.

Pages

Wednesday, August 7, 2013

ஞான் கண்டுட்ட ரமலான் !

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் அளவற்ற அருளாளனின் சங்கைமிகு ரமலான் முடிவுறுகிறது அவனின் கருணை பார்வை யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ அத்துனைபேர்களும் பேருபகாரம் பெற்றவர்களாய், ஆளாகி இருப்பார்கள். சிலருக்கு நோயினாலும், வேலையின் காரணத்தாலும், சூழ்நிலைகளாலும், ரமலானை முழுவதுமாக அமல் செய்ய முடியாமல் போயிருக்கும் வல்ல ரஹ்மான் அடுத்து வரும் ரமலானை சிறப்பாக நிறைவேற்ற அருள்பாலிப்பானாக.

மனிதர்களில் பலவிதப்பட்டவர்கள் பல ஆசாபாசங்களுக்கு அடிமை பட்டவர்களாக இருப்பார்கள். சிலரின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்விற்காக ஒதுக்கி வைத்துவிட்டு சொல்லப்போனால் தியாகங்களை செய்து அமல்களையும் பர்லுகளையும் நிறைவேற்றி இருப்பார்கள் அனைவர்களது அமல்கள் பர்ளுகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.

உணவு பழக்கங்களில் அதிகமாக நொறுக்கு தீனி தின்பவர் உடல் பருத்து மருத்துவரிடம் சென்று உடல் பருமனை குறைக்க ஆலோசனை கேட்டார் மருத்துவரோ காலையில் 2 இட்லியும் மாலையில் கொஞ்சம் அவித்த காய்கரி வெஞ் சூப் மற்றும் இரவில் பாலும் ஒரு ஆப்பிளும் உண்ண சொன்னார் எல்லாவற்றையும் கேட்ட அந்த நபர் இவைகள் எல்லாம் சாப்பாட்டிற்கு முன்பா அல்லது சாப்பாட்டிற்கு பின்பா என கேட்டாராம் அப்படி பட்டவர்களெள்லாம் அலாஹ்விற்க்காக 15 மணிநேரம் சொட்டு தண்ணிர் கூட அருந்தாமல் 2 வேலை உணவை தவிர்த்து நொறுக்கு தீனி பகலில் தவிர்த்து இருந்தார்களே இதுவும் ஒருவகை தியாகம்தான்

இறைவனின் நமக்களித்த அருள் கொடையில் முக்கியமானது தூக்கம். சிலர் இரவு 10 மணிக்கு படுத்தவர்கள் காலை 7.30 மணிக்கு எழும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் ரமளானின் மான்புக்காக மகத்துவத்தை அடையவேணும் என்ற நோக்கிற்காக இரவில் இரவுத்தொழுகை தஹஜ்ஜத் தொழுகை சகர் உணவு போன்ற விஷயங்களுக்காக இரவின் முக்கால் பாகத்தை விழித்திருப்பதில் கழிப்பார்கள் காலையில் வேலைக்கும் செல்வார்கள் இவர்களின் இந்த செயல் ஒரு வகை தியாகம்தான்

கஞ்சன், சிக்கனக்காரன், என பெயர் எடுத்தவர்கள் கூட இந்த மாதத்தில் கெஞ்சிக்கேட்கும் பிச்சைக்காரர்களுக்கோ, கொஞ்சமேனும் கஞ்சிக்கோ, பள்ளியில் விநியோகிக்கும் தபுரூக்கிற்க்கோ, தம்மிடமுள்ள பணத்தில் சிறிதளவு கொடுத்திருப்பார்கள்.

தமது வாழ்வில் வரவைவிட செலவுகளையே பார்த்த பரம ஏழைகளின் வாழ்வில் இம்மாதம்தான் செலவைவிட வரவு அதிகம் பார்க்கக்கூடிய மாதமாகும்.

இப்படி உணவுப்பிரியர்கள்,தூக்க பிரியர்கள்,கெஞ்சர்கள், அனைவர்களது செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை காண்கின்ற மாதமாகும்.ஆக தம் விருப்பங்களை, அனுபவித்த ஆசைகளை, அல்லாவிற்காக துறந்தவர்கள் தமது வாழ்நாள் முழுவது நல்ல செயல்கள் புறிந்தவர்களாகவும் கெட்டசெயல்களை ஒரு மாதத்திற்காக துறந்தவர்கள்!?. தம் வாழ் நாள் முழுவது துறந்தவர்களாகவும், மாண்போடு வாழ்ந்து மகத்துவமான சுவர்க்கம் சென்றடைந்தவர்களில் நாமும் இருப்போம்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்பதுபோல் இந்த ரமலானை சிறப்பாய் அமல் செய்தவர்களுக்கு நோன்பு பெருநாள் எனும் அற்புத பரிசை அல்லாஹ் நமக்களித்துள்ளான் அப்பேற்பட்ட சங்கை மிகு நாள் நம்மிடம் வர இருக்கிறது எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோமாக அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் [ EID MUBARAQ ]

மு.செ.மு.சபீர் அஹமது

5 comments:

  1. சிறந்த படைப்புக்கு நன்றி !

    அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வெளிநாட்டு வாழ் நம்மவர்களுக்கு பெருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    சிங்கம் களம் இறங்கிடுச்சி ...!

    ReplyDelete
  4. நோதல் உறுவோர் நிலையுணர்ந்து
    .. நோன்பை நோற்று வறியோருக்(கு)

    ஈதல் என்னும் அறம்பேணி
    ... எங்கும் அமைதி தனைவேண்டி

    ஈதாம் பெருநாள் இதனில்நாம்
    .. இறையை எண்ணி அவன்புகழை

    ஓதும் செயலால் உலகுள்ளோர்
    .. உயர்வு காண வழிவகுப்போம்.

    இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்

    தவமாய் தவமிருதந்து எமக்கு வழங்கிய வரமென்றே இவ்வாக்கத்தைப் படைத்துள்ளீர்; பாராட்டுகள்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் எனது அன்பான பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers