.

Pages

Thursday, July 25, 2013

அது ஒரு நூல்

அது 
ஒரு நூல்

அந்த 
அற்புத நூல் 
உன் கைகளில்

உனக்கும் 
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத் 
தொடர்பு

ஆனால் 
பரிதாப ஆச்சரியம் 
யாதெனிலோ
அந்த நூல் பற்றி 
ஏதும் தெரியாது 
உனக்கு

வெறுமனே 
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற 
பிழையான நினைப்புதான் 
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை 
நீ கற்றதில்லை

நீ புத்திமான்
ஆனால் 
அந்த நூலுக்கும் 
உன் புத்திக்கும்
விளங்கி எட்டுவதில்
வெகு தூரம் 

பாட நூலை நீ வாசிப்பது 
கற்பதற்காக

ஆனால் 
உன் அந்த நூலை 
நீ வாசிப்பது
வாசிப்பதற்காக மட்டும்

வாசித்தால் போதும் 
சொர்க்கம் வசப்படுமென்று
தவறாக உன் மூளையைத் 
தட்டிக்கொடுத்த 
தப்பான அறிவிலிகளை
மன்னிக்கமாட்டான் அவன்

காலம் எழுப்பிவிட
உன் கல்விக்கண் 
விழித்துவிட 
இன்னுமா வேண்டும்
உனக்கு அந்த இருட்சிறை

எந்த ஒரு 
மொழியினைக் கற்பதும்
விளங்கவும் பேசவும் 
எழுதவும்தான் 

ஆனால் 
அந்த நூலின் 
மொழியைப் பயில்வது மட்டும் 
வாசிக்க மட்டும்தானா... ஏன்

அறிவுச் சுடர் எரியும்
உன் கல்வி வாழ்வின் தலைப்பணி
அந்த நூலை ஆய்ந்தறிவதாய் அல்லவா
அமைந்திருத்தல் வேண்டும்

அவன் 
சொல்லும் 
சொலைப் புரியாமல்
அவன் 
சொல்லைச் 
சொல்லி ஆவதென்ன 

அவன்முன் பணிந்து
அவன் காதில் நீ 
ஓதுகிறாய் 

உன் நெஞ்சினின்று
பொருளோடு புறப்படாத 
ஒரு சொல்
எத்தனை அழகானதாயினும்
அவன் செவியைச்
சேருமா

அவனை 
அறிவதற்காகவே
அருளப்பட்ட அந்த நூல்
இதோ 
இன்னமும் 
உன் கைகளில்தான்
அன்புடன் புகாரி

70 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்வி அருமை...

    ReplyDelete
  2. ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
    .. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
    செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
    .. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு வேதம்
    இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
    .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
    அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
    .. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச் சொத்து!

    அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி யிலிருந்(து)
    .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
    சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
    .. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
    திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
    .. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
    மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
    .. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்

    ஒன்றுபட்டச் சமுதாயம் உருவாக வேண்டி
    .. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
    நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
    .. நாமின்று காணுகின்ற அறிவியலும் வீசும்
    குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
    .. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
    இன்றுவரை இவ்வேதம் அழியாமல் காக்கும்
    .. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!

    ReplyDelete
  3. பொருள் உணர்ந்து கற்போம் - கற்பிப்போம்

    ReplyDelete
  4. வேதம் பயபக்தியுடையோருக்கு மட்டுமே நேரான வழியைக் காட்டும். மற்றவர்களுக்கு தவறான வழியைக் காட்டும்.

    ReplyDelete
    Replies
    1. >>>>வேதம் பயபக்தியுடையோருக்கு மட்டுமே நேரான வழியைக் காட்டும். மற்றவர்களுக்கு தவறான வழியைக் காட்டும்<<<<

      சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் நபிதாஸ்.

      பயபக்தியின் திசையும்
      நேரான வழியின் உறுதிப்பாடும்
      இறைவனிடமே உள்ள பொக்கிசங்கள்

      பாதை தெரிந்தோரெல்லாம் பயணம் செல்கிறார்கள். செல்லுமிடம் வந்தாயா என்று இறைவன் புன்னகைக்கிறான்.

      இதோ என் கேள்விகள் என்று
      அங்கே அவன் மட்ட்ட்ட்டுமே
      காத்திருக்கிறான்

      அனைத்தும் அறிந்தவன் அவனே
      அதுபற்றி கருத்துச் சொல்ல
      அவனன்றி எவருக்கும் ஆகாது

      அன்புடன் புகாரி

      Delete
  5. ///அந்த

    அற்புத நூல்

    உன் கைகளில்///

    பொருள் விளங்கி போதிப்போம்.

    போதிப்பதோடு நின்று விடாமல் மேலும் கற்ப்போம். கற்ப்பிப்போம்.




    ReplyDelete
    Replies
    1. >>>>பொருள் விளங்கி போதிப்போம்<<<<<

      நன்று மெய்சா, நம்மிடையே உள்ள ஒரு சாபக்கேடு, கற்றோர் ஒதுங்கிக்கொள்வர். சாத்தான் வேதம் ஓதும் ;-)

      Delete
  6. புத்தகங்கள் எப்போதுமே தனி பாதை காட்டிச்செல்கின்றன.நம்மை செழுமையாக்கவும் செய்கிறதுதான்.

    ReplyDelete
  7. தாய் மொழியில் எழுதப்பட்ட உரைநடைக்கும், செய்யுளுக்கும் ஆசிரியர் தேவைப்படுகிறது. காரணம் படிப்பவரைக்காட்டிலும் எழுதியவர் சிறந்த அறிவாளியாக இருப்பதேயாகும்.
    இறைவனிடமிருந்து பெற்ற வேதத்தை மட்டும் தாம் இதுகால் சேகரித்த அறிவைக்கொண்டு படித்தால் எவ்வாறு அது தெளிவைத்தரும்?
    வேதத்தின் சிலவைகளுக்கு விளக்கம் அல்லாஹுவும் அவன் தூதருமே அறிவார்கள் என்று வருகிறது. வேதத்தின் வாக்கியங்களுக்கு உள்ளும், புரம்மும் உண்டு என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.
    தன்னுடைய பகுத்தறிவைக்கொண்டு வேதத்தை புரிந்துகொண்டோம் என்பதினால்தான் இன்று பல பிரிவுகள். ஒரே வேதம் ஆனால் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட பிரிவினர் உண்டாகி வருகிறார்கள்.
    இறைவேதத்தை மற்ற புத்தகங்களுடன் எந்தவகையிலும் ஒப்பிடமுடியாது. அதை தொடுவதற்கே சில் அனுஸ்ட்டானங்கள் செய்யவேண்டும்.
    அறிவுகள் ஆன்மாவிலிருந்து வரும், அங்கு பதியப்படும். அறிவு உண்டாகும்முன் அது ஒன்றுமில்லை. பின்பு அறிவு ஒரு கருத்தாக அவரவர் மொழியில் வெளிப்படும். அதுபோல் விருப்பத்தோடு அதன் விளக்கம் தெரியாவிட்டாலும் கவனமுடன், பயபக்தியுடன் படிக்கும் பொழுது ஆன்மா விளங்கி கொள்ளும். அதன்படி அதன் வாழ்வில் செயலாய், சிந்தனையாக வெளிப்ப்ட்டுதான் வரும். ஆனால் அதனை அவர் அறியாமலே நடைபெறும். இது ஒரு நன்மை. நம்பிக்கையின் வீரியத்தை பொறுத்தது.
    மேலும் அவன் விளங்கி படிப்போரைத்தான் விரும்புகின்றான். மற்றவரை இகழ்கிறான்.
    விளங்கி படிப்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பயபக்தியுடையவர்களாக இருக்கவேண்டும். இறை நெருக்கத்தை பெற்றவர்கள் வழிகாட்டுதலும் வேண்டும். இல்லையேல் தவறிவிடுவார்கள்........

    ReplyDelete
    Replies
    1. >>>>>>>தாய் மொழியில் எழுதப்பட்ட உரைநடைக்கும், செய்யுளுக்கும் ஆசிரியர் தேவைப்படுகிறது. காரணம் படிப்பவரைக்காட்டிலும் எழுதியவர் சிறந்த

      அறிவாளியாக இருப்பதேயாகும்.<<<<<<<

      அப்படியான நிலை குர்-ஆனுக்கு இல்லை. ஏன்?

      எழுதியவரின் நோக்கம் இங்கே மிக முக்கியம். இறைவன் எழுதுகிறான்.

      அது நேரடியாய் ஏதும் அறியாத பாமர மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று எழுதுகிறான்.

      என்றால் எத்தனை எளிமையாக எழுதி இருப்பான்.

      இறைவனல்லவா, அவன் ஏதும் அறியாதவனா என்ன?

      குர்-ஆன் எளிமையாக எழுதப்பட்டுள்ளது என்று இறைவனே கூறுகிறான்.

      54:17.
      நிச்சயமாக
      இக் குர்ஆனை
      எளிதாக்கி வைத்திருக்கிறோம் -
      நினைவு படுத்திக் கொள்ள.
      எனவே
      நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

      *
      வார்த்தைக்கு வார்த்தை ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே
      http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=54&verse=17#(54:17:1)

      *

      எழுதப்படிக்கத் தெரியாத காட்டரபிகள் ஏராளமாக இருந்த அக்காலத்தில் விளக்கம் வேண்டுவோருக்கு முகம்மது நபியை விளக்கம் கூறச் சொல்கிறான்

      இறைவன்.

      முகம்மது நபி யார்? எழுதப்படிக்கத் தெரியாதவர். அவர் அவ்வசனங்களுக்கான ஞானத்தையே இறைவனிடமிரிந்து பெற்றார்.

      *

      >>>>விருப்பத்தோடு அதன் விளக்கம் தெரியாவிட்டாலும் கவனமுடன், பயபக்தியுடன் படிக்கும் பொழுது ஆன்மா விளங்கி கொள்ளும்.<<<<

      இதென்ன மூடுமந்திரம். இப்படி யாருமே சொன்னதில்லையே. இந்த வசனங்கள் குர்-ஆனில் வருகிறதா? ஆக குரானைப் பொருளறிந்து படிக்கக் கூடாது.

      எப்போதும் ஒரு பூசாரி, ஒரு புரோகிதன், ஒரு முல்லா வேண்டும். அவர்கள் வைப்பதுதான் சட்டம். அவர்கள் தங்கள் வசதிக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ப

      மக்களை ஏமாற்றித் திரிவார்கள். அது நீடிக்க வேண்டும். அதுவே உங்கள் விருப்பம். அப்படியா?

      >>>>>மேலும் அவன் விளங்கி படிப்போரைத்தான் விரும்புகின்றான். மற்றவரை இகழ்கிறான்.
      விளங்கி படிப்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பயபக்தியுடையவர்களாக இருக்கவேண்டும். இறை நெருக்கத்தை பெற்றவர்கள்

      வழிகாட்டுதலும் வேண்டும். இல்லையேல் தவறிவிடுவார்கள்........ <<<<<

      எப்படி அழகாகக் கொண்டு வந்து இடைத்தரகர்களோடு முடிச்சுப் போட்டு ஓர் ஒட்டுண்ணி இனத்தை வளர்க்கப் பார்க்கிறீர்கள்.

      இறைவன் தருவதே ஈமான்.
      இறைவன் அருளாமல் ஏதும் எவருக்கும் வந்துவிடாது
      இறைவனுக்கும் மனிதர்களுக்கும் நபி ஒருவரே தூதுவர்
      வேறு இடைத்தரகர்கள் கிடையாது

      இறைவனுக்கும் மனிதனுக்கும் நேரடித் தொடர்பு உண்டு
      இறைவன் கேள்வி கேட்கும்போது இடைத்தரகர் வந்து பதில் சொல்ல முடியாது.

      மற்றபடி அறிவுடையோர் குர்-ஆனுக்கு விளக்கம் கூறுவது ஏற்புடையது. நான் தான் சொல்வேன் நீ கேட்க மட்டுமே செய்ய வேண்டும் என்றால் அங்கே

      இடைத்தரகு வந்துவிடுகிறது.

      அன்புடன் புகாரி




      Delete
  8. முதலில், அன்பு நபிதாஸ், உங்களிடம் ஒரு எளிமையான கேள்வி. குரானைப் பொருள் விளங்கிப் படியுங்கள் என்று சொல்கிறது இந்தக் கவிதை. அப்படிப் பொருள் விளங்கிப் படிக்கக் கூடாது என்பதுதான் உங்கள் வாதமா?

    உங்கள் கருத்துக்கு என் கருத்துக்கள் விரைந்து வருகின்றன. கருத்தாடுவது மார்க்க எண்ணங்களுக்கு பலம் சேர்ப்பது.

    ReplyDelete
  9. நபிதாஸ் என்றால் என்ன பொருள் நண்பரே

    ReplyDelete
  10. இல்லை, கவிஞர் அன்புடன் புகாரி அவர்களே !
    பொருள் விளங்கித்தான் படிக்கவேண்டும். மேலும் நான் தங்கள் போன்றவர்களிடம் வாதிடவும் வரவில்லை. வாதம் என்று தெளிவைத் தந்தது? வாதம் தன் கருத்தை நியாயப்படுத்தத்தான் செய்யும்.
    //
    நீ கற்றவன்
    ஆனால் அந்த நூலை
    நீ கற்றதில்லை

    நீ புத்திமான்
    ஆனால்
    அந்த நூலுக்கும்
    உன் புத்திக்கும்
    விளங்கி எட்டுவதில்
    வெகு தூரம்
    //
    உண்மையே. இதில் மாற்றுக்கருத்து இல்லை.

    நீங்கள் என்பதும் நான் என்பதும் என்ன?
    இதுகால் வரைக்கும் ஒருவர் சேகரித்த அறிவுதான் நான் என்று கூறும். இது முதற்படி. 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' நீங்கள் அறியாதது அல்ல. அவ்வாறானால் கற்கும் நிலை நம்மிடம் முடிவு பெறவில்லை. இத்தகைய முழுமையில்ல அறிவைக்கொண்டு எவ்வாறு முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும் ? அதற்காக விளங்கிக்கொள்ள முயல வேண்டாம் என்று கூற வரவில்லை. விளங்கினால்தான் வேதம் நேர் வழிகாட்டும்.

    விளங்கியவர்கள் யார் மனதும் அதாவது தனது மனமும் பிறர் மனமும் துன்பப்படாமல் வாழ்பவர்கள். அத்தகைய சந்தியாளர் வழிகாட்டுதலோடு வேதத்தை விளங்கினால் நேர்வழி கட்டும். அவர்கள் பயபக்தியுடைவர்கள் , சந்தியாளர்கள். எந்த உயிருக்கும் துன்பம் தர மாட்டார்கள். பிறர் வேதனையை தன் வேதனையாகக் கருதி அதை நீக்க வழிகோல்வார்கள்.

    அத்தகையோர் யார் என்பதைப் பற்றி அறிவதில் உள்ள சிரமங்களை நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

    //
    அவனை
    அறிவதற்காகவே
    அருளப்பட்ட அந்த நூல்
    இதோ
    இன்னமும்
    உன் கைகளில்தான்
    //
    அவனை அறிந்தவர்கள்.

    எதயையும் தேடி கிடைத்தால் தான் அதன் அருமை புரியும். அதில் தான் இன்பமும்.

    ReplyDelete
  11. >>>>>இல்லை, கவிஞர் அன்புடன் புகாரி அவர்களே !
    பொருள் விளங்கித்தான் படிக்கவேண்டும். <<<<<<<

    அன்பின் நபிதாஸ், ஆனந்தம் கொள்கிறேன். நன்றி

    >>>>> 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' நீங்கள் அறியாதது அல்ல. அவ்வாறானால் கற்கும் நிலை நம்மிடம் முடிவு பெறவில்லை.<<<<<

    முடிவு பெறக்கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அது கல்வி. 1 2 3 4.... என்று கூட்டிக்கொண்டே செல்வது மட்டும் அல்ல முடிவில்லாதது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது முடிவற்றதாகவே இருக்கும். ஏனெனில் தொடக்கமும் முடிவும் அதாவது ஆதியும் அந்தமும் இறைவனல்லவா? அதை எப்படித் திட்டவட்டமாக மனிதனால் கண்டுகொள்ள முடியும்?

    >>>>>இத்தகைய முழுமையில்லா அறிவைக்கொண்டு எவ்வாறு முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும் ? <<<<<<<

    நல்ல கேள்வி அதன் பொறுப்பு இறைவனுடையது. அதை அவன் ஏற்றுக்கொள்கிறான். அதோடு இறைவனின் மௌனம்தான் அறிய முடியாத மகா சூட்சுமம். அவன் எளிமையாய் பாமரனிடம் வார்த்தைகளாய்ச் சென்றடையத்தான் நபிமார்களைத் தேர்வு செய்தான். எளிமையாய்க் குர்-ஆனை ஆக்கி இருக்கிறேன். மனனம் செய்யும் அளவுக்கு அதன் பொருளை எளிமைப்படுத்தி இருக்கிறேன் என்கிறான். ஆகவே இதயங்களில் எப்படி இறங்க வேண்டும் என்பதை மட்டுமல்ல அனைத்தும் அறிந்தவன் அவன். குழப்பவாதிகளைத்தான் அவன் வெறுக்கிறான். என்ன வினோதம் என்றால் இவர் அவரையும் அவர் இவரையும் குழப்பவாதி என்கிறார்கள். குர்-ஆன் கொண்டு தெளிவடைய மறுக்கிறார்கள்.


    >>>>சந்தியாளர் வழிகாட்டுதலோடு வேதத்தை விளங்கினால் நேர்வழி கிட்டும். அவர்கள் பயபக்தியுடைவர்கள் , சந்தியாளர்கள். எந்த உயிருக்கும் துன்பம் தர மாட்டார்கள். பிறர் வேதனையை தன் வேதனையாகக் கருதி அதை நீக்க வழிகோல்வார்கள்.<<<<

    எச்சொல் யார் யார் கேட்பினும் மெய்ச்சொல் காண்பதறிவு. - யார் எதைச் சொன்னாலும் குர்-ஆனை ஆதாரமாக்கி நிறுத்துப் பார்த்தால் எல்லோரும் நல்லவரே. ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் இன்னொரு அறிவாளி வந்துகொண்டே இருப்பான் என்று இறைவன் சொல்லவில்லையா? இறைவனே அன்றி முழுமையான ஆதரவையும் ஆறுதலையும் வேறு எவராலும் தந்துவிடமுடியுமா?

    இறைவன்மீது நம்பிக்கை கொண்டு. குர்-ஆனைத் தொட்டால் இறைவன் மகிழ்வான். வாழ்த்துக்கள்

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  12. நல்லது கவிங்கரே ! நீங்கள் அடிக்கடி இடைத்தரகர்கள் என்று எழுதுகிறீர்கள்.
    உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் எதையெல்லாம் இடைதரகர் என்று சொல்கிறீர்கள் ?
    //
    இறைவன்மீது நம்பிக்கை கொண்டு. குர்-ஆனைத் தொட்டால் இறைவன் மகிழ்வான்.
    //
    இறைவன் மீது நம்பிக்கை. இதற்க்கு விளக்கம் தரமுடியுமா ?
    இறைவன் மகிழ்வான். எப்படி அதனை அறிகிறீர்கள் ?

    அறிவின் முழுத் தோற்றம் என்றால் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர யாரையும் சொல்லமுடியாது. அவ்வாறிருக்க நீங்கள் எழுதும் // ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் இன்னொரு அறிவாளி வந்துகொண்டே இருப்பான் என்று இறைவன் சொல்லவில்லையா?// விளக்கம் தாருக்களேன்.

    திருக்குர்ஆன் அல்லாஹ் (ஜல்)அவனை அறிந்தவர்களுக்குத்தான் இலகுவானது.

    வேதத்தில் ஒரு இடத்தில் சொலப்பட்ட கருத்துக்களை துண்டு துண்டாக நம் தேவைக்கு தகுந்தார்போல் பிரித்து எடுத்து கையாண்டால் நமது நோக்கம் தான் நிறைவேறும். ஆனால் வேதத்தின் வழிகாட்டலில் சறுக்கல் ஏற்பட்டுவிடும்.

    //
    என்ன வினோதம் என்றால் இவர் அவரையும் அவர் இவரையும் குழப்பவாதி என்கிறார்கள். குர்-ஆன் கொண்டு தெளிவடைய மறுக்கிறார்கள்.
    //

    இல்லை இருவருமே திருக்குர்ஆன் வேதத்தை வைத்துதான் ஒருவரை ஒருவர் குழப்பவாதி என்கிறார்கள். நீங்கள் அடிகடி எழுதும் வேதம் இலகுவானது. இவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு இலகுவாக புரிந்துகொண்டதனால்தானோ ஒருவரை ஒருவர் குழப்பவாதி என்கிறார்கள் !
    //
    >>>>>இத்தகைய முழுமையில்லா அறிவைக்கொண்டு எவ்வாறு முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும் ? <<<<<<<

    நல்ல கேள்வி அதன் பொறுப்பு இறைவனுடையது. அதை அவன் ஏற்றுக்கொள்கிறான். அதோடு இறைவனின் மௌனம்தான் அறிய முடியாத மகா சூட்சுமம். அவன் எளிமையாய் பாமரனிடம் வார்த்தைகளாய்ச் சென்றடையத்தான் நபிமார்களைத் தேர்வு செய்தான்.
    //
    இது என்ன? புரியவில்லை. அப்படியானால் உங்கள் நிலை என்ன ? அவன் நிலை என்ன ? சரளமாக உங்கள் கருத்து அவனது போல்.....?

    பாமரனுக்கு என்றும் அடிக்கடி எழுதினால்... விபரமானவனுக்கு என்று எதுவும் உள்ளதோ ?

    இவ்வாறு பல கேள்விகள் ஒவ்வொரோ பாராவிலும் மறைவாக இருக்கின்றது.

    வேதத்தை விளங்கி ஓதவேண்டும் என்று இறைவன் வேதத்தில் சொல்கிறான். ஆனாலும் அவனின் வேதத்தை விரும்பி ஓதுவதில் நன்மை இல்லை என்பது எப்படி ? புரியாததை எப்படி புரிந்து கொள்வது ?

    நன்றி !

    ReplyDelete
  13. அன்பின் நபிதாஸ்,

    ”இடைத்தரகர்கள்” என்பது உங்களை நிறைய பாதிக்கிறது. நீங்கள் அப்படியோர் பணி செய்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது.

    ஆனால் அந்த சொல்லின் தாக்கத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்.

    அறியும் நோக்கில் குர்-ஆனை பலரும் அமர்ந்து கலந்துரையாடி தெளிவு பெறுவது நல்ல விடயம்தான் மறுப்பதற்கில்லை.

    ஆனால் உங்களுக்கான உண்மையான பதில் இறைவனிடமிருந்தே நீங்கள் பெறவேண்டும்.

    இறைவனிடமிருந்து எப்படி பெறுவது?

    குர்-ஆனை மீண்டும் மீண்டும் பொருள் விளங்க ஓதுவது ஒன்றுதான் சிறந்தது.

    இருப்பினும் உங்கள் அறிமுகம் எனக்கு இல்லை என்றாலும், என் போக்கில் சில பதில்களை நான் தருகிறேன். ஆனால் அவை உங்களுக்கு நிறைவானதாய் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    ஆனால் இறைவனின் நூலைக்கொண்டு உங்கள் விடையைத் தேடினீர்கள் என்றால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.

    ஏனெனில் கருத்துப் பறிமாறல் கூடும் விவாதம் கூடாது - விரோதம் வரும் என்பதால்.

    எல்லோருடனும் சாந்தியும் சமாதானமுமாய்ச் செல்ல வலியுறுத்தும் மார்க்கமல்லவா இஸ்லாம்.

    அன்புடன் புகாரி








    நல்லது கவிங்கரே ! நீங்கள் அடிக்கடி இடைத்தரகர்கள் என்று எழுதுகிறீர்கள்.
    உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் எதையெல்லாம் இடைதரகர் என்று சொல்கிறீர்கள் ?
    //
    இறைவன்மீது நம்பிக்கை கொண்டு. குர்-ஆனைத் தொட்டால் இறைவன் மகிழ்வான்.
    //
    இறைவன் மீது நம்பிக்கை. இதற்க்கு விளக்கம் தரமுடியுமா ?
    இறைவன் மகிழ்வான். எப்படி அதனை அறிகிறீர்கள் ?

    அறிவின் முழுத் தோற்றம் என்றால் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர யாரையும் சொல்லமுடியாது. அவ்வாறிருக்க நீங்கள் எழுதும் // ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் இன்னொரு அறிவாளி வந்துகொண்டே இருப்பான் என்று இறைவன் சொல்லவில்லையா?// விளக்கம் தாருக்களேன்.

    திருக்குர்ஆன் அல்லாஹ் (ஜல்)அவனை அறிந்தவர்களுக்குத்தான் இலகுவானது.

    வேதத்தில் ஒரு இடத்தில் சொலப்பட்ட கருத்துக்களை துண்டு துண்டாக நம் தேவைக்கு தகுந்தார்போல் பிரித்து எடுத்து கையாண்டால் நமது நோக்கம் தான் நிறைவேறும். ஆனால் வேதத்தின் வழிகாட்டலில் சறுக்கல் ஏற்பட்டுவிடும்.

    //
    என்ன வினோதம் என்றால் இவர் அவரையும் அவர் இவரையும் குழப்பவாதி என்கிறார்கள். குர்-ஆன் கொண்டு தெளிவடைய மறுக்கிறார்கள்.
    //

    இல்லை இருவருமே திருக்குர்ஆன் வேதத்தை வைத்துதான் ஒருவரை ஒருவர் குழப்பவாதி என்கிறார்கள். நீங்கள் அடிகடி எழுதும் வேதம் இலகுவானது. இவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு இலகுவாக புரிந்துகொண்டதனால்தானோ ஒருவரை ஒருவர் குழப்பவாதி என்கிறார்கள் !
    //
    >>>>>இத்தகைய முழுமையில்லா அறிவைக்கொண்டு எவ்வாறு முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும் ? <<<<<<<

    நல்ல கேள்வி அதன் பொறுப்பு இறைவனுடையது. அதை அவன் ஏற்றுக்கொள்கிறான். அதோடு இறைவனின் மௌனம்தான் அறிய முடியாத மகா சூட்சுமம். அவன் எளிமையாய் பாமரனிடம் வார்த்தைகளாய்ச் சென்றடையத்தான் நபிமார்களைத் தேர்வு செய்தான்.
    //
    இது என்ன? புரியவில்லை. அப்படியானால் உங்கள் நிலை என்ன ? அவன் நிலை என்ன ? சரளமாக உங்கள் கருத்து அவனது போல்.....?

    பாமரனுக்கு என்றும் அடிக்கடி எழுதினால்... விபரமானவனுக்கு என்று எதுவும் உள்ளதோ ?

    இவ்வாறு பல கேள்விகள் ஒவ்வொரோ பாராவிலும் மறைவாக இருக்கின்றது.

    வேதத்தை விளங்கி ஓதவேண்டும் என்று இறைவன் வேதத்தில் சொல்கிறான். ஆனாலும் அவனின் வேதத்தை விரும்பி ஓதுவதில் நன்மை இல்லை என்பது எப்படி ? புரியாததை எப்படி புரிந்து கொள்வது ?

    நன்றி !

    ReplyDelete
  14. அன்பின் நபிதாஸ்,

    >>>>உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் எதையெல்லாம் இடைதரகர் என்று சொல்கிறீர்கள் <<<<

    இறைவன் அவன் நியமித்த தூதர் தவிர ஏனையோர் இடைத் தரகர்.

    ஆனால் ஓர் ஆசிரியரைப் போல, நண்பரைப் போல, மாணவரைப் போல கருத்துக்களைப் பகிருந்துகொள்பவர்கள் இடைத்தரகர்கள் அல்ல.

    தன்னை ஓர் தலைவர் என்று அறிவித்துக்கொண்டு, நான் சொல்வதுதான் சரி என்று அதைத் தொடர்ந்து ஒரு பிரிவினை உருவாக்கி தன் வயிறு வளர்ப்பவர்களும் அதிகாரம் தேடி அலைபவர்களும் புகழ்போதை கொண்டவர்களும் எல்லோரும் இடைத்தரகர்கள்தாம்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete

  15. அன்பின் நபிதாஸ்,

    //
    இறைவன்மீது நம்பிக்கை கொண்டு. குர்-ஆனைத்

    தொட்டால் இறைவன் மகிழ்வான்.
    //
    இறைவன் மீது நம்பிக்கை. இதற்க்கு விளக்கம்

    தரமுடியுமா ?
    இறைவன் மகிழ்வான். எப்படி அதனை

    அறிகிறீர்கள் ?

    இறைவன் தன் நூலில் நம்பிக்கையைப் பற்றி அதிகம் பேசுகிறான். விசுவாசிகளே என்றுதான் பெரும்பாலும் அழைக்கிறான். அதுவே அவனுக்கு மகிழ்வானதாய் இருக்க முடியும் அல்லவா?

    இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. குர்-ஆனைத் திறங்கள், அதன் படி புரிந்துகொள்ளுங்கள்.

    என் அபிப்பிராயங்கள் உங்களை பாதிக்கத் தேவையில்லை.

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  16. அன்பின் நபிதாஸ்,

    >>>>>>>>>>>>
    அறிவின் முழுத் தோற்றம் என்றால் நாயகம்

    (ஸல்) அவர்களைத் தவிர யாரையும்

    சொல்லமுடியாது. அவ்வாறிருக்க நீங்கள் எழுதும்

    // ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் இன்னொரு

    அறிவாளி வந்துகொண்டே இருப்பான் என்று

    இறைவன் சொல்லவில்லையா?// விளக்கம்

    தாருக்களேன்.<<<<<<<<<<<<

    12:76 அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!

    இது இறைவசனம். ஆனால் நான் உங்களோடு உடன்படுகிறேன். முகம்மது நபியைப்போல் ஓர் அறிவுடைய கருணையாளரை நான் கேள்விப்பட்டதே இல்லை இதுவரை.

    எழுதப்படிக்கத் தெரியாத முகம்மது எப்படி குரானை எழுதி இருக்க முடியும் என்று ஒரு கருத்து இருப்பதால், நான் அடக்கி வாசிக்கிறேன் அவ்வளவுதான்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete
    Replies
    1. //12:76 அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!//
      இது அல்லாஹ் தன்னைப்பற்றிச் சொல்வது, தெரியப்படுத்துவது.

      //இது இறைவசனம். ஆனால் நான் உங்களோடு உடன்படுகிறேன். //
      இறைவசனம்தான் என்றும் உயர்வானது.
      இறைவனை அறியாதவரைக்கும் எதிலும் தெளிவு கிடைப்பது கடினம்.
      மார்க்கத்தில் முந்தியது இறைவனைப்பற்றி அறிவதே என்று நபிகள் நாயகம் கோமான் நபி (ஸல்)சொல்லியிருக்கிரார்கள்.

      Delete
  17. அன்பு கவிஞரே ! ரசூலுல்லாஹ் பெயரை எழுதும் பொழுது மிகக் கவனமாக எழுத்து வேண்டும். பெருமானார், நாயகம், இறைத்தூதர் இவாறு எழுதினால்கூட (ஸல்) போடவேண்டும். ஆனால் நீங்கள் நேரடியாக அவர்கள் பெயரை சர்வசாதரணமாக எழுதிவிடும் பழக்கத்தில் இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  18. அன்பு கவிங்கரே ! நீங்கள் அடக்கித்தான் வாசிக்கின்றீர்கள் ! எந்த கருத்தையும் சர்வசாதரணமாக எழுதிவிடுகிரீர்கள் ! அது உங்கள் உரிமை. ஆனாலும் விளக்கம் கேட்டால் // ஆனால் உங்களுக்கான உண்மையான பதில் இறைவனிடமிருந்தே நீங்கள் பெறவேண்டும்.// மற்றும் //இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. குர்-ஆனைத் திறங்கள், அதன் படி புரிந்துகொள்ளுங்கள்.

    என் அபிப்பிராயங்கள் உங்களை பாதிக்கத் தேவையில்லை.// இவ்வாறு எழுதிவிடுகிரீர்கள் !

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. >>>>>>>>>>>>அன்பு கவிங்கரே ! நீங்கள் அடக்கித்தான் வாசிக்கின்றீர்கள் ! எந்த கருத்தையும் சர்வசாதரணமாக எழுதிவிடுகிரீர்கள் ! அது உங்கள் உரிமை. ஆனாலும் விளக்கம் கேட்டால் // ஆனால் உங்களுக்கான உண்மையான பதில் இறைவனிடமிருந்தே நீங்கள் பெறவேண்டும்.// மற்றும் //இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. குர்-ஆனைத் திறங்கள், அதன் படி புரிந்துகொள்ளுங்கள்.

      என் அபிப்பிராயங்கள் உங்களை பாதிக்கத் தேவையில்லை.// இவ்வாறு எழுதிவிடுகிரீர்கள் !

      நன்றி ! <<<<<<<<<<<<

      இறைவனே அனைத்தும் அறிந்தவன் என்பதை நான் முழு மனதாக ஏற்கிறேன். ஆகவே எனக்கு அவன் சொல்லைச் சொல்வதில் ஆளுமை கிடையாது. என் கருத்துக்களை சட்டென எடுத்து வைப்பேன் என்பது உண்மை, ஏனெனில் அது என் உள்ளத்தின் உண்மை. உண்மையைச் சொல்ல நான் அஞ்சுவதில்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சுகிறேன்

      அன்புடன் புகாரி

      Delete
    2. வார்த்தைகள் அழகாக இருக்கிறது.

      Delete
  19. இடைத்தரகர் பலரிடம் பல அனுபவம் தாங்கள் பெற்றிருக்கலாம் தாங்கள். ஆனாலும் தரகு இல்லாமல் அறிவு பெற்ற அனுபவம் இல்லையென புரிகிறது. அவனை அறிந்தவர்கள், அவனைத்தவிர வேறொன்றும் வேண்டாம் என்றிருப்பவர்கள் இவர்களைப்பற்றி தெரிய வாய்ப்புகள் ஏற்படும்பொழுது உங்கள் கருத்துக்கள் புதியவண்ணம் பெறலாம்.

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. கருத்துப் பறிமாறிக்கொள்பவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள். அவர்களை நான் இடைத்தரகர்கள் என்று அழைப்பதில்லை. நல்ல விசயத்தை யாரிடமிருந்து வேண்டுமானாலும் கற்கத் தயாராக இருப்பவன் நான்.

      Delete
    2. நல்ல குணம்.

      Delete
    3. இடைத் தரகர்களையும் அறிவு ஜீவிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். விரைவில் தானே தெளிவீர்கள் என்று நம்புகின்றேன் நபிதாஸ்

      அன்புடன் புகாரி

      Delete
    4. இடைத்தரகர் என்ற வார்த்தை தாங்கள் எழுதியதே. இப்பொழுது அறிவு ஜீவி என்று எழுதுவதும் தாங்களே. தங்களுடைய தனிப்பட்ட இலக்கணம் எனக்கு தெரிய வாய்பில்லைத்தானே!

      நீங்கள் எழுதுவதை பார்த்தால் உண்மையை புரிவதைக்காட்டிலும் தான் சொன்ன சொல்லில் நிற்பதிலே குறியாக இருக்கின்றீர்கள். அதனால் உங்கள் விளக்கம்தான் உங்களிடம் இருக்குமே அல்லாது உண்மைகள் புக வாய்ப்பில்லை.

      இஸ்லாமிய சரித்திரங்களும் ஹதீஸ்களும் நிறைய கேட்டும்,படித்தும் இருக்கவேண்டும். எது உள்ளதோ அது தான் வெளி வரும். பகுத்தறிவால் இம்மார்கத்தை எடைபோடமுடியாது. பகுத்தறிவின் முடிவு இறை இல்லை என்றிடும். இஸ்லாமே முதலில் நம்பிக்கையை முதற்கடமை என்று சொல்கிறது. அறிந்தோம் என்ற அறியாமை இருக்கும்வரை... என்ன சொல்வது ...

      அதனால் என்னை தெளிவடைய சொல்கிறீர்கள். இபாடிஎல்லாம் இருக்கின்றதை அறியும்பொழுது இது சம்பந்தமான தெளிவுகள் இருக்கவேண்டியதுதான். வேறென்ன செய்வது. என் முயற்சி என்றாவது பலனளிக்காமலா போய்விடும். அன்று புரியும் எது அறிவு அறியாமை இறைவன் நாடினால்.

      Delete
  20. // என் போக்கில் சில பதில்களை நான் தருகிறேன். ஆனால் அவை உங்களுக்கு நிறைவானதாய் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.// நல்லது !உங்கள் நிலை புரிகிறது !

    நலமுடன் வாழ்க !

    நன்றி !

    ReplyDelete
  21. அன்பு புகாரி கவிஞரே !

    //இறைவன் தருவதே ஈமான்.//
    ஈமான் என்றால் நம்பிக்கை. நாம்தான் ஈமான் கொள்ளவேண்டும்.

    //இறைவனுக்கும் மனிதனுக்கும் நேரடித் தொடர்பு உண்டு//
    நேரடி தொடர்பில்லாமல் எதுவுமே இல்லை.

    //மற்றபடி அறிவுடையோர் குர்-ஆனுக்கு விளக்கம் கூறுவது ஏற்புடையது.//
    இங்கு அறிவுடையோர் என்பது அல்லாஹ்வை தெளிவாக விளங்கியோர் மட்டும்தான்.

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. >>>>>>//இறைவன் தருவதே ஈமான்.//
      ஈமான் என்றால் நம்பிக்கை. நாம்தான் ஈமான் கொள்ளவேண்டும்.<<<<<<<<<<

      இன்னொருவரின் கட்டாயத்தில் வருவது ஈமான் அல்ல. சிறுவயதில் பலர் சொல்லக் கேட்பது உண்மைதான். ஆனால் ஓரளவு வயது வரும்போதுமட்டும் ஒருவனின் ஈமான் விதையாகிறது. அது விருட்சமாவதும் கருகிப் போவதும் அவன் மனதையும், இறைவனின் அருளையும் பொருத்தது.


      >>>>>>>>//மற்றபடி அறிவுடையோர் குர்-ஆனுக்கு விளக்கம் கூறுவது ஏற்புடையது.//
      இங்கு அறிவுடையோர் என்பது அல்லாஹ்வை தெளிவாக விளங்கியோர் மட்டும்தான்.>>>>>>>>>>>

      அப்படி யாராவது உள்ளனர் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகின்றீர்களா?

      கற்றது கைமண்ணளவு!

      Delete
    2. //ஈமான் என்றால் நம்பிக்கை. நாம்தான் ஈமான் கொள்ளவேண்டும்.// இதில் எங்கே வருகிறது இன்னொருவர் கட்டாயம்?

      //இங்கு அறிவுடையோர் என்பது அல்லாஹ்வை தெளிவாக விளங்கியோர் மட்டும்தான்// இதற்கு பதில் நீங்களே எழுதிவிட்டீர்கள் //கற்றது கைமண்ணளவு!//

      Delete
  22. அன்பு கவிஞர் புகாரி அவர்களே !

    //>>>>விருப்பத்தோடு அதன் விளக்கம் தெரியாவிட்டாலும் கவனமுடன், பயபக்தியுடன் படிக்கும் பொழுது ஆன்மா விளங்கி கொள்ளும்.<<<<

    இதென்ன மூடுமந்திரம். இப்படி யாருமே சொன்னதில்லையே.//

    ஒரு உதாரணம் மூலம் இதனை தெளிவுக்கு கொண்டுவரலாம். நீங்கள் படித்தவர்கள். ஒரு மிகவும் கடினமான கணக்கை நீங்கள் போடுகிறீர்கள். அது தவறாக வருகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதன் விடை சரியானதை கொண்டுவருகிறீர்கள். அப்பொழுது உங்களுக்கு நீங்கள் முன்பு படித்த, சேகரித்த அறிவுகள் துணைகொண்டு அந்த கணக்கை சரியாகப் போட உங்கள் மனம் முயலவில்லையா? முன்பு மனம் உள்வாங்கிய அறிவுகள் செயல்படுகின்றது.

    இன்னும் ஒரு உதாரணம். கவிதைகள் எழுதும் பொழுது எங்கோ எப்பொழுதோ அறிந்தும் அறியாமலும் சேகரித்த அறிவுகள் துணைகொண்டும், அல்லாமலும் புதிய சிந்தனைகளை உண்டாகி உங்கள் நோக்கிற்கு தானே கவிதைகள் எழுதுகிறீர்கள்.

    சில நேரங்களில் புரியாத விபரங்கள் உடன் தெரியாவிட்டாலும் காலம்தாழ்த்தி விபரம் புரிய வருமே. ஆக மனதின் ஆற்றலை உங்களால் கணிக்கமுடியாது. உங்களுக்கு இது போதும் என்று நினைக்கின்றேன்.

    அறிவுகள் உண்டாகும் முன்பு எங்கிருந்தது. ஆன்மாவில் தானே.

    //இதென்ன மூடுமந்திரம்// மூடு அதாவது மறைந்த அல்லது மறைக்கப்பட்ட. மந்திரம் அதாவது அறிவு.

    நன்றி !

    ReplyDelete
  23. அன்புடன் புகாரி கவிஞரே !

    //>>>>>இத்தகைய முழுமையில்லா அறிவைக்கொண்டு எவ்வாறு முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும் ? <<<<<<<//

    முழுமையிலிருந்துதன் அறிவு வெளிப்படும். அது யார்மூலமும் வெளிப்படும். நோக்கத்திற்கு ஏற்பவும் அறிவு வெளிப்படும். முழுமையை என்னவென்று அறியும் பொழுது மனம் அமைதியடையும். பரிபூரணத்தை அறிந்தவர்கள், அதில் தன்னை இழந்தவர்கள் முழுமையானவனின் வார்த்தைகளை ஆய்ந்து அறியமுடியும். அவர்கள் தரும் வேத விளக்கம் தெளிவானதாக இருக்கும். மாறாக வேதம் தெளிந்த கண்ணாடி போன்றது அவரவர் கோனத்திற்கேர்ப்பவும் அது விளக்கத்தைத் தரும். அதனால்தான் இன்று பல பிரிவுகள். விபரமில்லாதவர்கள் வேதத்தை எடுக்க அவரின் நோக்கிர்க்கேர்ப்ப மார்க்கத்தை சொல்லுகின்றனர். வேதத்தில் இலகுவானதும், கடினமானதும், மிகக்கடினமானதும் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்?

    தெளிவானவர்கள் பாடம் நடத்துவதற்கும் தெளிவில்லாதவர்கள் பாடம் நடத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்?

    நன்றி !

    ReplyDelete
  24. அன்பு கவிங்கரே !

    //நபிதாஸ் என்றால் என்ன பொருள் நண்பரே// முன்பே கவிஞர் அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவரின் பின்னூட்டத்தில் எழுதிவிட்டேன்.

    பெருமானார் (ஸல்) அன்னவர்கள் மீது மிகுந்த நேசம்.

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தாசன் என்பது அடிமை என்ற பொருள் உடையதல்லவா?

      அப்துல் என்பதும் தாசன் என்பதும் ஒரு பொருளுடையதல்லவா?

      அப்துல் - சேவகன், அடிமை, தொண்டன் = தாசன்

      Delete
    2. தாசன் அவன் நேசன்
      நேசன் அவன் சேவகன்
      சேவகன் அவன் தொண்டன்
      தொண்டன் அவன் அடிமை
      அடிமை அவன் தாசன்.

      Delete
    3. >>>>தாசன் அவன் நேசன்
      நேசன் அவன் சேவகன்
      சேவகன் அவன் தொண்டன்
      தொண்டன் அவன் அடிமை
      அடிமை அவன் தாசன்.<<<<<

      அப்துல் - அடிமை - சேவகன் - தொண்டன் எந்தெல்லாம் இறைவன் பெயருக்குமுன் மட்டுமே இடவேண்டும் என்று சொல்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

      Delete
    4. ரசூலுள்ளஹ்(ஸல்) அன்னவர்களின் அடிமை என்று அன்னவர்கள் பேரர்கள் சொன்னதைகேட்டு ஆனந்தம் அடைந்த கலிபாவின் சரித்திரம் தெரிந்திருந்தால் இது சம்பந்தமான கேள்வி வந்திருக்காதுதானே?

      Delete
    5. ஆக முகம்மது நபி சொன்னது முக்கியம் இல்லை. அப்படித்தானே ? ;-)

      Delete
  25. அன்பு கவிஞரே !

    ஆங்கில மொழி ஞானத்தை தந்திடும் மற்ற மொழிகள் தரா என்பது அன்று. தாய் மொழி நிலையே தனி !

    மொழிகள் கருத்தேந்திகள். அதில் எண்ணம் இருக்கும். அவ்வளவுதான். எந்த ஆழாமான, தெளிவான நிலையில் ஒரு கருத்து இறங்கியதோ அது, அந்த மொழியில்தான் உச்சரிக்கவேண்டும். மாறாக மொழி பெயர்த்தால் அது முழுமையை அடையாது. முன்னமே துருக்கியில் பரீட்சித்துப் பார்த்து புத்திபடித்துவிட்டதாக அறிங்கர் கரீம் கனி எழுதியுள்ளார்கள்.

    நன்றி !

    ReplyDelete
  26. ஈமானை வெறுமனே வரவழைத்துவிட முடியாது நபிதாஸ். இறைவன் அதற்கான சூழலை உங்களுக்கு அமைத்துத் தருவான்.

    அல்லாவைத் தெளிவாக விளங்கியோர் என்று எவரேனும் உள்ளனரா?

    ReplyDelete
    Replies
    1. நாட்டம் உள்ளவர்குத்தான் கிடைக்கும்.
      நாடாமல் யாரும் தருவதில்லை.
      தோடு துணை செய்கிறேன் என்பான்.
      நீ நடந்து வந்தால் நான் ஓடி வருகிறேன்.
      ஈமான் கொள்ளாதோர் அதற்க்கான சூழல் உருவாகவில்லை என்று தப்பிக்க முடியாது.

      //அல்லாவைத் தெளிவாக விளங்கியோர் என்று எவரேனும் உள்ளனரா?//
      அன்றும் இன்றும் என்றும்
      இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்.
      அல்லாஹ்வை அறிவது கடினம்.
      அதேபோல் அவனை அறிந்தவர்களையும் அறிவது கடினம்.
      காரணம் அவர்கள் விளம்பரம் தேடமாட்டார்கள்.
      தான் அறிந்தவன் என்றும் சொல்லமாட்டர்கள்.
      எதுவும் தெரிந்தவர்கள் போல் காட்டிக்கொள்ளவும்மாட்டர்கள்.
      அமைதியாகத்தான் இருப்பார்கள்.
      எப்புகழ்ச்சியையும் விரும்பமாட்டார்கள்.
      எளிமையாகவே இருப்பார்கள்.
      உபசரித்தால் அரசனைப்போல் உபசரிப்பார்கள்.
      அவர்கள் குணம் மிகச்சிறப்பானது, உயர்வானது.
      எல்லோரிடமும் அன்பாகவே இருப்பார்கள்.
      ஒவ்வொருவரும் என்னைத்தான் அதிகம் நேசித்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு எல்லோரையும் மதிப்பார்கள்.
      அவர்கள்தான் முழுமையான மனிதர்.

      Delete
    2. >>>>>ஈமான் கொள்ளாதோர் அதற்க்கான சூழல் உருவாகவில்லை என்று தப்பிக்க முடியாது.<<<<<<<

      பொய்யான ஈமான் மிகப்பெரும் பாவம்!


      >>>>>>>>>>>>//அல்லாவைத் தெளிவாக விளங்கியோர் என்று எவரேனும் உள்ளனரா?//
      அன்றும் இன்றும் என்றும்
      இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்.<<<<<

      உங்கள் ஞானத் தேடல் தொடரவேண்டும். அது ஓரளவுக்கு வரும்போது இந்த எண்ணத்திலிருந்து நீங்கள் மீள்வீர்கள் நபிதாஸ்

      Delete
    3. //பொய்யான ஈமான் மிகப்பெரும் பாவம்!//
      உண்மை. ஆனால் எது பொய் என்று அறியாமை இருக்கும்வரைக்கும்... அது சம்பந்தமாக இறை நாடவில்லை என்பதைப்பற்றி எழுதியும் பயனில்லை!

      இறை வேதத்தையே "அது ஒரு நூல்" என்று எழுதும் தைரியும் யாருக்கு வரும்? அதை தொடுவதற்கே ஒது செய்யவேண்டும் என்பதை காற்றில் விட்ட காலத்தில் இவ்வாறுதான் கவிகள் வருமோ ! இவ்வாறு எழுத வேண்டி நிர்பந்தம் எழுதிவிட்டேன். குமுதம் ஒரு நூல் அது படிக்க சுவரசியம்மான நூல் என்று எழுதும் நிலைக்கு... போகும் காலமோ ! கண்ணியம் எச்சூலலிலும் நழுவவிடலாமா?

      எழுதி பலனில்லை விவாதம் தான் வளரும் என்பதை புரிந்து கொண்டேன்.

      //உங்கள் ஞானத் தேடல் தொடரவேண்டும். அது ஓரளவுக்கு வரும்போது இந்த எண்ணத்திலிருந்து நீங்கள் மீள்வீர்கள் நபிதாஸ்// நீங்கள் உங்கள் மனதில் உதித்ததை எல்லாம் தைரியமாக எழுதும் பழக்கம் என்று எழுதியபின் இது போன்று எது எத்தனை எழுதினாலும் என்ன ...? ஒரு ஆத்ம திருப்தியடை நான் காரணமானதுக்கு நல்லது என்றுதான் போவேன்.

      Delete
  27. ஆங்கிலம் ஞானம் தந்திருடும் என்று நான் சொல்லவில்லையே நபிதாஸ்

    ஆங்கிலத்தில் குர்-ஆனுக்கான மொழி பெயர்ப்புகள் அதிகம்.

    சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பினை ஆங்கிலத்தில் கண்டு நான் வியந்தேன் நன்றியோடு. அதுவே எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete
  28. //
    அது
    ஒரு நூல்

    அந்த
    அற்புத நூல்
    உன் கைகளில்
    //
    இதுதான் சிரித்துக்கொண்டே கிள்ளுவது.
    தொட்டியை ஆட்டிவிட்டு கிள்ளுவது.

    //
    நீ புத்திமான்
    ஆனால்
    அந்த நூலுக்கும்
    உன் புத்திக்கும்
    விளங்கி எட்டுவதில்
    வெகு தூரம்
    //
    //
    எழுதியவரின் நோக்கம் இங்கே மிக முக்கியம். இறைவன் எழுதுகிறான்.

    அது நேரடியாய் ஏதும் அறியாத பாமர மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று எழுதுகிறான்.

    என்றால் எத்தனை எளிமையாக எழுதி இருப்பான்.

    இறைவனல்லவா, அவன் ஏதும் அறியாதவனா என்ன?
    //

    இதற்கு விளக்கம் யார் சொல்வது ?



    தலையில் பாரம் சுமந்து பழக்கப்பட்டபின் அது இல்லாமல் நடக்கமுடியாது. அந்த சுபாவத்தை நீக்க முயல்வது தவறே !

    நன்றி !

    ReplyDelete
  29. >>>>இடைத்தரகர் என்ற வார்த்தை தாங்கள் எழுதியதே. இப்பொழுது அறிவு ஜீவி என்று எழுதுவதும் தாங்களே. தங்களுடைய தனிப்பட்ட இலக்கணம் எனக்கு தெரிய வாய்பில்லைத்தானே!<<<<<

    குழம்ப வேண்டாம் இடைத்தரகர்கள் என்பவர்கள் இஸ்லாத்தைக் கருவியாகக் கொண்டு வயிறு வளர்க்கும் கூட்டம். அதிகாரம் கைகொள்ள முனையும் கூட்டம். புகம் எய்த போராடும் கூட்டம்.

    அறிவு ஜீவிகள் என்பவர்கள் நீங்கள் நான் இன்னும் யாரெல்லாம் குர்-ஆனை தெளிந்த நல்லறிவோடு அனுகி மனித குலத்துக்கு விளக்கம் தருகிறார்களோ அவர்கள்.

    அன்புடன்புகாரி

    ReplyDelete
  30. >>>>>>>அதை தொடுவதற்கே ஒது செய்யவேண்டும் என்பதை காற்றில் விட்ட காலத்தில் இவ்வாறுதான் கவிகள் வருமோ ! இவ்வாறு எழுத வேண்டி நிர்பந்தம் எழுதிவிட்டேன்<<<<<<<<<<

    வேரூண்றிய மூட நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன உங்களிடம்.

    ஒரு முஸ்லிம் அல்லாதவருக்கு குர்-ஆனைக் கொடுப்பீர்களா மாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. திருக்குர்ஆன் அதனை ஒதுவோடு தொட்டாலும் ஒது இல்லாமல் தொட்டாலும் வேதத்திற்கு ஒன்றுமில்லை. அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தைகள். அதற்க்கு கண்ணியம் தரவேண்டாமா?

      பரிசுத்தத்திலிருந்து வந்த வேதம். அதன் உண்மைகளை அறிந்துகொள்ள நாடும் மனிதன் தன்னை சுத்தம் செய்யவேண்டும். அதன் மூலம் உள்ளமும் சுத்தமாகும் அந்நிலையில் வேதத்தை தொட்டு ஓதும் போது தெளிவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

      அருவருப்பான நிலையில் மனம் ஒன்றிப்பதில்லை. சுத்தத்தில் தான் மனம் ஒன்றுபடும். நல்ல சிந்தனைகளைத்தரும்.

      இஸ்லாமியர் வேதத்தை ஓதும் போது சுத்தம் செய்துக்கொண்டு ஓதுவார்கள். அவ்வாறு நாமும் செய்யவேண்டும் என்ற விளக்கத்தை சொன்னால் அவர்களும் செய்வார்கள். இனி வேதங்களை தொடும்போது பொதுவாக இந்த சுத்தம் செய்யும் எண்ணம் வரலாம். செய்தால் நன்மை.

      மார்க்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால் ஒரு ஒழுங்கீனம் குணம் உண்டாகும். இல்லையேல் எதையும் மீறும் எண்ணம் உண்டாகும்.

      என்னிடம் மூடிய நம்பிக்கைகள் அதிகம் தான். நம்பிக்கையில்தானே இஸ்லாம் இருக்கின்றது.

      முன்னோர் காட்டித்தந்த நல்ல பழக்கங்கள் அறியாமையில் மூட நம்பிக்கையாகத்தான் தெரியும். அதில் சிந்தனை செய்தால் உண்மைகள் மறைந்திருக்கும். சிந்திப்பவர்களைப் பொருத்தது அது.

      எத்தனையோ முஸ்லிம் அல்லாதவர் முஸ்லிம் ஆகி ஒது செய்து தான் வேதத்தை தொடுகின்றனர்.

      Delete
    2. மார்க்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால் ஒரு ஒழுக்க குணம் உண்டாகும். இல்லையேல் எதையும் மீறும் எண்ணம் உண்டாகும்.

      என்று வாசிக்கவும்.

      Delete
  31. பகுத்தறிவைக் கொண்டு உதித்த ஒரே மார்க்கம் இஸ்லாம். முகம்மது நபியினும் மேலான ஒரு பகுத்தறிவாளர் வேறு ஒருவர் இல்லை.

    360 சிலைகளையும் பார்த்து கடவுள் இல்லை என்றார். பிறகு அல்லாஹ்வைத் தவிர என்றார்.

    அல்லாஹ்பின் பண்புகள் குர்-ஆனில் தொடக்க வரியிலேயே சொல்லப்படுகிறது.

    இதில் மூடநம்பிக்கை எங்கே இருக்கிறது. பகுத்தறிவு மட்டுமே இருக்கிறது.

    ஓர் இஸ்லாமியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

    அறிவால் சிறந்த மார்க்கம்
    அன்பால் சிறந்த மார்க்கம்
    கருணையால் சிறந்த மார்க்கம்
    மன்னிப்பால் சிறந்த மார்க்கம்
    சாந்தியால் சிறந்த மார்க்கம்
    சமாதானத்தால் சிறந்த மார்க்கம்
    சகோதரத்துவத்தால் சிறந்த மார்க்கம்

    கட்டுக்கதைகளைக் குப்பையில் கொட்டிவிட்டு குர்-ஆனைக் கைகளில் எடுங்கள். அது ஒன்றே தீர்வு.

    அன்புடன் புகாரி




    ReplyDelete
    Replies
    1. பகுத்தறிவு. இன்றைக்கு ஒன்றை சொல்லும். நாளை ஒன்றை சொல்லும். அதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவு முடிவில் இல்லை என்றுதான் முடிவுக்கு வரும். ஒன்றை பகுத்து பாருங்களேன் கடைசியில் இல்லைதான் வரும்.

      இஸ்லாத்தில் அறிவு அதாவது பூரண அறிவு அது சம்பந்தமாகத்தான் விளக்கங்கள் உண்டு. அவ்வறிவு முழுமயைக்காணும். தெளிவைத்த்ரும்.

      வேதம் எல்லோருக்கும் நேர்வழி காட்டாது பயபக்திவுடையோரைத்தவிர. அதனால்தான் இன்று பல பிரிவுகள். எல்லோருக்கும் அதுதான் வேதம். அதை வைத்துதான் விளக்கம் தருகின்றனர்.

      தங்கள் பெயரை எழுதும் போது கவிஞர் அன்புடன் புகாரி என்று எழுதுகிறேன். மனிதகுல வழிகாட்டி, ஒவ்வொரு மனிதனும் நேர்வழியடையவேண்டும் என்பதிலே தன் வேண்டுதல் உடைய வேந்தர் நாயகத்தின் பெயரை மறுபடியும் சாதரண மனிதனை எழுதுவதுபோல் எழுதுகிறீர்களே ! இது எப்படி ? நம் மார்க்கத்தின் தலைவர் அவர்கள் தானே !

      Delete
    2. அன்பின் நபிதாஸ், மிக எளிமையாக குர்-ஆனைப் பொருள் உணர்ந்து ஓதுங்கள் என்றேன். நீங்கள் அதைவிட்டுவிட்டு எங்கெல்லாமோ ஏன் தான் வட்ட மிடுகிறீர்களோ தெரியவில்லை. இப்படி எழுதி எழுதியா உங்களுக்கு நான் புரிய வைக்க முடியும் இன்சால்லா நேரில் சந்தித்தால் தேத்தண்ணீரோடு அமர்வோம் நண்பரே. அதுவரை குர்-ஆனைப் பொருள் உணர்ந்து வாசியுங்கள். நன்றி

      Delete
    3. தங்கள் நிலை புரிகிறது.

      வேதத்தை பொருள் உணர்ந்து ஒதக்கூடாது என்று எங்கே நான் எழுதினேன் ? திரும்ப கருத்தினைப்புகளை படியுங்கள் உங்களுக்கு புரியும்.

      தேநீரில் உபசார சுவைதான் மிகும்.

      Delete
    4. மார்க்க விசயங்களைக் கலந்துரையாடுவதற்கு முகம்மது நபி அவர்கள் விருந்துபசாரத்தில்தான் தொடங்கி இருக்கிறார் எப்போதும்.

      Delete
    5. வாகனம் பதை மாறி போகிறது.

      Delete
  32. நபிதாஸ்,

    வேத நூலை மாற்று மதத்தினருக்கு தாராளமாக கையளித்ததால்தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. பெர்னாட்சா என்ற அறிஞர்தான் குர்-ஆனை ஓதிவிட்டு அப்படியே அசந்துபோய்விட்டார். இது ஒன்றுதான் இந்த உலகத்துக்கான தீர்வு. முகம்மது நபி நேற்று இன்று நாளைக்கு மார்க்கம் தந்துவிட்டார் என்று புகழ்ந்து தள்ளினார்.

    அவர் குர்-ஆனை வாசிக்கும் போது எப்படி இருந்தார் எங்கே இருந்துகொண்டு வாசித்தார் என்றெல்லாமா யோசிப்பீர்கள்?

    புனிதம் என்பது கருத்தியலில் இருக்கிறது, காகிதங்களில் இல்லை.

    இன்று இணையத்தில் குர்-ஆன் பல மொழிபெயர்புகளிலும் குர்-ஆனாகவும் கிடைக்கிறது. அவற்றைப் பார்வையிடும்போது பலான விளம்பரங்களும் வருகின்றன. அதனால் புனித கெட்டுவிடுமா என்ன?

    உங்கள் பயபக்தியைப் போற்றுகிறேன். நானும் அப்படித்தான். முதன் முதலில் பம்பாய் சென்றபோது பள்ளிக்குள் செறுப்பை எடுத்துக்கொண்டு எல்லோரும் சென்றபோது செத்துப்போனேன். ஆனால் இப்போது நிறைய வளர்ந்துவிட்டேன்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  33. நிறம் மாறும் சில ஆனாலும் குணம் எங்கிலும் மாற. இப்படி பல படைப்புகள் உலகில் இறைவன் படைத்துள்ளான்.

    ஆனாலும் பெர்னாட்சா இஸ்லாம் ஆகவில்லை. பலர் இஸ்லாம் ஆகி மார்க்க விதிகளை பேணுகின்றனர்.

    இது சம்பந்தமாக வேண்டுமானால் ஒரு கட்டுரையே எழுதலாம்.

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. பெர்னாட்சா இஸ்லாத்தில் இணையாததற்கு ஒரு வலுவான காரணத்தை அவரே சொல்கிறார். குர்-ஆனில்தான் இருக்கிறது இஸ்லாம், நடைமுறையில் எங்கும் காணப்படவில்லை என்று சொன்னார். அது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் சொன்னார். காரணம் ””””இடைத்தரகர்கள்””””” என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய விடை

      Delete
    2. இஸ்லாம் அதற்கு ஆள் சேர்ப்பது அல்ல. இஸ்லாம் மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் மார்க்கம். அவர் உண்மையில் தெளிவாக புரிந்திருந்தால் இஸ்லாம் தழுவிருப்பார். மாறாக கருத்துத்தான் தெரிவித்துள்ளார். அவர், 'இஸ்லாம் நடைமுறையில் எங்கும் காணப்படவில்லை' என்று, கூரியதை எப்படி ஏற்க முடியும் ?

      பெரியார்கூட தான் ஒரு மதத்தை தழுவுவதாக இருந்தால் இஸ்லாத்தை தான் ஏற்பேன் என்றார். பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார். இது அவரவர் தெளிவை, நோக்கத்தைப் பொறுத்தது.

      எனவே தங்கள் கருத்து தன் வாதத்திற்கு வலுசேர்ப்பது போல் தெரிகிறது. இது தெளிவு நாடுபவர்களுக்கு உகந்ததன்று.

      நன்றி !

      Delete
    3. இதற்கு பதில் அண்ணா சொன்னதைச் சொல்ல வேண்டும். நான் இஸ்லாமியனாகத்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பிறப்பால் நான் எங்கிருந்தால் என்ன?

      Delete
    4. அவரவர் உள்ளம் சார்ந்தது.

      Delete
  34. //புனிதம் என்பது கருத்தியலில் இருக்கிறது, காகிதங்களில் இல்லை.//

    மனிதன் உள்ளமும் உருவத்திலும் படைக்கப்பட்டவன். இரண்டுமே சுத்தம்மாக இருக்கவேண்டும்.

    இணையம் அப்படித்தான். நல்லவர்கள் மற்றவைகளை பார்ப்பதில்லை. தன் நோக்கிலேதான் இருப்பார்கள். அவர்களுக்கு அவைகள் கவனத்தை ஈர்க்காது. இணையம் நிழல். உருவமல்ல. சைத்தான் எல்லாகோலத்திலும் வருவான். அவன் வலையில் விழுகிறேன் என்றால் என்ன செய்ய ?

    ReplyDelete
  35. பதிலையும் நீங்களே சொல்லி என் பணியை எளிதாக்கினீர் நபிதாஸ், நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோணம் எப்படியோ அப்படி புரிந்து சந்தோசம் அதன் மூலம் அடைந்தால் சந்தோஷமே.

      நன்றி !

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers