kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, September 6, 2012
‘சந்திப்பு’ : அதிரையின் முதல் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஜம்ஷித் முஹம்மது [காணொளி]
சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட உடலியக்க மருத்துவத்துறை ( பிசியோதெரபி ) நோயாளிகளின் நோயையும், வலியையும் நீக்கி அவர்களை எழுந்து நடமாட வைக்கின்றது
பக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், "பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...
1. பிசியோதெரபியைப் பற்றி.....
2. வலிகள் ஏற்பட காரணம் என்ன ?
3. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாத நோய்க்கு ஆலோசனைகள்....
4. பெண்களுக்கு ஏற்படும் கை/கால் மூட்டு வலிகளுக்கு கூறும் அறிவுரை...
ஆகிய கேள்விகளுடன் பிசியோதெரபிஸ்ட் ஜம்ஷித் முஹம்மது அவர்களை சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
ஜம்ஷித் முஹம்மது அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நான்கு வருடம் ஆறு மாத கால B.PT என குறிப்பிடும் ‘பிசியோதெரபி’க் கல்வியை பயின்றுள்ள இவர் நமதூரின் முதல் பிசியோதெரபிஸ்ட் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றார்.
தற்போது கோவையில் பிரபல ‘கங்கா மருத்துவமனை’யில் பணிபுரியும் இவர் நமதூரில் பிசியோதெரபி சேவையைத் தொடர வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை சந்திப்பின் போது வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
Nizam,
ReplyDeleteGood to know that you are introducing people from our home town to the world... this will encourage people to do more on whatever they are doing..