.

Pages

Sunday, April 26, 2015

ஏன் மறைந்தாய் ?

துள்ளித் திரிந்த காலமது...
தூரத்திலோர் சப்தம் கேட்கும்
வண்ண வண்ண ஒளிகொடுத்து
வானில் வண்ண வெடிகளாலே..

என்னவென்று நானும் பார்ப்பேன் ..
தீபாவளி திருநாள் என்று பலரும் சொல்ல ..
நாளை நமக்கு நல்ல பல பலகாரங்களும் ..
இனிய பல இனிப்புகளும்  நம்ம வீடு வந்து சேரும் ..

இஸ்லாமிய வீட்டிற்கும்
இனிய பொங்கல் ...கரும்புடனே
இன்னும் பல வைபவங்கள் ..
மதம்பாரா மனிதநேயம் ..இனியதாக நடந்தேறும் ...

பேருந்தில் பயணிக்கையில் ..
பெரியவர் நின்றிருந்தால் .
தன்னிருக்கை கொடுத்து
தயவாக நடந்த காலம் ..
தாடி ..தொப்பி போட்டிருக்கும்
பெரியவரும் ..பட்டை நாமம் போட்ட பெரியவரும்
பொக்கை வாய் பிளந்து சிரித்த காலம்  அக்காலம் ..

ரஹீமிற்கு காய்ச்சலென்று ..
ராமனுக்கு  கவலையாகும்
ரத்த பந்த சொந்தமில்லை ...
இருவருக்கும் பாசத்தில்
கொஞ்சமும் பஞ்சமில்லை ..

பஞ்சம் நிறைந்த காலமது
வஞ்சமில்லா காலமது ...
நந்தி கேஸ்வரனும் ...நவநீத கிருஷ்ணனும்
ஞான சேகரணனும்...நலம் பெறும் நண்பனாக
வாழ்ந்த காலமது

கடை மடை ..வரை
காவேரி தவழ்ந்து வந்த காலமது
காலமது கடந்ததுவே ..
தந்திரங்கள் புகுந்ததுவே ..

தண்ணீர் கேட்டால் ...
நீ பேசு மொழி வேறு ..
என்பதுவும் ...கல்வி கற்க இடம் கேட்டால்
நீ வேறு மதம் என்பதுவும் ..தந்திரத்தின்
வெளிப்பாடே ...

மனித நேயம் ...
நிறைந்த காலமதில்
அரசியலில் மதமில்லை ..
மனித நேயம் நிறைந்த காலமதில்
வணிகத்தில் மதமில்லை ..

மனித மனதில் ...
மனித நேயமிருந்தது
மனிதனிடம் மதம் புகுந்து
மனித நேயமதை ..
துரத்தினரே ...

ஏன் மறைந்தாய் ..
மனித நேயமே ..
என கேட்க நம் நாட்டில் நாதியில்லை ..
அனாதையாய் மனித நேயம் ...

நல்ல மனிதர் கேட்கும் கேள்வி ..
ஏன் மறைந்தாய் மனித நேயமே .!
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

36 comments:

  1. சித்திக்கின் புதுமையில்
    சிந்தனைத் தொட்டது
    புத்தியில் படர்ந்தது
    பொறிக்கின்றேன் இங்கே.

    ஏன் மறந்தாய்
    இனிய மனிதம் ?
    நான் வேறு
    நாம் வேறோ ?
    கோன் ஒன்றே
    குலைத்தோம் வேறாய் !
    ஊன் ஒன்றாய்
    உலகில் உண்கிறோம் !?

    வான் மழை
    வடிப்பதும் ஒன்றே
    தான் வடிவும்
    தனித்த ஒன்றே
    வீண் பேசி
    விலக்கும் மனிதா !
    மேன் மக்கள்
    மீறவில்லை மனிதம்.

    ReplyDelete
    Replies
    1. கவிதைதக்கு ..
      கவிதந்த ந்பிதாஸ் அவர்களின் கவி
      கவிஞர் வாலி அவர்களின் கவி போல உள்ளது
      கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ...என்ற பாடல் போல நன்றி நபி தாஸ் அவர்களே

      Delete
  2. மனித நேயம் மறைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தாங்களின் படைப்பு ஒரு திருப்புமுனையாக உணரவைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மழை வேண்டி மரங்கள் இருப்பது போல .
      மனித நேயம் வேண்டி நாம் இருக்கிறோம் ..
      நன்றி அதிரை மெய்சா அவர்களே

      Delete
  3. மனிதம் மறந்த மதவுணர்வு மனித நேயம் மறக்கச் செய்த கசப்புணர்வு என்பதை அழகு நடையில் வழங்கிய தமிழூற்றுக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய கால கட்டத்தில் ...
      ஒன்றும் அறியா குழந்தைக்கு கூட
      மத சாயம் பூசப்பட்டு பலி வாங்கும் சூழல் .
      இது மாற வேண்டும் ..கவியன்பரின் கருத்திற்கு நன்றி

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    அழகான கவிதை, அருமையான கவிதை, ஆனால் கரை கண்டிராத கவிதை.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
    Replies
    1. மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்

      Delete
    2. வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வரும் தகவல் இது. காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். பெற்றோரால் விற்கப்பட்ட சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டி பெரம்பலூர் காவல் நிலையம் கருணை நிலையமாக மாறி இருக்கிறது என்று தொடங்குகிறது அந்த வாட்ஸ் அப் மெமேஜ்.

      Delete
    3. வாட்ஸ் அப்பில் வலம் வரும் அந்த தகவல் இது தான்... விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மங்கம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். நான்காம் வகுப்பு வரை படித்த மணிகண்டனை அவரது தந்தை தொழுதூர் கிராமத்தில் ஆடு, மேய்ப்பவர்களிடம் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். படிப்பில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அங்கிருந்து தப்பி பெரம்பலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தான். மணிகண்டனின் சோக கதையைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், அவனை படிக்க வைத்தார்.

      Delete
    4. பெரம்பலூர் காவல் நிலையத்தில் அவர் பணியாற்றிய காலக்கட்டத்தில் அங்கு செல்லப் பிள்ளையாக மணிகண்டன் திகழ்ந்தான். அதோடு படிப்பிலும் படுசுட்டியாகவும் விளங்கினான். இதனிடையே, சிவசுப்பிரமணியனுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் கிடைத்தது. பின்னர், பெரம்பலூர் காவல் நிலையத்திலிருந்து மாவட்ட குற்றப்பிரிவுக்கு சிவசுப்பிரமணியன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், தனியார் பள்ளி விடுதியில் மணிகண்டனை சேர்த்து அதற்குரிய கட்டணத்தையும் தனது சொந்தப் பணத்தில் சிவசுப்பிரமணியன் செலுத்தினார். இப்போது மணிகண்டன், விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறான்.

      Delete
    5. இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிவசுப்பிரமணியன் கைதாகி தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் நல்லவர்களை அரிதாகவே பார்க்க முடியும். பொதுவாக நல்லவர்களுக்கு சோதனை அதிகம் வரும். அதைப் போல தான் சிவசுப்பிரமணியனுக்கும் தற்போது சோதனை வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சிவசுப்பிரமணியன் சிறைக்கு சென்றுள்ள நிலையில் மணிகண்டனுடன் போலீஸ் சீருடையிலிருக்கும் சிவசுப்பிரமணியனின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

      Delete
    6. நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காலத்தில் மலர்ந்த நேயப்பண்பை விட இக்காலச் சூழலில் மனிதன் மற்ற உயிர்களையும் தன்னையும் நேசிக்கும் பண்பு தேய்மானத்தை நோக்கியும், தனது வளர்நிலையில் சிக்கலையும் எதிர்நோக்கி உள்ளது. தொய்வடையும் தோழமை உணர்வான நேயப்பண்பை சட்டத்தையும், அதிகாரத்தையும், பணபலத்தையும் கொண்டு வலுப்படுத்த முடியாது. இழந்து கொண்டிருக்கும் ஒழுக்கங்களையும் மனித விழுமியங்களையும் மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். மீட்டுருவாக்கத்தின் அடிப்படை என்பது உயர்ந்த பண்புகளை வலியுறுத்தும் பண்டைய நூல்களை திருப்பிப் பார்த்து உள்ளப்புனைத்தலாகும்.

      Delete
    7. இந்த அடிப்படையில் வாழ்வியல் இயங்கியல் பொருண்மையைக் கொண்ட வள்ளுவத்தில் பொதிந்துள்ள மனிதநேயச் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டும், செத்துக் கொண்டிருக்கும் உயிரின் மேன்மைக்குச் செழுமை சேர்க்கும் வண்ணமாக இக்கட்டுரை உதிக்கின்றது. மனித நேயம் என்பது தேடிக் கொண்டிருக்கும் அதே சமயம் உயரப் பிடித்து ஒலிக்க வேண்டிய வார்த்தையாகத் தான் உள்ளது. மனமே நேயத்தின் அடிப்படை என்றாலும் அடுத்த அறிவைத் தேடும் மனம் தனது சுயத்தை, முழுமையை மெல்ல மெல்ல தனக்குத் தெரியாமலேயே இழந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

      Delete
    8. நேசிப்பிற்கான கருத்துருவாக்கம் வேறு வேறு பரிமாணங்களையும், பரினாமங்களையும், பெற்று விட்டதே இந்த பின்னடைவிற்கான காரணம்.
      * அறிவியலின் அசுர வளர்ச்சியும், அதன் வழியாக நிகழ்ந்து வரும் பண்பாட்டின் வீழ்ச்சியும்.
      * நாகரீகம் என்ற பெயரில் மனிதனைப் பழிவாங்கும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனநிலை பரவிக் கிடத்தல்.

      Delete
    9. * நேசம் தன்னிலை திரிந்து பாசம், பற்று என்ற நிலை கடந்து பற்று வெறியாகி வெறியுடன் சுற்றித் திரியும் இந்தக் கலாச்சார சீரழிவுதான் பண்பாட்டின் உச்சம் என்று கருதும் நிலை.
      என்ற மேற்கண்ட செயல்நிலைகளைத் தோழமை தொய்வடையக்காரணமாகக் கொள்ளலாம். இந்த எதிர்முரணான நிகழ்வின் மூலாதாரம் வாழ்வியல் உயர்விழுமியங்களை மதிக்கவும், போற்றவும், வளர்க்கவும் தவறிவிட்டோம் என்பதின் ஈவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
      நேயத்தின் அடிப்படை:

      Delete
    10. மெல்லிய உணர்வின் பிணைத்தல், எந்தவொரு புறத்தோற்ற பிணைப்புகளாலும் பொருத்தப்படாமல் அகக்கட்டுமானங்களோடு மனித மனத்தோடு தொடர்புடைய ஒரு மெல்லிய உணர்வின் உச்சம் என்று சொல்லலாம். இந்த நேயத்தின் களனான மனம் - காதல், நட்பு, ஜீவகாருண்யம் போன்ற அன்புடன் கலந்த பல பகிர்மானங்களைக் கொண்டுள்ளது. எனக்கொண்டோமானால், இதன் முழுமைக்கும், செழுமைக்கும் வள்ளுவத்தில் ஏராளமான இடம் உண்டு.

      Delete
    11. அன்பு:

      ஏதோ ஒரு வகையில் உறவு முறையை புதுப்பித்தும், புதிதாக உருவாக்கவும் எல்லா வகையான கொள்கலனுக்கும் இடையீடாக இருப்பதுதான் அன்பு, எப்படி உணர்வது? எப்படி உள்வாங்குவது? என்ற கேள்வி விரும்பியவர் மீது பொருளையும், நேரத்தையும் விரயமாக்கும் விதமாக அன்பை உணர்ந்து கொள்ளவும் அடையாளப்படுத்தவும் முடியும். தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என்ற தொடரமைப்பில் குடும்பமாக இருக்கும் இல்வாழ்க்கையே சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருகின்றது. இந்த இல்வாழ்வின் பயன் அன்பும் அறனும் உட்கூறுகளாக இருப்பதேயாகும் என்று வள்ளுவம் (குறள் 45) குறிப்பிடுகின்றது

      Delete
    12. பயத்துடன் மனித நிலைக்குமேல் பார்க்கும் கடவுட் கோட்பாட்டைத் தவிர்த்துப் பாசத்துடன், அன்புடன் வணங்கும் கணவன்மீது கொள்ளும் அன்பே நேயத்தின் முழுமையாகும் என்பதை வள்ளுவம் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) என்று பதிவு செய்துள்ளது. பெறுதற்கரிய இந்த உடலும் உயிரும் இயைந்த மனித வாழ்வு அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவதற்கேயாகும் (குறள் 73).

      Delete
    13. எல்லோருக்கும் சொந்தப்படுத்துவது அன்பு (குறள் 72), அறம் செய்து வாழும் வாழ்க்கைக்கு அன்பே அடிப்படை (குறள் 6) என்றெல்லாம் அன்பின் உச்சம் பரந்து விரிந்து கிடக்கின்றது. பண்பாட்டு விழுமியங்களுக்கும், அன்பு அடிப்படையானது என்பது குறள் கூறும் செய்தியாகும். இந்த அன்பு தான் நேயத்தின் அடிப்படை, இந்நிலை மாறும்போது அன்பின் பன்முகம் பழுதடைந்தும் நேயம் காய்ந்து போகின்றது.
      “அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்” (997)

      Delete
    14. நட்பு:
      வேறு வேறு தளங்களில் சிதறிக் கிடக்கும் மனிதச் சமூகத்தைப் பிணைத்துப் பார்ப்பது நட்பு எனும் நந்தவனமே

      Delete
    15. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
      நட்பாம் கிழமை தரும் (குறள். 785)
      உணர்ச்சிதான் நட்பின் வலிமையாகக் கருதப்படுகின்றது. இந்த வலிமையே நட்பின் அடையாளமாகவும் வெளிக் கொணரப்படுகின்றது. இவ்வுலகம் இன்றளவும் தழைத்திருக்கின்றது என்றால் சிலக் கூறுகளில் ஒன்றான நட்பின் பலம் என்றே கருதலாம். மன உணர்வின் மிகப் பெரிய பாலமாக அமைவதே கேண்மை நெறி.

      Delete
    16. இந்த நட்பைப் பகிர்ந்து கொள்ளும்போது வெறுமனே மகிழ்வதற்காக மட்டுமல்லாமல், தவறு நேரும்போது மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு என்று (784) நட்பின் விசாலத்தை வள்ளுவம் குறிப்பிடுகின்றது. நட்பின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது உடுக்கை இழந்தவன் கைபோலவே (788) எனறு குறிப்பிடுகின்றார். உடுக்கப்பட்ட உடை நழுவுமானால் எந்த உத்தரவுமின்றி கை சென்று உடைபற்றிக் கொள்ளும். இது போன்று யாருடைய அனுமதியுமின்றி உதவுதல் என்பது தான் நட்பின் பலம் என்றும், உண்மை என்றும் கொள்ள முடியும். மற்றவரைப் பற்றிச் சிந்தித்தல், மற்றவர்மீது அக்கறைக் கொள்ளுதல் என்ற தன்மையே மனிதநேயத்தின் மகத்துவமாகும். நட்பின் ஆழத்தையும் அகலத்தையும் குறிப்பிடும் பொழுது விசம் கூட நட்பிற்கு இனிமை தரும் என்கிறார் வள்ளுவர்.

      Delete
    17. “பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
      நாகரீகம் வேண்டு பவர்” (580)
      இதே கருத்தை நற்றிணை
      “முந்தை இருந்து நட்டோர் கெடுப்பின்
      நஞ்சும் உண்பர் நனி நாகரீகர்” (நற் 355)
      என வலியுறுத்துகின்றது. உள்ளன்போடு கொண்ட கேண்மையின் வளமை எப்போதும் தோற்றுப் போவதில்லை.

      Delete
    18. காதல்:
      காதல் என்ற புனிதம் இல்லையென்றால் மனித மனம் என்றோ மீண்டும் விலங்கின் தன்மையை ஏற்றிருக்கும். காதல் என்கின்ற சொல் குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் போதுதான் தவறானதாகவும், இழிவானதாகவும், கருத்தில் கொள்ளப்படுகின்றது. சமூகத்தால் மிக உணர்வாகக் கருதப்படுவதும் உயர்த்திப் பேசப்படுவதும் மனிதர்களிடையே உட்பிணைப்பை ஏற்படுத்துவதும், நேயத்தை மேன்மையுறச் செய்வதும் காதல் என்கின்ற நேசிக்கும் பண்பு தான். இந்தக் காதலை வள்ளுவரை விட மென்மையாகவும்,

      Delete
    19. அதே சமயம் ஆழமாகவும் வேறு எவரும் குறிப்பிடவில்லை என்றே கருதலாம். காதலின் வளர்நிலையில் காலையில் அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் இந்நோய் (1227) என்று மலர் மலர்வதைப் போல மென்மையாகவும் உடலில் ஏற்படும் நோய் போன்று மனதிற்கு ஏற்படுமாறு மிளிர்வதாக, வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காதலின் மென்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது மலரினும் மெல்லியது (1289) என்று பதிவு செய்கின்றார்.

      Delete
    20. இந்த மென்மையான உணர்வின் அடிப்படையிலேயே, அதிர்வுகளிலேயே நேசிப்பும், காதலின் உயிர்ப்பும் அடங்கியிருக்கின்றது. காதலின் வலிமையைப் பற்றிக் கூறும்போது உடம்பிற்குக் கள் குடிப்பதினால் மயக்கம் வரும், ஆனால் காதலியின் நினைவோடு கலப்பதினாலும், கண்களால் காண்பதினாலுமே கள் போன்ற மயக்கம் தரும் வலிமை கொண்டது காதல் உணர்வு (குறள் 1281) அணங்கு கொல் ஆய்மயில் குறள் 1081. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் குறள் 1094. என்ற மன நேசிப்பிற்குப் பெரும் பங்காற்றுவது காதல். சாதி, மதம், இனம், மொழி என்ற குறுகிய எல்லைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் மாபெரும் சக்தி காதல் எனவே தான் பாரதி காதல் செய்வீர் உலகத்தீரே எனக் காதலின் வழியாக நேயத்தை வலுப்படுத்துகின்றார். வாலிப நெஞ்சங்களைப் பிணைப்பதோடு, மகன் - தயார். மகன் - தந்தை. விலங்கு - மனிதன். மனிதன் - தாவரங்கள், மனிதன் - பறவை என உயிரினத் தளங்களுக்கு நீண்டு செல்லும்போது தான் காதலின் பலம் பெருகி நேசிப்பு விரிகின்றது.

      Delete
    21. ஜீவகாருண்யம்:
      அன்பு என்னும் தாயும் அருள் என்னும் சேயும் இருந்தால் மட்டுமே ஜீவகாருண்யத்தைப் போற்ற முடியும் (குறள் 757). அனைத்து உயிர்கள் மீதும் அன்பைச் செலுத்தும் நிலை, அது ஈகையாக, கருணையாக, பரிவாக, பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுத்திகழும். அன்பையும், அருளையும் கொடுத்து நேசிக்கும் பண்பைக் கொண்டவனே மனிதன். மற்ற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவம்தான் இன்னும் மனிதனைத் தன் நிலையிலிருந்து தாளாமல் மனிதனாகவே அடையாளப்படுத்துகின்றது. தம் பெற்றோர்களையே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இந்தத் தலைமுறையினருக்கு வள்ளுவத்தை முழுப்பொருளாழத்துடன் கற்றுக்கொடுப்பது சமூகத்தேவையாகும். வகுப்பறை மட்டுமல்லாமல் வெளிப்புறச் சூழலிலும் வள்ளுவம் ஒலிக்கும் வகைசெய்யும் கட்டாயச் சூழலை உருவாக்குவதே மனிதநேயத்தை மலரச் செய்வதற்கான முதற்படியாகும்.

      Delete
    22. நேய மறுமலர்ச்சிக்கான வழியைச் சொன்ன வள்ளுவர், வெறுமனே போற்றும்படியான ஒழுக்க நிலைகளைக் கடைபிடிப்பதோ தவறுகளைத் தட்டிக்கேட்கும் மற்றொரு நிலையும் நேயப் பாதுகாப்பாகக் கொள்ள முடியும். தோழமை உணர்வு, நேயப்பண்பு சாயும் போது தாங்கிப் பிடித்துக் கொள்வதினால் அவ்வப்போது நேசிப்பு காப்பாற்றப்படுகின்றது. தழைக்கின்றதா? செழிக்கின்றதா? என்றால் இல்லையென்று தான் சொல்ல முடியும். நமக்கென்ன என்று ஒதுங்கிச் செல்லும் சுயநலமும், கொடுமைகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளும், கோழைத்தனங்களுமே நேசத்தளவின் செழுமை இன்மைக்கு ஏதுவாகக் கருதலாம். இதுபோன்று தவறு நடக்கும்போது தட்டிக் கேட்டு தோழமையை வளர்த்துக் கொள்ள வள்ளுவத்தில் வழிமுறைகள் காணப்படுகின்றன. மற்ற மனிதர்களின் சுக துக்கங்களையும் உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்லாமல் அதனைத் தனதாக்கிக் கொண்டு உணர்தல் வேண்டும்.

      Delete
    23. இதுவே தன்மையும் மற்ற உயிர்களையும் பேணிப் பாதுகாக்கும் பண்பாகக் கொள்ளப்படுகின்றது. ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் (214) என்று குறிப்பிடுவதும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றது. அஞ்சுவதற்கு அஞ்சல் வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுவது (428) அஞ்சக் கூடாததற்கு அஞ்ச வேண்டாம் என்பதை வலியுறுத்தவே, இந்த பொருளாழத்தை முன் வைக்கின்றார். மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கும் துணிச்சல் (784) அனைவருக்கும் இயல்பாக மிளிர வேண்டுமென்பதே மனித நேய மிளிர்வின் அடையாளமாக இருக்கும். பிறர்பழி எப்பொழுது தன்பழியாக மதிக்கப்படுகின்றதோ அப்பொழுது காயமாகும் நேயம் கூட செழிப்புறும். இதில் மேலோர் கீழோர் என்பவர்கள் இல்லை.

      Delete
    24. உயர்வு தாழ்வு கிடையாது. எந்தப்புற அளவுகோலும் மனிதத்திற்கான முழுமையை தீர்மானிப்பதில்லை. எனவே தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972) என்று வள்ளுவம் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றது. இதுபோன்று தோழமை உணர்வு, நேய உணர்வு தொடர்ந்து மிளிர்வதற்கு அடிப்படை பண்புகளை மக்கள் யாருடைய திணிப்புமின்றி இயல்பாக உள்வாங்கிக் கொண்டு செயலாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை வள்ளுவம் பதிவு செய்துள்ளது.
      மனித நேயத்திற்கான முழுமையான கருத்தாழத்தை, செறிவாகப் பதிவு செய்ததோடு பல ஒழுக்கநெறிகள் எப்போதும் உயரிய மதிப்புகளைக் காத்து நிற்க வேண்டுமென்பதற்காக மேற்கண்ட பல உயர்பண்புகளையும் வள்ளுவம் பதிவு செய்துள்ளது. இருண்ட காலத்தில் வெளிவந்த வள்ளுவத்தில் நேசிப்பு செழுமையடைந்ததற்குச் சில அடிப்படைகளை கூறமுடியும்.

      Delete
    25. * சங்க காலத்திலும் அதற்கு முந்தையக் காலத்திலும் மனித உயிர்கள் மலிவாக எடுக்கப்பட்டதன் விளையாக மனிதன் நேசிக்கவும், உயர்பண்புகளை நிலைநிறுத்தவும், உயர் விழுமியங்களை மேன்மையடையச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

      Delete
    26. * இயற்கையோடு வாழ்ந்து, நேசித்த மனிதன் தன்னையும், தன்னைப் போன்ற பிற உயிர்களையும் நேசித்ததாலேயே நேயப் பண்பு வலுப்பெற்றிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

      Delete
    27. இவ்வாறு கருத்தாழமும் மனிதப் பண்பின் பன்முகங்களையும் நேசத்தின் ஊற்றுக்களையும் தன்னுள் அடக்கி உயர் விழுமியங்களை உள்கட்டுமானமாக்கி, இயங்கியல் பொருண்மையோடு இயங்கி வருகின்றது வள்ளுவம், மனிதகுலத்திற்குப் பெரும் வெளியையும், ஜீவ ஒளியையும் கொடுத்த வள்ளுவத்தின் காலம் இருண்ட காலம் என்பதை விட பொற்காலம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக அமையும்.

      Delete
    28. நன்றி ஜமால் காக்கா அவர்களே ...
      அதிரை ஊடக நாயகன் * என்ற பட்டம் தங்களுக்கு தரலாம்
      தங்கள் கருத்திற்கு நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers