.

Pages

Thursday, December 12, 2013

[ 13 ] அறிவுத்தேன் [ உணர்வில் உருவங்கள் ]

ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங் களுண்டாம் !

உணர்வில் உருவங்கள் எங்கனம்  ?

மனிதனின் ஐம்புலன்களும் ஓய்வெடுக்கும் பொழுது (ஐவுணர்வுகளும் செயல்படாது) மனம் மட்டும் செயல்படும். அப்பொழுது மனம் அது தன் ஒர்மைச் சிந்தனை, கனவு போன்றச் செயல்களில் இருக்கும். .

மனமும் முழுமையாக ஓய்வெடுக்கும் பொழுது, மனதால் செயல்படும் புலன் உணர்வுச் செயல்களும், புலன் இல்லா உணர்வுச் செயல்களும் (கனவு) ஏற்படாது. அதை ஆழ் உறக்கம் என்கிறோம்.

ஆழ் உறக்கத்திலிருக்கும் பொழுது வேறுகள் என்ற எதுவும் இல்லை. மேலும் உறங்கும் மனிதனும், அவன் உணர்வில் உறங்குகிறோம் என்ற உணர்விலும்கூட அவன் இல்லை.

மனிதன் உணர்வோடு இருந்தால்தான், புலன்கள் இவன் மனதின் என்னத்திற்கு ஏற்ப இயங்கும். பார்க்கும் புலன் பார்க்கும், கேட்க்கும் புலன் கேட்க்கும், அதுபோல் மற்றப் புலன்களும் இயங்கும்.

மனிதன் உணர்வோடு இருந்தும் புலன்கள் இயங்கவில்லை என்றால், எந்த புலன்கள் மூலமும் எதுவும் உணரப்படுவது இயலாது. கண் இருந்தும் குருடரால் காண முடியவில்லை. செவி இருந்தும் செவிடரால் கேட்க முடியவில்லை. வாய் இருந்தும் ஊமையாரால் பேச முடியவில்லை. உடல் இருந்தும் கோமா நிலையில் உள்ளவரல் உணரமுடியவில்லை.

மனிதனின் உணர்வு (புலன் உணர்வு, புலன் இல்லா உணர்வு) இயங்கவில்லை என்றால் வேறு எதுவும் இருக்கின்றது அல்லது தான் இருக்கிறோம் என்பதே உணர இயலாது. இவன் மனம் ஆன்மாவில் (ஆத்மாவில்) ஒடுங்கிவிடும்.

ஆன்மாவில் ஒடுங்குதல் என்றால் அந்நிலையில் தனித்த இவன் இல்லை ஆன்மா இருக்கிறது என்பதாகும். ஆன்மா எப்பொழுதும் இயங்கிக்கொண்டும் இருக்கும். ஆன்மாவினால்தான் மனிதனின் உயிர்வாழ்கிறான். அவனது உயிர்வாழ் இயக்க உறுப்புகள் ஆன்மாவைக் கொண்டு இயங்குகிறது. மனிதனின் உயிர்வாழ் இயக்க உறுப்புகள் அழிந்தாலும் ஆன்மாவுக்கு எந்தவிதக் கூடுதலோ அல்லது குறைதலோ இல்லை.

ஆன்மா அதன் ஆற்றலை முழுமையாக அறிந்துக் கொள்ளமுடியாது. ஆன்மா அதனைப் பற்றி மனிதர்கள் அறியாது ஆன்மாவின் மன இயக்கத்தில் வாழ்பவர்கள் சாதாரன மனிதர்கள்.

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான் என்ற உலக மாகப் புனிதரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, ஆன்மா இயக்கம், ஆன்மாவின் மன இயக்கம் இவைகளை அறிந்து, அறிந்த அவ்வறிவின் தெளிவிர்கேர்ப்ப தெளிவுப் பெற்று வாழ்பவர்கள் அவர்கள் சாதாரன மனிதர்கள் அல்ல. அவர்களே மகான்கள் என்றோ, புனிதர்கள் என்றோ அழைக்கப்படுகின்றனர். அவர்களின் நேசம் ஆன்ம நேயம் எனப்படும்.

மனித ஆன்ம நேயத்தில்தான் உலகம் அமைதியுடன், ஒற்றுமையுடன் இருக்கும்.

ஆன்மாவிலிருந்து மனம், மனதிலிருந்து புலன்கள், புலன்களிருந்து மனதின் புரிதலுக்கேற்ப வேற்றுமைகள் என்ற உருவங்கள் தெரியும். அவ்வாறான வேற்றுமை என்ற புரிதல் இல்லையாகின் மனதின் குணம் இன்றி ( ஆன்மாவின் ) செயல் இருக்கும் ( பிறந்தவுடன் உள்ளக் குழந்தையின் செயல்கள் ).

பிறந்த குழந்தை தன்னையும் பிறர், பிறவற்றையும் பார்வையில் பார்க்கும். வேற்றுமைகள் என்பதும் அல்லாததும் அங்கிருக்காது. குழந்தையைப் பொறுத்த வரையில், வேறு அல்லது அல்லாதது என்றில்லாத பலவகை உருவங்கள் என்றில்லாது இருக்கும்.

உடல் இறந்தவன் அவன் முன் உள்ள யாவும் என்றும்போல் அவைகளின் பிம்பம் கண்ணாடியில் தெரிவதைப்போல் அவன் கண்களில் நிழலிடும். உடம்போடு மனம் இல்லாததால் அங்கு பார்வையில்லை. மனம் சேர்ந்தால்தான் பார்வை. அதனால் அக்காட்சியினால் அவ்வுடம்பில் குணம் இல்லை.

கிட்டத்தட்ட புலன்கள் இறந்த (கோமா) நிலை அல்லது மனம் அவ்வுடம்பைவிட்டு அகன்ற நிலை, அல்லது அங்கு உணர்ச்சிகள் அழிந்த கோமா நிலை. அந்நிலைப் (கோமாப்) பார்வையில் அனைத்தும் தெரியும் ஆனால் அங்கும் குணம் இல்லை. உடல் இயக்கத்திற்கு உணவு தரப்படும் உடம்பு வாங்கிக்கொள்ளும். அவ்வாறே கழிவுகளும் உடல் இயக்கத்தினால் வெளிவரும். பிறர்தான் அதனைச் சுத்தம் செய்ய வேண்டும். அம்மனித நிலையிலும் அவன் இருந்தும் அவன் இல்லை அனைத்தும் இருந்தும் அவனைப் பொறுத்த வரையில் அனைத்தும் இல்லை.

உடல் இறந்தவன் மனம் அதாவது அவ்வுடம்பில் குணம் பெற்று உண்டாகிய மனம் அவ்வுடலை விட்டு அகன்று இருக்கும். உடல் அழிந்துவிடும் அல்லது அழிக்கப்படும். மனம் குணத்திற்கேற்ப பலனில் இருக்கும். பின் எவ்வாறு வந்ததோ அவ்வாறேயாகிவிடும். அந்நிலையில் மணம் இல்லை. அதனால் உண்டு என்பதும் இல்லை, இல்லை என்பதும் இல்லை.

( தேவையைப்பொருத்து வலிமையான எண்ணம் கொண்ட உடலற்ற மனம், அழியும் முன் பிற மனவலிமைக் குன்றிய உடம்பில் குணம் செய்யும். அதனைப் பார்த்திருக்கலாம். பேயாடுதல் அல்லது சாடுதல் என்று கூறுவார்கள். கூடுவிட்டு கூடுபாயும் கலைக்கு இத்தத்துவம் பொருந்தலாம். )

கோமா நிலை, அந்நிலயில் மனிதனுக்கு அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லை. அதாவது உண்டு என்பதுவும் இல்லை, இல்லை என்பதுவும் இல்லை.

பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையிலும் உண்டு என்பதுவும் இல்லை, இல்லை என்பதுவும் இல்லை.

இல்லை என்றால் இல்லை என்பது இருக்கிறது. அதை ஒன்று என்றோ அல்லது இல்லை (பூஜ்யம்) என்ற ஒன்று என்றோ எனலாம்.

ஒன்று என்று இருக்கும் பொழுது உருவம்; உருவங்கள் இல்லை. அந்த ஒன்றில் ஒன்றதனின் உண்டாகிய உணர்வால், அவ்வுணர்வின் வேறு என்ற வேற்றுமையான அதனின் உணர்வால் உருவம்; உருவங்கள் உண்டு.

ஒன்றாய் உணர்ந்தால் உருவம் இல்லை ! பலதாய் உணர்ந்தால் உருவங்கள் உண்டாம் !

உணர்வில் உருவங்கள் அவ்வாறு தெரிகிறது.

வணங்க படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

விளக்கத்திற்காக ஏதாவது ஒரு மத;மார்க்கம்  அதனில் இருந்து ஒன்றை எடுத்து விளக்குவது நலம் என்பதால் முன்பே இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விளக்கம் எழுதப்பட்டது.

மதம்; மார்க்கம் அனைத்திலும் வணக்கம் இருக்கிறது. இறை வணக்கம் என்பது அவசியம். அதனால் அனைவரும் அவர்தம் அறிந்த வழியில் அல்லது வழிகாட்டப்பட்ட வழியில் இறைவனை வணங்குகின்றனர். மேலும் இஸ்லாமியத்தில் வணங்கவே மனிதனைப் படைத்தேன் என்று இறை வாக்கியம் உள்ளது.

வணக்கம் சம்பந்தமான விளக்கங்கள் மேற்கண்ட விளக் கருத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.

அது எவ்வாறு ? என்பதைக் காண்போம்.
(தொடரும்)
நபிதாஸ்

18 comments:

  1. நபிதாஸின் 25 வது படைப்பு !

    தொடர வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. 25 வது படைப்பு என்று ஞாபகம் செய்கிறீர்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி.

      தமிழ் உலகில் என் ஆக்கங்களை அறிமுகம் செய்த தங்களை வாழ்த்துகிறேன்.

      Delete
  2. பதிவுக்கு நன்றி.

    சகோதரர் நபி தாஸ் அவர்களின் இந்த அறிவுத்தேன் தொடர் படிக்க படிக்க சுவாரஷ்யமாக இருக்குது. வாரம் ஒரு தேன் தந்தாலும் அதை பருகுவதற்கு ஒரு பக்குவம் வேண்டும், இல்லையேல் பருக முடியாது.

    தலைப்பு அறிவுத்தேன் என்று இருப்பதாலும் அதன் முடிவில் தேன் என்று வருவதால் ஒரு சிலருக்கு பழைய ஞாபகம் அப்படியே மூளையின் ஒரு மூலையில் லேசாக தட்டும். அப்படி என் மூளையில் தட்டின வகையில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை இதில் பகிர ஆசைப்படுகின்றேன்.

    1965ல் வெளிவந்த வீர அபிமன்யு என்ற தமிழ் திரைப்படத்தில்,
    ஜெமினி கணேசன் காஞ்சனா ஜோடியாக இணைந்து நடிக்க,
    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய-

    “பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்”

    என்று தொடங்கும் இந்தப் பாடலை,
    P.B.ஸ்ரீநிவாஸ் P.சுசிலா இணைந்து பாட,
    திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் இசை அமைக்க.

    எனக்காக பிரத்தியோகமாக அன்று (1970களில்)இலங்கை வானொலி ஆசிய சேவையில், இலங்கை இந்திய நேரம் மாலை 4.30மணிமுதல் 7.00மணிவரை ரேடியோ அலைகள் சிற்றலை(SW-Short Wave) 41மீட்டர் 7190கிலோஹெட்ஸ்/ 25மீட்டர் 11800கிலோஹெட்ஸ் இந்த அலைவரிசைகளில் ஒலிபரப்பியதை அதை செவிமடுத்த என்னால் மறக்கவே முடியாது.

    உங்களின் இந்தத் தேன் தொடர்ந்து சொட்டு சொட்டாக வடிந்து பெருக என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. தேன் சொட்டுவதே பருகிடத்தான். தாங்கள் பருகி பலத் தேன்களை ஞாபகம் செய்ததை பார்த்தேன்.

      தாங்கள் போன்றோர் இதனை படிக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்வைத் தரும். அதில் நான் நனைந்தேன்.

      எழுதும் சில ஆக்கங்களுக்கு சில பின்னூட்டம் அதனைப்படிக்கும் போது உள்ளுக்குள் சிரித்தேன்.

      பலர் ஆக்கங்களை கவனமாக படிக்கிறார்கள் என்பதை அறியும் பொது தனக்குத்தானே மகிழ்ந்தேன்.

      உங்கள் ஆக்கங்கள் பலவற்றை உண்மையில் நான் மனதார உருசித்தேன்.

      Delete
    2. நான் தேனைக் கொண்டு உங்களை பாராட்டினாலும், நீங்கள் என்னை விடுவதாக இல்லை, பதிலுக்கு அதே தேனை திருப்பி தந்து விட்டீர்கள்.

      நன்றிகள் பல.

      Delete
    3. "தேனீ " அதனில் நாம் பெரும் பாடமும் அதுதானே ! என்று உணர்ந்தேன்.

      நன்றி !

      Delete
    4. உங்கள் வார்த்தையில் நான் உணர்தேன்.

      நன்றி.

      Delete
  3. Replies
    1. Thank you.

      Android does not have heart, I mean...it soul.

      Delete
  4. அறிவு சம்மந்தப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயப்பாடுகள் ஏதும் எனக்கு இதில் இல்லை நிறைய கற்றுக்கொள்கிறேன்
    அடுத்து ஜமால் காக்கா அவர்களின் நினைவாற்றலை கண்டு வியக்கிறேன் கிலோஹெட்ஸ் வரை நினைவில் வைத்துள்ளீர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் அடைகிறேன். இன்னும் அதிகம் எழுத ஆசைப்படுகிறேன்.

      Delete
  5. அறிவுத்தேன் ஒரு ஆன்மீகத்தேன். இத்தேனை வாராவாரம் மனத்தினில் ஊற்றி ஞானத் தேன் பருக வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! மிகுந்த சந்தோசம்.

      Delete
  6. பாலனுக் கானப் பசியாறப் பாலுடந் தேனைப் பிழிந்தாற்போல்
    சீலருக் கானப் படியேறச் சேதிகளைக் காணப் படைத்தாய்நீ
    கோலமதைத் தானப் பெரிதாய்நாம் குணமதைப் பேணத் தவறாகிக்
    காலமதுக் காணச் செலவாகிக் கையறுச் சேதத் திலானோமே!


    வண்ணப்பாடல்; வாய்பாடு: தானனத் தானத் .. தனதான
    யாப்பிலக்கணம்: (கூவிளம், தேமா, புளிமாங்காய்)
    (அரையடிக்கு என்னும் அமைப்பில், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மானிடர் மாண்பு மதிக்கூர்மை மாசறப் பெற்று நலம்மாக
    கோனின் கல்வி யாரும்பெற்றால் கூடியே வாழச் சுகமாம்மே
    ஞானிகள் சொல்லில் நெருங்கிப்பார் ஞானமும் நன்கே அருந்திப்பார்
    தானின் தன்னில் தவிப்போடு தாரக ஊற்றுப் பெறலாமே !

    ReplyDelete
    Replies
    1. தானிலே தன்னில் தவிப்போடு தாரக ஊற்றுப் பெறலாமே !

      என்று வாசிக்கவும்.

      Delete
  9. //நலம்மாக// நலமாக

    //யாரும்பெற்றால்// பெறுதற்குக்

    //சுகமாம்மே// சுகமாமே (நலமாமே; சுகம் என்பதை விட நலம் என்பதே தூய தமிழாம்

    முயற்சிக்கு வாழ்த்துகள், முன்னேற்றம் காண்கின்றேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers