அறியாமை ஆளுமையை
..........அகம்மாக ஆக்குகின்றாய்
அறிவான உண்மைகளை
..........அறியாமல் நீக்குகின்றாய்
தெளிவானப் போதனையில்
........... தெளியாமல் ஓடுகின்றாய்
அளித்தார்கள் ஈர்ப்பறிவை
..........அலசாமல் நாடுகின்றாய்
இனிதான ஈனமதோ
..........இதமாக ஈர்த்திடுதோ ?
கனிவான வாழ்வுகளோ
...........கசப்பாக மாறியதோ ?
பலதானப் பாதகமோ
..........பண்பாகிப் போனதுவோ !
நலவான நேர்வழியோ
..........நரகாக மாறிடுதோ !
நடிப்பானத் தீமைகளோ
..........நலமாகித் தோன்றிடுதோ !
துடிப்பானப் பாதைகளோத்
..........துணிவாகி ஈர்கிறதோ !
பெரியோரைப் போற்றுகின்ற
..........பெருவாழ்வு மீறுகின்றாய்
புரியாதப் போதனையைப்
..........புறம்பேசி ஏசுகின்றாய்
மனிதாஉன் மாண்புகளோ
..........மடிந்தாகிப் போகிறதே !
இனிதான வாழ்வுகளோ
...........இடிந்தோடிப் போகிறதே !
தெளிவான நாதரிடம்
..........திறன்யாவும் கேட்டிடுவீர்
ஒளிவான வாழ்வையுமே
.........உயர்ந்தோங்க வாழ்ந்திடுவீர்
தெரியாதச் சேதிகளோ
..........தெளிவாகிப் போயிடுமே !
புரியாத வார்த்தைகளோ
..........புகழ்தேடிப் போற்றிடுமே !
இளம்வாழ்வில் ஏகனையே
..........இதயத்தில் ஏற்றிடுவாய்
வளம்வாழ்வு மான்புகளை
..........வதனத்தில் பூத்திடுவாய்
பணிவானப் போக்குகளைப்
.........பலமாக ஏற்றிடுவாய்
தணிவாகிக் கோபமதைத்
..........தகர்த்தாட்டி நீக்கிடுவாய்
தனக்காக வேண்டுபவைத்
..........தமதோர்க்கும் வேண்டுமென்பாய்
புனர்வாழ்வு காட்டிடுவாய்
..........புவியோரும் போற்றிடுவார்
உலகோரும் போற்றிடவே
.......... உனக்கான வாழ்வுகளை
நலமாக நானிலமே
..........நயம்காண வாழ்ந்திடுவாய் !
குணம்யாவும் கோர்வையிலே
..........குலம்போற்ற ஓங்கிடுவாய்
உணவான யாவையுமே
..........உலகோர்க்கே ஈந்திடுவாய்
உனைஈன்றத் தாய்குலத்தோர்
..........உளம்போற்றி வாழ்த்திடுவார்
உனைவாழ்த்தக் காண்பதிலே
..........உவப்பாகிப் பேர்பெறுவார்
அளித்தோங்கி ஆர்ப்பதிலே
..........அகம்யாவும் வாழ்த்திடுதே
தெளிவாகி வாழ்வதிலே
..........திசையாவும் போற்றிடுதே.
நபிதாஸ்
..........அகம்மாக ஆக்குகின்றாய்
அறிவான உண்மைகளை
..........அறியாமல் நீக்குகின்றாய்
தெளிவானப் போதனையில்
........... தெளியாமல் ஓடுகின்றாய்
அளித்தார்கள் ஈர்ப்பறிவை
..........அலசாமல் நாடுகின்றாய்
இனிதான ஈனமதோ
..........இதமாக ஈர்த்திடுதோ ?
கனிவான வாழ்வுகளோ
...........கசப்பாக மாறியதோ ?
பலதானப் பாதகமோ
..........பண்பாகிப் போனதுவோ !
நலவான நேர்வழியோ
..........நரகாக மாறிடுதோ !
நடிப்பானத் தீமைகளோ
..........நலமாகித் தோன்றிடுதோ !
துடிப்பானப் பாதைகளோத்
..........துணிவாகி ஈர்கிறதோ !
பெரியோரைப் போற்றுகின்ற
..........பெருவாழ்வு மீறுகின்றாய்
புரியாதப் போதனையைப்
..........புறம்பேசி ஏசுகின்றாய்
மனிதாஉன் மாண்புகளோ
..........மடிந்தாகிப் போகிறதே !
இனிதான வாழ்வுகளோ
...........இடிந்தோடிப் போகிறதே !
தெளிவான நாதரிடம்
..........திறன்யாவும் கேட்டிடுவீர்
ஒளிவான வாழ்வையுமே
.........உயர்ந்தோங்க வாழ்ந்திடுவீர்
தெரியாதச் சேதிகளோ
..........தெளிவாகிப் போயிடுமே !
புரியாத வார்த்தைகளோ
..........புகழ்தேடிப் போற்றிடுமே !
இளம்வாழ்வில் ஏகனையே
..........இதயத்தில் ஏற்றிடுவாய்
வளம்வாழ்வு மான்புகளை
..........வதனத்தில் பூத்திடுவாய்
பணிவானப் போக்குகளைப்
.........பலமாக ஏற்றிடுவாய்
தணிவாகிக் கோபமதைத்
..........தகர்த்தாட்டி நீக்கிடுவாய்
தனக்காக வேண்டுபவைத்
..........தமதோர்க்கும் வேண்டுமென்பாய்
புனர்வாழ்வு காட்டிடுவாய்
..........புவியோரும் போற்றிடுவார்
உலகோரும் போற்றிடவே
.......... உனக்கான வாழ்வுகளை
நலமாக நானிலமே
..........நயம்காண வாழ்ந்திடுவாய் !
குணம்யாவும் கோர்வையிலே
..........குலம்போற்ற ஓங்கிடுவாய்
உணவான யாவையுமே
..........உலகோர்க்கே ஈந்திடுவாய்
உனைஈன்றத் தாய்குலத்தோர்
..........உளம்போற்றி வாழ்த்திடுவார்
உனைவாழ்த்தக் காண்பதிலே
..........உவப்பாகிப் பேர்பெறுவார்
அளித்தோங்கி ஆர்ப்பதிலே
..........அகம்யாவும் வாழ்த்திடுதே
தெளிவாகி வாழ்வதிலே
..........திசையாவும் போற்றிடுதே.
நபிதாஸ்