.

Pages

Thursday, September 6, 2012

'சந்திப்பு' : ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் [காணொளி]



மருத்துவத்துறையில் குழந்தை நலம் சார்ந்த மருத்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 'குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரிவர கவனம் செலுத்தாததன் காரணமே நிகழ்கிறது' என்பது ஆய்வு அறிக்கை.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல்,  காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அம்மை நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பிரச்னை போன்ற நோய்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக......

என்ற கேள்வியுடன் ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்ளை ஒரு அருமையான இடத்தில் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

டாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

பிறந்தது தொண்டி என்ற ஊராயிருந்தாலும் நமதூரிலே குடும்பத்துடன் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகள் நல மருத்துவத்துடன் கூடுதலாக இருதய மற்றும் பொதுநல சம்பந்தப்பட்ட மருத்தவத்திற் ஆலோசனைகள் வழங்குவது இவரின் தனிச்சிறப்பு.

நமதூர் ஆஸ்பத்திரி தெருவில் இவரின் ‘மருத்துவ கிளினிக்’ செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers