.

Pages

Saturday, December 29, 2012

குடி குடியைக் கெடுக்குமா !?


'ஆல்கஹால்' என்பது ஒரு போதைப் பொருளா ?

ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...

12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

என்னதான் பாதிப்புகள் ?

1. ஞாபக மறதி

2. உடல் உறுப்புகள் பாதிப்பு

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்

6. தற்கொலை முயற்சி செய்தல்.

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில்  சந்தேகித்தல்

8. குழந்தையின்மை

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.

10.  இறுதியில் அகால மரணம்

'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

என்னதான் தீர்வு ?

1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

7 comments:

  1. மிக மிக அவசியமான ஒரு விழிப்புணர்வு ஆக்கம்.

    பதிந்தமைக்கு நன்றி.

    குடிப்பழக்கம் எந்தெந்த ரூபத்தில் நம் மனதில் வந்து குடிகொள்கிறது என்பதையும், மது குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளையும், அதன் தீர்வு என்ன என்பதையும் அழகாக புரிய வைத்து இருக்கிறார் நமது விழிப்புணர்வு வித்தகர் நிஜாம்.

    வாழ்த்துக்கள்.

    சிலர் தெரியாமல் குடிக்க பழகிவிட்டு கைவிட திண்டாடுகிறான்.
    சிலர் தெரிந்தும் பழகிவிட்டு கைவிட திண்டாடுகிறான்.
    இன்னும் சிலர் தெரிந்தோ தெரியாமலோ பழகி விட்டு கைவிட திண்டாடுகின்றனர். மொத்தத்தில் குடிப்பிரியர்கள் கைவிட்ட பாடில்லை.

    ஆகவே இது போன்ற ஆக்கங்களை படித்தாவது திருந்தட்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    குடிக்க இருப்பது எல்லாம் குடிப்பதற்கே,
    என்ன சொல்ல வர்ரீங்க தம்பி?
    ஐயா, நான் சொல்ல வந்தது தூய தண்ணீரையும் இந்த டீ யையும்.
    ஓ, அப்படியா,
    அப்படித்தான் பின்னே என்ன நினைச்சீங்க அண்ணே?
    இல்லே வந்து த்த அத தான் நீங்க ஏதோ சொல்லப் போரீங்கன்னு இருந்தேன்.

    ஐயா, என்ன நினைப்பு உங்களுக்கு? இங்க பாருங்க இன்றோடு இந்த குடியை விடுங்கையா, இதனாலே பாருங்க வடஇந்தியாவில் ஒரே கொந்தளிப்பா இருக்குதே அதுகூட உங்களுக்கு தெரியவில்லையா? ஆமா தம்பி நா கூட கேள்விபட்டேன் அது எப்படி தம்பி?

    ஐயா, இப்ப நீங்க வீட்டுக்கு போய் நல்லா தூங்கிட்டு காத்தாலே வாங்க நான் விபரமா சொல்றேன்.
    சரி தம்பி உங்களை காத்தாலே எங்கே பார்கிறது?
    இந்த டீ கடைக்கே வாங்க.
    சரி தம்பி நா வர்ரேன்.

    இந்த ஆக்கத்தை படிக்கும் வாசகர்களே, சிந்தியுங்கள். சிந்திப்பதோடு குடிப்பவர்களை கண்டால் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையடைய முயற்சி செய்யுங்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. சமூக விழிப்புணர்வு பக்கங்கள் எப்போதுமே அருமையான விடயங்களைச் சொல்லும். அது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த இடுகையில் ஒரு சிறப்புத் தரம் இருப்பதைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

    அன்புடன் புகாரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புச்சகோதரர் அன்புடன் புகாரி அவர்கட்கு

      Delete
  4. இது குடிகார மக்களுக்கு ஒரு சரியான சாட்டைஅடி, முன்பெல்லாம் ஆண்கள்தான் குடிகாரன்களாக இருந்தார்கள், தற்போதெல்லாம் பெண்களும் குடிகாரிகளாக மாறியிருக்கிறார்கள் என்ற நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. குடித்துவிட்டுவரும் கணவர்களுக்கு மனைவி்தான் பக்கபலமாக இருந்து பக்குவமாக செயல்படுவாள், அவளே குடிக்கும்போது யார்பக்கபலமாக இருப்பார்கள்? ஆண்கள்வர்கம் குடியைநிறுத்தினால் மதுதாயரிக்கும் நிறுவனங்களும் தயாரிப்பை நிறுத்திவிட்டு வேறுநல்லவழியில் இறங்குவார்கள் என்பதில்சந்தேகமில்லை.

    ReplyDelete
  5. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்க அதிகம்.அதற்க்கு இந்த கட்டுரை ஒரு சமர்ப்பணம். அருமை பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பாதிக்கும் அதிகமானோர் பதின்ம வயதில்தான் குடிப்பதை நன்பர்களுடன் சேர்ந்து துவக்குகிறார்கள்.பெற்றோர்கள் பதின்மவயதில் தன் பிள்ளைகளை தீவிரமாக ஆனால் ரகசியமாக கண்கானிக்கவேண்டும். தவறு செய்வது தெறியவந்தால் யார்சொல்லை அன்புடன் ஏற்பார்களோ அவர்களிடம் சொல்லி அன்பாக வழி நடத்தவேண்டும். பதின்ம வயதில் குடிப்பவர்களே பிற்காலத்தில் மீதம் உள்ளவர்களை குடிக்க பழக்குபவர்கள்.

    "உங்களுக்குத் தெறிந்தவர்களின் பிள்ளைகள் யாராவது குடிப்பதை பார்த்தால் தயவுசெய்து அவர்களின் பெற்றோர்களுக்கு தெறியப்படுத்திவிடுங்கள் உங்களுக்கு நன்றி."

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers