.

Pages

Monday, December 24, 2012

[ 6 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

மருத்துவ வாளகம்...
நோயாளிகளின் சங்கமம்
பல்வேறு நோயாளிகள்
நோய் தாயென்று பாராது
சேயென்றும் பாராது நோய்
ஆணென்றும் பாராது
பெண்ணென்றும் பாராது
மனித வர்க்கத்தை 
பல்வேறு முகம்கொண்டு
தாக்கியதன் விளைவாக
மருத்துவமனையில் பெருங்கூட்டம்
அதிலொரு நோயாளி
வாயிற்று வலி தாங்காது
உருண்டு பெரண்டு
துடித்தார் ஒரு நோயாளி
பார்ப்பவர் அனைவரும்
பதைபதைத்து போயினர்
அங்கு அந்த நம் கவிஞானி
பதைக்காமல் சிரித்து நின்றார்

ஏன் சிரித்தார் கவிஞானி
காண்போர்கள் வியந்து
ஏன் சிரித்தீர் என்று கேட்க
ஞானியவர் பதில் பகர்ந்தார்
பாவிமகன் இவனும்தான்
உழைத்து உழைத்து ஓடானான்
உழைத்து கிடைத்த பணம் தன்னை
மனைவி மக்களுக்கு
கொடுக்காமல் குடித்து குடித்து
உடல் நலத்தை கெடுத்து கொண்டான்
குடித்து குடித்து குடல் அழுகி
வலியெடுத்து புரள்கின்றான்
பசித்த குழந்தை கொடுக்காத
பாவிக்கு குடல் கெட்டு
போனதற்கு இவன்தானே
காரணமையா இவன் செய்த
பாவம் இவனே சுமக்கின்றான்
என சிரித்தார் கவிஞானி

'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

9 comments:

  1. மதுவுக்கு அடிமையானோருக்கு அருமையான பயன்தரும் விழிப்புணர்வு !

    வாழ்த்துகள் பத்திரிக்கைதுறை நிபுணர் அவர்கட்கு...

    ReplyDelete
  2. “ஆல்கஹால்” என்பது ஒரு போதைப் பொருளா ?
    ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பதும் ஒரு “நோயே” !

    1. பொழுதுபோக்காக ( ஜாலிக்காக ) எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்....

    2. இன்று மனசு சரியில்லை ( ! ? ) எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவரும்...

    3. விஷேசத் தினங்களில் தங்களின் “மகிழ்ச்சி”யை ( ! ? ) வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவரும்....

    4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டுச் செல்வோரும்...

    5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனோரும்....

    6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்போரும்...

    7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவரும்...

    8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துவோரும்....

    9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துவோரும்....

    10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்போரும்....

    11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் “420” களும்...

    12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  3. என்னதான் பாதிப்புகள் ?
    1. ஞாபக மறதி

    2. உடல் உறுப்புகள் பாதிப்பு

    3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்

    4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்

    5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்

    6. தற்கொலை முயற்சி செய்தல்.

    7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில் சந்தேகித்தல்

    8. குழந்தையின்மை

    9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.

    10. இறுதியில் அகால மரணம்

    “குடி” நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

    ReplyDelete
  4. என்னதான் தீர்வு ?

    1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

    2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

    3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

    4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

    5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு “கவுன்சிலிங்” செய்வதன் மூலம் குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

    6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான “ஜூன் 26” அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

    7. ஊரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனால் நமது சமுதாய மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை கருத்தில்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்யலாம்.

    8. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் “பூரண மதுவிலக்கு சட்டத்தை” இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  6. கவிஞானியின் ஆறாம் சிரிப்பில் குடியினால் ஏற்படும். தீமைகளையும் குடிக்கு அடிமையானவனின் நிலைமையையும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் கவிஞானி.

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. மதுவுக்கு அடிமையானோருக்கு அருமையான பயன்தரும் விழிப்புணர்வு !பதிவுக்கு நன்றி.

    பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  8. அன்பு தம்பி சேகன .எம் ,நிஜாம் அவர்களின்
    கருத்து ..அனைவருக்கும் ஒரு பாடம் ..
    சகோ ..மாற்று பார்வை ,
    சகோ ஜமால் காக்கா
    சகோ அதிரை மெய்சா
    தம்பி ஹபீப் ..வருகைக்கும்
    கருத்திற்கும் நன்றி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers