.

Pages

Tuesday, October 30, 2012

சந்திப்பு : 'பதிவர்' சகோ. ஜஃபருல்லாஹ் [ஜாஃபர்] - காணொளி


இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், .ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள  நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

6 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களின் கருத்து மிகவும் அருமை, எல்லோருக்கும் பயன்படும் வகையில் சொல்லி இருப்பது மிக மிக நன்றாகவே இருக்கின்றது.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    .............................

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரருக்கு...

    இனிமையான குரல் வளத்தில் எளிமையான பேச்சு

    நட்புடன் பழகக்கூடியவர் தான் எடுத்த பணிகளை சிரமம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர்

    இவரின் பேச்சிலே தெரிகின்றது சமூகத்தின் மீது ஆர்வமுள்ளவர் என்று...

    தொடரட்டும் இவரின் சமூக சேவைகள் என்றென்றும்...[ இறைவன் நாடினால் ! ]

    ReplyDelete
  3. சகோ ஜாஃபரை பற்றி அறியதந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. மண்ணின் மைந்தர் சகோதரர் ஜாஃபர் அவர்கள் கண்மணி முஹம்மத்(ஸல்)அவர்கள் பிறந்த மண்ணில் வைத்து என்னைப் பேட்டி கண்ட பொழுதில் -சென்ற மார்ச் மாதம் உம்ரா பயணத்தில்-அவருடன் பழகும் நல்வாய்ப்புக் கிட்டியது. நான் காண வேண்டும் என்று ஆவலுடன் தேடிக் கொண்டிருந்த கவிஞரும் நண்பருமான பரங்கிப்பேட்டை இப்னு ஹம்தூன் அவர்களைச் சந்திக்க வைத்து என்னை வியப்பில் ஆழ்த்திய நல்லுள்ளம் கொண்ட அன்புத் தம்பி ஜாஃபர் அவர்கள் ஊடகத் துறையில் சிறப்புடன் மிளிர என் துஆவும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. சகோ ஜாஃபரை பற்றி அறியதந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களின் கருத்து மிகவும் அருமை.

    தொடரட்டும் இவரின் சமூக சேவைகள் என்றென்றும்...[ இறைவன் நாடினால் ! ]

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers