.

Pages

Wednesday, July 17, 2013

இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது ?

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு [ 2013 ] 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணி நேரமே நோன்பு நோற்கிறார்கள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.

இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.

இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.

உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

அன்புதான் இஸ்லாம்.
கருணைதான் இறைவன்.

பல இடங்களில் அவன் அழுத்தமாகக் கூறுவது யாதெனில் அவன் மனிதர்களை சிரமங்களுக்கு உட்படுத்துவதே இல்லை என்பதைத்தான்.

நன்மை தீமை அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறானே தவிர மனிதர்களை அவன் சிரமங்களுக்கு உள்ளாக்குவதே இல்லை.

இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185) என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான்.

மெக்காவில் நோன்பு நோற்கும் காலம் என்பது 11 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரங்கள்தாம். நோன்பு என்பது மக்கா மதினா நகர வாசிகளைக் கொண்டுதான் வரையறுக்கப்பட்டது. அதைத்தான் உலக மக்கள் யாவரும் பின்பற்றுகிறோம்.

அப்படி பின் பற்றும்போது வரும் ஏற்ற இறக்கங்களை இறைவனின் வழியில் நாம் சரிசெய்துகொள்வதும் நமக்குக் கடமையாகும்.

ஒரு நாளில் அதிகப்படியாக 14 மணி நேரம் நோன்பு நோற்பது என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிரமம் தராததாக அமையும்.

கடுமையான வெயில் காலங்களில் குழந்தைகள் தாகம் காரணமாக சுருண்டு விழுந்துவிடும் நிலையை இறைவன் ஒருக்காலும் தரமாட்டான். ஏனெனில் அவன் கருணையுடையவன், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்.

நோன்பின் நோக்கம் அறியாமல் நோன்பு வைப்பதால் நன்மையைவிட தீமையே விளையும்.

நோன்பின் நோக்கங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என்று மூன்றினைக் கொள்ளலாம்.

1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,

2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,

3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.

நோன்பு நாட்களில் நோன்பு திறந்தபின்னும் நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம், ஒரு பேரீச்சம் பழத்தையும் ஒரு குவளை தயிரையும் கொண்டு நோன்பு திறந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.

நோன்பு திறக்க நம் ஊரில் வாங்கிக் குவிக்கும் உணவுவகைகள் ஏராளம். மற்ற மாதங்களில் உண்பதைவிட ரமதான் மாதத்தில்தான் நாம் அதிகம் உண்கிறோம்.

நோன்பின் நோக்கத்திற்கு இது மாறாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகல் முழுவதும் உறங்கியும் இரவெல்லாம் விழித்திருந்தும் சிலர் நோன்பை சமாளிக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் உறங்குவது தவறில்லைதான். ஆனால் இப்படி இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக்கொண்டு பசியை உணராதிருப்பது சரியா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் நிறைவேறாமல் கடமையே என்று நோன்பு நோற்பது கூடுமா என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன். அன்புதான் இஸ்லாம் கருணைதான் இறைவன்.
அன்புடன் புகாரி

46 comments:

  1. மிகவும் நல்ல பதிவு. இது குறித்து பலரிடம் நான் பேசிய போதும் என்னை உதைக்காத குறை தான், நோன்பு நோற்றல் பிறையின், சந்திரனின் அடிப்படையில் என கடுமையாக பேசினர். பகல் நீண்டுள்ள நாடுகளில் நோன்பு இருப்பது பெரும் சிரமம் என்பதை பலர் உணர்வது இல்லை. காலை 6 - மாலை 6 நோன்பிருந்தால் போதாதா? சில பழக்கங்களை இடம், பொருள், காலம் கருதி மாற்றத்துக்கு உட்படுத்தல் நல்லதல்லவா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து தவறானது.

      இஸ்லாமியர்கள் சிலசமயம் சாதாரண மனிதர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் இரண்டு நாள் கூட தொடர் நோன்பு அதாவது நோன்பு திறப்பது மட்டும் உண்டு ஆனால் அதிகாலை உணவு இன்றி நோன்பு பிடிப்பார்கள்.

      சிரமம் என்றால் நோன்பே பிடிக்கமாட்டார்கள்.சிறு குழைந்தைகள் நோன்பு பிடிக்கும்.

      நோன்பு மனது கட்டுபாட்டுக்கு சம்பந்தப்பட்டது. மனம் நாடினால் நடக்கும். உடல் கட்டுப்பட்டுபோகும்.

      நோன்பின் பிரதான நோக்கம் இறைவனை அறிவது மற்றவைகள் பின்புதான்.

      Delete
    2. //சிரமம் என்றால் நோன்பே பிடிக்கமாட்டார்கள்.//
      நீங்க இப்படி சொல்றிங்க ஆனா யாரவது நோன்பு பிடிக்கல்லயென்று கண்டு பிடிக்கபட்டா ஒரு மாத சிறை தண்டணை என்று தலிபான் அறிவித்துள்ளது.

      Delete
    3. //சிரமம் என்றால்***நோன்பே*** பிடிக்கமாட்டார்கள்.//
      ஆனாலும் நோன்பு பிடிக்கிறார்கள். எனவே சிரமம் இல்லை.

      என்ற கருத்து ஊனகண்களுக்கு தெரிய வாய்பில்லைபோலும்.

      Delete
  2. இதுகுறித்து மார்க்கம் தெரிந்த வல்லூனர்களிடம் விளக்கம் கோரினால் தெளிவு பெறமுடியும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  3. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு.

    //இதுகுறித்து மார்க்கம் தெரிந்த வல்லூனர்களிடம் விளக்கம் கோரினால் தெளிவு பெறமுடியும் என்பது என் கருத்து.//

    இதுவே எனது கருத்துமாக இருக்கும்

    ReplyDelete
  4. //அன்புதான் இஸ்லாம்.
    கருணைதான் இறைவன்.//

    இஸ்லாத்தில் அன்பு பற்றி உள்ளது ஆனால் அன்புதான் இஸ்லாம் என்று கருத்திடல் ஆகாது.

    இஸ்லாம் என்பதற்கு சாந்தி என்பது பொருள். இஸ்லாத்தை பின்பற்றுபவன் மனம் அமைதியில் இருக்கவேண்டும். அல்லது அந்த நிலையை நோக்கி இவன் செயல்பாடுகள் இருக்கவேண்டும், அதனை அடைய வேண்டும். சந்தியை மையமாக வைத்துதான் அணைத்து விதிகளும் இருக்கும்.

    கருணை இறைவனில் உள்ள ஒரு பண்பு. ஆனால் கருணைதான் இறைவன் அல்ல. எதுவுமே அவனில் இல்லாதது இல்லை ஆனாலும் எந்த ஒன்றையும் அவன் என்று சுட்டமுடியாது.

    ReplyDelete
  5. பிறை பார்த்து நோன்பு பிடிக்கவேண்டும். சூரிய அஸ்தமானதும் நோன்பு திறக்கவேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். இதில் சமரசத்துக்கு இடம் இல்லை. அறிவின் திருஉருவம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வார்த்தைகள் சாமானிய மனிதரின் வார்த்தைக்கு ஒப்பிடமுடியாது.

    இடம், தூரம் இவைகளை பொறுத்து மனித உடல் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. சொலப்பட்ட ஊர்களில் இஸ்லாமியர் நோன்பு விதிகளுக்கு உட்பட்டு நோன்பு நோற்காமல் இருக்கமாட்டார்கள்.

    இக்கருத்துக்கு தொடர்புடைய ஒரு கருத்தை டிவியில் முன்பு ஒளிபரப்பினார்கள். இரு இளமையான இளைஞர்கள். ஒருவர் பூமிமயில் இருக்கிறார். மற்ற ஒருவர் ஒரு ராகெட் மூலம் பூமியை மையமாக வைத்து மிக தூர ஒரு வட்டத்தில் சுற்றி வருகிறார். ஒரு 50 பூமி வருடம் கழிந்து பூமிக்கு திரும்பி வருகிறார். அப்பொழுது அவர் நல்ல வாலிபனாக காட்சி தருகிறார். ஆனால் பூமியில் உள்ளவர் ஒரு கைத்தடியுடன் இருமிக்கொண்டு கிழவனாக கட்சி தருகிறார். இதோடு அது முடிந்து விடுகிறது.

    விமானத்தில் காலை 10 மணிக்கு புறப்பட்டு ஒரு 5 மணி நேர பிரயானத்திர்க்கு பிறகு வேறு ஓர் ஊரில் காலை (அதே கிழமையில்) 10 மணிக்கு தரை இறங்கினால் நாம் அதே கலை உணர்வைத்தான் பெறுவோம்.

    சூரிய கிரகணத்தில் பகலில் இரவு நெருங்கும் கட்ச்சியை போல் இருக்கும் பொழுது நாம் பறவைகளை பார்த்திருக்கின்றோம் அவைகள் உறங்க வேண்டிய சூழலுக்கு தன்னை உட்படுத்த முயன்று கொண்டிருக்கும். பின்பு பகல் வெளிச்சம் அதிகமானதும் பழையபடி இரைதேடி சென்றிடும்.

    குளிர் பிரதேசத்தின் உடல் வாகு, உஷ்ண பிரதேசத்தின் உடல் வாகு வேறுதானே?
    எஸ்கிமோக்கள் ஐஸ் பிரதேசத்தில்தான் வாழ விரும்புவார்கள்.

    படிப்பவர்கள் விபரமானவர்கள் மேற்கண்ட உதாரணங்கள் அதில் அசைபோடுங்கள் எதோ சில உண்மைகள் உங்களுக்கு தெரியாமல் போகாது.

    என் மனதில் இக்கட்டுரையை படிக்கும் பொழுது மலர்ந்தவைகள்.

    ReplyDelete
  6. ஞானியார் நபிதாஸின் ஆழமான கருத்துக்களைத் தமியேன் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  7. அன்பின் நபிதாஸ் முற்றிலும் தவறான கருத்தை முன்வைக்கிறீர்களோ என்று அஞ்சுகிறேன்.

    இஸ்லாம் எளிமையான மார்க்கம். அது வாழும் வழியையே சொல்லித் தருகிறது. எவரையும் துண்புறுத்துவதே இல்லை.

    காலை உண்டு பின் இரவு உண்ண வேண்டும் இடையில் உள்ள உணவை மட்டுமே விட்டுவிடவேண்டும். இதுதான் இஸ்லாம். இதன் மூலமாகவே உடல் வலிமை மன வலிமை எல்லாம் கைகூடும்.

    இதற்கு மாறாகச் செய்தால், நோய்வாய்ப்பட நேரிடும். ஒருவருக்குத் தொடர்ந்து 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க இயலக்கூடியதாய் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் குழந்தைகள், முதியவர், சாதாரணமானவர்கள் என்று எல்லோருக்கும் பொதுவானது.

    நொன்பு நம் நலனுக்காக உள்ளது, நம் தீமைக்காக அல்ல. இறைவன் அருளிய அறிவினை நான் எல்லாக் காலங்களிலும் பயன்படுத்துவது அவசியம். அதுவே தூய இறைவழி. மூட நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

    ReplyDelete
  8. >>>>அன்புதான் இஸ்லாம் என்று கருத்திடல் ஆகாது<<<<

    இஸ்லாம் என்றால் அடிபணிதல்.

    அடிபணிதல் என்றால் அடிமையாக அடக்குமுறைக்கு பயந்து அல்ல.

    அன்போடு அமைதி நோக்கம் கொண்டு.

    >>>>கருணை இறைவனில் உள்ள ஒரு பண்பு. ஆனால் கருணைதான் இறைவன் அல்ல.<<<<

    இது புரிந்துகொள்வதில் வரும் குழப்பம்.

    ”அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்” என்று குரானின் தொடக்கத்தில் சொன்னால், இறைவன் அருளும் அன்பும் மட்டும் உடையவன் அல்ல என்று விவாதத்திற்கு வருவதைப் போன்றது.

    இறைவனின் மேன்மையைச் சொல்ல அவனுக்கு எத்தனையோ பெயர்.

    அல்லாஹ் கரீம் என்று அடிக்கடி சொல்வார்கள். அதன் பொருள் இறைவன் கருணையாளன் என்பது. இறைவன் கருணையாளன் மட்டும் இல்லையே என்று விவாதம் செய்ய முனைவது தேவையா என்று சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  9. அன்பின் நபிதாஸ் ஏதேனும் குரான் வரிகளைக் கொண்டு உங்கள் கருத்துக்களை இட்டால் மகிழ்வேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,

      ....இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை ) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்;...... (2:187லில்)

      நன்றி!

      Delete
  10. அன்பின் கலாம், பகலே இல்லாத ஊர்களில் நீங்கள் வாழ்ந்தால், நோன்பு வைப்பீர்களா மாட்டீர்கள்? ஏன்?

    ReplyDelete
  11. //கருணை இறைவனில் உள்ள ஒரு பண்பு. ஆனால் கருணைதான் இறைவன் அல்ல. எதுவுமே அவனில் இல்லாதது இல்லை ஆனாலும் எந்த ஒன்றையும் அவன் என்று சுட்டமுடியாது.//

    அன்பு நண்ப,

    யான் வழிமொழிந்தது இக்கருத்தை மட்டுமே; காரணம் “கருணைதான் இஸ்லாம்” என்று இஸ்லாம் என்ற மூலச் சொல்லின் வேரை விட்டு நீங்களாகவே ஒரு புதிய கோணத்தில் பெயர் சூட்ட முனைந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார் மேற்சுட்டிய வரிகளில்..

    நிற்க. “இஸ்லாம்” என்பது மார்க்கம்; முஸ்லிம் என்பவன் “இறைவனுக்கு மட்டுமே சரணடைபவன்” எவர் அவ்வாறு சரணடையும் வழியில் உள்ளனரோ அம்மார்க்கமே இஸ்லாமாகும் என்பதை பன்னெடுங்காலமாக அதன் மூலச் சொல்லைக் கொண்டு உறுதியளித்தப்பின்னர், “கருணை தான் (தான் என்பதில் ஓர் அழுத்தம் தொனிப்பதால்) இஸ்லாம் என்று வாதிடத் துணிந்ததால் நபிதாஸ் அவர்களும் யான் எண்ணியுள்ளக் கருத்துக்களையே ஆழமாகச் சொல்லியுள்ளார்; மேலும், “ஸல்லிம்” என்னும் வேர்-மூலச் சொல்லில் சரணடைதல் அல்லது அமைதி பெறுதல் என்றும் உள்ளதாற்றான், முஸ்லிம் என்பவன் இறைவனுக்குச் சரணடைபவன் என்றும் அமைதியைக் கடைபிடிப்பவன் என்றும் அவ்வண்ணம் இருக்கும் மார்க்கமே இஸ்லாம் என்றும் மூலச் சொல்லின் பொருள் மாறாதிருக்க நாமாக ஒரு புதிய பொருளைக் கொணர்தல் கூடாது.

    நிற்க. பூகோளம் மற்றும் வானவியல் மாற்றங்களினால் ஏற்படும் வேறுபாடுகளைக் கொண்டு நேரம். நோன்பின் காலம் “கணக்கிடுதல்” என்பதும் (கவிஞர் அதிரை மெய்சா அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன்), “மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஓர் அரிய தகவல் ஆகும்.

    தமியேன், சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குப் பயணமாகிய போதில், ஒவ்வொரு “வக்து” தொழுகையையும், விமானத்தின் இருக்கையிலேயே அமர்ந்து தொழுது கொண்டேன்; அப்பொழுது விமானத்தின் சன்னல் வழியாக நோட்டமிட்ட பொழுது வானம் வெளிச்சமாகவே இருந்தது என்பதால் யான் தொழுகைக்குரிய நேரங்களை வெளிச்சத்தை வைத்துக் கணக்கிடாமல், கடிகாரத்தில்- விமானத்தில் சொல்லப்பட்ட நேரத்தை வைத்து தான் தொழுதேன்.
    இதே விடை தான் நீங்கள் கேட்கும் வினாவுக்கும்; ஆம் பகலே இல்லாவிட்டாலும், நேரத்தைக் கணக்கிட்டு நோன்பு வைக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  12. //கருணை இறைவனில் உள்ள ஒரு பண்பு. ஆனால் கருணைதான் இறைவன் அல்ல. எதுவுமே அவனில் இல்லாதது இல்லை ஆனாலும் எந்த ஒன்றையும் அவன் என்று சுட்டமுடியாது.//

    அப்துல் கரீம் என்றால் என்ன நண்பா கலாம்?

    >>>>>யான் வழிமொழிந்தது இக்கருத்தை மட்டுமே; காரணம் “கருணைதான் இஸ்லாம்” என்று இஸ்லாம் என்ற மூலச் சொல்லின் வேரை விட்டு நீங்களாகவே ஒரு புதிய கோணத்தில் பெயர் சூட்ட முனைந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார் மேற்சுட்டிய வரிகளில்..<<<<

    நான் கருணைதான் இஸ்லாம் என்றுசொல்லவில்லை. அன்புதான் இஸ்லாம் என்று எழுதி இருக்கிறேன். அதற்கு விளக்கமும் எழுதி இருக்கிறேன். வாசித்துப்பாருங்கள் நண்பா

    >>>>முஸ்லிம் என்பவன் இறைவனுக்குச் சரணடைபவன் என்றும் அமைதியைக் கடைபிடிப்பவன்<<<<

    நான் முஸ்லிம் பற்றி கூறவில்லை நண்பா

    அன்புதான் இஸ்லாம்.
    கருணைதான் இறைவன்.

    என்றுதான் நான் எழுதி இருக்கிறேன். விளக்கமும் கொடுத்திருக்கிறேன். போதவில்லை என்றால் மேலும் தருகிறேன்.

    >>>>பூகோளம் மற்றும் வானவியல் மாற்றங்களினால் ஏற்படும் வேறுபாடுகளைக் கொண்டு நேரம். நோன்பின் காலம் “கணக்கிடுதல்” என்பதும் “மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஓர் அரிய தகவல் ஆகும்.<<<<<

    இந்த மார்க்க அறிஞர்கள் என்று எவரையாவது அறுதியிட்டு உறுதியாக உங்களால் கூறமுடியுமா? இப்படிக் கூறிக்கொண்டிருப்பவர்களால்தான் இஸ்லாம் பல்வாறாய் பிளவுபட்டுச் சிதைந்து கிடக்கின்றது என்பது நான் கண்ட உண்மை. குரானில் இவர்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவீர்களா?

    >>>பகலே இல்லாவிட்டாலும், நேரத்தைக் கணக்கிட்டு நோன்பு வைக்க வேண்டியது தான்.<<<

    பகலே இல்லாதபோது நேரத்தை எப்படிக் கணக்கிடுவீர்கள், சூரிய உதயம் அஸ்தமனம் எப்படிக் காண்பீர்கள்?

    இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185)

    என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான். வேறு யார் வந்து என்ன கூறவேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் நாம்?

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  13. உபரி தகவல்: சில நாடுகளில் நோன்பு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இணையத்தில் அவை காணக் கிடைக்கும். நான் எதையும் இறைவனிடம்தான் கேட்பேன். அதாவது குரானைத்தான் புறட்டுவேன். அதற்கு உதவும் மொழியறிஞர்களுக்கு நன்றி கூறுவேன்.

    ReplyDelete
  14. சகோ.புகாரி,

    நோன்பின் நோக்கங்கள் என்று நீங்கள் எழுதியுள்ளவைகள் திருக்குரானுக்கும் ஹதீஸ்களுக்கும் முரன்பட்டவைகள் ஆகும். போதிய அறியாமையால் நீங்கள் பதியவைக்கும் தவறான கருத்து அறியாதவர்கள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் இதையே விதைத்து விடும்.

    //1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,

    2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,

    3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.//

    இதையெல்லாம் எங்கிருந்து எடுத்தீர்கள்?

    நோன்பின் உண்மையான நோக்கம்..

    இறைவனுக்கும் அடியானுக்கும் இருக்கும் இறை நம்பிக்கை ரகசியத்தை வலுப்படுத்துவதே ஆகும். இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் நோன்பு வைப்பவர் தனக்கு ஏற்படும் தனிமையைப் பயன்படுத்தி சாப்பிட்டுக் கொள்ளலாம், தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.
    ஆனால் முழுக்க முழுக்க இறைவனுக்காக பசித்திருந்து தாகித்திருத்து ஒரு அடியான் தன் இறை நம்பிக்கையை மேம்படுத்துகிறான். அதனால்தான் நோன்பு எனக்குறியது அதன் கூலியை நானே தருகிறேன் என இறைவன் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.

    நீங்கள் சொல்வது போல உடலை வலுப்படுத்துவதற்கும், உணவுக்கட்டுப்பாடுகளுக்கும் என்று சொல்வது மிகவும் ஆட்சேபம் செய்யக்கூடிய வாதம். நான் மீண்டும் கூறுகிறேன். இஸ்லாம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் அரைகுறையாக எழுதாதீர்கள்.

    ReplyDelete
  15. சகோ.நபிதாஸின் பிறை குறித்த கருத்துக்கள் தான் சரியான கருத்துக்கள். சகோ.புகாரி நீங்கள் தான் இஸ்லாத்திற்கு எதிராக பேசுகிறீர்களோ என நான் அஞ்சுகிறேன். ஒளியின் வேகத்தில் வின்னை நோக்கி பயணம் செய்யும் ஒருவர் 100 ஆண்டு கழித்து பூமி வந்தாலும் அவர் அதே வயதில் தான் இருப்பார் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. அதேயே தான் சகோ.நபிதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் இஸ்லாத்தினை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள் என்பது போல சொல்கிறீர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தயவு செய்து இஸ்லாம் குறித்து இன்னும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. நீங்கள் அஹ்லே குர்ஆன் (திருக்குர்ஆனை மட்டும் ஏற்றுக் கொண்டு ஹதீஸ்களை மறுத்தல்) இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. சரியாக கேட்டிர்கள் நிஜாம் பாய். இவர்களது குழுவில் யாருக்கும் தாடி இல்லை. அஹ்லே ஹதீஸ்காரர்கள் தான் இதுபோல தாடி இன்றி இருப்பார்கள். அடுத்து இவர்கள் பதிவில் திருக்குரான் வசனங்கள் தான் காட்டப்பட்டுள்ளன. ஹதீஸைப் பற்றி எழுதவேயில்லை. இதன் மூலம் இவர்கள் சரியான அறைகுறைகள் என தெரிகிறது.

    ReplyDelete
  19. சகோ நிஜாம் கான், எதன் அடிப்படையில் நான் சொல்பவை குரானுக்கு முரண்பட்டவை என்று கூறுகிறீர்கள்? எந்த ஒரு குரான் வசனத்தையும் நீங்கள் இடவில்லையே?

    நீங்கள் சொன்னால் சரி நான் சொன்னால் தவறு என்பதுதான் இங்கே அடிப்படையா? ஏன் இந்த எண்ணம்? ஏன் இப்படியான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு செல்கிறீர்கள். பிளவு பட்டதெல்லாம் போதாது என்றா?

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  20. நீங்கள் அஹ்லே குர்ஆன் (திருக்குர்ஆனை மட்டும் ஏற்றுக் கொண்டு ஹதீஸ்களை மறுத்தல்) இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?<<<<<<<<<<<

    நல்ல கேள்வி ;-)

    நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்?

    ReplyDelete
  21. நான் கேட்ட கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக வார்த்தை ஜாலத்தில் பதில் தந்திருக்கிறீர்கள். ஆனால் மார்க்க ரீதியாக பதில் தரவில்லை. நோன்பிற்கான கூலியை நானே தருகிறேன் என்பது திருக்குர்ஆன் வசனமே! என் சொந்த வசனம் அல்ல! ஆனால் நோன்பு நோற்பது உடலை பலப்படுத்தி சாப்பாட்டை குறைப்பதற்குத்தான் என்ற வசனம் திருக்குர்ஆனில் உள்ளதா? அல்லது உங்கள் சொந்தக்கருத்தா? இங்கே யார் சொன்ன கருத்து சரியானது தவறானது என்பது வாதமல்ல! யார் எழுதிய கருத்து இஸ்லாம் கூறும் கருத்து என்பதுதான் வாதம். இறைவனின் வார்த்தையாரகிய திருக்குர்ஆனும் அதன் விளக்கமாகிய திருக்குர்ஆனுக்கு முரண்படாத முகமது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவை மட்டுமே மார்க்கம் என்று எந்த இயக்கம் சொன்னாலும் நான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன். நான் போகட்டும். இப்போது நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் எந்த இயக்கம் என்று கேட்கவில்லை. நோன்பு என்பது உடலை அழகுபடுத்தவும், உணவை குறைக்கவும், வறுமையை ஒழிக்கவுமே என்று இஸ்லாத்தில் இல்லாத கருத்தை இட்டுக்கட்டி போட்டிருக்கும் நீங்கள் இந்த வார்த்தைகளுக்கு ஆதாரம் காட்டுங்கள். அகிலத்தாரின் அருட்கொடை இறுதிநபியான முகமது நபியின் போதனைகளை நீங்கள் மறுக்கிறீர்களா? ஏற்றுக்கொள்கிறீர்களா? இஸ்லாம் கூறாத ஒரு கருத்தைக்கூறி விட்டு அந்த தவறை மறைக்க நீங்கள் எதிர்கேள்வி கேட்கிறீர்கள். நான் மீண்டும் கூறுகிறேன். தெரியாவிட்டால் அதுபற்றி எழுதாதீர்கள். தவறை எழுதிவிட்டு அதை சரியாக்க முயலாதீர்கள். நீங்கள் மார்க்கத்தோடு மோதுகிறீர்கள் என்ற நினைவிருக்கட்டும். ஒருவேளை நீங்கள் ஹதீஸ்களை மறுக்கும் வழிகெட்ட குஃப்ர் கூட்டத்தை சேர்ந்தவரானால் உங்களோடு வாதம் செய்ததை இழிவென கருதி நான் மன்னிப்பு கோருகிறேன். வார்த்தையில் ஜாலம் காட்டாமல் நேரடியான பதிலைத்தரவும்.

    ReplyDelete
  22. அன்பின் நபிதாஸ், குரானின் வசனத்தை அக்கறையாய் எடுத்து இங்கே இட்டதற்கு நன்றி. இதோ அதன் முழு வசனம் கீழே. (இது ஒரு மொழி பெயர்ப்பு. மேலும் பல மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உண்டு. நான் இப்போது அங்கே செல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்)

    2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; -----நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;----- அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.


    -----நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;-----

    இதற்கான விளக்கத்தைத் தரமுடியுமா? அந்த விளக்கத்தில் இருக்கிறது இந்த நோன்பு நேரத்திற்கான விளக்கம்.

    மேலும், கீழே உள்ள வசனத்திற்கும் உங்கள் புரிதலைத் தந்தால் நாம் குரான் வசனங்களைப் புரிந்துகொண்டு பொருள் கொள்வது சுலபமாக இருக்கும்

    2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! அன்புடன் புகாரி. உங்கள் களத்திற்கு வர நேரம் இன்மையால் காலம் தாழ்த்தி வருகிறேன்.

      ***....இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை ) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்;...... (2:187லில்) *** என்று
      (2:187)
      தர்ஜுமாவின் சில வரிகள் என்பதை காட்டும் விதமாக (2:187லில்) என்று எழுதியிருந்தேன்.
      மேலும் தாங்கள் போன்றவர்களுக்கு அதிக விளக்கம் தேவைப்படாது என்பதற்காக நேரமின்மை காரணத்தாலும் சம்பந்தப்பட்ட தர்ஜுமா வரிகளை மட்டும் எழுதினேன்.

      'அதிகாலைவரை உண்ணுங்கள், பின்னர் இரவு வரும்வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்' என்பது தங்களுக்கு விளக்கம் தராமலா போகும் !

      எங்கெங்கு மக்கள் இருக்கிறார்களோ அங்கங்கு அவர்கள் நேரகாலங்களை அவர்கள் இடத்திற்கு, வாழ்க்கை அமைப்புக்கு உட்பட்டு வகுத்துக்கொள்வார்கள் அல்லவா ! இதற்குமேல் என்ன விளக்கம் வேண்டும் ?

      கவிங்கர்கள் சிந்தனையோடு விளையாடுபவர்கள் . அவர்களுக்கு எப்படியும் சிந்திக்க தெரியும். அதனை சில சட்டவரமுரைக்கு உட்பட்டு சிந்திக்காமலுமா இருப்பார்கள் !

      அறிவுகள், தெளிவுகள் தெரியவரும் பொழுது அதனை ஏற்பவர்கள் திறந்த துனிவுவுடையவர்கள் தானே !

      -----நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;-----
      இதன் விளக்கமே தொடர்ச்சியாக பதிலை தாங்கிவருகிறதே.
      ***இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;*** இவ்வரிகளே பதிலல்லவா.

      நேரமின்மையால் இத்துடன் இன்று பின் நாளை உங்கள் பதில்கண்டு.

      Delete
  23. அன்பின் நிஜாம் கான்,

    >>>நான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்<<<

    ஆக நீங்கள் ஏதாவது ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்!

    நான் அப்படியல்ல நான் இஸ்லாமியனாக இருக்க விரும்புகிறேன்.

    அல்லாஹ் அனைத்தும் அறிவான். அவனிடமே என் கேள்விகளும் அவனிடமிருந்தே எனக்கான பதில்களும்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  24. நான் மீண்டும் கேட்கிறேன். நீங்கள் இஸ்லாமியானாக இருக்க விரும்புவதில் எனக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. அல்லாஹ் அனைத்தும் அறிவான் என்பது அனைவருக்கும் தெரியும். நான் எடுத்து வைத்த கேள்விகளுக்கும், நீங்கள் இஸ்லாம் என்ற பெயரில் கற்பனையாக அடித்து விட்ட கருத்துக்களுக்கும் என்ன பதில் என்றுதான் கேட்டேன். ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பான் என மீண்டும் வார்த்தை ஜாலம் காட்டுகிறீர்கள். உங்களுக்கு அறிவில்லாத ஒரு விசயத்தை பெரிய அறிவு ஜீவி போல எழுதிவிட்டு அதை தவறு என்று ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை.

    //அவனிடமே என் கேள்விகளும் அவனிடமிருந்தே எனக்கான பதில்களும்.//

    இதோ அல்லாஹ்விடம் இருந்து வரும் பதில்:

    அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

    அல்குர்ஆன் 6:21

    என்னுடைய இந்த கமெண்டுக்கு நீங்கள் பதில் அளிக்க என்னுடைய ஒரு யோசனையைத் தருகிறேன்.

    //உங்களுக்கு அறிவில்லாத ஒரு விசயத்தை பெரிய அறிவு ஜீவி போல எழுதிவிட்டு அதை தவறு என்று ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை.//

    யார் அறிவு ஜீவி என்பதை மக்கள் அறிவார்கள்.

    இதுதான் அந்த டிப்ஸ்.

    நீங்கள் ஹதீஸ்களை மறுக்கிறீர்களா அல்லது ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதற்கு எனக்கு இன்னமும் பதில்தரவில்லை.
    தயவுசெய்து இனிமேல் உங்களுக்கு அறிவில்லாத விசயங்களை எழுதாதீர்கள். கவிதை கதைகளை எழுதினால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை.

    ReplyDelete
  25. அன்பு தான் இஸ்லாம் கருணை தான் இறைவன் என்பது தான் இந்த அயோக்கியர்களின் வாதம். அல்லாஹ் இவர்களுக்கு இறைவன் அல்ல! இந்த குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் அப்படித்தான் எனத் தோன்றுகிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இவர்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு மழுப்பல்கள் தேவையில்லை.

    நண்பர் நிஜாம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் பிடறியைப் பிடித்து அடித்தார் போல இருக்கிறது. ஆனால் அந்தக் கேள்விகள் எதற்கும் இவர் பதில் சொல்லாமல் நீங்கள் எந்த இயக்கம் என்று கேட்டும் சம்பந்தம் இல்லாதவற்றை பேசி மழுப்புகிறார். அதிராம்பட்டினத்தில் இப்படியும் சில முட்டாள்கள்.

    ReplyDelete
  26. //அப்துல் கரீம் என்றால் என்ன நண்பா கலாம்?\\

    கருணையாளனின் அடிமை என்று பொருள் அன்பு நண்பா!

    அதனாற்றான், என் பெயரை “அப்துல் கலாம்” என்று தவறாக உச்சரிக்க வேண்டா என்று படாத பாடுகிறேன் (அபுல்கலாம் என்றால் பேச்சின் தந்தை ; ஆனால், அப்துல்கலாம் என்றால் பேச்சின் அடிமை என்றாகிவிடும்)

    இங்கு நீங்கள் குறிப்பிடும் நோக்கம் “கறீம்” என்பதும் இறைவன் தானே என்பதை உணர்கிறேன்; கறீம் மட்டுமல்ல அல்லாஹ் என்னும் திருநாமம் துவங்கி மொத்தம் 99 அழகிய திருநாமங்களால் அவனை அழைக்கின்றோம்; ஆனால் அவைகள் அவனின் குணங்கள்/ பண்புகள்/ ஆற்றல்களை வர்ணிக்கும் பதங்களே; ஆனால், “அல்லாஹ்” என்பதும் மட்டும் தனிச்சொல்லாகும்! எனவே தான் “கருணை” மட்டும் இறைவனைக் குறிப்பதில்லை எனபதற்காகவே 99 அழகிய திருநாமங்களால் குறிப்பிட்டு அழைக்கின்றோம். இதில் குழப்பமே இல்லை;

    ReplyDelete
  27. இங்கு வாதிடும் அன்பர்களே! நண்பர் புகாரி மட்டும் தான் முரண்படுகின்றாரே, தவிர நீங்கள் ஒட்டுமொத்தமாகக் குழுமத்தின் பதிவாளர்கள் மீது அவதூறு ஏன் சொல்கின்றீர்கள்.

    நிஜாம் கான் மட்டுமல்ல, தமியேனும், நபிதாஸ் அவர்களும் கூடத்தான் நண்பர் புகாரி அவ்ர்களின் கருத்துரைகட்கு மறுப்புரைகள் எழுதிக் கொண்டிருந்தும், எங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக எதிர்வினையாடல் உங்களின் அவதூறான எண்ணத்தில் சேர்ந்துவிடும்; கவனமாக எல்லாரின் பின்னூட்டங்களையும் பாருங்கள்; உறுதியாக, நண்பர் புகாரி அவர்கள் மட்டும் தான் மாறுபடுகின்றார்; மற்றவர்கள் எல்லாரும் நிஜாம்கான் போலவே மறுப்புரைகள் தானே எழுதுகின்றோம்.

    குறிப்பாக இதற்கு முன்னர் மேலுள்ள என் மறுமொழியில் இறைவனின் அழகிய திருநாமங்களைப் பற்றி எழுதியுள்ளேன்; அதுவும் நண்பர் புகாரிக்குரிய தெளிவான விளக்கம் ஆகும். ஆம். அன்பு, கருணை மட்டும் இறைவன் எனபதல்ல. அவன் அன்பானவன் - கருணையாளன் எனபதைப் போலவே, அடக்கி ஆளுபவன், தண்டனைகளை விரைவு படுத்துப்வன் போன்ற பணபு\குணம்\ஆற்றல்கள் உள்ளவன் எனப்தே என வாதம். இதிலிருந்தே புகாரியிடமிருந்து தமியேன் மாறுபடுகின்றேன் அல்லவா? பின்னர் எப்படி எங்களையும் அவருடன் இணைத்தீர்கள்?

    ReplyDelete
  28. >>>>அறிவில்லாத ஒரு விசயத்தை பெரிய அறிவு ஜீவி போல எழுதிவிட்டு அதை தவறு என்று ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை.<<<<

    எத்தனை அறிவு முதிர்ச்சி உங்களுக்கு என்று அறிந்து வியக்கிறேன் நிஜாம் கான். உங்கள் கொலைவெறி வாழ்க ;-)

    ReplyDelete
  29. அன்பின் மசியா

    >>>>அதிராம்பட்டினத்தில் இப்படியும் சில முட்டாள்கள்.<<<<

    எவ்ளோ புத்திசாலியா இருந்தா இந்த உண்மையைச் சட்டென்று கண்டுபிடித்திருப்பீர்கள் ;-)

    ReplyDelete
  30. நன்றி நண்பர் கலாம்,

    அப்துல் கரீம் என்றால்....

    >>>கருணையாளனின் அடிமை என்று பொருள் அன்பு நண்பா!<<<

    ’இறைவன் கருணையாளன்’

    இப்படிச் சொல்வதால் இறைவன் அன்பில்லாதவன் ஆகிவிடுவானா? இறைவன் அறிவில்லாதவன் ஆகிவிடுவானா?

    கருணைதான் இறைவன் என்பதற்கும் கருணை மட்டுமே இறைவன் என்பதற்கும் பொருளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டல்லவா கவி நண்பா?

    முரட்டுக்காளைகளிடமிருந்து தப்பித்து இதை எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது ;-)

    ReplyDelete
  31. >>>>இங்கு வாதிடும் அன்பர்களே! நண்பர் புகாரி மட்டும் தான் முரண்படுகின்றாரே, தவிர நீங்கள் ஒட்டுமொத்தமாகக் குழுமத்தின் பதிவாளர்கள் மீது அவதூறு ஏன் சொல்கின்றீர்கள்.<<<<

    ஒருவர் முரண்பட்டால் அங்கே விளக்கங்கள் கருத்தாடல்களும்தானே தொடரவேண்டும்.

    ஆனால் இங்கே நிகழ்வதென்ன?

    எழுத வந்த சிலரிடம் இஸ்லாமியத் தரமில்லையே?

    சாக்கடையில் கல்லெறியும் செயலாகவல்லவா இருக்கிறது கலாம்?

    பண்போடு உரையாடத் தெரியாதவர்கள் ஏன் எழுத வருகிறார்கள்?

    ReplyDelete
  32. நிரஞ்சன் தம்பி அவர்களுக்கு,

    >>>மிகவும் நல்ல பதிவு. இது குறித்து பலரிடம் நான் பேசிய போதும் என்னை உதைக்காத குறை தான்<<<<

    ஹா ஹா ஹா ஹா....

    ஆனால் மாடு முட்டவருகிறது என்பதற்காக பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கலாகுமா ;-)

    ReplyDelete
  33. \\கருணைதான் இறைவன் என்பதற்கும் கருணை மட்டுமே இறைவன் என்பதற்கும் பொருளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டல்லவா கவி நண்பா?\\

    “மட்டும்” என்பதை மட்டும் உணர்ந்தால் புத்திக்கு எட்டும் என்பதில் உடன்பட்டும் கொள்கிறேன், அன்பு கனடாக் கவி நண்பா!

    ReplyDelete
  34. நிற்க. நண்பர் புகாரி,

    விமர்சிப்பவர்களைப் பற்றி எல்லாம் விமர்சித்துக் கொண்டே போனால், விவாதம் என்னும் பூதம் விதண்டாவாதம் என்னும் வினோதம் மிக்க ஓர் உருவம் எடுத்து விடும் என்பதையும் ஈண்டு பதிகிறேன்.

    கருத்துக்குக் கருத்து என்று மட்டும் இருக்க வேண்டும்; தனிநபர்ச் சாடல் வேண்டா; இவைகளை இங்கும்/எங்கும் வலைத்தளங்களில் உள்ளக் கட்டுப்பாடு ஆகும். மற்ற வலைத்தளங்களில் உள்ளது போல், “மட்டுறுத்தல்” இருந்தாற்றான், இப்படிப்பட்ட தனிநபர்ச் சாடல்களை மட்டுறுத்திப் பின்னூட்டங்கள் நாகரிகம்/பண்போடு இருக்கும் என்பதை கனம் நிர்வாகி அவர்களிடம் முறையிடுகிறேன்.

    ReplyDelete
  35. கருத்துக்கு கருத்து பதிந்தால் கனநேரத்தில் இதை விட்டுக் கடந்திருப்பேன் கவிஞரே! ஆனால் இறைவனை மறுக்கும் ஒரு இழிவானவனை, தூதரை மறுக்கும் ஒரு தூமையை, ஹதீஸ்களை மறுக்கும் ஒரு காவாலியிடம் விவாதம் செய்தால் அது விதண்டாவாதம், அதற்கு அவர் பதில் சொல்ல மாட்டார். அன்பே சிவம் என்பதற்கும், கருணை மட்டும் தான் கடவுள் என்பதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. நீங்களும் தான் விவாதம் செய்தீர்கள், பின்பு ஏன் மட்டுறுத்தல் கேட்கிறீர்கள். நீங்கள் புகாரியின் கேடு கெட்ட கூட்டத்தில் இல்லாதவர் என்று சொன்னீர்கள், அவர் செய்யும் மாபாவத்திற்கு நரகத்திற்கு புகாரி அவர்கள் போடும் பாதைக்கும் எங்கள் குழுமத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சற்றுமுன் கூறிய நீங்கள் இப்போது தடம்மாறுகிறீர்கள் அல்லது தடுமாறுகிறீர்கள்.
    அல்லாஹ்வை அனைவரும் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் ஒருபுறம் நிகரற்ற அன்புடையோன், ஆனால் மறுபுறம் மிகக் கடுங்கோபக்காரன். அவன் எதை மன்னிக்க மாட்டானோ அதை உங்கள் நண்பர் புகாரி செய்து வருகிறார். நீங்களெல்லாம் அதில் இருக்கிறீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அல்லாஹ் மட்டும் தான் ஆஹிர்(இறுதி) அனைவரும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சாக்கடையாய் இருப்பதில் எனக்கு யாதொரு பிரச்சினையும் இல்லை நிஜாம் கான்.

      நான் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் வழியில் அவன் பண்புகளை எனக்குள் ஏற்றிக்கொண்டு அன்பும் அமைதியும் சாந்தமும் பெற்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்கு ஏற்ப செல்கிறேன்.

      அல்லாஹ் கரீம்!

      Delete
  36. நன்றி கலாம்....

    விரோதமல்ல
    அன்புதான் இஸ்லாம்
    காட்டுவெறியல்ல
    கருணைதான் இறைவன்

    ReplyDelete
  37. சாக்கடை யார், பூக்கடை யார் என்று இந்த வாதங்களை பார்த்தவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். சாக்கடையில் மூக்கை நுழைத்த பன்றி மல்லிகைப்பூவை முகர்ந்து பார்த்தாலும் அங்கே சாக்கடை வாசம்தான் வீசும். அதுதான் உங்களுக்கு என்னை சாக்கடையாகக் காட்டுகிறது. நபிகளாரை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் அல்லாஹ்வை கரீம் என்றாலும் கஸ்ஸாலி என்றாலும் அவன் தங்குமிடம் நரகம்தான். அதிராம்பட்டினத்தில் ஷியா கூட்டத்தாரின் ஆதிக்கம் உள்ளது என்பது நீங்கள் ஒரு சோறுபதம். தயவுசெய்து இந்த குழுமத்தில் உள்ளவர்கள் தங்கள் கொள்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  38. \\அன்பே சிவம் என்பதற்கும், கருணை மட்டும் தான் கடவுள் என்பதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது\\

    இதைத் தான் சுட்டிக்காட்ட எண்ணினேன், அன்புச் சகோதரர் நிஜாம் அவர்கள் எழுதியதற்கு நன்றி. ஆம். “கருணைதான் இறைவன்” என்பதும் அன்பே சிவம் என்பதும் ஒன்றுபோல் காணப்படும் வரிகள் என்பதைப் படிக்கும் பொழுதே உணரலாம். நான் தடுமாறவில்லை சகோதரரே! மட்டுறுத்தல் என்பது தனிநபர்ச் சாடல் “மட்டும்” நம் மனத்தை “உறுத்தல்” செய்வதாற்றான், அவ்வரிகளை- அப்படித் தனிநபர்ச் சாடல் வரிகளை “எடிட்”செய்து விட்டு வெளியிட்டால் இப்பொழுது கூவிக்கொள்ளும் “சாக்கடை” “கவாலி” போன்ற வாசகங்கள் வாரா.

    உங்கள் கருத்தும், நபிதாஸ் அவர்களின் கருத்தும் எனக்கு உடன்பாடே என்பதை முன்னரே அறிவித்து விட்டேன்.

    கருணை “மட்டுமே” இறைவன் எனபதல்ல என்பதிலும் நான் உடன்படுகிறேன் என்பதும் ஆழமாய்ச் சிந்தித்தால் உங்களின் ம|ற்றும் நபிதாஸ் அவர்களின் கருத்தோடு தான் என் கருத்தும் உடன்படும் என்பதை உணரலாம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers