.

Pages

Saturday, December 31, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு ( AAMF ) ஓர் வேண்டுகோள் !

அதிரை : 12/11/2011  ,முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் பிலால் (ரலி) நகர், ஆதம் நகர் (MSM நகர், KSA லைன் உள்ளடக்கிய ) போன்ற பகுதிகளில் பெரும்பாலும் ஏழை எளியோர்தான் வசிக்கின்றனர்.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உருவாக்கும்போது இந்தப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது?

அதிராம்பட்டினத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் மேட்பாட்டுத் திட்டங்களுக்காகவா? அல்லது அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு நடைபெறும் தேர்தல்களுக்காகவா? எப்படி கருதுவது எனத் தெரியவில்லை.

ஹஜரத் பிலால் ( ரலி) நகர் மற்றும் ஆதாம் நகர் ( M.S.M  நகர் & K.S.A லைன் ) ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களும் அதிரம்பட்டினத்தைச் சார்ந்தவர்கள்தான். இம்மக்களின் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு இவர்களையும் அரவணைத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நன்மையையும் நற்கிருபையும் செய்வானாக. ஆமின்!

இப்படிக்கு,
M.
நிஜாமுதீன் B.Sc
( 9442038961  )
குறிப்பு:- அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்தால், இந்த வேண்டுகோளை நிராகரிக்கவும்.

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers