.

Pages

Friday, March 1, 2013

இந்தியனே நீ வெட்கப்படு

வெட்கப்படு இந்தியனே
நீ வெட்கப்படு

நீ வெட்கப்படாததால்தான்
இந்தியா துக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது

O

பசித்தால்-
கையேந்த மட்டுமே
உனக்குத் தெரியும்

தேவைப்பட்டால்-
திருட மட்டுமே
உனக்கு விருப்பம்


கோபப்பட்டாலும்-
கொளுத்துவதற்கு மட்டுமே
உன் கைகள் நீளும்

O

நீ
படிக்கப் போனால்
வினாத்தாள் திருடுகிறாய்

ஆளப்போனாலோ
நாட்டையே திருடுகிறாய்

தினமும்
வீட்டிலும் வீதிகளிலும்
உண்டியல் குலுக்கியே
பாரதத்தை
இன்று ஒரு
சில்லரைக் காசாக்கிவிட்டாய் 

O

சொல்
கண்டதுக்கெல்லாம்
கொடி தூக்கிக்
கோஷம் போடுகிறாயே

என்றாவது உன்
தேசியக் கொடியை
நேசித்தது உண்டா

O

ஜீவநதிகள்
ஊர்வலம் வருகின்ற
நாட்டில்
விக்கித் தவிக்கிறாய்

அள்ளித்தரும் நன்நிலங்கள்
எங்கும் கிடக்கின்ற நாட்டில்
பட்டினி கிடக்கிறாய்

O

ஒன்றா இரண்டா
உனக்கு 
எத்தனை கோடி கைகள்


இருந்தும் அவை
பிச்சையெடுக்கவே
என்று
பிரகடனப்படுத்திவிட்டாயே


இந்தியனே
நீ வெட்கப்படு

நீ 
வெட்கப்படாததால்தான்
இந்தியா 
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

அன்புடன் புகாரி

14 comments:

  1. அன்புச்சகோதரர் அன்புடன் புகாரி அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம் !

    தொடர வாழ்த்தி வரவேற்கின்றோம்...

    // நீ
    வெட்கப்படாததால்தான்
    இந்தியா
    துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது //

    சிந்திக்கக்கூடிய வரிகள்

    ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெறுவது அவசியம்

    ReplyDelete
  2. நண்பேன் டா! உருகும் சுப்பிரமணிய சுவாமி!
    நண்பேன் டா! உருகும் சுப்பிரமணிய சுவாமி!
    http://www.sinthikkavum.net/2013/02/blog-post_28.html

    ReplyDelete
  3. முப்பது வருடத்து
    முன் நட்பு
    முகனூலின் வழியாக
    மீண்டும் சந்திப்பு

    மாற்றட்ட மகிழ்ச்சியில்
    மனம் நிறைந்த
    சந்தோசம்

    கடந்த கால நம் நட்பு
    கண்ணிமைக்கும் நேரத்திலே
    காரிருள் தோன்றி
    தொலைந்து
    தூரமாகிப்போனதுவே

    நிகழ் காலம்
    நிகழ்த்திய
    ஊடக வழி
    சந்திப்பை
    உவகையுடன் நாம் ஏற்று
    இனி உறவாடிடுவோம்
    அவ்வினிய நாட்களை
    மீண்டும் நினைவுகூர்வோம்.

    அன்புடன் புகாரியின்
    தேசப்பற்று
    கவிதை வரிகளாய்
    அழகு நடை கவி வரியில்
    ஆழ்மனதில்
    உணரும்படி
    துளைத்து விட்டன

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    அருமையான கவிதை, வெட்கம் துக்கம்.

    மேலும் தொடர பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள்...

    அனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  6. மிகச் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  7. ஒவ்வொரு இந்தியனுக்கும் சாட்டையடி இந்தக் கவிதை. விழிப்புணர்வு வருமா?
    'ஆளப் போனால் நாட்டையே திருடுகிறாய்' வலிமையான சொற்கள்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. சுள்ளென்று உரைக்கும் வரிகள்

    ReplyDelete
  9. இனி விழிப்புணவு பக்கங்கள் கவியால் மின்னும்

    அன்புடன் புகாரி வருகை

    தெம்புடன் மலரும் இத்தளம்

    ReplyDelete
  10. திண்டுக்கல் தனபாலன்
    "சரியாகச் சொன்னீர்கள்...

    அனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்..."
    சரியாகச் சொன்னீர்கள்...திண்டுக்கல் தனபாலன்

    அனைத்தும் சிந்திக்க வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  11. கனடாவின் கவிமேகம் அதிரையின் விழிப்புணர்வு பக்கத்தில் கவிமழைப் பொழிய, நாங்கள் உளம்நிறைவாய் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பி வழிய வரவேற்கின்றோம். அறிமுகக் கவிதை தந்த கவிமுகமே வருக! வருக!!

    ReplyDelete
  12. புஹாரி காக்காவின் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் முதல் பதிவு முறையான பதிவு இன்னும் பல பதிவுகள் எதிர்க்பார்க்க படுக்கிறது.

    ReplyDelete
  13. அன்புடன் புகாரிMarch 1, 2013 at 10:39 PM

    என்னைப் பாராட்டி மகிழ்ந்த, மகிழவைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றிமழை.


    அன்பு சேக்கனாவின் வரவேற்பும்

    இனிய மெய்சாவின் நட்புத்தேட்டமும்
    கோமுஅ
    ஜமாலின் வெட்கதுக்கப் புரிதலும்
    திண்டுக்கல்
    தனபாலின் வரிக்குவரி சிந்திப்பும்
    தோழி சசிகலாவின் ஆமோதிப்பும்

    ரஞ்ஜனி அம்மாவின் விழிப்புணர்வு ஏக்கமும்
    இன்பத் தமிழனின் சுள்ளுணர்வும்
    அதிரை
    சித்திக்கின் வருகைப்பாராட்டும்

    அண்ணன் ஜின்னாவின் ஆமோதிப்பும்

    கவிக் கலாமின் கவிமுகப்பாராட்டும்

    என் நெஞ்ச நிலத்தில் நெல்விளைத்துப் போயின!

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  14. இந்தியனே[புஹாரி] நீ வெள்கப்படிகிறாய்(wellcom)எங்கள் வளை தளத்திற்குல் தொடரட்டும் உம்பணி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers