.

Pages

Tuesday, December 2, 2014

[ 3 ] எழுதலாம் வாங்க ! செய்தியும் அதன் பின்னணியும்

செய்தியும் அதன் பின்னணியும் பற்றி இன்னும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்...

புகைப்பட கலை ஆர்வம் அதிகரித்த நிலை, அதே போன்று கேமரா அளவு சிறியதாகி எல்லோரும் உபயோகிக்க ஏதுவான நிலை. 1980 களில் செய்தியாளருடன் புகைப்பட காரர்களும் இணைந்து செயல்படும் நிலை செய்திகளின் ஆதாரம் புகைபடத்துடனே நிரூபிக்கும் நிலை இருந்தது. பெரிய தலைவர்கள் தனக்கென புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார். நடிகர்களும் தனக்கென பிரத்தியோக புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார்கள்.

முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு நடுவர் மட்டுமே இருப்பார்கள் அவர்கள் கூறும் தீர்ப்பே இறுதியானது. நவீன தொழில் நுட்பம் வருவதற்கு முன்பு புகைப்படகாரர்கள் விளையாட்டின் நிகழ்வுகளை படமெடுத்து செய்தியாக வெளியிடுவர். ஒருமுறை நடுவரால் ரன் அவுட்டை இல்லை என தீர்ப்பு சொல்லப்பட்டது. புகைப்பட கலைஞர்கள் எடுத்த போட்டோவில் மிக துல்லியமாக அவுட் என நிருபிக்கப்பட்டு விமர்சகர்களால் சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் தொழில் நுட்பம் வளர்ந்த பின்னர் மூன்றாவது நடுவராக வீடியோ பதிவும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று ராஜீவ் காந்தி கொலை கூட புகைப்படம் மூலமே நிரூபிக்க
பட்டது. செய்தியின் பின்னணியில் புகைப்படம் இன்றி அமையாத ஒன்று.
நிகழ்சிகளை பதிய முற்படும் செய்தியாளர்கள் முதலில் சூழ்நிலையை
விவரித்து எழுதுவார்கள். உதாரணமாக மறைவு செய்தியாக இருந்தால் சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், அவர்களின் செயல்பாடு, அதே போன்று அரசியல் எதிரியாக இருந்தவர் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டால் அவரின் முகபாவம் செயல்பாடுகளை கூட விளக்குவார்கள். வீட்டின் பின்னணியை கூட விளக்கி எழுதுவார்கள். புகைப்படம் வந்த பின்னர் இவைகளுக்கு தேவையே இல்லாமல் போயிற்று.
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

4 comments:

  1. இந்த தொடர், இளம் பத்திரிக்கையாளர்களுக்கு நல்லதொரு பாடமாக திகழும்...

    ReplyDelete
  2. எல்லாவற்றிலும் நன்மையையும் தீமையும் உள்ளது. பயனாளியைப் பொறுத்து அதன் பலன் வெளிப்படும்.

    ReplyDelete
  3. பயனுள்ள செய்தி அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உண்டு. அடிக்கடி எழுதி அறியத் தாருங்கள். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. இதழியலின் அனுபவங்கள் எங்கள் முன்னால் இனிதாய்க் காண்கின்றோம், தமிழ் ஊற்றே!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers