.

Pages

Tuesday, August 7, 2012

காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் முஹம்மது அஸ்லம் அவர்களுடன் ஒர் அழகிய சந்திப்பு ( காணொளி )


அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு “கல்வி” என்ற சிறந்த சேவையை வழங்கி வருகின்ற அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி “அதிரைப்பட்டினம்” என்ற நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக காலஞ்சென்ற “கொடை வள்ளல்” காதிர் முகைதீன் அப்பா மற்றும் “கல்வித்தந்தை” மர்ஹூம் ஹாஜி S.M. சேக் ஜலாலுதீன் மரைக்காயர் போன்றவர்கள் ஆற்றிய எண்ணிலடங்காத் தொண்டுகள் மட்டுமே என்றால் மிகையாகாது.

தன் தந்தையாரைப் போல கல்விச்சேவையை தொய்வின்றி திறம்பட தொடர்வதற்காக அல்லும் பகலும் அயாராது உழைத்து, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டு இருக்கின்ற நமது கல்லூரியின் தாளாளர் டாக்டர் S. முஹம்மது அஸ்லம் அவர்களிடம் கீழ்கண்ட மூன்று கேள்விகளை முன்வைத்து அணுகினோம். அவர்களின் பல வேலைகளுக்கிடயே நமக்காக நேரத்தை ஒதுக்கி விரிவான விளக்கத்தை தந்தார்கள்.

1. அதிரையில் மகளிர் கல்லூரி

2. முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

3. கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள்

பேட்டியின் போது தன் கல்வி நிறுவனங்களின் மீதுள்ள ஆர்வமும் பிடிப்பும் அவர்களிடம் தென்பட்டது. மேலும் உலகளாவிய சாதனையாளர் விருதுகள் பல பெற்று நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டுருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களின் பதில்.....

அதிரையில் மகளிர் கல்லூரி :



முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள் :



கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் :

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers