ஒவ்வொரு படைப்பினங்களையும் ஏதாவது ஒரு பயனுக்காகத்தான்
இவ்வுலகில் இறைவன் படைத்திருக்கிறான். இது உலகறிந்த உண்மை.
அதன் அடிப்படையில் உன்னை இவ்வுலகில் படைக்கப்பட்டதும் அதன்
அடிப்படையில் தான்
நீ உனக்காகவும், உன் உறவிற்காகவும், அக்கம் பக்கத்திற்காகவும், , சமுதாயத்திற்காகவும் சேவை செய்யவே படைக்கபட்டிருக்கிறாய். எனவே சேவை செய்
இதைபற்றி இவ்வாரம்.... கேள் மகவே !
1. சுயதேவைக்கான சேவை
2. பெற்றோருக்கான சேவை
3. குருவிற்கு ( ஆசிரியற்கு ) செய்யும் சேவை
4. உற்றார் உறவிற்கான சேவை .
5. சமுதாய சேவை.
6. வியாபார நோக்கு சேவை .
இந்த ஆறு விதமான சேவைகள் உன் வாழ்வில் நடை முறை படுத்தினால்
நீ சரியான பாதையில் உன் வாழ்வை நடத்தி செல்லாம் எப்படி !?
சுய தேவை :
நீ அரும்பாய் வளர்ந்த போது உன் தாய்க்கு கரும்பாய் இனித்தாய். உனது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வரும் தாய் உனது தேவைகளை பூர்த்தி செய்து பூரித்து போவாள் ஐந்து வரை அது ஏழுவயதுவரை இயற்கையாய் நடந்தேறும். அதன் பின்னர் உனது உடைமைகள் .என்று உனக்காக ஒதுக்கப்படும் தருணம் வருமா வயதில் உனது படுக்கை, உனது உடை, உனது புத்தகம் என்று உனக்காக தரப்பட்ட பொருட்களை பாதுகாத்து அதனை நேர்த்தி செய்வதன் மூலம் நீ பொறுப்புள்ள பிள்ளையாய் காட்சி தருவாய் உறங்கி எழுந்த உடன் உனது படுக்கையை நேர்த்தியாய் மடித்து
வைப்பதன் மூலம் உனது நாட்களை பொறுப்புடன் துவங்குகிறாய் என்று பொருள்.
அம்மா ! எனது பேஸ்ட், பிரஸ் எங்கே ? காலையிலேயே பிறரை சேவை செய்ய எத்தனிக்காமல், உரிய இடத்தில் பொருளை வைத்து எடுக்க பழகி கொள்ள வேண்டும். அது வாழ்நாள் முழுவதும் பலன் தரும் செயலாய் அமையும்.
உணவு உண்ணும் போதும், உண்ட பின் பாத்திரங்களை தாமே சுத்தம்
செய்யும் பழக்கத்தால் எளிமை உன்னிடம் குடி கொள்ளும். சிறு வயதில் உன் உடைகளை துவைக்கும் தருணம் வராது துவைத்து, உலர்ந்த உடைகளை நேர்த்தியாய் மடித்து வைக்கும் பழக்கத்தை நடை முறை படுத்திக்கொள். இவைகளெல்லாம் உன் வாழ்வில் பல தருணங்களில் பல இடர் பாடுகளை களையும் செயலாய் அமையும்.
தன்னம்பிக்கை விருட்சமாய் வளர்ந்து உன் வாழ்வில் வளம் சேர்க்கும். புரிந்ததா என் இளவலே !?
இன்னும் சொல்வேன் கேள் மகவே...!
இவ்வுலகில் இறைவன் படைத்திருக்கிறான். இது உலகறிந்த உண்மை.
அதன் அடிப்படையில் உன்னை இவ்வுலகில் படைக்கப்பட்டதும் அதன்
அடிப்படையில் தான்
நீ உனக்காகவும், உன் உறவிற்காகவும், அக்கம் பக்கத்திற்காகவும், , சமுதாயத்திற்காகவும் சேவை செய்யவே படைக்கபட்டிருக்கிறாய். எனவே சேவை செய்
இதைபற்றி இவ்வாரம்.... கேள் மகவே !
1. சுயதேவைக்கான சேவை
2. பெற்றோருக்கான சேவை
3. குருவிற்கு ( ஆசிரியற்கு ) செய்யும் சேவை
4. உற்றார் உறவிற்கான சேவை .
5. சமுதாய சேவை.
6. வியாபார நோக்கு சேவை .
இந்த ஆறு விதமான சேவைகள் உன் வாழ்வில் நடை முறை படுத்தினால்
நீ சரியான பாதையில் உன் வாழ்வை நடத்தி செல்லாம் எப்படி !?
சுய தேவை :
நீ அரும்பாய் வளர்ந்த போது உன் தாய்க்கு கரும்பாய் இனித்தாய். உனது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வரும் தாய் உனது தேவைகளை பூர்த்தி செய்து பூரித்து போவாள் ஐந்து வரை அது ஏழுவயதுவரை இயற்கையாய் நடந்தேறும். அதன் பின்னர் உனது உடைமைகள் .என்று உனக்காக ஒதுக்கப்படும் தருணம் வருமா வயதில் உனது படுக்கை, உனது உடை, உனது புத்தகம் என்று உனக்காக தரப்பட்ட பொருட்களை பாதுகாத்து அதனை நேர்த்தி செய்வதன் மூலம் நீ பொறுப்புள்ள பிள்ளையாய் காட்சி தருவாய் உறங்கி எழுந்த உடன் உனது படுக்கையை நேர்த்தியாய் மடித்து
வைப்பதன் மூலம் உனது நாட்களை பொறுப்புடன் துவங்குகிறாய் என்று பொருள்.
அம்மா ! எனது பேஸ்ட், பிரஸ் எங்கே ? காலையிலேயே பிறரை சேவை செய்ய எத்தனிக்காமல், உரிய இடத்தில் பொருளை வைத்து எடுக்க பழகி கொள்ள வேண்டும். அது வாழ்நாள் முழுவதும் பலன் தரும் செயலாய் அமையும்.
உணவு உண்ணும் போதும், உண்ட பின் பாத்திரங்களை தாமே சுத்தம்
செய்யும் பழக்கத்தால் எளிமை உன்னிடம் குடி கொள்ளும். சிறு வயதில் உன் உடைகளை துவைக்கும் தருணம் வராது துவைத்து, உலர்ந்த உடைகளை நேர்த்தியாய் மடித்து வைக்கும் பழக்கத்தை நடை முறை படுத்திக்கொள். இவைகளெல்லாம் உன் வாழ்வில் பல தருணங்களில் பல இடர் பாடுகளை களையும் செயலாய் அமையும்.
தன்னம்பிக்கை விருட்சமாய் வளர்ந்து உன் வாழ்வில் வளம் சேர்க்கும். புரிந்ததா என் இளவலே !?
இன்னும் சொல்வேன் கேள் மகவே...!
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
யாரும் தொடாத சப்ஜெக்டை எடுத்துள்ளீர்கள்...
ReplyDeleteசுயதேவை குறித்த விளக்கம் அருமை !
அறிவுரை தொடர வாழ்த்துக்கள்...
நன்றி ...
Deleteஇந்த அறிவுரைகளை ..பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும் ..
கட்டுரையின் ஆரம்ப அறிவுரையே அசத்தலாக உள்ளது .நல்ல அறிவுரைகள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ...
Deleteஇந்த அறிவுரைகளை ..பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும் ..
சரியான சேவைகள்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் ...ஆதரவு .
Deleteதொடரின் வெற்றி ..நன்றி ...சகோ..,
//ஒவ்வொரு படைப்பினங்களையும் ஏதாவது ஒரு பயனுக்காகத்தான்
ReplyDeleteஇவ்வுலகில் இறைவன் படைத்திருக்கிறான். இது உலகறிந்த உண்மை.
அதன் அடிப்படையில் உன்னை இவ்வுலகில் படைக்கப்பட்டதும் அதன்
அடிப்படையில் தான்//
நல்ல தொடக்கம். ஒவ்வொரு மனிதனும் தன் படைப்பின் இரகசியத்தை அறிய வேண்டும். இதனைத்தான் படைத்தவன் விரும்புகின்றான்.
தான் சிசுவாக தாயின் வயிற்றில் உருவகுமுன் என்னவெல்லாமாக இருந்தோம். தாயின் கரு தந்தையின் விந்தணுவாக, அதற்குமுன் உணவாக, அதற்குமுன் நிலத்தின் தாவரமாக இப்படியே சிந்தித்துச் சென்றால், தன்னின் படைப்பின் இரகசியம் என்னவென்று அறிந்துக்கொள்ளும் இரகசியம் தெரிந்துக்கொள்ளமுடியும்.
அந்த இரகசியத்தை அறிந்தவர்
//நீ உனக்காகவும், உன் உறவிற்காகவும், அக்கம் பக்கத்திற்காகவும், , சமுதாயத்திற்காகவும் சேவை செய்யவே படைக்கபட்டிருக்கிறாய். எனவே சேவை செய்// என்ற தங்களது அறிவுரையை மிகத்திறம்படச் (சேவைச்) செய்பவராகிவிடுவார்.
தாவரங்கள் பிரதிபலன் பாராமல் சேவை செய்யவில்லையா ? அத்தகைய சேவைகள் என்று மனிதனில் உண்டாகின்றதோ அன்று அம்மனிதன் புனிதனாக இருப்பான். அந்த தூய நிலை அடைய மனிதன் தன்னின் பிறப்பின் இரகசியம் அறிந்தவனாக ஆகிவிடவேண்டும்.
நன்றி. அறிவுரைகள் பொழியப்போகும் அதிரை சித்திக் அவர்களே.
நபிதாஸ் அவர்களுக்கு என் கேள்வி[ஜாலிக்காத்தான்]
Delete////தாவரங்கள் பிரதிபலன் பாராமல் சேவை செய்யவில்லையா ? ////
நாம் தண்ணீர் ஊற்றி மண்ணை செப்பனிட்டால்தானே அந்த தாவரமும் நமக்கு பலனளிக்கிறது?
ஜாலியானக் கேள்வியும் விபரமானதே.
Deleteமனிதன் தோன்றும் முன்பே தாவரங்கள் வளர்ந்துதான் உள்ளது. அதிலிருந்துதான் மனிதன் தனக்குத்தேவையானத்தை தன் அருகில் வளர்த்துக்கொள்கிறான்.
உலகில் ஒன்றுக்கொன்று எந்தவித பிரதிபலன் பாராமல் உதவுபவையாகத்தான் இருக்கின்றது. ஆனால் மனிதன் தான் பிரதிபலன் பார்த்து பழகிப்போய்விட்டன். எல்லாம் தரவல்லது எதுவோ அதுவே அனைத்தையும் அவர் இவர் அது இது என்பன மூலம் தருகின்றது. நான் தந்தேன் என உரிமைக்கொள்வது எல்லாம் தரவல்லதுடன் போட்டியிடுதளுக்குச் சமம். என்றுமே ஒன்று என்பதில் பராக்காகாமல் இருப்பதே உயர்வு, நல்லது.
இதுபோன்ற கேள்விகள் கேட்பதும் அதற்கு பதில் எழுதுவதும் விருப்பமான ஒன்றாகக் கருதுகிறேன். பல கேள்விகள் என்றுமே கேட்கலாம். நன்றி மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே.
நன்றி ..!அறிஞர் நபிதாஸ் அவர்களே ...!
ReplyDeleteதங்களின் பின்னூட்டம் ..இத்தொடருக்கு
மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது .நன்றி
ஆசிரியரின் அறிவுரை இளவல்களுக்கு அல்ல இளவல்களை பெற்றேடுத்தவர்களுக்கு இந்த கட்டுரையை படித்து அவர்கள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு புத்தி புகட்டட்டும்
ReplyDeleteசரியாய் சொன்னீர் நண்பரே ..
Deleteமுதல் பத்து ..தாய் மூலமே பாடம் கற்க வேண்டும்
சரியாய் சொன்னீர் நண்பரே ..
Deleteமுதல் பத்து ..தாய் மூலமே பாடம் கற்க வேண்டும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
ஒரு முப்பது வருடங்களுக்குள் பிறந்த எல்லா மகவுகளும் நல்லபடியாக வளரக்கப்பட்டும், இடைப்பட்ட நட்பினால், கணவனின் சரியான வழிநடத்துதல் இல்லாமையால், டிவிகளில் வரும் நாடகங்களைப் பார்த்து, இப்படி பல சம்பவங்களினால் பெற்றோர்களையே வீசி எறிந்த மகவுகள் ஏராளம்.
Deleteஆகவே இப்படி தறிகெட்டுப் போன மகவுகளுக்கு பிறக்கின்ற மகவுகளாவது நீங்கள் சொன்னபடி நன்றாக வளர்ந்து நிற்கட்டும்.
நல்ல கருத்து ...
Deleteநல்ல படைப்புகள் மூலம் நல்ல சமுதாயம் காண்போம்
சில நேரங்களில் ஓ௫ சில பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் செய்யும் நடந்து கொள்ளும் பேசும் வார்த்தைகளில் முதுமை உனராத சூழ்நிலையில் பிள்ளைகள் சொல்லும் அறிவுறைகளை கூட புரிந்து நடந்து கொள்ள முயற்சி இன்னும் எடுக்கவில்லை என்று நினைக்கும் போது மிகவும் வ௫த்தமாக உள்ளது.
ReplyDeleteஇளசுகளே ..வருங்கால பழசுகள் ..
Deleteமுதியோர்களில் சிலரின் செயல் ..பல பெரியோர்களின் முக சுளிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது
நாம் நல்ல உபதேசம் செய்வோம் ..இளவல்களுக்கு