.

Pages

Tuesday, January 8, 2013

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [  F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் ‘நப்ஸ்’ எனும் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

12 comments:

  1. உணவின் அருமையை சிறு குழந்தை முதல் கற்றுக் கொடுக்க வேண்டும்...

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.
    .......................................
    திண்டுக்கல் தனபாலன்November 9, 2012 6:48 PM

    உணவின் அருமையை சிறு குழந்தை முதல் கற்றுக் கொடுக்க வேண்டும்...
    ........................................
    மத்திய கிழக்கில் பல நாடுகளில் உணவை உட்கொண்டதைக் காட்டிலும் வெளியில் கொட்டுவது மிக மிக அதிகம்.

    பசியின் கொடுமையை தெரிந்தவர்கள்.
    பசியின் கொடுமையை தெரியாதவர்கள்.
    என்ன சொல்வது.
    ஒரு நாள் பசியின் கொடுமையை தெரியவரும்போது?

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    .............................................

    ReplyDelete
  3. என் வலைத்தளத்தின் தொடர் வருகையாளர் அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் உங்களின் இத்தளம் நோக்கி விரைந்திட வைத்த விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்!

    உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், வீண்விரயம் செய்யாதீர்கள்.

    ReplyDelete
  4. //உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம்.//கண்டிப்பாக

    மிக அருமையான பகிர்வு

    ReplyDelete
  5. சூடான் போன்ற நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வலி இல்லாமேல் இருக்கிறார்கள் ஆனால் சில பேர் அந்த சாப்படை வீண்விரயம் செய்கிறார்கள்.இதன் மதிப்பு நமக்கு தெரிவது இல்லை ஏன் என்றால் நமக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைத்துக்விடுகிறது .உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், வீண்விரயம் செய்யாதீர்கள்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு ..

    உணவு வீண் விரையம் செய்யும்

    அனைவரும் படிக்கும் விதமாக

    பல் வேறு வலை தளங்களில் பதிய பட வேண்டும்

    ReplyDelete
  7. நம் நாட்டிலேயே எத்தனையோ மக்கள் ஒரு வேலை உண்டவு கூட கிடைக்காமல் வருந்தும் நிலை இருக்கிறது. திருமணங்களில் ஏகப்பட்ட வகைவகையான உணவுகள் செய்து எல்லோரும் அப்படியே எறிந்து விட்டுப் போகிறார்கள்.

    விழிப்புணர்வு ஊட்டக்கூடிய பதிவு.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. உணவின் மகத்துவத்தையும் அது வீணாக்கப்படும் விதத்தையும் அருமையாக நமக்கு உணர்த்திய சகோதரர் சேக்கனா m.நிஜாம் அவர்களுக்கு நன்றி .

    உணவே மருந்து. மருந்தே உணவு என்று சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.அதன்படி நாம் உணவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. இவ்வுலகில் உணவை பலவிதமாக வீண்விரயம் செய்கின்றார்கள். ஆடம்பர திருமண நிகழ்விலும் பல நிகழ்ச்சிகளிலும் வீணடிக்கப்படும் உணவு பல ஏழைகளின் பசியைப்போக்கும். அது மட்டுமல்லாது நாகரீகம் என்ற பெயரில்,buffee என்று ஐரோப்பிய மேலை நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு உண்ணும் முறையில் மிக அதிக மாக நீனடிக்கப்படுகிறது. சில ஆடம்பர ஹோட்டல்களிலும் குறித்த கட்டணம் செலுத்தி உண்ணப்படும் [buffee] உணவில் அதிகமாக வீணடிக்கப்படுகிறது. இதை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சிந்தித்தால் உணவு பற்றாக்குறை குறையும்.

    ReplyDelete
  9. உங்கள் பார்வையில் சமைத்த உணவு மட்டுமே தெறிகிறது ஆனால் ஆய்வுகள் தெறிவிப்பது சமைக்கப்படாமலே வீணடிக்கப்படும் உணவுப்பொருட்களைத்தான். நீங்கள் குறைவாக சாப்பிடுவதனாலோ அல்லது குறைவாக சமைப்பதனாலோ மிச்சப்படுத்தப்படும் உபரி உணவுப் பொருட்க்களை பசியோடு இருப்பவர்களுக்கு சேர்க்கமுடியும் என்பது தவறான கருத்து.

    அதிகப்படியான உணவுப் பொருட்களை வீணடிப்பது அரசாங்கமும் வியாபாரிகளும்தான். நீங்கள் சூடானுக்கும் சோமாலியாவுக்கும் உணவுப்பொருட்களை இலவசமாக அனுப்பிவைத்தாலும் அதில் பாதி பதுக்கல் காரர்களினால் வீணடிக்கப்படும்.

    திருமணம் போன்ற சுப காரியங்களில் உணவு குறைவாக சமைக்கப்பட்டால் கடைசியில் வருபவர்களுக்கு உணவு இல்லை எனும் சூழல் வரும்போது எவ்வளவு அசிங்கப்பட்டுபோவார்கள் என்பது தெறியாதா?

    உணவு வீணடிப்பவர்கள் யார் தெரியுமா? 5 ரூபாய் இட்டிலியை 50 ரூபாய் கொடுத்து உண்பவர்களே.

    ReplyDelete
    Replies
    1. // உணவு வீணடிப்பவர்கள் யார் தெரியுமா? 5 ரூபாய் இட்டிலியை 50 ரூபாய் கொடுத்து உண்பவர்களே.//

      சிந்திக்க வேண்டிய தகவல் நண்பரே !

      Delete
  10. இன்றைய சூழலுக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு . வசதி படைத்தவர்கள் வீணடிக்கும் உணவுகளை பகிர்ந்தளிக்க பழகினாலே பட்டினிச்சாவு குறையும் உணருபவர்கள் தான் யாரும் இல்லை.

    ReplyDelete
  11. சிந்திக்க வேண்டிய தகவல் மீண்டும் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers