.

Pages

Friday, November 23, 2012

சூனா வீட்டு பள்ளிக்கூடம் – ஓர் பார்வை !!!

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகின்றது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவதற்காக மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

தற்போது புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.



அடுத்த அடுத்தக் கட்டங்களின் மீது எங்கள் பார்வை பட்டாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியைத்தந்தன.

கழிப்பறை வசதி :
அதேபோல் கழிப்பறைகள் எழுதுவதற்கே கூசுகின்றன அந்தளவு மிகவும் அசுத்தமாக காணப்பட்டன. ஆசிரியப் பெருமக்கள் மாணாக்கர்கள் இவற்றை எப்படி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து போது எங்களின் மனது மிகவும் வேதனையடைந்தது.

அரசின் விதியின் படி...
1. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டிய கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.

2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.

உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இப்பிரச்சனைகளை பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலம் சம்பத்தப்பட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

2. மஹல்லா நிர்வாகிகளின் சார்பாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய கல்விக்குழு, உள்ளாட்சியினர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

3. மேலே குறிப்பிட்ட இருவரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட விலை என்றால் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை அனுப்பி வைப்பது...

4. பொது மக்களின் ஒத்துழைப்போடு நமது பேரூராட்சியின் அனுமதியோடு தமிழக அரசின் “தன்னிறைவுத் திட்டம்“ மூலமாக பாதுகாப்பானக் பள்ளி அறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்...

அதென்ன தன்னிறைவுத் திட்டம் ?
தன்னிறைவுத் திட்டம் : - [ முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்’  ]
கிராமங்கள், நகரங்களில் மக்கள் விரும்பும் திட்டங்களை தன்னிறைவுத் திட்டம் மூலம் மேற்கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் செலுத்த வேண்டும்.  [ உதாரணமாக நாம் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால் அரசு சார்பில் கூடுதலாக இரண்டு லட்சங்கள் பெற்று நமக்கு வேண்டிய திட்டங்களை நாமே செயல் படுத்திக்கொள்ளலாம் ]

அரசுப் பள்ளிக் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், பள்ளிக் கழிவறைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் அரசு விடுதிகள் கட்டுதல், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.

சமுதாய சொத்துக்களை உருவாக்குதல், குடிநீர் ஆதாரம் உருவாக்குதல், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தானியகளம் அமைத்தல், ஊரக குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை பராமரித்தல், பாலங்கள் அல்லது சிறுபாலங்கள் கட்டுதல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டம் மூலம் மேற்கொள்ள முடியும்.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

சரி அதென்ன சூனா வீட்டு பள்ளிக்கூடம் !?
எனது வாப்புச்சா வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருந்த வாய்க்கால்தெரு [ நடுத்தெரு ] பள்ளிக்கூடத்தில் எனது தகப்பனார் ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்ததால் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்ற எனது தாயாரிடம் ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற பெயர் எப்படி வந்தன ? என்ற கேள்வியை கேட்டேன்.

ஓ அதுவா ! நம்ம தெருவிலே ஆரம்பத்திலே பள்ளிக்கூடம் இல்லை. முதன் முதலா நம்ம சூனா வீட்டு ‘கவ்வா ராத்தா’ வீட்டிலுள்ள மிகப்பெரிய திண்ணையில் தான் படிப்பை சொல்லித்தந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை இப்பள்ளியை ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்றே அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறது என்ற தகவலைத் தந்து என்னை வியக்கவைத்தார்.

15 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

    மிக அழகிய பதிவு
    பதிவை படித்தபோது மனம் வருத்தம் கலந்த நேகிழ்ச்சியாக உணர முடிந்தது

    கள புகைப்படங்கள் முகத்தில் அறைகின்றன

    ReplyDelete
  2. ///ஓ அதுவா ! நம்ம தெருவிலே ஆரம்பத்திலே பள்ளிக்கூடம் இல்லை. முதன் முதலா நம்ம சூனா வீட்டு ‘கவ்வா ராத்தா’ வீட்டிலுள்ள மிகப்பெரிய திண்ணையில் தான் படிப்பை சொல்லித்தந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். ///

    ‘கவ்வா ராத்தா’ அவர்கள் நிலையான நன்மைகளை பெற்று விட்டார்

    ReplyDelete
  3. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நானும் இதே பள்ளியில் தான் என் ஆரம்பக்கல்வியை படித்தேன் அப்போது இருந்த அதே கட்டிடம் இன்றுவரை இருப்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்.இத்தனை காலம் யாருடைய கவனத்திற்கும் வராத நாம் மறக்கமுடியாத சூனா வீட்டுப்பள்ளிக்கூடத்தை நினைவுக்கு கொண்டுவந்து அதன் அவல நிலையை எழுத்தாகவும் அழகிய புகைப்படமாகவும் தந்த அன்பின் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். இதை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடன் முயற்சி செய்தால் நமது பழைய சூனாவீடுப்பள்ளியை சிறப்பாக பிர்ச்சன்னதியரும் பார்க்கும்படி வைத்துக்கொள்ளலாம்

    ReplyDelete
  4. பதிவுக்கு முதலில் நன்றி.

    புகைப்படங்களோடு குறைகளையும் எடுத்துச் சொன்ன அன்பின் தம்பி சேக்கன்னா எம்.நிஜாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பள்ளிக்கூடம் எப்படி இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும், தெரிந்தும் இப்படி இருப்பது நம்மவர்களின் அலட்சியப்போக்கே.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பி சேக்கன்னா எம்.நிஜாம் அவர்களிடம் பலவிஷயங்களை உரையாடிக் கொண்டிருக்கும்போது இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன், அதாவது சில வருடங்களுக்கு முன் பட்டுக்கோட்டை தலைமை தபால் தந்தி அலுவலகம் அருகில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லாதினால் மாணவிகள் பல சங்கடங்களுக்கு உள்ளானார்கள். பின்பு இது எங்கள் கவணத்திற்கு வரவே, நாங்கள் பொதுமக்களோடும், பெற்றோர்களோடும் பள்ளி நிர்வாகத்தை அனுகி அதை ஆய்வு செய்து, முறையிட்டு இரண்டு வார கால கெடுவுக்குள் அந்த பள்ளி நிர்வாகம் சரிசெய்து கொடுத்தது. அன்று எங்களோடு பொதுமக்களும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்களும் ஒத்துழைத்தார்கள், அன்று எங்களோடு ஒத்துழைத்த பொதுமக்கள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமதூரில் இருக்கும் இந்தப் பள்ளிக் கூடமும் மீண்டும் உயிர் பெறும். அது நம்மவர்களின் ஒத்துழைப்பில் இருக்கு.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. படித்த பள்ளியை சென்று பார்த்து அதன் வளர்ச்சி குறித்து யோசித்த உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் இன்னமும் பல பள்ளிகள்...யாரோ ஒருவரின் பார்வை படாதா என்று.

    ReplyDelete
  6. விளக்கங்கள் மனதை வருத்தப்பட வைக்கிறது... இங்கும் பல பள்ளிகள் அவ்வாறு கேட்பாரற்று உள்ளன... உங்களின் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  7. நானும் இதே பள்ளியில் தான் என் ஆரம்ப கல்வியை நான் தொடங்கினேன் அன்று நான் பார்த்த அதே கட்டிடங்கள் தான் இன்றுவரை உள்ளது அதுவும் நான் நான்காம் வகுப்பு படித்த கட்டிம் தான் இன்று உரு மாரி நிர்கிறேதே என்று பார்க்கும் போது மனதை வருத்தப்பட வைக்கிறது நான் அந்த பள்ளியில் படித்த மாணவன் மற்றும் அல்ல அந்த பள்ளி இருக்கும் முஹல்லாவாசி என்ற முறையிலும் இதை நினைத்து நான் வெக்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.தம்பி சேக்கனா M. நிஜாம் அவர்கள் இந்த பதிவை உலகிற்க்கு அறிய செய்தமைக்கு நான் முதலில் நன்றி சொல்கிறேன். ஜமால் காக்கா அவர்கள் சொல்லியது போன்று நமது முஹல்லாவில் உள்ள பள்ளிக்கும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் ஜமால் காக்கா தங்கள் ஈமெயில் அட்ரஸ் தரவும் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் இந்த பள்ளி விசைமாக ஒத்துழைக்க தயார்

    ReplyDelete
  8. AlmasmNovember 23, 2012 4:55 PM

    தம்பி சேக்கனா M. நிஜாம் அவர்கள் இந்த பதிவை உலகிற்க்கு அறிய செய்தமைக்கு நான் முதலில் நன்றி சொல்கிறேன். ஜமால் காக்கா அவர்கள் சொல்லியது போன்று நமது முஹல்லாவில் உள்ள பள்ளிக்கும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் ஜமால் காக்கா தங்கள் ஈமெயில் அட்ரஸ் தரவும் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் இந்த பள்ளி விசைமாக ஒத்துழைக்க தயார்

    தங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றேன்.

    KMAJAMALMOHAMED@GMAIL.COM

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  9. புகைப்படங்களோடு குறைகளையும் எடுத்துச் சொன்ன காக்கா சேக்கன்னா எம்.நிஜாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.இது போன்று பல பள்ளிகள் கேட்பார் கேட்டு கிடைகின்ற்றது. இதை முறையான வழியில் கொண்டு சென்று நல்ல முறையில் தயார் செய்யவும்.இதற்க்கான முயர்ச்சியை நம் ஊர் வாசிகள் செய்யவும்.

    ReplyDelete
  10. அன்பு தம்பி நிஜாமின் விழிப்புணர்வு
    அதிரையை தாண்டி தமிழகம் முழுவதும்
    புகழ் மற்றும் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இடிந்த கட்டிடமும்.மஞ்சள் பையும்,கிழிந்த சட்டையும்,டரவுசருமான அடையாளத்துடன் படித்த பள்ளிகளும்,அதில் கற்பித்த அசிரியர்களும் இன்று இல்லை,அது போல ஒரு அர்பணிப்பும் இல்லை.ஆனால் கல்வின் தரம் மேம்பட்டுள்ல இன்றைய காலகட்டத்தில் கல்வி,,,,,,,?

    ReplyDelete
  12. திர அரசுப்பள்ளிகள் என்றாலே ஒரு மெத்தனத்தன்மை வந்து விடுகிறது,நம் மனதில்,அது முதலில் மாறவேண்டும்.

    ReplyDelete
  13. படங்களும் பள்ளி பற்றிய நினைவுகளும், இன்றைய நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.

    கூடிய விரைவில் எல்லா வசதிகளுடன் புதிய பொலிவான தோற்றம் பெறட்டும் 'சூனா வீட்டுப் பள்ளிக் கூடம்'!

    பல பள்ளிகளின் நிலையும் இதேதான். இப்பள்ளிகளில் படித்து பயன் பெற்ற மாணவர்கள் மனம் வைத்தால் நிச்சயம் நிலை மாறும்.

    ReplyDelete
  14. ஒரு ஏரியாவுக்கு நடுவில் ஒரு பள்ளி கேட்பாரற்று கெடக்கு, கட்டிடத்தை பார்த்தவுடன் தன் பிள்ளைகளும் இந்த மாதிரி பள்ளிக்கூடத்தில் படித்தால் என்னவித நடவடிக்கை எடுப்பாங்களோ அதே முயற்சியில் இறங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு தடவையும் இவ்வழியே கடந்து செல்லும்போதும் தான் படித்த பள்ளி என்ற நினைவு வந்து ஒட்டுக்கட்டடமா இருந்தாலும் பாதுகாப்பா இருக்கனும்..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers