.

Pages

Saturday, February 8, 2014

அறியா அறிவுப்போலிகள் !?

அறிவுத்தேன் II
இதை எப்படி புரிந்துக்கொள்வது ? விளைவுகளைப் பொருத்தும் இதனைப் புரிந்துக் கொள்ளலாம். இதனை பின்பு விவரிப்போம். அதற்கு சம்பந்தமான சில விளக்கங்களைப் பார்ப்போம். அவைகள் அறியா அறிவுப் போலி. அதிலும் விளக்கம் புரியலாம்.

கருத்துப் போலிகள் சில சமயம் விளங்கியவர்கள் அறிவுத் திறமைக்கேற்பவும் உண்டாகிவிடுகிறது. இது போன்ற அறியா அறிவுப் போலிகள் தவிர்த்திடுதல் மிகவும் கடினமானது. காரணம் ஒவ்வொருவரும் தன் அறிவை, தன் திறமையை முழுமையாகத்தான் நம்புவார்கள்.

முக்கிய தலைவர்கள் பத்திரிகைப் பேட்டித் தருவார்கள். நிருபர்களும் பல மாதரி துடுக்காவும்; மறித்தும் கேள்விகள் கேட்ப்பார்கள். பேட்டி பத்திரிகையில் வந்தததும் பேட்டிக் கொடுத்தவர் நான் இன்னக் கருத்தில் சொன்னேன், அவர்கள் அதனை இவ்வாறு தவறாகப் போட்டுவிட்டார்கள் என்பார்.

இது புரிகின்ற ஆற்றல் குறைவால் தவறுகள் ஏற்படுகிறது. சொற்கள் அதனின் உண்மையான அர்த்த மூலத்தை புரியாததனால் இவ்வாறு தவறுகள் ஏற்படலாம்.

இப்பொழுது சொல்லானது எவ்வாறு அவரவர் அறிவு, தகுதி, திறமை. புத்திக் கூர்மை, நுண்ணறிவாற்றல், தெளிவு இவற்றால் எப்படிப் புரியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இரண்டற்றவன். இச்சொல் எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்றுப் பார்ப்போம். பொதுவாகப் பலர் இதனை மேலோட்டமாகப் படித்துச் செல்கின்றனர். அதாவது புரியாமலே படிக்கும் ஓட்டத்தில் அடுத்தக் கருத்திர்க்கு போய்விடுவார்கள்.

சிலர் இரண்டில்லை, அதாவது இரண்டுகள் இல்லாத மூன்றாம் நிலை என்றும் அந்த மூன்றாம் நிலையில் இந்த இரண்டும் உள்ளது என்றும் புரியலாம். உதாரணமாக தங்கமும் மோதிரமும். மோதிரம் தங்கத்தில் இருந்து உண்டானது. தங்கம் பூமியில் உண்டாகியது. எனவே இந்த இரண்டும் இல்லாத மூன்றாம் நிலையைப் புரிவார்கள்.

சிலர் இரண்டாகத் தெரிந்தாலும் ஒன்றே இரண்டாகத் தெரிகின்றது. அந்த இரண்டற்ற நிலை என்றுப் புரிவார்கள். இவர்கள் தங்கம் மோதிரமாகத் தெரிந்தாலும் தங்கம்தான் என்றுப் புரிவார்கள்.

சிலர் இரண்டு இல்லை. ஒன்றைத்தான் பார்ப்பவன் இரண்டாகப் பார்க்கின்றான் என்று விளக்கம் தருவார்கள். அதுதான் இரண்டற்றவன் என்பதின் பொருள் என்பார்கள். மோதிரமும் இல்லை தங்கமும் இல்லை. ஒன்றுதான் இருக்கின்றது. பார்ப்பவன் இவன் அறிவைக் கொண்டுப் பார்க்கின்றான். மோதிரத்தையோ அல்லது தங்கத்தையோ பார்க்கின்றான். ஆனால் ஒன்றுதான் அவரவர் பார்வை விளக்கம் (தகுதி, திறமை) அதற்குத் தகுந்தார்ப் போல் புரியப்படுகிறது என்று விளக்கம் தருவார்கள்.

சிலர் கையாகவும் மனிதனாகவும் இவன்தான் பார்க்கின்றான்.. கையும் இல்லை மனிதனும் இல்லை. பூமியில் உண்டான இவன் பூமி (மண்). இவன் பேசினால் பூமிதான் பேசுகிறது. ஆனால் இவன், தான் பூமியைவிட்டு வேறானவன் என்பதுபோல் இவன் புரிந்து, தான் பேசுவதாக புரிகின்றான் என்பார்கள்.

பூமி எவ்வாறு பேசும் ? இவன் மூலம் தானே பேசும். அவ்வாறு பேசுவதை இவன் என்று கருதிய, நம்பிய, உணர்ந்த அந்த அம்சத்துக்குள் இவன் உரிமை கொண்டாடி விடுகிறான் என்பார்கள். அமைதியில் நிதானமாக கவன ஓர்மையில் தொடரைத் தொடரவும்.

வாய் பேசினால் வாய் அதுவாப் பேசுகிறது ? அல்லது உன் உடன்பு அதுவாப் பேசுகிறது ? அல்லது நீ என்ற உன் கற்பித உன் அறிவு அல்லது உன் உள்ளுணர்வு அதுவாப் பேசுகிறது ? அல்லது உன் உணர்வு எதுவால் உண்டானதோ அதுவாப் பேசுகிறது ?

பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கருத்தைக் கூறினால் அது இந்தியா தன் கருத்தைக் கூறியதாகத்தானே பொருள் ! அதைவிடுத்து பாரதப் பிரதமர் தன் அறிவில் உண்டானது என்று அந்த நேரத்தில் சிலக் கருத்தை கூறினாலும் அது இந்தியாவின் கருத்துத் தானே ! அவ்வாறல்ல அது என் கருத்து என்று எவ்வாறு பாரதப் பிரதமர் சொல்லக்கூடும் ? அங்கு பதியப்பட்டது இந்தியாவின் கருத்துத் தான் என்று உலகம் ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்தியாதான் எவ்வறுப் பேசும் ? பாரதப் பிரதமர் மூலமும் பேசும், உங்கள் மூலமும் பேசும், என் மூலமும் பேசும். இரண்டற்ற நிலையை இவ்வாறும் சிலர் புரிவார்கள்.

சிலர் இந்தியாவும் அமெரிக்காவும் பேசிக்கொண்டது உலகம் தனக்குள் இவ்வாறு பேசிக்கொண்டது என்றும் புரிவார்கள் !

நபிதாஸ்

15 comments:

  1. அறியா அறிவுப்போலிகள் குறித்த விளக்கம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. போலிகள் எல்லா இடத்திலும் எல்லா நிலையிலும் இருக்கின்றது.

      போலியில் மயங்கியோர் உண்மைகளே
      பொலியெனப் பார்க்குமளவிற் காகிவிடுகின்றனர். சமூக நீதி, ஒற்றுமைக் குழைவு, நிம்மதியிழப்பு, எதற்கும் துணிதல் என்றாகிவிடுகின்றனர்.

      இவ்வாறிருக்க உண்மை அதனை விளங்கும் அதன் போக்கில் உங்கள் உள்வாங்கிய விதம் கண்டு அதன் அருமையில் நானே மயங்கினேன்.

      Delete
  2. சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள நம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் ஆவள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றிகள்.
      தங்களது ஆவல் நியாயமானதே.
      உண்மையை உடையாய் உடுத்தி பகட்டும் போலியை இனம் கண்டிடல் முதல் முயற்சியாகக் கொள்ளலாம்.

      Delete
  3. ஒபாமா போலி போட்டோவினால் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மோடியின் கோவணம் அவிழ்ந்தது.
    மோடியின் காசுக்கு கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் பத்திரிகைகளும் ஊடகங்களும் பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டு நிறுவனமும் பொய்யான மோடி அலையை கொண்டு வந்திருக்கிறது.

    ---> உயரத்தில் பறக்குது மோடியின் கோவணம்.

    .

    ReplyDelete
    Replies
    1. போலிகளை அம்பலப்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அபாரமானது. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  4. போலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால்தான் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என விளம்பரத்தில் கூட அடிக்கடி சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது உண்மை. ஆனால் இவ்வாறு போலிகளே விளம்பரம் செய்து தன்னை உண்மையாளன் எனக்காட்டும் தந்திரம் ஒளிந்துள்ளதே ! எனவே மயக்க மோகத்தில் வீழாது, தீர விசாரணை, நியாயச் சிந்தனைக் கொண்டும், விளைவுகளின் பலனைப் புரிந்தும் போலிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க வேண்டும். நன்றி.

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    அறியா அறிவுப்போலிகள்
    இப்படியொரு அருமையான தலைப்பில் அழகான ஆக்கம்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பணக்கார பெண்மணி.

      அவள் தன் பகட்டை அனைவருக்கும் காட்டுவதற்கு, தன்னிடம் உள்ள நகைகளையெல்லாம் தினமும் வீட்டிலிருக்கும்போது கூட அணிந்து கொள்வாள்.

      தினமும் இரவு படுக்கப்போகும் முன் அவற்றை கழட்டி ஒரு மேஜையின் மேல் வைத்து விட்டு, அதனருகில் ஒரு துண்டி சீட்டில்,

      “இந்த நகைகளெல்லாம் போலி நகைகள். கவரிங் நகைகள். என்னுடைய உண்மையான நகைகள் என் வங்கி லாக்கரில் உள்ளன” என எழுதி வைத்து விடுவாள்.

      அப்படி செய்ததில் அந்த நகைகள் திருட்டுப்போகாமல் ரொம்ப நாள் இருந்தது.

      ஒரு நாள், அவள் காலையில் எழுந்து பார்த்த போது அத்துனை நகைகளும் களவு போயிருந்தது.

      அருகில் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதியிருந்தது,

      “உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் ஒரு போலித்திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்”

      நன்றி முகநூல்

      Delete
    2. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவைச் சேர்ந்த அந்த சிறிய அழகிய கிராமம் அங்கு மருத்துவ மனையோ மருத்துவர்களோ இல்லை. அவர்களுக்கு அவசரமாக ஏதாவது வைத்தியம் செய்ய வேண்டும் என்றால் மேலூர் வர வேண்டும். அங்கு தான் அரசு மருத்துவனையும் தனியார் மருத்துவ மனைகளும் உள்ளது.

      அந்த கிராமத்திலிருந்து மேலூர் வரவேண்டும் என்றால் இரவு 9.00 மணிக்குள்ளாகத்தான் பேருந்துகள் இயங்கும் 9.00 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது நோயாளிகளை அழைத்து வர மாட்டு வண்டிகளும் இரு சக்கர வாகனங்களுமே இயங்கும்.

      அந்தக் கிராமத்தில் ஒருநபர் தன்னை ஒரு டாக்டர் என்று கூறிக் கொண்டு ஒரு வீட்டில் வசித்து வருகிறார் இவர் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் பக்கத்து கிராம மக்களுக்கும் பிரசித்து பெற்ற மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

      இங்கு ஜூரம், தலை வலி போன்ற வியாதிகளுக்கும் மலேரியா, வைரஸ் பீவர் போன்ற நோயாளிகளுக்கு சீராய்டு ஊசி போடப்படுகிறது. இந்த போலி மருத்துவருக்கு எந்த வியாதிக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்பது தெரியாது.

      தலைவலி என்று வந்தவர்களுக்கு ஸ்டெராய்டு (Steroid) தான் கொடுக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சிறுநீரகம் செயல் இழந்தவர்களும் அதிக ரத்தக் கொதிப்பினால் ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் அதிகமாக இருக்கிறார்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு வந்திருக்கும் விஷ ஜுரமா? டைபாய்டா, மலேரியாவா அல்லது வைரஸ் ஜுரமா என்பது தெரியாது.

      இவர்களை பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்துவதும் இல்லை இவர்கள் வெளியே சென்று பரிசோதனை செய்து கொண்டால் வேறு மருத்துவரை அணுகுவார்கள் என்று நேரடியாக வலி நிவாரண மாத்திரைகள் எழுதிக் கொடுக்கப்படுகிறது.

      சமீபத்தில் நடந்த ஓரு சம்பவமே அங்குள்ளவர்களின் மனதை சிறிதளவு மாற்றியிருக்கிறது வெள்ளைச் சாமி என்பவர் அந்த கிராமத்தில் ஓர் பெரிய விவசாயி இவர் தனக்கு சொந்தமான மாந்தோப்புகளுக்கு மருந்தடித்து சுத்தம் செய்ய பணியாட்களை நியமித்ததுடன் தானும் உடன் இருந்து வேலைகள் செய்திருக்கிறார்.

      அவர் தொடர்ந்து ஒரு வார காலமாக வேலை செய்த காரணத்தால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவருக்கு இடது கையிலும் முதுகுகிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது அவர் தனக்கு வென்னீர் வைத்து குளிக்க வைக்கச் சொல்லி யிருக்கிறார் மனைவியிடம் சொல்லி அவரும் வென்னீர் வைத்து வலி இருக்கும். பகுதியில் ஊற்றியிருக்கிறார். ஆனால் வலி குறையவில்லை, வெள்ளச்சாமி தன்னை மேலூரிலிருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே வெள்ளைச்சாமியின் மனைவி தங்கள் உறவினர் வீடுகளுக்குப் போய் மருத்துவமனை செல்ல உதவி கேட்டிருக்கிறார்.

      அப்போது இரவு 9.00 மணி கடைசி பேருந்து சென்று விட்டது. இந்நிலையில், வெள்ளைச் சாமியின் நெருங்கிய உறவினருக்கு அந்த போலி மருத்துவர் நண்பர். எனவே அவர் நசீரிடம் வெள்ளைச் சாமியை அழைத்துச் சென்றார் அவருக்கு உடம்புக்கு என்ன என்று விசாரிக்காமலே அந்த மருத்துவர் ஒரு ஸ்டெராய்டு (Steroid) ஊசி யை அவருக்கு போட்டு சில வலி நிவாரண மருந்துகளையும் கொடுத்திருக்கிறார். ஊசிபோட்ட பத்தாவது நிமிடம் வெள்ளைசாமி வாந்தி எடுத்தார் அதன் பிறகு நினைவிழந்தார்.
      வெள்ளைச் சாமியின் பிள்ளைகள் வெளிஊர்களில் பணிபுரிவதால் உதவிக்கு யாரும் இல்லை அன்று இரவு முழுவதும் வெள்ளைச் சாமி வலியினால் துடியாய்துடித்தார் பெண்கள் அவர் மார்பில் தைலத்தை பூசவும் தட்டி தட்டி மூச்சை கொண்டு வரவும் செய்தார்கள்.

      இத்தகைய பெரிய போராட்டத்திற்குப் பிறகு விடிகாலை ஐந்து மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. இதற்கு காரணம், இவர்கள் பாமரமக்களிடம் பெரிய மருத்துவர் போல் நடித்து கொள்ளை கொள்ளை யாக பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதர்கள் போல் வாழ்க்கை நடத்துவதால் தான். ஆதலால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தெருவில் நிற்கிறது.

      இது போன்ற மன்னிக்க முடியாத குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போலி மருத்துவர்களை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தடுக்க முடியும் தான் முடியுமா?

      சாய் ஸ்ரீ

      இதை தான் அரசு சொல்லுது? மருத்துவம் முடித்திடும் ஒவ்வொருவரும் கிராமங்களில் குறைந்த பட்சம் காலம் பணிபுரிந்தால், கிராம மக்களிடையே ஏற்படும் அடிப்படை நோய்களிலிருந்து காத்திட வழி வகுக்கும் இது ஒவ்வொரு மருத்துவரின் சமூக பொறுப்பும் கூட அப்படி செய்தால் நகரத்திற்கும் ஒடிடும் அவலங்கள் குறையவாய்ப்புண்டு தானே…

      Delete
    3. உண்மை திருடன் இருக்க வேண்டிய இடத்தில். போலித் திருடன் திருட்டில். இரண்டு நிலையில் தன்னையும் எமாற்றிக் கொள்கிறான்/கொல்கிறான். இது போலியின் பரிசு. தண்டனை என்று வரும் பொழுது உண்மைத் திருடனின் தண்டனைக் காட்டிலும் போலி என்பதால் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். இன்று மக்கள் போலியில்தான் சாரிசாரியாக, கொத்துக்கொத்தாக வீழ்ந்துவிடுகின்றனர். பொன்னைக்காட்டிலும் போலிதான் அழகாக மின்னுகிறது. உண்மை கசக்கத்தான் செய்யும். அதை நெருங்க விடாமாயில் பல முள்கள் இருக்கும். நெருங்கியோன் பழத்தை உருசிப்பான்.

      முகநூல் விளக்கம் அருமை. தகுந்த நேரத்தில் அதை எடுத்து இங்கு பதிந்தமை அதிலும் அருமை.

      Delete
    4. //மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவைச் சேர்ந்த அந்த சிறிய அழகிய கிராமம் அங்கு மருத்துவ மனையோ மருத்துவர்களோ இல்லை...................// சம்வம் நலதொரு பாடம்.

      ஒரு போலியால் ஒரு கிராமம் நிறைந்த மக்கள் பல நோய்களுக்கு ஆளாக்கி, உயிரை குடித்து ஒருவன் உல்லாசமாக வாழ்கிறான்.

      போலியென்று புரியாதவரைக்கும் அக்கிராம மக்கள் அவனை எத்தகைய உயர் நிலையில் மனதில் வைத்திருப்பார்கள் !

      இப்படித்தான் இன்று நிறைய நடக்கின்றது. பலர் அறிந்தோம் என்ற அறியாமையில் இன்னும் தூங்குகின்றனர். விழித்துக்கொள்ளும் காலம் இல்லாமை இல்லை. ஆனாலும் அறியாமையே அறிவு என்று வாதாடும் திறமைகள் அதில் வளர்த்து வழர்ந்தபின் தெளிவடைவது மிக மிகக் கடினம் தான் !

      மலத்தையே உருட்டி மலம் வாசனை இல்லாவிட்டால் வண்டு இறந்துவிடும் நிலைமை மிகப் பரிதாபத்திற்குரியதே !

      நன்றி அறிஞரே.

      Delete
  6. உங்களுக்கு தங்கத்தால் ஆனா மோதிரம் இடலாம் இன்று விளம்பரங்கள் அனைத்துமே போலிகள்தான் கிராப்பிக்ஸ் போலிகள்

    ReplyDelete
  7. கானல் நீர் அதில் உண்மைகள் நாம் நிறைய அறிய வேண்டியவைகள் உள்ளன. அதனால் பாதிப்புகள் இல்லை. போலிகள் இவ்வாறெல்லாம் உண்டாகும் என்ற உண்மைகளும் அதில் உள்ளன. அவ்வாறே திடமாகக் காணும் இவ்வுலகமும் ஒரு மாயை என்பார்கள் ஞானிகள். உண்மையை அறிய வேண்டி இந்த வகை மாயைகள் துணைபுரியும். ஆனால் சில செயற்கைப் போலிகள் அதனதன் நோக்கத்தின் தன்மையைப் பொறுத்து விளைவுகளைத் தருகின்றன. கிராப்பிக்ஸ் போலிகளைத்தான் சொல்கிறேன்.

    தங்களின் இருவரிக் கருத்தில் உங்கள் உள்ளம் தங்கமாக மின்னுகிறதே !

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers