மகவே கேள் :
நேரம் செலவிடும் முறை !
நீ ..பள்ளி வாழ்வை முடித்து கல்லூரி வாழ்வை துவங்கும் நீ ஒவ்வொரு நொடி பொழுதையும் கவனமாய் செலவிட கற்றுக் கொள் அதுவே உனது குறிக்கோள் நிறைவேற செய்யும் செயலாய் அமையும்.
கல்லூரி காலம் என்றால் கலாட்டா காலம் ..வசந்தம் பொங்கும் காலம் என்று கடந்து வந்த காலத்தை கூறும் எத்தனையோ பேர் வறுமையில் வாடும் நபராக பார்க்கிறேன் .கல்லூரி காலத்தைப்பற்றி கூறும் அவரின் முகத்தில் புன்னகை பூக்கும் .நிகழ காலத்திற்கு திரும்பும் அவர் சோகம் கொள்வார் .எனவே உனது நேரத்தை வீணடிக்கும் பொழுது போக்கு விசயங்களை தூர எறிந்து விடு .
உன் பருவம் அறிந்து செயல் படு நான்கு ஆண்டு தவம் நாற்பது ஆண்டுகாலம் பலன் தரும் என்பதை மறக்காதே .வழி காட்டும் ஒவ்வொரு ஆசான் இடமும் நீயே சென்று ஆலோசனை கேள் நேரம் இன்றி அமையாதது என்பதை நன்றாய் புரிந்து கொள்.
நேரம் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டதை போல பிறந்த குழந்தைக்கு உறக்கம் முக்கியம் உறக்கத்தின் மூலம் நேரத்தை கழிக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை ..ஆனால் வாலிப பருவத்தை அடைந்த வாலிபன் உறக்கத்தை குறைத்து கடின உழைப்பில் ஈடு பாடு உள்ளவனாக இருத்தல் வேண்டும். உன் பருவத்தில் கிடைக்கும் நேரம் பொக்கிசமான நேரம்
விரயம் செய்து விடாதே !
மீண்டும் கூறுகிறேன்...
உனது நேரம் பொன் போன்றது. விரயம் செய்து விடாதே ..
போன் ...விரயத்தின் வழி காட்டி ஊடகம் ..அப்படியே விழுங்கும் ராட்சஸமிருகம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டும் சினிமா வீண்
நேரம் ஒதுக்கி வீண் அரட்டை அடிக்கும் கும்பலில் சிக்கி வீணாகி விடாதே ..
கோடி கோடி தொண்டனில் ஒருவனாய் கொடிபிடித்து அலைந்து விடாதே
குறிக்கோள் கொள் வெல்வாய் உன் வாழ்வை எல்லாம் முடிந்த பின் நேரத்தை குறை கூறாதே நேரம் சரியில்லை என்பவன் .பின்பம் இல்லா ஒன்றை காட்டி குற்றம் சாட்டுவதை போன்றது ..இலக்கை அடைய நேரம் வகுத்து வாழ்வை வகு ..வெற்றி நிச்சயம்.
நேரம் செலவிடும் முறை !
நீ ..பள்ளி வாழ்வை முடித்து கல்லூரி வாழ்வை துவங்கும் நீ ஒவ்வொரு நொடி பொழுதையும் கவனமாய் செலவிட கற்றுக் கொள் அதுவே உனது குறிக்கோள் நிறைவேற செய்யும் செயலாய் அமையும்.
கல்லூரி காலம் என்றால் கலாட்டா காலம் ..வசந்தம் பொங்கும் காலம் என்று கடந்து வந்த காலத்தை கூறும் எத்தனையோ பேர் வறுமையில் வாடும் நபராக பார்க்கிறேன் .கல்லூரி காலத்தைப்பற்றி கூறும் அவரின் முகத்தில் புன்னகை பூக்கும் .நிகழ காலத்திற்கு திரும்பும் அவர் சோகம் கொள்வார் .எனவே உனது நேரத்தை வீணடிக்கும் பொழுது போக்கு விசயங்களை தூர எறிந்து விடு .
உன் பருவம் அறிந்து செயல் படு நான்கு ஆண்டு தவம் நாற்பது ஆண்டுகாலம் பலன் தரும் என்பதை மறக்காதே .வழி காட்டும் ஒவ்வொரு ஆசான் இடமும் நீயே சென்று ஆலோசனை கேள் நேரம் இன்றி அமையாதது என்பதை நன்றாய் புரிந்து கொள்.
நேரம் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டதை போல பிறந்த குழந்தைக்கு உறக்கம் முக்கியம் உறக்கத்தின் மூலம் நேரத்தை கழிக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை ..ஆனால் வாலிப பருவத்தை அடைந்த வாலிபன் உறக்கத்தை குறைத்து கடின உழைப்பில் ஈடு பாடு உள்ளவனாக இருத்தல் வேண்டும். உன் பருவத்தில் கிடைக்கும் நேரம் பொக்கிசமான நேரம்
விரயம் செய்து விடாதே !
மீண்டும் கூறுகிறேன்...
உனது நேரம் பொன் போன்றது. விரயம் செய்து விடாதே ..
போன் ...விரயத்தின் வழி காட்டி ஊடகம் ..அப்படியே விழுங்கும் ராட்சஸமிருகம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டும் சினிமா வீண்
நேரம் ஒதுக்கி வீண் அரட்டை அடிக்கும் கும்பலில் சிக்கி வீணாகி விடாதே ..
கோடி கோடி தொண்டனில் ஒருவனாய் கொடிபிடித்து அலைந்து விடாதே
குறிக்கோள் கொள் வெல்வாய் உன் வாழ்வை எல்லாம் முடிந்த பின் நேரத்தை குறை கூறாதே நேரம் சரியில்லை என்பவன் .பின்பம் இல்லா ஒன்றை காட்டி குற்றம் சாட்டுவதை போன்றது ..இலக்கை அடைய நேரம் வகுத்து வாழ்வை வகு ..வெற்றி நிச்சயம்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்