.

Pages

Thursday, September 27, 2012

'சந்திப்பு' : ‘புதுமைக்கவி’ சகோ. அதிரை அப்துல் ரஜாக் [காணொளி]


சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாம், சமூக மேம்பாட்டிற்காக செயல்படுத்தக்கூடிய நல்ல விஷயங்கள் மற்றும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய தீங்குகள் போன்றவற்றின் சாதக/பாதகங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது என்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. சமுதாய விழிப்புணர்வு...
2. கல்வியின் அவசியம்...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அதிரை  அப்துல் ரஜாக் அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

அதிரை  அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எழுத்துத்துறையில் பங்களிப்பாற்றும் இவர் இஸ்லாமிய இதழ்களான நர்கீஸ், முஸ்லீம் முரசு, மறுமலர்ச்சி, நற்சிந்தனை, சமரசம், மக்காச்சுடர், மணிச்சுடர், அல்இஸ்லாம் போன்றவற்றில் பல்வேறு சமூக ஆக்கங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புதுமை பூக்கள்’ என்ற நூலை எழுதிருப்பதோடு மட்டுமல்லாமல் மார்க்க பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

2 comments:

  1. மாஷா அல்லாஹ், அறிய தந்தமைக்கு நன்றி நிஜாம்

    ReplyDelete
  2. அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
    அப்துக் ரசாக் காக்கா அவர்களின்
    அழுத்தமான கருத்து .நம் சமுதாய
    தேவை பற்றியும் அரசியல்வாதிகள்
    முஸ்லிம் சமுதாயத்தை பகடை காயாக
    பயன் படுத்துகிராகள் என்ற அப்பட்டமான
    உண்மையை எடுத்துரைத்த தங்களின் கருத்து
    அதனிடமிருந்து மீள நல்ல கல்வியறிவு தேவை
    என நம்மவர்க்கு புரிய வைத்தமைக்கு நன்றி
    நான் தமிழூற்று இதழில் தங்களின் கவி பற்றி
    எழுத எண்ணி இருந்தேன் ..நமதூர் சிந்தனையாளர்களை
    வேரில் பழுத்த பலாக்கள் என்ற தலைப்பில்
    ஒரு நூல் வெளியிட எண்ணி இருந்தேன்
    அதில் தங்களை பற்றியும் பதிய
    எண்ணி இருந்தேன் ..அதனை தம்பி
    நிஜாம் நிறைவேற்றி விட்டார் ..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers