.

Pages

Sunday, September 15, 2013

ஏனிந்த மவுனம் !?

உலகில் பிறக்கும் மனிதர்களில் சிலர் சிறுவயதிலிருந்தே சுயமாக நல்லோழுக்கமுடன்; புத்தி கூர்மையுடனும், சிலர் வளர்ப்பில் நல்லோழுக்கமுடன்; வழிகாட்டுதலில் நல்ல புத்தியுடனும், சிலர் தங்களுக்கு அத்தகைய நிலைகள் இல்லாமல் அடுத்த நல்லுழுக்க முடையவர்களைப் பார்த்து தன்னை அவ்வாறு நேர்படித்திக் கொண்டு நல்லுழுக்க முடையவர்களாகவும் புத்தியுள்ளவர்களாகவும், சிலர் மனம் போனப்போக்கில் வளர்ந்து, வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து, புத்தி படித்து, பின் சரியான நல வாழ்வை அமைத்துக்கொள்பவர்களும் உண்டு. மற்றவர்களும் உண்டு.

சிலர் உலக வாழ்க்கையில் பொருளாதாரமே மிக முக்கியம் என்றதனை மையமாகக் கொண்டு, தான் பெற்ற நல் பழக்கங்கள்; நல் உபதேசங்கள் அவைகளை பணம் ஈட்டும் வழிகளில் முன்னோக்குவார்கள். சிலர் அவ்வப்பொழுது ஏற்படும் தன் தேவைகள் நிறைவேறும் வண்ணம், பொருளியல்கள் சீராக கிடைக்கும் வகையில் தன் நிம்மதி சிதறாத வண்ணம், வாழும் வாழ்க்கை அமைத்துக்கொள்கின்றனர். சிலர் தாமரை இல்லை தண்ணீர்போல் பற்றற்ற பற்றும் வாழ்வை அமைத்துக்கொண்டும் வாழ்கின்றனர்.

ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்த அறிவுகள், அதனில் சமைந்து அவ்வறிவின்படி நடப்பார்கள். வழிகாட்டப்படும் வழியில் ஒருவர் வாழ்வது அவரைப் பொருத்தமட்டிலும் சரியே. ஒருவர், அவரின் வழிகாட்டுதல், அதில் தவறு இருந்து அதனை எடுத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். தான் தன் சிறுவயதிலிருந்து பழக்கப்பட்ட வழி சரியானது என்ற கோணத்தில்தான் என்றுமே சிந்திப்பார்; வாதிடுவார். இவ்வாறுதான் உலகில் பல வழிகள் உண்டாகிவிட்டது. எனவே எனது வழியே நல்வழி என்று அவர்கள் நிலையில் ஒவ்வொருவரும் சொல்வதில் தவறில்லை.

ஒருவர், அவர் பெற்ற அறிவு, அதனை ஏற்று, அதன்படி வாழ்ந்து வருவார். அதில் அவரால் தவறுகள் காண இயலாது. அவர்தன்வழி தவறானது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனாலும் சொல்பவர் அவரில் உண்மை இருந்து, கேட்பவர் நிலையறிந்து, சொல்லும் விதமறிந்து, விளக்கினால் புரிதுகொள்லாமலும் போகமாட்டார்.

சில உண்மைகள் உடன் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்காது. காலப்போக்கில் அதன் அனுஷ்ட்டானங்க்களை செய்து வரும்பொழுது, புரிந்துகொள்ளும் பக்குவம் உண்டாகும் பொழுது புரியலாம். அதுவரை அந்த உண்மையை நம்பிக்கை என்ற முடிச்சில் புதைத்துவிடுவார்கள், சில
அனுஷ்ட்டானக்களையும் தந்துவிடுவார்கள்.

நல்லொழுக்கமுடையவர் அனுஷ்ட்டானங்களை முறையாக செய்து, அதில் அறிவை விளங்க தெரிந்த தேர்ந்தவர், அல்லது உண்மைகளை நன்கு அறிந்தவர் அவர் காட்டும் பாதையில் சென்று, அவ்வனுஷ்ட்டான்களில் இவர் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்வார். காரணம் எல்லா வயதிலும், எல்லா அறிவு படித்தரத்திலும் சில உண்மைகள் தெளிவாக புரியாது. அப்படி
புரிய முயன்றாலும் சிலர் தவறிவிடுவார்கள்.

ஒருவழி நல்வழி என்று எவ்வாறுதான் புரிந்துகொள்வது. ?
இது மிகவும் கடினமான கேள்விதான். ஆனாலும் பதிலில்லாமல் இருக்காது. ஒரு வழி அல்லது வாழும் முறை அதில் தான் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை மட்டும் கொண்டால் எல்லா வழி/வாழ்வு முறைகளும் சரியாகத்தான் படும். நல்ல வழியாகத்தான் தெரியும்.

தன்னைப்போல் பிறரையும் பாவித்து, அவரும் நிம்மதியுடன் வாழ்ந்தால், அது அந்தவழியைவிட வேறுபட்டு இந்த வழி சிறப்பானதாகத் தெரியும். தான், தன் சக பிறர், அதோடு மற்ற அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழும் வாழ்வுமுறை அதைவிட  இன்னும் சிறப்பாகத்தான் தெரியும்.  இதன்படி தாவரங்களை, மற்றவைகளை தன் தேவைக்கு உண்ணுதல், வேறு தேவைகளுக்கு பயன்படுத்துதல் இவைகள் அக்கோட்பாடு பிரகாரம் தவறாகவும் தெரியும். அதாவது மற்ற உயிரினக்களை வதைப்பதாகவோ அல்லது அழிப்பதாக்வோ தோன்றும். அவ்வாறானால் வாழ்வுகள் முடக்கப்படும். எனவே இதிலும் தெளிவான, சிறப்பான வாழ்வு முறை
இருப்பதாகத் தெரியவில்லை; இல்லைதான்.

பூமியில் உண்டான உயிர்கள் பலவாறு அறிவுகளின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகிறது. ஓர் அறிவு, ஈர் அறிவு, இவ்வாறு மூன்று; நான்கு; ஐந்து; ஆறு அறிவு உயிர்கள் எனவும் பிரிக்கப்படுகிறது. இவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும் மற்றவைகளில் சிலதை உண்டும்தான் வாழம்படி உயிரினங்கள் இயற்கையாக அமையப்பட்டுள்ளது.

தேங்காய் அது முளைத்து வளர்ந்து மரமானால், பல தேங்காய்கள் அதிலிருந்து கிடைக்கும். அதிலிருந்து பல தென்னைமரங்கள் உண்டாகும்; பல்கிப்பெருகும். ஆதலால் தேங்காய் ஓர் உயிரினம், அதனை உண்ணக்கூடாது என்றும் அதனை உணவாக உண்டு அழித்து விடுதல் பாவமானது என்றும் கருதுவதும், அதுபோல் பல மற்ற உணவாக இருக்கும் தாவர மற்ற இனங்களும் உயிரினம்தான், அதனால்  மனிதன் மற்ற உயிரினம் தன் உணவாக மற்றவைகளை உண்ணக்கூடாது என்றும் இருக்குமானால், உலகில் உயிரினங்களே வாழமுடியாது; தோன்றிருக்காது. அதலால் ஒன்றை ஒன்று
உணவாக உண்ணாவிட்டால் உலகில் உயிரினம் இல்லை.

பூமியில் வாழும் அனைத்து உயிரினமும் தான் தன்தேவைகளைப்பெற்று, மற்றவைகளை உணவாக உண்டு, வாழவேண்டும் என்றுதான் விரும்பும். அது அதனைப் பொறுத்து ஞாயமும்; உரிமையும் ஆகும். இவைகளில் ஆறறிவு உள்ள மனிதன் இப்பூமியில் மிக உயர்ந்தவன். காரணம் இவன் அனைத்தையும் பாதுகாக்கும் பண்பையும் உடையவன்.

மனிதன்  அனைத்தையும் உற்பத்தி செய்பவனும்; வளர்ப்பவனும்தான். மாற்றவைகளிடம் இந்த குணம் இல்லை. மனித இனத்தை மையமாக வைத்து மற்றவைகளின் வாழ்வுகள் இயற்கையாகவும் அமைந்துள்ளது. எனவே இவன் இன வாழ்வு இப்பூமியில் இருக்கவேண்டும். மனிதன் வாழ்ந்தால் அனைத்து இனமும் வாழும். மற்றவைகளுக்கு அவ்வாறு சிந்திக்க தெரியாது. அவைகள் அடுத்தவைகளை உண்ணவே பார்க்கும். எனவே இவனே பூமியில் பூமியின் சிறந்த உயர்ந்த உயிர் தோற்றம். இவன் தனது புலன்களால் தனக்கும் பிற/பிறவைக்கும் அதன் நிம்மதி குழையாமலும்; அவ்வினம் அழியாமலும் வாழமுடிந்தவன்; வாழத்தெரிந்தவன். இத்தகைய அறிவுகள் முழுமையாக தெளிவாக எந்த வழியில் உள்ளதோ அதுவே சரியான நல் வழி என்றால் ஏற்காதோர் இல்லையென்பதுமில்லைதானே ? சரியான விளக்கங்கள் தான் மனிதனுக்கு வேண்டும்.

எவைகள் எவையவைகளுக்கு உணவாக உண்ணலாம் என்பதும் ஒரு சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றது. எல்லாம் எல்லாவற்றையும் உண்ணுவதில்லை. சிலவைகளை உண்ணலாம் என்றாலும் உண்ணமுடியாது; உண்ணக்கூடாததும் உண்டு. இதனை இங்கு விவரிக்கவேண்டியதில்லை.

சுருக்கமாக சொல்வதென்றால் தன்உயிருக்கு; தன் நல்குணத்திற்கு அழிவு; இழிவு ஏற்ப்படாமல் நன்மை தருமோ அதனை உண்பது தவறாகாது. நல்குணத்திற்கு என்று எழுதப்பட்டதன் காரணம் என்னவென்றால், சில உணவுகள் உட்கொண்டதனில் அவ்வுணவின் குணம் வெளிப்படும்.
இவைகள் இங்கு எழுதப்பட்டக் காரணம், அறிந்தவைகள் எவ்வாறு சரிகாணப்படவேண்டும் என்பதோடு சில உண்மைகளையும் எழுதி அதனோடு அனைவரையும் சிந்திக்க தூண்டுவதற்காகத்தான்.

ஒருவர் ஒரு கருத்தை சொல்கிறார். அது சரியானது என்று அவர் வாதிடுகிறார். அவருக்கு அக்கருத்து சரியான கருத்து என்பதற்கு அவருக்கு கிடைத்த, சேகரித்த அறிவுகளின்படி அவர் அக்கருத்து சரியே என வாதிடல் அவர் பொருத்தமட்டிலும் சரியே. அடுத்தவருக்கு அக்கருத்து தவரானது என்று அறிவுகள் கிடைத்திருந்தால் இவரைப் பொறுத்தமட்டிலும் இதுவும் சரியே.
இப்பொழுது சரியான கருத்தை இவர்கள் ஏற்க்கவேண்டும் என்றால் தவற்றைச் சுட்டிக்காட்டி எது தவறானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

சிலநேரங்களில் நிரூபிக்கத் தெரியாவிட்டால் அவரில் ஒருவர் ஏற்கமாட்டார். தன் நிலைதான் சரியென ஒருவர் தான் அறிந்ததை முழுமையாக நம்பி  அழுத்தி வாதிடவும் வந்தால், அவரை  புரிய வைக்க; தெளிவைத்தர தெளிவான உண்மையை புரிந்தவர் தெரிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரை புறக்கணித்தால் அந்த தவறான கருத்து அழியாமல் மேலும் பல மடங்காக வளரத்தான் செய்யும். சில சமயம் அவர் தோல்வி காண்பதை ஏற்காமல் தன் கருத்திலே நின்றால், அவரைத்தவிர்த்து மற்றவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு மற்றவர்கள் தவறிப்போகும் வழியில்லாமல் போகும். மேலும் இவரும் பின்னாட்களில் திருந்திவிடும் வாய்புகளும் உண்டு. காரணம் அனைவரும் இயற்கையிலே உண்மையைத்தான் விரும்புவார்கள்.

தொடரும்...
நபிதாஸ்

16 comments:

  1. // ஒருவர் ஒரு கருத்தை சொல்கிறார். அது சரியானது என்று அவர் வாதிடுகிறார். அவருக்கு அக்கருத்து சரியான கருத்து என்பதற்கு அவருக்கு கிடைத்த, சேகரித்த அறிவுகளின்படி அவர் அக்கருத்து சரியே என வாதிடல் அவர் பொருத்தமட்டிலும் சரியே. அடுத்தவருக்கு அக்கருத்து தவரானது என்று அறிவுகள் கிடைத்திருந்தால் இவரைப் பொறுத்தமட்டிலும் இதுவும் சரியே.
    இப்பொழுது சரியான கருத்தை இவர்கள் ஏற்க்கவேண்டும் என்றால் தவற்றைச் சுட்டிக்காட்டி எது தவறானது என்பதை நிரூபிக்கவேண்டும்.//

    திரும்ப திரும்ப வாசித்து பார்க்கிறேன்... கட்டுரையின் பொருள் இதில் அடங்கி உள்ளனவா என்று !?

    ReplyDelete
    Replies
    1. மனித உள்ளம் பரிபூரண தெளிவிலிருந்து வந்தது. அது தெளிவைத்தான் விரும்பும். அதனால் எதில் உண்மை மறு கேள்வியின்றி தெளிவாக உள்ளதோ அதை நிச்சயம் விரும்பும். சில சமயம் பிடிவாத குணம் இருக்கத்தான் செய்யும். பின் காலப்போக்கில் வெளியில் சொல்லாவிட்டாலும் தெளிவை ஏற்றுக் கொண்டே தீரும், பிடிவாதமும் தளரும்.

      உங்கள் கேள்விக்கு வருகிறேன். //திரும்ப திரும்ப வாசித்து பார்க்கிறேன்... கட்டுரையின் பொருள் இதில் அடங்கி உள்ளனவா என்று !?//

      கட்டுரையின் பொருள் அதில் புதைந்தே உள்ளது. தோண்ட முயன்றவர்களில் உள்ள தாங்களும் தோண்டுங்கள் அடுத்த தொடர் வரும் வரைக்கும். இது முடிந்ததும் குறுந்தொடர் தொடரும்.

      நன்றி !

      அதிரையில் எங்களுக்கு கிடைத்த இருப்பத்தி நான்கு மணி நேரம் சுழலும் சேக்கனா M. நிஜாம் அவர்களே !

      Delete
  2. // சிலநேரங்களில் நிரூபிக்கத் தெரியாவிட்டால் அவரில் ஒருவர் ஏற்கமாட்டார். தன் நிலைதான் சரியென ஒருவர் தான் அறிந்ததை முழுமையாக நம்பி அழுத்தி வாதிடவும் வந்தால், அவரை புரிய வைக்க; தெளிவைத்தர தெளிவான உண்மையை புரிந்தவர் தெரிந்திருக்க வேண்டும். //

    சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் !
      தெளிவைத்தர தெளிவான உண்மையை புரிந்தவர் தெரிந்திருக்க வேண்டும்.
      தெரிந்து இருந்து தெளிவைத் தந்துவிட்டால் எதிர் கருத்தாளி மிகவும் தங்களிடம் நெருங்கிவிடுவார். உங்கள் சொல்லை எதிர்மறை சிந்தனையில் காணமாட்டார்.

      அங்கு நிம்மதியும், சந்தோசமும் சூழ்ந்திருக்கும். உள்ளம் இனிக்கும்.

      நன்றி !

      சேக்கனா M. நிஜாம் அறிஞரே !

      Delete
  3. வேண்டா தவொரு விவாதம் கிளப்புவதை
    மீண்டும் அனுமதியோம் வித்தகர்காள்- தூண்டும்
    விளக்கின் ஒளியாய் விளங்குகின்ற ஆசான்
    விளக்கம் அறியாமை வீண்.

    உட்பொருள் தேறும் உணர்வுகளும் நல்லறிவுப்
    பெட்பும் உடைய பெரியோர்கள்- இப்புறத்தே
    உள்ளார்கள் உண்மை உணர்வார்கள் என்பதனால்
    கொள்ளார்கள் இந்தக் குணம்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    ஏனிந்த மவுனம்!?

    இந்த தலைப்பில் ஒரு நல்ல ஆக்கத்தை கொடுத்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    நீங்கள் மவுனம் சாதிக்காமல் இன்னும் நிறைய ஆக்கங்களை தருமாறு வாழ்த்துக்கின்றேன், நானும் மவுனமாக இருக்காமல் இனிமேல் கருத்துக்களை தருவேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. விவாதம் தன்னுள் வாதங்கள் மிகைத்தே
    தகாத குழப்பம் தந்ததேதான் மிச்சம்-இங்கு
    கூறுமது விளக்கம் கூர்மதியோர் கண்டால்
    தீருமாம் தீமையின் இருள்.

    மெய்பொருள் நெருங்கும் மேன்மக்கள் தம்மிடம்
    உய்குனம் நிறைந்தே நிர்பார்கள்- மேலோன்
    வேண்டும் வகையில் உள்ளமதில் வெண்மை
    நின்றோர் இடத்தில் அவன்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த தலைப்பில் ஒரு நல்ல ஆக்கத்தை கொடுத்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//

      விழிப்புணர்வு பக்கமதில் சிந்தனையை தூண்டும் விழிப்பு உணர்வை தருவது தாங்கள் போன்றோர் ஆக்கம் எழுதுவோர் பொறுப்பும், கடமையும் தானே.

      // நானும் மவுனமாக இருக்காமல் இனிமேல் கருத்துக்களை தருவேன்.//

      மவ்னம் கலைகிறது. இனி விழிப்புணர்வு கசக்கும் மருந்துகளை கண்டாலும் இனிக்கும். அதை சுவைக்க ஆனந்தத்துடன் நாங்கள்.

      நன்றி !

      மனித உரிமை காவலர், அறிஞர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களே !

      Delete
  6. ஏனிந்த மௌனம் ! மௌனத்தை கலைத்து ஆராய்ந்து பல விஷயத்தை வெளிக்கொண்டு வந்துறிக்கிறீர்கள் சிறப்பு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கல நிர்பந்தம். சிந்தனைகளை தூண்டி, சில உண்மைகளை வெளிக்கொணர, சில உண்மைகள் மலர்ந்தன.

      நன்றி !

      அதிரை.மெய்சா அவர்களே !

      Delete
    2. கால நிர்பந்தம்- என்று வாசிக்கவும். தட்டச்சு திறமை குறைவு. திருத்திக்கொள்கிறேன்.

      நன்றி !

      Delete
  7. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நபிதாஸ்

    ReplyDelete
  8. தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !

    அதிரை தென்றல் (Irfan Cmp)அறிஞர், அவர்களே !

    ReplyDelete
  9. இளைஞர்கள் படித்து பலன் பெற வேண்டிய ஆக்கம் ...

    மூன்று வகையான மனிதர்களை முன் வைத்து எடுத்து வைத்த

    அறிவுரை மிக அருமை ..நபி தாஸ்

    ReplyDelete
  10. மனித இளமை எதயையும் சாதிக்க துடிக்கும், பல புதுமைகள் வெளிக்கொணர கடுமையாக செயல்படும். நன்மை என்றே அனைத்தையும் செயல்படுத்தும். மனித முதுமை அனுபவ பாடங்களில் மூழ்கி முத்துக்கள் எடுத்து தரும். இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது விளைவுகள் சிறப்பானதாக அமையும். அதனாலும் //இளைஞர்கள் படித்து பலன் பெற வேண்டிய ஆக்கம் ...
    //என மறுமொழி, பத்திரிகைத்துறை அறிஞர் அதிரை சித்திக் அவர்கள் எழுதியமைக்கு நன்றி !

    ReplyDelete
  11. ஏனிந்த மௌனம்... மௌனத்தை கலைத்துப்போட்டு கடகடவென பலவற்றை சிந்திக்க வைத்த பகிர்வு.. இது நாள் வரை பார்வையில் சிக்காமல் போனதே.
    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers