.

Pages

Saturday, December 15, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI


1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் [ PIO ] பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி [ இவை இரண்டும் கட்டாயமில்லை ] ஆகியவை இடம்பெற வேண்டும்.

3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு அதன் ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டையும் பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்து கொள்ளலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

உதாரணமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் என்ற ஊரின் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து, தகவல்களை நாம் கேட்டுப்பெறலாம் ?

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் [ 5 கோடி ரூபாய் ] இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் [ 2 கோடி ரூபாய் ] இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் [ முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ], அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் [ தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ] நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனைப் பெற யாரை அணுகுவது ? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்போது ஆரம்பமாகும் ? இப்பணிகள் முழுவதும் எப்போது நிறைவு பெரும் ?

13. நமதூரில் புதிய தீ அணைப்பு நிலையம் அமைய யாரை அணுக வேண்டும் ? அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல பொதுமக்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் ?

14. அரசின் சார்பாக பாதாள சாக்கடைத் திட்டம் நமதூரில் ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு எவ்வாறு எடுத்துச்செல்வது ? அதற்குரிய வழிமுறைகள் என்ன ?

15. நமதூரில் இடிந்துவிழக்கூடிய நிலையில் உள்ள பள்ளிக் கட்டங்களைப் புதுப்பிக்க யாருடைய கவனத்துக்கு எடுத்துச்செல்வது ? அதற்குரிய வழிமுறைகள் என்ன ?

இப்படி நீங்களும் இதே போல் எண்ணற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :
திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : mailto:sic@tn.nic.in
Website : http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :
Shri Satyananda Mishra
Chief Information Commissioner Room No.306,
II FloorAugust Kranti BhavanBhikaji
Cama PlaceNew Delhi - 110 066.
Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

குறிப்பு : மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
[ இது ஒரு மீள்பதிவு ! ] 

9 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பயனுள்ள பகிர்வு. ஜசாக்கல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் முஸ்ஸலாம்

      அன்புச்சகோதர் ஆஷிக் அஹமது

      மிக்க நன்றி தங்களின் வருகைக்கும்... கருத்துக்கும்...

      Delete
  2. பெருநாள் வாழ்த்துகள். மிக மிக பயனுள்ள பதிவு. தரகர்களிடம்

    பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு முதலில் நன்றி.

    அன்பின் தம்பியின் கடும்முயற்சி ஒரு நாளைக்கு வெடித்து சிதறப்போகுது.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹுதம் கோ.மு.முஹம்மது அலியார்,
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    --------------------------------------------------------

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹு அருமையான பதிவு இதுபோல் இன்னும் மக்களுக்கு பயனுள்ள பதிவுகள் பதியவேண்டும் புரியதவர்க்கும் புரிய கூடிய முறையில் பதித்து உள்ளார் நமது காக்கா சேக்கனா M. நிஜாம் அவர்கள் பாராட்டுகள்.

    ReplyDelete
  5. இது முற்றிலும் எனக்கு புதுசு, தகவல் அறியும் உரிமை சட்டம் - மேல் சொன்ன கேள்விகளுக்கு பதில் பதிவு வருமா?

    அருமை நண்பா...

    ReplyDelete
  6. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    அதிலும் கூடுதல் சிறப்பு மத்திய மாநில அரசின் தகவல் பெற முழுவிலாசம் பதிந்திருப்பது. தாங்களின் சுயநலமில்லா விழிப்புணர்வுடன் கூடிய பொதுச்சேவையை காட்டுகிறது.

    ReplyDelete
  7. அருமையான மற்றும் தேவையான பதிவு. மேலும் e-mail மூலம் தகவல் கேட்டு பெற வழி உண்டா?

    ReplyDelete
  8. மிக மிக பயனுள்ள பதிவு. தரகர்களிடம்

    பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers