.

Pages

Thursday, May 16, 2013

உலகம்

சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து

அன்புடன் புகாரி

8 comments:

  1. எச்சூழலிலும் மனம் துவண்டுவிடாமல் தன்னம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதை சாதூரியமான வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை.

    வாழ்த்துக்கள் நண்பரே..!

    ReplyDelete
  2. //இன்று வரும்
    துயரங்களைக் கண்டு
    ஓடி ஒளிந்தால்

    நாளை
    நம் முகவரி விசாரித்து வரும்
    இன்பங்களை
    யார் வரவேற்பது//

    மனத்தினில் ஒட்டும் மகத்தானக் கோர்வை
    தினம்தினம் பார்ப்பேன் திறந்து

    ReplyDelete
  3. கள்ளம் கபடம் இல்லா கவி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தன் நோக்கிற்கு ஏற்ப உள்ளம் உற்பத்தி செய்து உண்மைகளை இவ்வுலகிற்கு தந்துகொண்டுதான் இருக்கிறது.

    //
    நம்பிக்கை கொள்ளுங்கள்
    அதுவே
    எல்லாவற்றையும் வெல்லும்
    அருமருந்து
    //

    நல்ல நோக்கம்
    நல்ல வழிகாட்டுதல்

    பெருமானார்(ஸல்) அன்னவர்களின்
    அமுதங்களில் ஒன்றை நினைவூட்டியமைக்கு
    நீர் நலமுடன் வாழ்க!

    ReplyDelete
  5. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமையான வரிகள். அற்புதக் கருத்துக்கள்.

    ReplyDelete
  7. அருமையான வரிகளில் உங்களின் படைப்பு மிக எழிமை.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers