.

Pages

Tuesday, June 4, 2013

பள்ளிக்கூடம் திறந்தாச்சு ! டிங்... டிங்... டிங்...

வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொன்னாலும் கூட பள்ளிக்கூட வாழ்க்கை என்பது தனி அலாதிதான். அது யாராக இருந்தாலும் சரி பள்ளி வாழ்க்கை மாதிரி இனிமேல் வாழமுடியுமா என்ற கேள்விகளோடு எத்தனையோ உள்ளங்கள் இன்றும் நினைத்து பார்பதுண்டு. அந்த வகையில் எடுத்தக் கொண்டால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அந்தந்த வயதினருக்கு ஏற்ப பள்ளிக்கூட வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்துருக்கும்.

அந்த வரிசையில் என்னுடைய பள்ளிவாழ்க்கை ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு நம் மத்தியில் அநேகம் பேர் இருக்கின்றனர். அப்படி அநேகம் பேர் இருந்தாலும் பள்ளி ஆரம்ப நாட்களில் பள்ளிக்கு போவது என்றால் அது நரக வேதனை என்று அறியாப் பருவத்தில் துவண்டது உண்டு, பள்ளிக்கூடம் போகாமல் ஒழித்தது உண்டு, அந்த இளம் வயது பள்ளிப்பருவம் இருக்குதே அதை கவலையற்ற, நவீனமற்ற, காதல் பிரச்சனையற்ற, ஆசிரியைகள் மாணவர்கள் கிசு கிசு அற்ற, ஒரு மூடை புஸ்தகம் இல்லாத ஜாலியான பள்ளி வாழ்க்கை என்றே சொல்லலாம்.

இன்றைய நாட்களில் கல்வியை முக்கியமாக கருத்தப்பட்டாலும் அன்று கல்வி கற்க வில்லை என்றாலும் அனுபவ அறிவைக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் ஏராளம். திறமையை வைத்து காரியத்தை சாதித்து வந்தவர்களும் ஏராளம், ஏன் படிப்பறிவு இல்லாமல் திருமணம் கூட நடந்தது.

இன்று எவ்வளவுதான் திறமை இருந்தாலும், சாதாரண ஒரு வேலைக்குக் கூட என்ன படித்து இருக்கின்றாய் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர், திருமணமாக இருந்தாலும் அழைப்பிதழ்களில் மணமக்கள் பெயருக்கு பக்கத்தில் படித்த படிப்பை இடுவது கௌறவமாக இருக்கின்றது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பிழை இல்லாதவற்றை கற்றுக்கொள்ள வேண்டும், கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே
கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்பட்டும்.

ஆக, கல்வி இல்லையேல் எதுவுமே இல்லை என்ற நிலை இன்று மாறி கல்வி கற்றால்தான் எல்லாமே என்ற நிலைக்கு ஆண்களும் பெண்களும் தள்ளப்பட்டு விட்டனர், கல்வி கற்பது தலையாய கடமை.

தற்போது எல்லா தேர்வின் முடிவுகள் வந்து விட்ட நிலையில் ஏகப்பட்ட மாணவ மாணவியர்கள் தேர்வாகி ஒரு படி மேலே போய் விட்டனர், புதிய வகுப்புக்கான அட்மிஷன்கள், பாட புஸ்தகங்கள், இதிலே ஒரு படி மேலே போய் விட்டாலும் இன்னும் அனேக படிகள் இருக்கின்றன அவர்கள் கடப்பதற்கு.

அன்றெல்லாம் புதிய சேர்க்கை என்றால் ஒன்றாம் வகுப்புதான் முதல் வகுப்பாக கருதப்பட்டு வந்தது, பின்பு கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவந்து முதலாம் வகுப்புக்கு முன் இரண்டாண்டுகள் எல்.கே.ஜி,(L.K.G) மற்றும் யு.கே.ஜி (U.K.G) என்று வந்தது, மீண்டும் அதை இன்னும் இறுக்கி சுருக்கி ப்ரீ.கே.ஜி (PRE. K.G) என்ற நிலை வந்து பால் குடிக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அட்மிஷன் நடந்து கொண்டு இருக்குது.

பெற்றோர்களின் கனவுகள் பிள்ளைகள் நல்லா விதமாக படித்து முன்னுக்கு வரணும், பெரிய படிப்பெல்லாம் படிக்கணும், தலை சிறந்தவனாக விளங்கனும், சான்றோர்கள் போற்றும் பிள்ளையாக திகழனும் போன்ற கனவுகள் பெற்றோர்களுக்கு இருப்பதில் தப்பில்லை, அந்த கனவுகள் நியாயமானதே, ஆகா பெற்றோர்கள் பள்ளிகளில் தன் குழந்தைகளை சேர்ப்பதில் படு வேகமாக இருப்பார்கள்.

எல்லா அட்மிஷன்களும் முடிந்து பள்ளி திறப்பதற்கு ஆயத்தமாகிவிடும், பெற்றோர்களுக்கு கடிதம் மூலம் பள்ளி திறக்கும் தேதி நேரம் காலம் எல்லாம் தெரிவிக்கப்பட்டுவிடும், பெற்றோர்களும் ஆயத்தமாகி பள்ளி திறக்கப்படும் தேதிக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள், பள்ளிக்கூடம் திறந்தாச்சு. டிங் டிங் டிங் எல்லா பிள்ளைகளும் வந்து விட்டார்கள், வகுப்பறைக்கு சென்று விட்டார்கள், புதியதாக சேர்ந்த குழதைகளை இப்போது பார்க்கலாம்.

முதல் வாரம் :
புதியதாக சேரும் குழந்தைகளுக்கு முதல் வாரத்தில் பள்ளிக்கூடம் போவது என்றால் நரக வேதனையாக இருக்கும், தாயோடு இருந்து விட்டு இப்போ தாயை விட்டுப் பிரிந்து வகுப்புக்குள் நுழைந்ததும் புது முகங்களா, அவ்வளவுதான் அந்த குழந்தைகளுக்கு பைத்தியமே பிடித்ததுபோல் அழுதுகொண்டே இருப்பார்கள், ஆயாமார்கள் சின்ன சின்ன விளையாட்டு பொம்மைகளை காட்டி சமாதானப் படுத்த முயற்ச்சிப்பார்கள். ம்ஹூம் முடியவே முடியாது, சமாளிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கும்.

இரண்டாம் வாரம் :
முதல் வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் முழுக்க முழுக்க தாயிடம் இருந்து விட்டு அடுத்தது இரண்டாவது வாரம். அவ்வளவுதான், வழக்கமாக அதே அழுகையோடு சற்று அப்படி முகத்தை திருப்பி பார்க்கும், மற்ற குழந்தைகளும் அழுகிறதை பார்த்து இன்னும் உரத்த குரலில் இந்த குழந்தையும் அழுகொண்டே இருந்தாலும் அந்த குழந்தையின் முகத்தை தன் மனதில் பதிய வைத்து இருக்கும்.

மூன்றாம் வாரம் :
இரண்டாவது வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் வழமைபோல் தாயிடம் இருந்து விட்டு மூன்றாவது வாரம், குழந்தை அழுதாலும் கொஞ்சம் நார்மலுக்கு வந்து இருக்கும், இடை இடையே அம்மாவை தேடும் கொஞ்ச நேரம் மற்ற குழந்தைகளோடு கைகளை அசைத்து விளையாடும்.

நான்காம் வாரம் :
மூன்றாவது வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் வழமை போல் தாயிடம் இருந்து விட்டு நான்காவது வாரம். கடந்த வாரங்களைப் போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் நார்மலுக்கு வந்து அழுகை கொஞ்சம் இருந்தாலும் மற்ற குழந்தைகளோடு பழக முயற்ச்சிக்கும்.


ஐந்தாம் வாரம் :
நான்காவது வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் வழமை போல் தாயிடம் இருந்து விட்டு ஐந்தாவது வாரம். இந்த வாரம் கடந்த வாரங்களைப் போல் கடுமையான அழுகை இருக்காது, சின்ன சின்ன முனக்கம் மட்டும் இருக்கும். மற்றப்படி புது முகங்கள் எல்லாம் ஓரளவுக்கு பழக்கமாகி இருக்கும்.

ஆறாம் வாரம் :
ஐந்தாவது வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் வழமை போல் தாயிடம் இருக்கும் குழந்தை பள்ளி குழந்தைகளைத் தேடும். ஆறாவது வாரம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமால் சுமூகமாக பள்ளிச் செல்லும்.


ஏழாம் வாரம் :
ஆறாவது வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறையில் வழமை போல் தாயிடம் இருக்கும் குழந்தை பள்ளிக்கூட பேக்கை எடுத்துக் கொண்டு வாசலுக்கு போகும். ஏழாவது வாரம் ஒரு புத்துணர்ச்சியோடு பள்ளி செல்லும்.

உங்கள் குழந்தைகளை இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் பள்ளியில் சேர்க்கப்போகும் பெற்றோர்களே, சேர்பதற்கு முன் பள்ளியின் பாதுகாப்பு, சுகாதாரம், தரம், விளையாடும் இடம், கழிப்பறை வசதிகள், குழந்தைகளுக்கு இடைஞ்சல் இல்லாத இடம், அறிவிற்கு ஏற்புடைய பள்ளிக் கட்டணம், மேலும் உங்களுடைய சந்தேகங்கள்  போன்ற காரணிகளை ஆராய்ந்து அறிந்து சேர்ப்பது நல்லது.

பள்ளி நிர்வாகமே, அட்மிஷன் என்ற பெயரில் பணம் வசூலித்தாலும் மாணவச் செல்வங்களுக்கு தரமுள்ள கல்வி மட்டுமல்ல, தரமுள்ள சூழ்நிலைகளையும் உண்டாக்கித் தருவது உங்களின் கடமை.

ஆசிரியப் பெருமக்களே, நீங்கள் பல படிகளை கடந்து வந்தாலும், உங்களை நம்பி வருகின்ற படிகளை மெருகேற்றி கடக்க வைப்பது உங்கள் கடமை.

மாணவச் செல்வங்களே !

பார்த்தீர்களா...
நீங்கள் நல்லா வரணும் என்பதற்காக அத்தனை பேர்களும் எவ்வளவு முயற்ச்சிகளை சிரமம் பாராமல் எடுக்கின்றார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு நீங்கள் என்ன கூலி கொடுக்க போகின்றீர்கள் ? உங்களிடம் அவர்கள் எதிர்ப்பார்ப்பது நன்னடத்தை மட்டுமே. நன்னடத்தை வந்து விட்டால் பின்னே என்ன ? எல்லாமே நீங்கதான்.

பெற்றோர்களே !
உங்கள் குழந்தைகள் குறித்த கனவுகள் இறைவன் அருளால் நிச்சயமாக நிறைவேறும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

24 comments:

  1. ஜமால் காக்கா அவர்கள் தளத்தில் பதியும் 25 வது ஆக்கம்.

    25 என்ன 250 ஆக்கங்கள் பதிந்து சமூக விழிப்புணர்வை மக்களிடயே தூண்ட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தொடர வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  2. பல முகபாவனைகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களும் ஒவ்வொரு வாரதிர்க்கான விளக்கங்களும் அருமை !

    கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்வது அவசியம் !

    நல்லதொரு விழிப்புணர்வு !

    தொகுத விதம் அருமை. தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி.

      அடுத்து ஒரு பதிவு அதில் ஆசிரியர்களின் முக பாவனைகள் இருக்கும்.

      Delete
    2. // அடுத்து ஒரு பதிவு அதில் ஆசிரியர்களின் முக பாவனைகள் இருக்கும்.//

      ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு கூடுது

      Delete
    3. முகங்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன். விரைவில் வெளி வரும்.

      Delete
  3. சரியான நேரத்தில் சிந்திக்க வேண்டிய பதிவை கொடுத்துள்ளீர்கள்.மனித உரிமை ஆர்வலரே.! வாழ்த்துக்கள்.

    நமது குழந்தைப்பருவத்தில் ஐந்து வயதைக்கடந்த பிறகு தான் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். முதல் வகுப்பிலிருந்து தான் பாடத்தை துவக்குவோம்.அன்று அரசுப்பள்ளியே பிரதானமாய் இருக்கும்.தனியார் பள்ளி என்பது அரிதிலும் அரிதாக காணப்படும்.அதிலும் நர்சரிப்பள்ளி என்று ஒன்று இருந்ததாகத்தெரியவில்லை.

    ஆனால் இன்றோ காலப்போக்கில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து தொட்டில் குழந்தைகளுக்கும் கல்வி என்ற பெயரில் தோள் வலிக்க புத்தக மூட்டைகளை பொதி மூட்டைகளாய்ச்சுமந்து செல்வதைக்காணும் போது ஒருபக்கம் வேதனையாகத்தான் உள்ளது. கல்வி காசுக்கு விலை போய் வணிகமயமாகி விட்டதை நினைக்கும் போது அதைவிட வேதனையாக உள்ளது.

    என்ன செய்வது இன்றைய சூழ்நிலையில் கல்வியென்பது மிக மிக அவசியமாகி விட்டது. ஆகவே பிள்ளைகள் கண்ணும் கருத்துமாய் கல்வி கற்க பெற்றோர்களும்,ஆசிரியர்களும் ஒத்துழைத்து கல்வியை போதிப்பது தலையாய கடமை அதுவே வீடும் நாடும் முன்னேற வழி வகுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி.

      அன்று ஒன்னாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு வெளியில் வந்து பொறிஉருண்டை வாங்கி சாப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?

      Delete
  4. தக்க நேரத்தில் தக்க பதிவு. பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி. ஐயா.

      பெற்றோர்கள் கவனமாக இருக்கின்றார்களா?

      Delete
  5. தக்க நேரத்தில் தக்க பதிவு. பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி ஐயா.

      பெற்றோர்கள் கவனமாக இருந்தாலும் சுற்றுச் சூழல் விடுவதில்லை.

      Delete
  6. நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்

    இருபத்தி ஐந்தாவது படைப்பையும் ஒன்று சேர்ந்து ஒரு புத்தகமாக

    தொகுப்பாக வெளியிடலாமே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி.

      இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிப்போம்.

      Delete
  7. ஜமால் காக்கா அதற்குள் 25 பதிப்புகள் வந்துவிட்டவதா நண்பர் சித்திக் சொல்வது போல் தங்களது பதிப்புகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம் அது ஒரு பொகிசமாக இருக்கும் மாசாஅல்லாஹ் வாழ்த்துக்கள் தங்கள் எழுத்துப்பணி தொடர துவா செய்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உங்கள் உண்மையான வார்த்தைக்கும் நன்றி.

      Delete
  8. நண்பர் சித்திக் சொல்வது போல் தங்களது பதிப்புகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம் அது ஒரு பொகிசமாக இருக்கும் மாசாஅல்லாஹ் வாழ்த்துக்கள் தங்கள் எழுத்துப்பணி தொடர துவா செய்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்கள் பொய் சொன்னாலும் அது உண்மையாக மாறிவிடும்.

      Delete
  9. மூண்று நாட்கள் வெளிப்பயணம் மேற்க்கொண்டதால் சகோ.அ.மெய்சா அவர்கள்,இ.அன்சாரி காக்கா அவர்களின் ஆக்கங்களுக்கு கருத்திட முடியவில்லை க.மு.அ.ஜமால் காக்காவின் பள்ளிக்கூட அனுபவக்கட்டுரை அருமையிலும் அருமை!. நம் அனுபவங்களை பகிரவேனும் என்றால் நாம் தனியாக ஓர் கட்டுரையே எழுதலாம்!
    என் மகளை பள்ளியில் சேர்க்கும் சமயம அவள் அழுத அழுகை என்னை கெஞ்சிய கெஞ்சல் கண்கள் கலங்கி விட்டது அன்று எனது அளுவலுக்கும் விடுப்பு விட்டு 1/2 மணிக்கு ஒரு முறை பள்ளி சென்று வந்தேன் அங்குள்ல ஆசிரியர் என்னிடம் இப்படியெல்லாம் வரக்கூடாது என்று கடிந்து கொண்டார் அன்றைய பொழுது எனக்கும் என்மகளுக்கும் சிறமமாகத்தான் சென்றது! இப்பொழுது நினைப்பு வந்தாலும் என் மகளிடம் சொல்லி சிரிப்பேன் நீங்களும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்
    அடுத்த வார கட்டுரையை ஆவளுடன் எதிர் நோக்கும் சக எழுத்தாளன்,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மிகுந்த களைப்போடு வந்து எனக்கு முன் வந்து போன சகோதரர்களுக்கு காரணத்தை சொன்னவிதமும், தங்களின் அன்பு மகளின் ஆரம்ப பள்ளி நுழைவு வரலாறும் மிகவும் அருமை.

      நாமும் அந்த ஆரம்ப நாட்களில் எவ்வளவு அழுது இருப்போம்?

      Delete
    2. உண்மையிலேயே நான் ..

      பள்ளிகூடத்தில் சேர்த்து விட சொல்லி அழுதேன் ...

      Delete
  10. மிக அவசியமான பதிவு அதற்கேட்பே அந்த அந்த குறும் குழந்தைகள் படம் அருமை.இன்னும் பள்ளிகள் திறக்க நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      குழந்தைகள் மட்டுமல்ல, சில சமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முகம் சுழிப்பதும் உண்டு.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers