் ஆசைப்படுவர்.

மனைவி கணவனுக்கு கீழ்படிய கடைமைப் பட்டவள், ஆனால் அனேக இடங்களில் மனைவி தங்களுடைய கணவனை மிரட்டி அடிமைப்படுத்தி வைக்கின்றனர் இதனால் கணவன் வாயை பொத்திக்கொண்டு அமைதியாகி பெட்டிப் பாம்பைப் போல் ஆகிவிடுகின்றான், இவன் வாயைத் திறந்தால் அவ்வளவுதான் மனைவி அப்படியே ஒரு கொத்து கொத்திவிடுவாள், மனைவியின் இஷடத்துக்கு இவன் தலைகுனிந்து ஆடுகின்றான். இதுதான் கல்லானாலும் கணவனா ? புல்லானாலும் புருஷனா ? இன்றும் நற்குனத்தோடு கணவனுக்கு கீழ்படிந்து நடக்கின்ற சீதேவியான நல்ல மனைவியும் உண்டு, அதே நேரத்தில் கணவனுக்கு கீழ்ப்படியாமல் எடுத்தெறிந்து நடக்கின்ற மனைவிகளும் அநேகம் உள்ளனர். ஒரு மனைவி கணவனுக்கு தெரியாமல் ஒரு கடுகளவேனும் காரியத்தை செய்தால் அதுக்கு அர்த்தம் வேறு, அதை நான் இங்கு எழுத விரும்ப வில்லை.    

சில குடும்பங்களில் சொத்துப் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் மிரட்டுகின்றனர். இலாபம் யாருக்கு ? மூன்றாவது ஆளுக்கு.

பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியமார்கள் மாணவர்களையும் மாணவிகளையும் மிரட்டி எனக்கு இணங்காவிட்டால் உன்னை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டுவதும் சகஜமாகிப் போய்விட்டது, இதை நாம் பல ஊடகவாயிலாக அறிந்துருக்கின்றோம்.

பணிக்கு போய்வருகின்ற பெண்களை பணி செய்யும் அலுவலகங்களிலும், போய் வரும் பாதைகளிலும், பேருந்துகளிலும், இன்னும் பிற இடங்களிலும் அவர்களை மிரட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் ஒரு சில அல்லது பல ஆண் வர்க்கங்கள். மேலும் பணிக்கு செல்லும் சில பெண்கள் தங்கள் உடைகளை அநாகரிகமாக அணிந்துகொண்டு ஆண்களை கிண்டலடித்து மிரட்டி தன் இஷ்டத்துக்கு வைத்துக்கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு பெண் நர்சிங் படிக்க ஆசைப்படுகிறாள் என்றால், அந்தப் பெண் பல நோயாளிகளை கவனிப்பதில் ஆர்வம் காட்டுகின்றாள் என்றுதான் அர்த்தம், ஆனால் இன்றைய நாட்களில் என்ன நடக்குது. அங்கேயும் இந்த ஆண் வர்க்கம் விட்டு வைக்கவில்லை.

தென்னந் தோப்பில் தேங்காய் வெட்டப்போனால் தோட்டக்காரன் மிரட்டுகின்றான், கடலில் மீன் பிடிக்கப்போனால் அடுத்தவன் மிரட்டுகின்றான். பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் நின்றால் வேறு ஒருத்தன் வந்து மிரட்டுகின்றான். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் பார்த்தால் மிரட்டல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு !?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Friday, January 17, 2014

திரும்பி வாரா நொடிகள்...

மடிநீங்கும் பாலும் மடிநோக்கிப் போகா(து)
நொடிநீங்கும் காலம் நுழையக் - கடிகார
முட்களாக மீண்டும் முயற்சித்து வாராத
உட்புகாத் தன்மைதான் உள்ளு.

வாய்ப்புகள் என்னும் வசந்த நொடிகளும்
காய்ப்பதும் பின்னர்க் கனிந்தபின்- தேய்வதும்
ஆகிய நற்பருவம் ஆங்குக் கழிவதும்
ஏகியப் பின்னர் இரா.

கைவிட்ட பின்னரே கைசேதம் என்றுதான்
பொய்கூட்டிப் பேசிடும் போதினில் - செய்யும்
வழிகளைச் சொன்னால் மனத்தினில் சோம்பற்
குழிகளைத் தோண்டும் குணம்.

காலமும் நம்மிடம் கண்போன்ற தென்றுதான்
ஞாலமும் கண்டநம் ஞானிகள் -- சீலமும்
பற்றிடச் சொன்னதைப் பற்றி  நினைத்திடப்
பற்றுடன் சொல்லவேயிப் பா.

உண்டுச் சுவைத்தாய்; உடுத்திக் கிழித்ததும்
கண்டு மகிழ்ந்ததும் காணோமே- தொண்டு
புரிந்த நொடிகளும் புண்ணியமாய் நீண்டு
வரிந்துத் திரும்பி வரும்..

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 15-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, January 16, 2014

[ 18 ] அறிவுத்தேன் [ வழிபாடு வணக்கமாகாது ]

உருவ வணக்கம்
அதுவே வழிபாடு !
அரூப வணக்கம்
அதுதானே வணக்கம் !

வணக்கமும் வழிபாடும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் நேர் எதிரிடைக் கருத்துக்கொண்டது என்பதை கடந்தகால தொடர்களின் முடிவாகத் தெரிந்து இருக்கலாம்.

வணக்கத்தில் ஓர்மையான ஒருமை நிகழ்வு இருக்கும். உச்சமான பரிபூரண அர்ப்பணிபு இழத்தல் என்ற ஒருமை இருப்பும் இருக்கும்.

வழிபாட்டில் அவ்வாறல்லாத பயபக்தியான இருமை உணர்வுகள் நிகழ்வு இருக்கும். குறைந்தது இரண்டு இருப்புகள் இருக்கும்.

உருவ வணக்கத்தில் உச்சமான இழத்தல் ஏற்பட வாய்ப்பின்மையால் அதனை வழிபாடு என்று சொல்வதே பொருத்தம். எனவே உருவ வணக்கம் என்று சொன்னால் அது வழிபாடு என்பதைத்தான் உணர்த்தும்.

அரூப வணக்கத்தில் உச்சமான இழத்தல் என்ற பரிபூரண அர்ப்பணிப்பு ஏற்பட்டு ஓர்மையான ஒருமை நிகழும். எனவே அரூப வணக்கம், வணக்கம் என்ற கருத்தின் பூரணம் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது.

இத்தொடரின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட மூன்று தத்துவங்களை இங்கு நினைவு கூறுவோம்.

துவைதம்: 
இதில் இரண்டு உள்ளமைகள் உள்ளன. இறைவன் ஒர் உள்ளமை. மற்றொன்று வேறு ஓர் உள்ளமை. இந்த மற்ற உள்ளமையிலிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன என்ற தத்துவம் உடையது.

விசிஷ்டா துவைதம்: 
இதிலும் இரண்டு உள்ளமைகள் உள்ளன.  இறைவன் ஒர் உள்ளமை.  மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன. மற்றும் படைப்பினத்தில் சில நல்லொழுக்கமுடன் வாழ்ந்து வருபவர்களிடம் இறைவன் வாசம்புரிகிறான் என்ற தத்துவத்தில் உள்ளது.

இவ்விரண்டு கொள்கைப்படி இறைவணக்கம் என்பது இறைவழிபாடு என்ற அமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

அத்வைதம் இதில் இரண்டு உள்ளமைகள் இல்லை. ஒரே உள்ளமை அது தன் அறிவிலே கணக்கற்ற  படைப்புகளை படைத்துள்ளது. இருந்தபோதிலும் அவ்வறிவு தான் தானாகவே இருக்கின்றது. படைப்புகள் பின்பு அதனளவில் மீண்டுவிடுகிறது. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இக்கொள்கைப்படி இறைவணக்கம் உச்சமான இருமை இழந்தல் என்ற பரிபூரண அர்ப்பணிப்பு நிகழும் வணக்கம் என்ற அமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு தத்துவமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. மூன்றும் வேவ்வேறு தத்துவம் உடைய மத,மார்கமாக இருந்தும், அவைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பலப் பிரிவுகள் உண்டாகிவிட்டது.

வழிபாடு, வணக்கம் இதன் வேறுபாடுகளைக் கொண்டு  உருவ வணக்கம் என்பது வழிபாடு என்றும், அரூப வணக்கம் என்பது வணக்கம் என்றும், வழிபாடு வணக்கமாகாது என்பதையும் அறியலாம்.
(தொடரும்)
நபிதாஸ்

இத்தொடரில் புரிதல் சிரமமாக இருக்கும் பட்சத்தில் வாசகரிடமிருந்து விளக்கம் வேண்டின் கேள்விகள் கேட்கலாம். எமது அறிவுக்கு தெரிந்தவரை விளக்கங்கள் எழுதப்படும். ஏனென்றால் தொடர் எழுதியது வாசிப்போர்கள் விளங்கிக்கொள்வதற்கே.

அறிவுத்தேனின் வணக்கம் என்றப் பகுதி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறை நாட்டத்துடன் அறிவுத்தேன் தொடர் இதுபோன்ற வெவ்வேறு சிறு தலைப்புகளில் தொடரும்...

Tuesday, January 14, 2014

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ புகைப்படங்கள் ] !

2013 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் : 
நாணயம் : ரியால்
GDP (PER CAPITA) : $ 102,768.60
2. லுசம்பெர்க் :
நாணயம்: ஈரோ
GDP (PER CAPITA) : $ 80,679.06
Top 10 Richest Countries in the World
3. சிங்கப்பூர் :
நாணயம்: சிங்கப்பூர் டாலர்
GDP (PER CAPITA) : $ 60,883.33
Top 10 Richest Countries in the World
4. நார்வே :
நாணயம்: க்ரோனி
GDP (PER CAPITA) : $ 55,264.45
Top 10 Richest Countries in the World
5. ஹாங்காங் :
நாணயம் : ஹாங்காங் டாலர்
GDP (PER CAPITA) : $ 50,708.95
Top 10 Richest Countries in the World
6. புருனை :
நாணயம் : புருனை டாலர்
GDP (PER CAPITA) : $ 50,526.35
Top 10 Richest Countries in the World
7. அமெரிக்கா : 
நாணயம்: டாலர்
GDP (PER CAPITA) : $ 49,802.15
Top 10 Richest Countries in the World
8. ஐக்கிய அரபு அமீரகம் :
நாணயம்: திர்ஹம்
GDP (PER CAPITA) : $ 48,992.47
Top 10 Richest Countries in the World
9. சுவிச்சர்லாந்து :
நாணயம்: சுவிஸ் ஃபிராங்
GDP (PER CAPITA) : $ 45,285.8
Top 10 Richest Countries in the World
10. குவைத் :
நாணயம் : குவைத் தினார்
GDP (PER CAPITA) : $ 43,846.72
Top 10 Richest Countries in the World

தொகுப்பு : சேக்கனா நிஜாம்
References :
http://www.top10always.com/top-10-richest-countries-in-world-2013/
http://guissy.com/top-10-richest-countries-in-the-world/

Saturday, January 11, 2014

இவனா ஏழை !?

வண்ணமய உலகில்
வாடிடும் ஏழை
கண்ணில் காணும் பொருளெல்லாம்
விலை சொல்லி மிரட்டுதய்யா

சொந்தங்களின் நேசமெல்லாம்
பண பலத்தை பார்க்குதய்யா
பக்கத்து வீட்டுக்காரனின் பாராமுகம்
பண பலத்தின் பின்னணியாம்

வயிராற சோறுன்ன வழியில்லை
வாயார உறவாடவும் வழியில்லை .
காய்ந்து போன வயிறும், மாய்ந்து போன உள்ளமும்
அன்றாட வாழ்க்கையாமே !

அந்த எழையது உள்ளத்தில்
விரக்தியான பார்வையாக
உலகமது தெரிந்ததுவே
பணத்தின் மீது ஆசை கொண்டான் ஏழையவன்

பம்பரமாய் சுற்றி வந்தான்
பல தொழில் பார்த்து பணமதுவை
சேர்த்து கொண்டான்
பக்குவமாய் அவனிடமும் பல சொத்து சேர்ந்ததுவே

குடிசையது
கோபுரமாய் மாறியது
பக்கத்தில் பல உறவு
பவ்வியமாய் நின்றிருந்தவேளையிலே.

ஏழையவன் மாறி போனான்
பக்கத்து வீட்டவலம்
இவன் கண்ணில் தெரியவில்லை
கவளம் உண்ணா காய்ந்த வயிறு
இவன் கண்ணில் தெரியவில்லை

உறவில்லா ஏழை மனம்
பதறுகின்ற பல நிகழ்வு
இவன் சமூகம் வரவில்லை
ஏனப்ப இந்த நிலை

பக்குவமாய் இவனிடத்தில்
நல் நண்பன் கூறிடவே
இவையெல்லாம் சிந்திக்க
எனக்கு நேரமில்லை எனக்கூறி மறுத்து விட்டான்
தர்மமில்லா இவனிடத்தில்பணமிருந்து என்ன பலன்
மனத்தால் இன்றுமவன் ஏழை என்றே
சொல்ல வேண்டும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, January 10, 2014

விஞ்சிடும் தமிழரின் சாதனைகள் !


பாடலாசிரியர் : அதிரை கவியன்பன் கலாம், அபுதபி
பாடியவர் : அதிரை ஜஃபர், ஜித்தா
விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்
...........வையகம் புகழ்ந்திடும் போதினிலே
நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே
............நேர்மையை மதித்திடும் அன்புடனே!

இன்றுள மின்மடல் கண்டவராம்
,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம்
சென்றிடும் இடங்களில்  எம்மவராம்
.........சீரிளம் திறமையில் எம்தமிழர்!

உழைப்பினில் இவரையே வேண்டிடுவர்
......உலகினில் உண்மையை நாடுபவர்
அழைப்பதும் தமிழரை என்பதையே
.....அறிந்தவர் உணருவர் மன்பதையில்!

பேரிடர் நேரிடும் போதினிலே
......பேருத விசெய்திடும் மானிடராம்
யாரிடம் கேட்பினும் கூறிடுவர்
....யாமறிந் தவுண்மையை ஏற்றிடுவர்!

சிறப்புடன் நேர்மையைப் போற்றிடுவர்
......செயலுடன் சொல்லையும் காத்திடுவர்
பிறந்ததன் தாய்மொழிப் பற்றினிலே
.....பிறரையும் விஞ்சுவர் பாரினிலே!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 09-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, January 9, 2014

[ 17 ] அறிவுத்தேன் [ வணக்கமும், வழிபாடும் ]

வணங்கும் ஒன்று
வணங்கப்பட ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !

வணக்கம் வேறு வழிபாடு வேறு எவ்வாறு ? என்பதை அவசியம் தெரிந்தாக வேண்டும். இலையேல் வழிபாடெல்லாம் வணக்கமாகவும், வணக்கமெல்லாம் வழிபாடாகவும் தான் தோன்றும். உண்மையில் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் நேர் எதிரிடையானது என்றால் நம் கண்கள் அகல விரியலாம்.
இத்தொடரின் ஆரம்பத்தில் வணக்கம் கவிதையின் முதலில் வரும் அடிகள்

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

என்று எழுதிய அடிகளை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

உருவ வணக்கம் அதற்கு குறைந்தது இரண்டு உருவங்கள் நிலைத்துத் தேவை. ஒன்று வனங்குபவனின் தனி இருப்புச் சுயவுருவம் மற்றது வணங்கப்படுவதின் தனி இருப்புச் சுயவுருவம். ஒன்று வணங்க, மற்றது வணக்கப்பட. வணங்கும்போது அங்கு உச்சப் பணிவு உண்டாகும்.

ஆனால், வணக்கத்தில் "முழுவதும் என்னையே அர்ப்பணிகின்றேன்" என்ற பூரண இழக்கும் இணக்கம் ஏற்பட வேண்டும். தன் சுயம் உச்சப் பணிவுக்குப் பின்  முழுவதும் அர்ப்பணிக்கப் பட்டாகிவிட வேண்டும். அங்குதான் வணக்கம் ஏற்படும். இருயிருப்புச் சுயங்கள் இருக்கும் வரைக்கும் பூரண அர்ப்பணிப்பு ஏற்பாடாது. அவ்வர்ப்பணிப்பு ஏற்படாத வரைக்கும் செய்யும் செயல்கள் யாவும் வழிபாடு என்றுதான் ஆகும். விபரங்ககளைக் கீழே காண்போம்.

பரிபூரண அர்ப்பணம் என்பது தன்னை முழுமையாக இழந்திடுதல், யாருக்கு அர்ப்பனமோ அவர்களின் எண்ணமும் செயலாகவும் ஆகிவிடுதல். இவைகள் நிகழ வேண்டும். இது அரூப வணக்கத்தில்தான் சாத்தியம். அரூப வணக்கத்தில் வணங்குபவன் தன் சுயம் என்ற உணர்வு இல்லாது வணங்கப்படுவதின் சுயம் நின்று அதன் உணர்வில் அனைத்து செயல்களும் இருக்கும், இருக்க வேண்டும். இவனிருக்க அவனில்லை, அவனிருக்க இவனில்லை.

பொதுவாக வணக்கத்தில் புகழ்ச்சியும், வேண்டுதலுமே இருக்கும்..
புகழ்ச்சி என்றால் புகழப்படும் ஒன்றின் விளக்கங்கள் (என்பதே சரியானக் கருத்து)  என்றால் மிகையாகாது.

மாம்பழம் பொதுவாக மஞ்சள் நிறம். அதனின் இனிமை தனி உருசியானது. இதயத்திற்கு நல்லது. வைட்டமின் A  அதிகமாக இருப்பதால் கண்களுக்கு நல்லது. இரும்புச் சத்து அதிகம் நிறைந்தது. இரத்தம் சுத்தம் செய்யும். இவ்வாறு விளக்கிக் கொண்டேப் போவது அதன் புகழ்ச்சிகள் தானே. ஆகப் புகழ் என்பது ஒன்றினது விளக்கம் ஆகும். வணக்கத்தில் புகழ்தல் என்பது விளங்கிக் கொள்ளுதலுக்கு உடையது. மன்னனைப் புகழ்ந்து பலர் அறியப்பட செய்யும்போது(விளங்கச் செய்யும்போது) அம்மன்னன் அகம் மகிழ்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான்.

விதைப்பதுதான் முளைக்கும். எண்ணப் படித்தான் செயல்கள் இருக்கும். பதப்படுத்தப்பட்ட இடத்தில் தான் விதைகள் இலகுவாக முளைக்கும். பதப்படுத்தப்பட்ட பக்குவமான வணக்கத்தில் வேண்டுதல் விதைகளாக விதைக்கப்பட்டு விளைவுகளாக ஏற்படத்தான் என்று சொல்வதும் மிகையாகாது.

அரூப வணக்கத்திலும் புகழ்ச்சியும் வேண்டுதலும் இருக்கும். ஆனால் இங்கு புகழ்ச்சி தன்னை விளக்கும் அல்லது அறியும் புகழ்ச்சியாகவும்;  வேண்டுதல் என்பது தன்னில் தன் தேவை எண்ணத்தைப் பதிய வைக்கும் செயலாக நடக்கும். உருவ வணக்கத்தில் புகழ்ச்சி, செயல்கள் யாவும் புகழப்படுவத்தின் கருணை உணர்வு அதிகப்படவும், அந்நிலையில் வேண்டுதலை சமர்ப்பித்து தேவைகளைப் பெரும் செயலாக இருக்கும்

உருவ வழிபாட்டுக் கோட்பாடு பிரகாரம் தருபவன் தன்னின் இருப்பிலிருந்துதான் தருவான். ஆனால் தன்னையே பூரணமாகத் தர இயலாது. வழிபாட்டின் பொருள்படி இரண்டு தனித்த இருப்புச் சுயங்கள் நிலைத்து இருக்க வேண்டும். ஒன்று வழிகாட்ட மற்ற ஒன்று வழிச் செல்ல.

இரண்டு இருப்புச் சுயங்கள் இருக்கும் வரை இணங்கி நடக்கும் செயல்கள் யாவும் வழிபாடு என்றுதான் ஆகும். பரிபூரண அர்ப்பணிப்பு என்ற தன்னையே இழத்தல் நிகழ்வான வணக்கம் நிகழாது. மேலும் அக்கவிதையில்

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

என்றும் வரும். மகா வலிமையுள்ள, ஆற்றல்கள் நிறைந்த ஒன்று எங்கோ எப்படியோ இருக்கிறது என்றும், அதனை வணங்குகிறேன் என்றும் சொன்னால், இங்கும் இரண்டு இருப்பு சுயங்கள் இருக்கின்றது. ஒன்று தெரிந்தது. மற்றது தெரியாதது. இருயிருப்புச் சுயங்கள் இருக்கும் வரைக்கும் வணங்கும் செயல்களில் உருவ வணக்கம் செயல்பாடுகள்தான் இருக்கும்.

வேறு ஒன்று தான் தெளிவாக அறியாவிட்டாலும் எங்கோ எப்படியோ இருக்கும் என்ற ஒன்றை வணங்கினாலும் அதுவும் உருவ வணக்கம் என்ற உருவ வழிபாடுதான் ஆகும். இங்கு வனங்குவதில் உருவம் புரியாததால் தெரியவில்லை.

ஏகன் என்ற எங்கும் நிறைந்தவன் (நீக்கமற நிறைந்தவன்) இறைவன் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. இதன்படி வணக்கம் என்று சொல்லப்படும் உருவ வழிபாட்டில் ஒரு குறிப்பிட்ட வடிவில் அல்லது உருவில் மட்டும் தான் இறைவன் மற்றவைகளில் இறைவன் இல்லை என்ற பொருள்தான் இறைவனைப்பற்றி இலகுவாகப் புலப்படும் மாறாக எங்கும் நிறைந்தவன் என்ற கருத்து விலகியே நிற்கும்.

வணக்கத்தில் முழுமையாக என்னை அர்ப்பணிக்கின்றேன் என்று சொன்னால் உருவ வழிபாட்டில் தன்னைவிட்டு மற்றவைகளை அர்ப்பணிக்கின்றேன் என்ற பொருள்தான் வர முடியும். இவன் இருக்கும் வரை முழு அர்ப்பணம் அங்கு ஏற்படாது. அப்படி அர்ப்பணிப்பு நிகழ வேண்டுமானால் இவன் தன்னை அழிக்க வேண்டும்.

தன்னை அழித்தல் அது வணக்கத்தின் நோக்கம் வழிமாறிபோகும் செயல். இறைவனை வணங்கி இவன் நன்மைகள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்ற நிகழ்வு நோக்கம் தெளிவில்லாமல் போகும். அதனால்
வணங்கும் ஒன்று
வணங்கப்பட ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !   .

எனவே, இரண்டிருப்புகள் நிலைக்கும் நிலையில் செய்யும் வணக்கச் செயல்களை எப்படி வணக்கம் என்று சொல்வது. அது வணக்கம் அல்ல வழிபாடு என்றுதான் சொல்லவேண்டும். மேலும் மனிதர்களையோ அல்லது இறந்தவர்களையோ வணங்க முடியாது. அவர்களை உயர் கண்ணியம் தான் செய்ய முடியும். உயர் கண்ணியம் வணக்கம் அல்ல அது வழிபாடுதான்.
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, January 7, 2014

மனம்

மனமென அறிவது யாது ?
.....மதியுடன் தெளிவிதுக் கேளு
உனதிலே பண்புகள் ஊன்றி
.....உண்மைகள் நிலைதனைக் காட்டும்

குணமதன் பண்பினில் கொண்டும்
.....கோலமாம் தன்னையேக் காட்டும்
இணங்கியக் குணங்களும் சேர்ந்தும்
.....இவனது வாழ்வுகள் போற்றும்

வலிமையின் உணர்வினில் திங்கள்
.....வடிவினில் பிளந்ததைக் கண்டார்
ஒலித்ததைக் கேட்டிட மாக்கள்
.....உயர்வினக் கோமகன் ஆனார்

கருணையின் கரத்தினால் கேட்க
.....கார்மழைக் கொட்டிடும் மிக்க
பொருளினில் பகைதனைக் காட்ட
.....புகைந்திடும் வெடித்திடும் ஒட்ட

குலுங்கியேச் சிரித்திடப் போகும்
......கொண்டிடும் வதைத்திடும் நோயும்
அலுத்திடும் பகைகளும் நீங்கும்
.....அன்பினை அளித்திட எங்கும்

இதயமுள் ஏகனை ஏற்க
.....எதுவுமே உன்னையே நோக்கும்
இதமுடன் இவைகளைக் கொண்டும்
.....இனிமையில் வாழ்வினைப் பேணும்

மனதினில் தோன்றிய யாவும்
.....மரித்திட வேண்டியேத் தீரும்
மனமது மட்டுமேத் தானும்
.....மாவுடன் நிலைத்திடும் என்றும்

பொறுமையில் இருந்திடும் உள்ளம்
.....புகுத்தினால் பலதையும் காட்டும்
அறுவடை செய்திடு இன்றே
.....அறிந்திடு மனதினை நன்றே.

நபிதாஸ்

Monday, January 6, 2014

அயலக வாழ்வும்... அண்டை வீடும்...

1.  எல்லோரையும் போல் நாமும் இருக்க வேண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஒருவகை...

2. பெரும்பாலும் அந்த ஊர் காரர்கள் வெளிநாட்டு பொழைப்பையே  நம்பி இருப்பதாலும் நாமும் போவோமே என்ற ஆசையும் ஓர் காரணம்.

3. உள்நாட்டில் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று நன்றாக படித்து இருக்கவேண்டும் அல்லது சொந்தமாய் வியாபாரம் செய்யவேண்டும் வியாபாரம் செய்ய பணம் வேண்டும் படிப்பும் பணமும் குறைவிருந்தால் வெளிநாட்டிற்கு சென்றால்தான் அதிக பொருள் ஈட்ட முடியும் அதுவும் ஓர் காரணம்.
   
இப்படி பல  காரணங்களால் அயலகத்தில் பணிபுரிய செல்கிறார்கள் அதுபோல் பணிபுரிய சென்றவரில் ஒருவர் பற்றி இங்கே பார்ப்போம்...         
அவர் ஓரளவிற்கு படித்தவர்தான் சொந்தமாய் அவரின் தகப்பனார் செய்த தொழிலை இவர் இப்பொழுது கவனித்து வருகிறார் ஆரம்பகாலத்தில் இருந்த வியாபாரம் இப்பொழுது இல்லை கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தொழிலை மேம்படுத்தாமல் விட்டது இன்று தொழிலில் சற்று பின்னடைவு பொறுப்பேற்றக்கொண்ட மகன் மனதைரியத்தோடு முழு ஈடுபாட்டோடு சற்று சிரமம் பார்க்காது உழைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். படிப்பே இல்லாத பக்கத்துவீட்டுக்காரன் அமெரிக்கா சென்று பணத்தை வாரி வழங்குகிறான் தமது மனைவிக்கும் தாய்க்கும் சகோதரிகளுக்கும் சொல்லவாவேனும் !?

இந்த வியாபாரியின் மனைவிக்கு எப்பொழுது கடையைவிட்டு வந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனின் சுகபோகத்தை சொல்லிக்கொண்டு சோறுபோடுவாள் இவனும் எத்தனையோ தடவை சொல்லிவிட்டான். "சாப்பிடும்பொழுது டென்சன் பண்ணாதே"ன்னு அவள் கேட்ட பாடில்லை இவனுக்கும் வியாபாரம் சுறுசுறுப்பில்லாமல் இருப்பது,மனைவி தொந்தரவு பண்ணுவது இவைகளை கண்டு சரி நாமும் வெளிநாடு போய்தான் பார்ப்போமே என்ற ஆவல் பிறந்துவிட்டது சென்னைக்கு மேல் எங்கும் போகாதவன் வெளிநாடு செல்லப்போகிறான்.
 
நண்பர்களை பிடித்து பாஸ்போர்ட்டை கொடுத்து அவர்கள் கேட்ட டாக்குமென்ட் சமாச்சாரங்களை கொடுத்து இன்டர்வியூம் செலக்ட் ஆயாச்சு ஏஜென்ட்கள் கேட்ட தொகையை நினைக்கையில் அந்த தொகையை சொந்த வியாபாரத்தில் போட்டு ஈடுபாட்டோடு உழைத்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்ன செய்வது வெளிநாட்டுக்கு போவதற்கு தூரத்து சொந்தங்கள் கூட கடன் தருகிறார்கள் உள்ளூர் வியாபாரத்திற்கு கடன் தர மறுக்கிறார்கள் ? என்னமோ பயணத் தேதி குறித்தாகிவிட்டது நல்லபடியாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டார்.
     
அமெரிக்கா வந்தது ஏற்கனவே தயாராக இருந்த ரூம் சென்றாகி விட்டது அங்கு எல்லோருமே பார்த்த முகங்கள் ஒரே ஊர்காரர்கள் இவருக்கு அளவிலா சந்தோஷம் வேலை கிடைக்கும் வரை டூட்டி முடித்து வருபவர்களிடம் அந்த நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வார் வெளியில் சென்று வருவார் காணாததை கண்ட சந்தோஷம் வேலை கிடைக்க சில காலம் பிடித்தது ஒரு வகையாய் வேலை கிடைத்து வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே வெளி மாநிலத்தவர்கள் தங்கும் ரூமில் போய் சேர்ந்தார் வேலை செய்யும் பொழுது பல இடர்பாடுகள் ஊரில் முதலாளியாய் இருந்துவிட்டு இங்கே வேலைக்காரனாய் இருப்பது அடிமை வாழ்க்கைபோல் உணர்ந்தார் சாப்பாடும் ஒத்துக்கொள்ளவில்லை ஊருக்கு போன் செய்தால் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஊரில் உள்ளவர்களும் அமெரிக்காவில் உள்ள ஊர்காரர்களும் சமாதானம் செய்து வைத்தனர் நாங்கள் வந்தபொழுது உனக்கு ஏற்பட்டதுபோல்தான் நினைப்பு வந்தது போகப்போக சரியாகிவிடும் என்றனர் குளிர்காலமும் வந்துவிட்டது நகக்கண்களில் ஊசி குத்துவதுபோல் இருந்தது என்ன பாவம் செய்து இங்கு அனுபவிக்கிறேனே என்று தனக்குத்தானே புலம்பினார்.

புலம்பல் எல்லாம் நான்கு மாதங்கள் தான் அப்புறம் தெம்பாகிவிட்டார் கை நிறைய காசு பணம் கிடைகிறது  பணத்தை செலவழித்தால் சொகுசு வாழ்க்கை ஊர்காரர்களும் இல்லாத வெகு தூர இடம் நல்ல வசதியாகிப்போனது காய்ந்த மாடு கம்பங்காட்டுக்குள் நுழைந்ததுபோல் ஊருக்கு செல் பேசுவது குறைந்தது பணம் காசுகள் அனுப்புவது குறைந்தது அங்குள்ள ஊர் காரர்கள் வந்து என்ன ஆச்சு உனக்கு என்று  கேட்க்கும் அளவிற்கு போனது இவரோ உன்வேலையை பார்த்துக்கொண்டுபோ என்று சொல்லும் அளவிற்கு சூழல் மாறியது நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஜெட்வேக பயணம் போனது. இவர் பெற்ற பிள்ளை வயதுக்கு வந்து கல்யாண தேதி குறித்து கல்யாண ஏற்பாடுகள் நடக்க இவர் ஊர் காரர்களின் தொந்தரவால் கொஞ்சம் பணம் பிள்ளை கல்யாணத்திற்கு என்று கொடுக்கிறார் மனைவியோ உங்கள் பணமெல்லாம் வேண்டாம் இத்தனை வருடங்கள் உங்கள் பணத்தில வாழ்ந்தோம் அதுபோல் வாழ்ந்து கொள்கிறோம் நீங்கள் ஊர் வந்து சேருங்கள் என்று கதறுகிறார் அவர் காதிற்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

கல்யாணமும் முடிந்தாகிவிட்டது காலங்கள் கனிகிறது இவருக்கு லேசாய் உடல் சோர்வு ரத்தம் சுண்டினால் திமிர் அடங்கும் என்பார்கள் ஊர், குடும்பம், என்ற கவலை வந்துவிட்டது சம்பாதித்த காசுகளை ஊருக்கு அனுப்பி வைக்கிறார் அமெரிக்காவில் வேலை செய்ய செய்ய காசு. இவருக்கு ரெஸ்ட் எடுக்க மனம் இல்லை காலங்கள் ஓட மனைவிக்கோ கவலை இந்த மனுசர் மறந்தாலும் ஒரேடியாய் மறந்துபோகிறார் உழைத்தாலும் போதும் போதும் என்கிற அளவிற்கு உழைக்கிறாரே கதறாத குறையாய் மனைவி ஊருக்கு அழைக்க இவருக்கு கிடைக்கும் பணத்தை விட்டுவிட்டு வர மனமில்லை உடல் சோர்வோ ஊருக்கு போகச்சொல்கிறது பண ஆசையோ விட மறுக்கிறது இப்படி பட்ட சூழ்நிலைக்கு சிறிய குட்டிக்கதை...

கணவனும் மனைவியும் ஆற்றோரமாய் நடந்து செல்கிறார்கள் ஆற்றில் ஒரு கம்பளி மூட்டை மிதந்து செல்கிறது மனைவி சொல்கிறாள் நீங்கள் ஆற்றில் இறங்கி நீந்தி சென்று அந்த கம்பளி முட்டையை எடுத்து வாருங்கள் என்று ஆற்றில் இறங்க சொல்கிறாள் கணவன் சற்று தயங்கிவிட்டு சரியென்று ஆற்றில் நீந்தி அந்த கம்பளி மூட்டையை அடைகிறார் சற்று நேரத்தில் அந்த கம்பளி மூட்டையோடு கட்டி புரள்கிறார் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் அதிகமாகி விட்டது ஆற்றில் இறங்கிய கணவன் வெகு நேரமாகி விட்டதே என்ற கவலையில் சப்தமாக மூட்டை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் கரை வந்து சேருங்கள் என்று கவலையாய் பதருகிறாள் இவன் காதிற்கு மனைவி சொன்னது விளங்கவில்லை பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மனைவி சப்தமாக கத்த சொல்கிறாள் அவர்களும் சப்தமிட்டு கரைக்கு வந்து சேரும் வழியை பாருங்கள் மூட்டையை விட்டுவிடுங்கள் என்று கத்துகிறார்கள் ஆற்றில் இருந்த கணவன் சொல்கிறான் நான் மூட்டையை விடத்தான் முயற்சிக்கிறேன் அது என்னை விட மறுக்கிறது என்று சப்தமிடுகிறார் கரையில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! உண்மை காரணம் அந்த கம்பளி மூட்டை என்று மனைவி நினைத்தது தவறாகிப்போனது அது க ர டி ! [ ஆம் கம்பளி மூட்டை கரடியாகிப்போனது ! ]
மு.செ.மு.சபீர் அஹமது

Saturday, January 4, 2014

மனித மனம்

மனித மனம்
பூக்களின் குணம்
வாடாமல் பாதுகாப்போம்

மனித மனம்
தேனின் சுவை
தெவிட்டாமல் பார்த்துக்கொள்வோம்

மனித மனம்
தென்றலின் இதம்
புயலாய் மாறாமல் நிதானிப்போம்

மனித மனம்
தெளிந்த நீரோடை
கலங்கா நிலை காண்போம் .

மனித மனம்
நிலை கண்ணாடி
புன்னைகைத்து புன்னகை
புண் முறுவல் காண்போம்

இனி வரும் நாட்களை
வண்ண  பூக்களால் நிறைத்து
மனம் பரப்புவோம்

இனி வரும் நாட்களை
இனிய குணங்களால் உறவாடி
தேனின் சுவை காண்போம் .

இனி வரும் நாட்களை
இதம் தரும் தென்றலாய் வீசி
சமுதாயத்தில் இதம் காண்போம்

இனி வரும் நாட்களை
புன்னகையால் பிரதி பலித்து
நல் நட்பை பெறுவோம்

மதம் கடந்த  நட்பு
நாடு கடந்த நட்பு
மொழி மறந்த நட்பு பாராட்டி
நட்பு என்ற பூக்களால்
இனி வரும் நாட்களை வரவேற்போம்

இனி வரும் நாட்களை
அன்பு எனும் தேன்கலந்து
கலக்கம் இல்லா  நீரோடையாய் அமைய
இறைவனை  இறைஞ்சுவோம்
நம் அனைவருக்கும்
இனி வரும் நாட்கள் நலமாய் அமைய
வாழ்த்துகிறேன்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, January 3, 2014

மனமென்னும் புத்தகத்தைப் பார்க்கையிலே...

பாடல் எழுதியவர் : கவியன்பன் அபுல் கலாம்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்

மனமென்னும் புத்தகத்தில்
.....மலிந்துள்ள பக்கமதை
தினம்நாமும் பார்க்கையிலே
...திருந்தத்தான் வைத்திடுமே!

மருவில்லா எண்ணமது
......மனத்தின்பால் உள்ளிருக்க
உருவில்லா வண்ணவொளி
.....உருவாகும் பக்கமன்றோ?

வெறுந்தாளின் பக்கமதாம்
.......விரிந்துள்ள உள்ளமெலாம்
நறுந்தேனாய் வித்திடுக
......நலமான வார்த்தைகளாய்!

கருந்தேளின் நஞ்சினைப்போல்
.......கருத்தாளும் நெஞ்சுகளும்
வருந்தாமல் கொட்டுகையில்
....வழிதோறும் முட்களாகும்!

பணந்தேடும் பாரினிலே
......பரிதாபம் ஏதுமில்லை
குணந்தேடிப் பார்க்கையிலே
....குறைவானப்  பக்கமதாம்!

கடல்போல ஆழமதாம்
....கனிவான மாதருள்ளம்
மடல்போட்டும் கூறாத
.....மதியாளும் பக்கமதான்!

தடுமாறும் பக்கமதால்
......தடுப்பாகும் எக்கணமும்
நெடுநாளும் நின்றிடுமோ
....நினைத்தாலும் வென்றிடுமோ?
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 02-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, January 2, 2014

[ 16 ] அறிவுத்தேன் [ அவனிவர் பேசுதல் ]

ஆண்டவன் உண்டு
அடியவன் உண்டு
அத்தஹி யத்ததில்
அவனிவர் பேசுவர்.

இஸ்லாமியத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அண்ணவர்கள் இறைவனை சந்தித்தார்கள். அந்நிகழ்வு அண்ணவர்கள் வாழ்வில் நடந்த ஒரு மிக முக்கியமான ஒன்று. அதனை வின்னேற்றம் என்ற மிஃராஜ் என்று அழைப்பார்கள்.

அந்நிகழ்வில் எங்கும் நிறைந்த உருவமில்லா இறைவனும் நபிகள் நாயகம் (ஸல்) அண்ணவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டார்கள். இஸ்லாமியர்கள் வணக்கத்தில் அவ்வாறான தொரு சிறு நிகழ்வான இறைச் சந்திப்பு முறையை அண்ணவர்களே இருத்தி அமைத்துத் தொழுகை முறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அதனைத் தொழுகையில் அத்தஹியத் ஓதுதல் என்பார்கள். தொழுகையில் இருப்பு நிலையில் அது வரும். அந்த நிகழ்வு இல்லையேல் வணக்கம் இல்லை.

உருவமுள்ள மனிதன் உருவமில்லா இறைவனை வணங்குதல் எவ்வாறு என்பதை அறிதல் மிக முக்கியமான ஒன்று. அவ்வணக்கத்தில் முழு அர்ப்பணம் இருக்கவேண்டும். வணங்கும் ஒருவன் தன்னைப் பூரணமாக இறைவனுக்காக அர்ப்பணித்துவிட வேண்டும். தான் என்ற தன்னின் உணர்வு இல்லையாகின் அதுவே பரிபூரண அர்ப்பணம்.

தான் இல்லையாகின் எங்கும் நிறைந்த ஒன்றே எப்போதும்போல் இருக்கும். அந்நிலை வணங்கும் அவனில் இவனின் தான் என்ற தனித்த உணர்வில்லாது அங்கு ஏற்பட வேண்டும். இறையின், இரசூலின் (ஸல்) உரையாடல் இவன் வணக்கத்தில் இவன் மூலம் நிகழவேண்டும்.

வணக்கத்தில் அவ்வுரையாடல் இவனில் அவ்விரு நிலைகளாக மாறி மாறி நிகழும். இருநிலையானாலும் அகத்தில் உரையாடல் பதிவு இருக்கும். அது எவ்வழி நிலையிலும் வெளிப்படும்.

ஒரு குழந்தையை கடினமாகத் திட்டினால் அடிக்காமலே அழுதுவிடும். ஒருவர் நகச்சுவையாகப் பேசும்போது சிலர் சப்தமிட்டே வாய்விட்டுச் சிரித்து விடுவார்கள். இங்கு உணர்வுகள் சப்தமாக மற்றவருக்குச் சென்று அவரில் அவ்வுணர்வுகள் செயள்களாக ஆகுகின்றது.

ஒருவரை வா என்றால் அவர் வருவார். இவரின் உத்தரவை ஏற்று அவர் வருகிறார். ஒருவன் தன்னில் ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அவன் அங்கு செல்கிறான். இது எண்ணமும் செயலும். எண்ணத்திற்கேற்ப செயல்கள் நடக்கின்றது. அல்லது சொல்லிற்கேற்ப செயல் உணர்வு இருக்கும்.

வணக்கத்தில் இறைவன் மகா பெரியவன் என்று எண்ணத்தைச்  சொன்னவுடன் இவன் மனதில், வேறு என்ற எந்த மகாச் சிறியதும்கூட மனதில் எழாமல், மாகப் பெரிய நிலையை எண்ணமும் செயலாகவும் உண்மைப்படுத்த வேண்டும். தான் என்ற தனித்த அல்லது பிரிந்த எண்ணத்தை இவனில் இவனில்லாமலாகிவிட வேண்டும். அந்நிலையில் அந்தந்த அச்சுயத்தில் அச்சுயம் பேச வேண்டும். அப்பொழுதுதான் வணக்கம் ஏற்படும். அது இல்லையேல் வெறும் சடங்குத்தான் நடக்கும். சடங்குகள் வணக்கம் அல்ல.

ஒரு நடிகன் ஒரு பாத்தித்தை ஏற்று நடிக்கும் பொழுது அந்தப் பாத்திரமாகவே அவன் ஆகிவிடுகிறான். வெவ்வேறு பாத்திரங்களில் வெவ்வேறாகவும் அவனே ஏற்று தத்ரூபமாகவும் அப்பாத்திரம் போலவேயாகி நடிகின்றான். அது போன்று என்றாலும் சரியாகாது. இங்கு நடிப்பே இல்லை. இருமையிழந்த நிலையின் உரையாடலின் அந்தந்தச் சுத்தச் சுயமாகவே அந்தந்த நிலையில் ஏற்படவேண்டும். அதுதான் சரியான வணக்கம் என்ற தொழுகை.

இவ்வாறு தொழும் தொழுகையின் அத்தஹியத் ஓதும் இருப்பில், அல்லாஹ்வும், அவன் தூதரும்  அவர்கள் தாங்களுக்குள்ளே உரையாடல் (சம்பாஷனை) புரியும் படியான நிலையில் தொழுபவர் தொழவேண்டும். அவ்வாறுதான்  தொழுகை உள்ளது. இது இவ்வரூப வணக்கத்தில்தான் சாத்தியம்.

அத்தஹியத்தில் அவன் நிலையிலும் அண்ணலின்(ஸல்) நிலையிலும் இவன் இல்லாததுவாக அவ்வாறு உரையாடுதல் அவனிவர் பேசுதல் என்பதாகும்.

வணங்கும் ஒன்று
வணங்க ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !

வணக்கம் வேறு வழிபாடு வேறு எவ்வாறு ?
(தொடரும்)
நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers